தாவீதின் திறவுகோல் என்பது என்ன?
தாவீதின் திறவுகோல் என்பது என்ன?
திறவுகோல் என்ற வார்த்தை வேதத்தில் 7 இடங்களில் இடம்பெறுகிறது.
1) ஏசாயா 22 : 22 - தாவீதுடைய வீட்டின் திறவுகோலை
2) மத்தேயு 16 : 19 - பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை
3) லூக்கா 11 : 52 - அறிவாகிய திறவுகோலை
4) வெளிப்படுத்தல் 1 : 18 - பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை
5) வெளிப்படுத்தல் 3 : 7 - தாவீதின் திறவுகோலை
6) வெளிப்படுத்தல் 9 : 1 - பாதாளக்குழியின் திறவுகோல்
7) வெளிப்படுத்தல் 20 : 1 - பாதாளத்தின் திறவுகோலையும்
தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருந்தார்:
- தாவீது ராஜா எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினார் (2 சாமு 5:5)
- அவர் இஸ்ரவேலின் மேல் பதவி ஏற்றதும், முதல் காரியமாக சீயோன் கோட்டையை பிடிக்க நினைத்தார்.
- அது ஏன்? சீயோன் கோட்டை தான் சபைக்கு அடையாளம்.
- சபைக்கு அடையாளமாகிய தாவீதின் கூடாரமும் சீயோனில் தான் அமைக்கப்பட்டது.
தாவீது தன் மக்களிடம் ஒரு சவாலை வைக்கிறார்:
எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
-2 சாமுவேல் 5 : 8
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
-1 நாளாகமம் 11 : 6
தண்ணீர் குழாய் சுரங்கப் பாதை:
- இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிற “சாலகம்” என்ற வார்த்தையின் எபிரேயப் பதம் “tsinnor”.
- அதை “water sprouts/pipe - தண்ணீர் குழாய்” என்று மொழிப்பெயர்க்கலாம்.
- அந்த சொல் வேதத்தில் இரண்டுமுறை தான் காணப்படுகிறது. வன்று 1 நாளாகமத்திலும், இன்னொன்று சங்கீத த்திலும் காணப்படுகிறது.
உமது மதகுகளின்(water sprouts) இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
-சங்கீதம் 42 : 7
சரித்திர ஆதாரம்:
- அதின் அர்த்தம் என்னவென்று வேதத்தில் தேடினால் கிடைக்கவில்லை.
- ஆனால் சரித்திரத்தில் கிடைத்தது.
- கி.பி. 1867 ல் சார்ல்ஸ் வாரன் என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் பலவித வேத தொல்பொருள் தளங்களைத் தேடி இந்த நகரத்திற்கு வந்தார்.
- அவர் ஒரு தண்ணீர் குழாய் பகுதியையும், ஒரு சுரங்கப்பாதையையும் கண்டுபிடித்தார்.
- எபூசியர்கள் கித்ரோன் பள்ளத்தாக்கில் உள்ள கிகோன் நீரூற்றை நீராதாரமாக பயன்படுத்தினார்கள் என்று கண்டுபிடித்தார்.
- அதன் பெயர் தான் பைபிளில் “Tsinnor-சாலகம்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதன் வழியாக சீயோன் நகரத்தின் நுழைவுவாயிலுக்கு செல்ல முடியும்.
சவாலை ஏற்றுக் கொண்ட யோவாப்
- யோவாப், தாவீது கொடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு, அந்த சுரங்கபாதையின் தண்ணீர் வழியாக கடந்து போய், சீயோனை அடைந்து, அதை உட்புறத்தில் இருந்து திறந்து விட்டார்.
சீயோன் கோட்டையை பிடித்தார்கள்:
- வாயில் திறந்தவுடன், முழு இஸ்ரவேலின் இராணுவமும் கோட்டைக்குள் நுழைந்து சீயோனின் கோட்டையைக் கைப்பற்றினது. (உள்ளே இருந்து திறக்கப்பட்டது என்பது சீயோனின் கோட்டையை எடுத்துக்கொள்வதற்கு அடையாளம்.)
- தாவீது சீயோன் கோட்டையை பிடித்தார் என்று வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (2 சாமு 5:7)
- ஆனால் எப்படி பிடித்தார் என்பது சரித்திரத்தில் மாத்திரமே காணப்படுகிறது.
