இயேசுவின் இரத்தமும் 7 தரம் சிந்தப்பட்டது
ஏழு தரம்
பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
-லேவியராகமம் 16 : 14
-லேவியராகமம் 16 : 14
இயேசுவின் இரத்தமும் 7 தரம் சிந்தப்பட்டது
1) கெத்சமனே தோட்டத்தில் அவரின் வியர்வைத் துளிகள் மூலமாக,
2) காய்பாவின் அரண்மனையில் அடித்து விசாரிக்கப்படும் போது,
3) பிலாத்துவின் அரண்மனையில் 39 தரம் வாரினால் அடிக்கப்பட்ட போது,
4) அவருடைய தலையில் முள்முடி சூட்டும் பொழுது,
5) அவருடைய கைகளில் ஆணி அடிக்கும் பொழுது,
6) அவருடைய கால்களில் ஆணி அடிக்கும் பொழுது,
7) அவர் இறந்து விட்டாரா இல்லையா என்று உறுதிப்படுத்த போர்சேவகன் அவருடைய விலாவிலே குத்தும் பொழுது.
எண்களின் அடையாளம்:
1 - தேவனைக் குறிக்கும்
2 - பிரிவினையக் குறிக்கும்
3 - உயிர்த்தெழுதலைக் குறிக்கும்
4 - இயேசுவைக் குறிக்கும்
5 - தேவ வல்லமையைக் குறிக்கும்
6 - மனிதனைக் குறிக்கும்
7 - பரிபூரணத்தைக் குறிக்கும்
விளக்கம்:
- முதல் தடவை இரத்தம் சிந்தினது தேவனுக்காக, மீதி 6 தடவை இரத்தம் சிந்தினது மனிதனுக்காக.
- 2-7 வரையிலான இரத்தம் சிந்துதல் அவர் சரீரத்தை துன்பப்படுத்தினதால் சிந்தப்பட்டது.
- முதல் தடவை அவர் உடம்பில் எதுவும்படாமல் இரத்தம் வியர்வையாக கொட்டியது.
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
-லூக்கா 22 : 44
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
-ஏசாயா 53 : 5
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
-1 பேதுரு 2 : 24
- உலகத்தில் உள்ள அனைத்து வியாதிகளும் 39 பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ICD-11 (International Classification of Diseases)
“ஏழு” என்ற பூரண எண்ணையும் இயேசுவின் தியாகத்தின் முழுமையும் இணைத்து நாம் தேவனின் கிருபையின் பரிபூரணத்தைச் சந்தோஷமாக நிறைவடைந்தவர்களாக காணலாம்.
Comments
Post a Comment