பிசாசின் தந்திரங்கள்
Life with Bible (Tamil)
பிசாசின் தந்திரங்கள் ஒரு ஆழமான பார்வை
பிசாசின் தந்திரங்கள் ஒரு ஆழமான பார்வை
15:25
பிசாசின் தந்திரங்கள்
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
-லூக்கா 19 : 10
எதை ஆதாம் இழந்து போனார்? எதை கர்த்தர் மீட்கும்படி வந்தார்?
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
-ஆதியாகமம் 1 : 28
- பூமி முழுவதும் செய்யக்கூடியதான ஆளுகை.
- ஆதாம் சர்ப்பத்திற்கு கீழ்ப்படிந்தனால் அந்த ஆளுகையை பிசாசினிடத்தில் இழந்து போனார்.
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
-மத்தேயு 4 : 8
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
-மத்தேயு 4 : 9
- பூமியின் ஆளுகை எனக்கு கையளிக்கப்பட்டு இருக்கிறது நான் அதை உனக்கு தருவேன் என்று பிசாசு இயேசுவிடம் சொல்கிறான்.
- ஆதாமினிடத்தில் கொடுத்த ஆளுகை எப்படி பிசாசினிடத்தில் வந்தது?
- ஆதாமுக்கு ஆண்டவர் ஆளுகையை கொடுத்திருந்தார்.
- அவர் முழுவதுமாக அதை பிசாசினிடத்தில் ஒரே பழத்தில் இழந்து விட்டார்.
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
-ஆதியாகமம் 3 : 1
- இங்கு சர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
-வெளிப்படுத்தல் 13 : 2
- இங்கு வலுசர்ப்பம் என்று ஆனது.
எப்படி சர்ப்பம் வலுசர்ப்பமாக மாறினது:
- சர்ப்பத்தை பார்த்து கர்த்தர் ஒரு சாபத்தை கொடுக்கிறார்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
-ஆதியாகமம் 3 : 14
இந்த வசனத்தின் ஆவிக்குரிய அர்த்தம்:
- சர்ப்பம் தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் மண்ணாலே உருவாக்கப்பட்ட மனுஷனை ஆளுகை செய்வான்.
- மண்ணிலே உருவாக்கப்பட்டதில் மிக முக்கியமானது மனிதன்.
- மனுஷனைத் தான் அவன் தன்னுடைய கரத்திலே எடுத்துக் கொண்டான்.
- மனுஷனுடைய ஆளுகையை அவன் உட்கொள்ள, உட்கொள்ள வலுசர்ப்பம் ஆனான்.
- கர்த்தர் கொடுத்த வல்லமை மனுஷனிடத்தில் இருந்து பிசாசினிடத்திற்கு போன உடனே வலு சர்ப்பமாக மாறி விட்டது.
- ஆண்டவர் ஒவ்வொரு மனுஷனுக்கும் கொடுக்கிறதான அந்த அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பிசாசு மனுஷன் கையில் இருந்து வாங்கி, கடைசியில் வலுசர்ப்பமாக மாறி விட்டது.
ஆண்டவர் ஆதாமிடம் சொன்னது:
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
-ஆதியாகமம் 1 : 28
ஆண்டவர் நோவாவிடம் சொன்னது:
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
-ஆதியாகமம் 6 : 11
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
-ஆதியாகமம் 9 : 1
உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
-ஆதியாகமம் 9 : 2
- ஆளுகை போய் விட்டது.
- அதனால் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லவே இல்லை.
- கீழ்ப்படுத்தி என்ற வார்த்தையை ஆண்டவர் குறிப்பிடவில்லை.
- இப்போது கையளிக்கப்பட்டு இருக்கிறது.
- ஒப்படைத்து இருக்கிறார்.
- பத்தரமாக வைத்துக் கொள் என்கிறார்.
கானான்:
- நோவாவின் மகனான காம் வழியாக பிசாசு உள்ளே வருகிறான்.
- கானானியர்களுடைய அருவருப்பை குறித்து லேவியராகமத்தில் நாம் வாசிக்கிறோம்.
- இந்த காம் வம்சத்தில் வந்தவர்கள் தான் எகிப்தியர்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
-சங்கீதம் 105 : 23
- அந்த கானானியரிடத்தில் தேவனுடைய ஜனங்கள் அடிமைகளாக இருந்தார்கள்.
- காரணம் ஆளுகை கொடுக்கப்பட்டது.
- இயேசு வருகிற வரைக்கும் முழு ஆளுகையும் அவனுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
-தானியேல் 10 : 13
- பெர்சியா ராஜ்யத்தின் அதிபதிகளுக்குள் பிசாசு இருக்கிறான்.
- தேவதூதன் தானியேலுக்கு பதிலை கொண்டு வருகிறான்.
- தேவதூதன் பெர்சியா தேசத்து அதிபதியை எதிர்க்க முடியுமா? முடியாது.
