வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 1 விளக்கம் இந்தப் புத்தகம் கி.பி. 100 வது வருஷத்திலே எழுதப்பட்ட ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதினவர் இயேசுவினுடைய சீஷராக இருந்த யோவான். இந்தப் புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவானவர் தரிசனங்களை யோவானுக்கு காண்பித்த போது அராமிய மொழியில் பேசினார். இயேசுவினுடைய அனைத்து சீஷர்களும் மரித்துப் போய், கடைசி வரைக்கும் இருந்தவர் தான் இந்த யோவான். இவர் இந்தப் புத்தகத்தை எழுதும் போது, எபேசு என்கிற சபைக்குத் தலைவராக இருந்தார். சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை நடக்கும் விஷயங்கள் வெளி 1-3 அதிகாரங்களில் காணப்படுகின்றன. சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் நடக்கப் போகிற விஷயங்கள் வெளி 4-22 அதிகாரங்களில் காணப்படுகின்றன. இந்தப் புத்தகத்தில் - சபைக்கு பரலோகத்தில் என்ன நடக்கப் போகிறது, - பூமியில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது, - இஸ்ரவேலருக்கு என்ன நடக்கப் போகிறது, - அந்திக்கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப் போகிறது என்றெல்லாம் பார்க்கலாம்.