சீயோன் நகரம் - தாவீதின் நகரம்:
- தாவீது அந்த சீயோன் கோட்டையில் வாசம் பண்ணினபடியினால் அது தாவீதின் நகரம் என்னப்பட்டது. (1 நாளா 11:7)
சீயோன் கோட்டையின் திறவுகோல் - தாவீதின் திறவுகோல்:
- அதே போல சீயோனின் திறவுகோல், தாவீதின் திறவுகோல் என்று ஆனது.
- சீயோனுக்கான திறவுகோல் தாவீதின் ராஜ்யத்தின் அரசாங்க அதிகாரத்திற்கான திறவுகோலைக் குறிக்கிறது.
வெகுமதி:
- அவர் மிகவும் சிரமப்பட்டு இந்த சவாலை முடித்ததால், தாவீது தான் சொன்னபடியே அவருக்கு இராணுவத்தலைவன் என்ற பொறுப்பை கொடுத்தார். (2 சாமு 8:16).
- இந்த யோவாப் தாவீதின் சகோதரியான செருயாளின் குமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. (1 நாளா 2:16)
உட்புறத்தில் இருந்து கதவை திறந்து:
- யோவாப் அந்த தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக சீயோன் கோட்டைக்குள் போய், உள்ளே இருந்து கோட்டையைத் திறந்து விட்டது போலவே, இயேசு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, நரகத்திற்கு இறங்கி, அவர் உள்ளே இருந்து நரகத்தின் கதவுகளைத் திறந்தார்.
- அவருடைய உயிர்த்தெழுதலின் போதுதான் அவருக்கு "பாதாளத்தின் திறவுகோல்" கிடைத்தது என்று வாசிக்கிறோம். (வெளி. 1:18).
தாவீதின் திறவுகோல் வேறு யாரிடம் போனது:
இந்த தாவீதின் திறவுகோல் பைபிளில் வேறு யாரிடம் இருந்தது என்று பார்ப்போம்:
- ஏசாயா 22 : 22 ல் தாவீதுடைய வீட்டின் திறவுகோலை செப்னாவிடம் இருந்து வாங்கி எலியாக்கீமிடம் கொடுப்பேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.
இங்குக் கூறப்படுகிற செப்னாவும், எலியாக்கீமும் யாவர்?
- இவர்கள் இருவரும் எசேக்கியா ராஜாவினிடத்தில் வேலை செய்தவர்கள்.
- எலியாக்கீம் - அரமனை விசாரிப்புக்காரன்; செப்னா - சம்பிரதி (2 இராஜாக்கள் 18 : 37).
ஏன் செப்னாவிடம் இருந்த திறவுகோலை ஆண்டவர் பிடுங்கினார்?
உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?
-ஏசாயா 22 : 16
- உலகத்தின் மீது பற்று கொண்டு கல்லறையை வாங்கினதால் ஆண்டவருக்கு கோபம் வந்தது.
- மெல்கிசெதேக்கின் முறைமைப்படி வாழ்கிறவனுக்கு இந்த பூமியில் ஒன்றும் இல்லை.
- பரலோகம் ஒன்றே நமக்கு சொந்தம். இந்த பூமியில் எதுவும் நம் கூட வரப் போவதில்லை.
எலியாக்கீமும் அந்த திறவுகோலை இழந்து போவார்:
- எலியாக்கீமிடம் ஆண்டவர் அந்த திறவுகோலை கொடுக்கிறார். (ஏசாயா 22:22).
- ஆனால் அவனும் இந்த திறவுகோலை இழந்து போவான் என்று ஏசா 22:25 ல் சொல்கிறார்.
உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்து விழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.
-ஏசாயா 22 : 25
இயேசுவானவர் திறவுகோலை சிலுவையில் மீட்டார்:
- எலியாக்கீம் அந்த திறவுகோலை இழந்ததற்கு பிறகு, இயேசுவானவரே சிலுவையில் ஜெயித்து அந்த திறவுகோலை(அதிகாரத்தை) மீட்டுக் கொண்டார்.
- மீட்டுக்கொண்ட அவர் பேதுருவுக்கு அந்த திறவுகோலைத் தருவேன் என்று கூறுகிறார்.
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
-மத்தேயு 16 : 19
கர்த்தர் சபையின் மேல் பிரியமாயிருக்கிறார்:
-சங்கீதம் 87 : 2
Comments
Post a Comment