- அவனுக்குள் இருக்கிற பிசாசு அவன் மூலமாக எதிர்ப்பை, தானியேலிடத்தில் அந்த பதில் வராதபடிக்கு தடுக்கிறது.
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
-தானியேல் 10 : 20
- அதற்கடுத்து ஒருவன் வருவான்.
- அவனுக்குள்ளேயும் பிசாசு இருக்கிறது.
- Alexander குள் Antiochus Epiphanus னு ஒருத்தன் அந்த வம்சத்தில் வந்த ஒருத்தன்.
- அவனுக்குள் பிசாசு இருந்தான்.
- அதிகாரம் பிசாசு கையில் போய் விட்டதால், ஒவ்வொரு ஆளுகைகுள்ளேயும் பிசாசு இருக்கும்.
- பரலோக ராஜ்யம் வேறு ; பூமிக்குரிய ராஜ்யம் வேறு
- பரலோகத்தில் ராஜாவாக தேவன் இருக்கிறார்.
- பூமிக்கு ராஜாவாக பிசாசு இருக்கிறான்.
- இப்பிரபஞ்சத்தின் அதிபதி பிசாசின் கையில் ராஜ்யபாரம் இருக்கிறது.
- இந்த ராஜ்யபாரத்தை இயேசு வந்து ஜெயித்தார்.
- ஆளுகை ஆதாம் கையில் இருந்து பிசாசின் கைக்கு போய்விட்டது.
- அவன் கொஞ்ச கொஞ்சமாக ராஜாக்களின் ஆளுகைக்குள் செல்கிறான்.
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
-தானியேல் 2 : 47
மறுபடியும் பிசாசு அவனுக்குள் வந்து விடுகிறான்:
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
-தானியேல் 3 : 5
- 2ம் அதிகாரத்தில் வெளிப்பாடு கிடைக்கிறது, 3ம் அதிகாரத்தில் சிலையை வழிபட சொல்கிறான்.
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
-தானியேல் 4 : 5
- ராஜாக்களுக்குள் இருக்கிற பிசாசு, சீக்கிரம் அவர்களை மனந்திரும்ப விடாது.
- ஆளுகை மனுஷன் கையிலிருந்து பிசாசின் கைக்கு மொத்தமாக போய்விட்டது.
- இதை மீட்கும்படி இழந்து போனதை இரட்சிக்கும்படி மனுஷகுமாரன் வந்தார்.
- இந்த ஆளுகையை அவர் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
-வெளிப்படுத்தல் 1 : 5
- இப்போது பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி இயேசுகிறிஸ்து.
- முன்பு ராஜாக்களை தள்ளி ராஜாக்களை உருவாக்குபவர் இயேசு.
- இப்போது அதிபதி.
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
-மத்தேயு 4 : 8
- மத்தேயு -வெளி வரை கொஞ்சம் கொஞ்சமாக இயேசு அந்த ஆளுகையை ஜெயித்து கொண்டே வந்தார்.
- இப்போது அந்த ஆளுகையை தான் நம் கையில் கொடுத்திருக்கிறார்.
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
-யோவான் 15 : 15
- அப்போது ஆளுகையும் சேர்ந்து நம்மிடத்தில் வந்துவிட்டது.
- அதனால் தான் அவர் சொல்லுகிறார் நீங்கள் போய் என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவீர்கள் என்று.
- யோசேப்பு பார்வோனுடைய முத்திரை மோதிரத்தோடு போகும் போது சகல ஜனங்களும் அவர் முன்னாடி வணங்க வேண்டும்.
- அந்த மோதிரத்திற்றகு அப்படி ஒரு power.
- அதேப் போல நம் மேல் ஒரு முத்திரை இருக்கிறது.
- பரிசுத்த ஆவியானவரின் முத்திரை
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
-எபேசியர் 4 : 30
ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
-எபேசியர் 6 : 12
- வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் நம் முன்பு அடங்கி போக வேண்டும்.
- ஏனென்றால் நமக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்து இருக்கிறார்.
முதலாவது:
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
-ஆதியாகமம் 3 : 5
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
-மத்தேயு 4 : 2
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
-மத்தேயு 4 : 3
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
-மத்தேயு 4 : 4
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
-ஆதியாகமம் 3 : 5
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
-மத்தேயு 4 : 2
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
-மத்தேயு 4 : 3
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
-மத்தேயு 4 : 4
- முதலாம் ஆதாம் புசித்தார்.
- இரண்டாம் ஆதாம் புசிக்க மாட்டேன் என்றார்
இரண்டவது:
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
-ஆதியாகமம் 3 : 4
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
-மத்தேயு 4 : 6
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
-ஆதியாகமம் 3 : 4
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
-மத்தேயு 4 : 6
மூன்றாவது:
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
-ஆதியாகமம் 3 : 5
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
-மத்தேயு 4 : 9
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
-ஆதியாகமம் 3 : 5
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
-மத்தேயு 4 : 9
- உலகத்தின் ராஜ்யம் உங்களுக்கு கிடைக்கும்.
- ஆசை வார்த்தை காட்டுகிறான்.
- ஆதாமுக்கு காட்டின ஆசை வார்த்தை தேவர்களை போல இருப்பீர்கள்
- இயேசுவுக்கு காட்டின ஆசை வார்த்தை உலகத்தை உங்களுக்கு தருகிறேன்.
- இயேசு எதற்காக வந்தாரோ அதை shortcut ல் கொடுக்கப் பார்க்கிறான்.
- கர்த்தர் கொடுப்பேன் என்று சொன்னதை கர்த்தரே கொடுப்பார்.
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
-சங்கீதம் 2 : 8
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
-லூக்கா 20 : 42
கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
-லூக்கா 20 : 43
- இயேசுவுக்கு பிதா கொடுத்த வாக்குத்தத்தம்.
- அதை எப்படி சுதந்தரிக்கணும் என்று பிதா சொல்லி வைத்திருக்கிறார்.
- ஆசீர்வாதத்திற்கு ஒரு முறை உண்டு
- ஆதாம் முதல் ஆபிரகாம் வரையிலான காலம் - மனசாட்சி பிரமாணம்; நியாயப்பிரமாணம் அப்போது கிடையாது.
- அப்போவே அதற்கு ஒரு பிரமாணத்தை ஆண்டவர் வைத்திருந்தார்.
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
-ஆதியாகமம் 12 : 1
அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
-மத்தேயு 4 : 11
- ஆதாம் எதில் தோற்றாரோ, அதில் இயேசு ஜெயித்தார்.
- ஆளுகையை அவன் இழந்தான்.
- ஆளுகையின் முதல் பாகம் இயேசுவிடம் வந்து விட்டது.
- இயேசு ஆளுகை செய்ய தொடங்குகிறார்.
அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
-மத்தேயு 8 : 29
- எப்போ ஆதாமுடைய ஆளுகை பிசாசின்கைகளில் போனதோ அப்போது தேவனை பற்றிய பயம் ஆதாமுக்கு வந்தது.
- எப்போ பிசாசின் ஆளுகை இயேசுவின் கைகளில் போனதோ அப்போது தேவனை பற்றிய பயம் பிசாசுக்கு வந்தது.
- யார் ஆளுகை செய்கிறார்களோ அவர்களின் கீழ் இருப்பவர்கள் அவர்களுக்கு பயப்படுவார்கள்.
- எனவே ஆளுகையை கொண்டிருக்கிற நம்மை பார்த்து தான் அவன் பயப்பட வேண்டும்.
- நல்ல ஜெபத்திலும், உபவாசத்திலும் தரித்திருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிசாசை விரட்டலாம்.
- பிசாசு தோற்கடிக்கப்பட்டவன்.
- அவன் மேல் உள்ள ஆளுகையை கர்த்தர் நம் கையில் கொடுத்திருக்கிறார்.
- நமக்கு Authority இருக்கிறது - ஜெயித்த இயேசுவினுடைய பிள்ளை நான்.
- உலகப்பிரகாரமாக வெளியில் அல்ல, உள்ளுக்குள் அந்த அதிகாரம் இருக்க வேண்டும்.
- இருட்டை கண்டு வெளிச்சம் பயப்படலாமோ!
- நான் உலகத்தை ஜெயித்த தகப்பனுடைய பிள்ளை.
- இயேசு இந்த உலகத்தை ஜெயிப்பதற்கு முன்னமே, அந்த ஆளுகை எப்படிப்பட்டது என்பதை எலியா செய்து காட்டுவார்.
- எலியா மெல்கிசெதேக்கின் முறைமைக்கு அடையாளமானவர்.
அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
-1 இராஜாக்கள் 18 : 1
அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.
-1 இராஜாக்கள் 18 : 8
- அவனும் இரதத்தை எடுத்துக் கொண்டு எலியாவைப் பார்க்க வந்தான்.
- இது தான் Authority
- கர்த்தருடைய அபிஷேகம் நம்மில் இருக்குமானால் நீ உலகத்தை பார்த்து பயப்படக் கூடாது.
- உலகம் நம்மைக் கண்டு பயப்பட வேண்டும்.
Authority:
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
-யோவான் 19 : 10
இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
-யோவான் 19 : 11
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
-ஏசாயா 53 : 5
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
-1 இராஜாக்கள் 18 : 17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
-மாற்கு 16 : 17
Why Authority
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
-யோவான் 13 : 3
- நம்முடைய அதிகாரம் அடுத்தவனை அழிப்பதற்கு அல்ல.
- மனத்தாழ்மையுடன் நடக்க வேண்டும்.
- அடுத்தவர்களுக்கு ஊழியம் பண்ணுவதற்கு தான் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Comments
Post a Comment