முழு வேதாகமத்தில் தேவனுடைய இராஜ்யம் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள 69 வசனங்கள்

முழு வேதாகமத்தில் “தேவனுடைய இராஜ்யம்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள 69 வசனங்கள்

மத்தேயு - 5 வசனங்கள்

மாற்கு - 16 வசனங்கள்

லூக்கா - 33 வசனங்கள் 

யோவான் - 2 வசனங்கள்

அப்போ to 2 தெசலோ - 13 வசனங்கள் 


1) முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்அப்பொழுது இவைகளெல்லாம்உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

 -மத்தேயு 6 : 33 


2) நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில்வந்திருக்கிறதே.

 -மத்தேயு 12 : 28


3) மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்ஒட்டகமானது ஊசியின்காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -மத்தேயு 19 : 24


4) இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்அதற்கு அவர்கள்மூத்தவன்தான் என்றார்கள்அப்பொழுதுஇயேசு அவர்களை நோக்கிஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்குமுன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்றுமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 -மத்தேயு 21 : 31


5) ஆகையால்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டுஅதற்கேற்ற கனிகளைத் தருகிறஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

 -மத்தேயு 21 : 43


6) யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்புஇயேசு கலிலேயாவிலே வந்துதேவனுடைய ராஜ்யத்தின்சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:

 -மாற்கு 1 : 14


7) காலம் நிறைவேறிற்றுதேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றுமனந்திரும்பிசுவிசேஷத்தை விசுவாசியுங்கள்என்றார்.

 -மாற்கு 1 : 15


8) அதற்கு அவர்தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டதுபுறம்பேஇருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

 -மாற்கு 4 : 11


9) பின்னும் அவர் அவர்களை நோக்கிதேவனுடைய ராஜ்யமானதுஒரு மனுஷன் நிலத்தில் விதையைவிதைத்து;

 -மாற்கு 4 : 26


10) பின்னும் அவர் அவர்களை நோக்கிதேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்அல்லது எந்தஉவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

 -மாற்கு 4 : 30


11) அன்றியும்அவர் அவர்களை நோக்கிஇங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடேவருவதைக் காணுமுன்மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்றுமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்என்றார்.

 -மாற்கு 9 : 1


12) உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால்அதைப் பிடுங்கிப்போடுநீ இரண்டு கண்ணுடையவனாய் நரகஅக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும்ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதுஉனக்கு நலமாயிருக்கும்.

 -மாற்கு 9 : 47


13) இயேசு அதைக் கண்டுவிசனமடைந்துசிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

 -மாற்கு 10 : 14


14) எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால்அவன் அதில்பிரவேசிப்பதில்லையென்றுமெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

 -மாற்கு 10 : 15


15) அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்துதம்முடைய சீஷரை நோக்கிஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடையராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.

 -மாற்கு 10 : 23


16) சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்இயேசு பின்னும் அவர்களை நோக்கிபிள்ளைகளேஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறதுஎவ்வளவு அரிதாயிருக்கிறது!

 -மாற்கு 10 : 24


17) ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும்ஒட்டகமானது ஊசியின் காதிலேநுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

 -மாற்கு 10 : 25


18) அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டுநீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்லஎன்றார்அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.

 -மாற்கு 12 : 34


19) நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தைஇனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -மாற்கு 14 : 25


20) கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக்காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்துபிலாத்துவினிடத்தில் துணிந்துபோய்இயேசுவின்சரீரத்தைக் கேட்டான்.

 -மாற்கு 15 : 43


21) அவரோ அவர்களை நோக்கிநான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப்பிரசங்கிக்கவேண்டும்இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.

 -லூக்கா 4 : 43


22) அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்துதரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

 -லூக்கா 6 : 20


23) ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லைஆகிலும்தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்றுஉங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -லூக்கா 7 : 28


24) பின்புஅவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணிதேவனுடைய ராஜ்யத்திற்குரியநற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார்பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

 -லூக்கா 8 : 1


25) அதற்கு அவர்தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டதுமற்றவர்களுக்கோஅவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாகஅவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

 -லூக்கா 8 : 10


26) தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும்பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களைஅனுப்பினார்.

 -லூக்கா 9 : 2


27) ஜனங்கள் அதை அறிந்துஅவர் பின்னே போனார்கள்அவர்களை அவர் ஏற்றுக்கொண்டுதேவனுடையராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி,சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச்சொஸ்தப்படுத்தினார்.

 -லூக்கா 9 : 11


28) இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன்மரணத்தைருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -லூக்கா 9 : 27


29) அதற்கு இயேசுமரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்நீ போய்தேவனுடையராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

 -லூக்கா 9 : 60


30) அதற்கு இயேசுகலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடையராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.  

 -லூக்கா 9 : 62


31) அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கிதேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய்வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

 -லூக்கா 10 : 9


32) எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த்துடைத்துப்போடுகிறோம்ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதைஅறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.

 -லூக்கா 10 : 11


33) நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில்வந்திருக்கிறதே.

 -லூக்கா 11 : 20


34) தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள்அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்.

 -லூக்கா 12 : 31


35) அவர் அவர்களை நோக்கிதேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறதுஅதை எதற்கு ஒப்பிடுவேன்?

 -லூக்கா 13 : 18


36) மேலும் அவர்தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

 -லூக்கா 13 : 20


37) நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடையராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும்உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்குஅழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

 -லூக்கா 13 : 28


38) கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த ஜனங்கள் வந்துதேவனுடைய ராஜ்யத்தில்பந்தியிருப்பார்கள.

 -லூக்கா 13 : 29


39) அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுதுஅவரை நோக்கிதேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.

 -லூக்கா 14 : 15


40) நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனவாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்ததுஅதுமுதல்தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறதுயாவரும் பலவந்தமாய் அதில்பிரவேசிக்கிறார்கள்.

 -லூக்கா 16 : 16


41) தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்றுபரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுதுஅவர்களுக்கு அவர்பிரதியுத்தரமாகதேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

 -லூக்கா 17 : 20


42) இதோஇங்கே என்றும்அதோஅங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராதுஇதோதேவனுடையராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

 -லூக்கா 17 : 21


43) இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டுசிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்குஇடங்கொடுங்கள்அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

 -லூக்கா 18 : 16


44) எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால்அதில்பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -லூக்கா 18 : 17


45) அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டுஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில்பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.

 -லூக்கா 18 : 24


46) ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும்ஒட்டகமானது ஊசியின் காதிலேநுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

 -லூக்கா 18 : 25


47) அதற்கு அவர்தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவதுபெற்றோரையாவதுசகோதரரையாவதுமனைவியையாவதுபிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

 -லூக்கா 18 : 29


48) அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில்அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும்தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும்அவர் ஒரு உவமையைச்சொன்னார்:

 -லூக்கா 19 : 11


49) அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போதுதேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்றுஅறியுங்கள்.

 -லூக்கா 21 : 31


50) தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்றுஉங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

 -லூக்கா 22 : 16


51) தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்றுஉங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -லூக்கா 22 : 18


52) அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும்தேவனுடையராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும்யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும்சம்மதியாதவனுமாயிருந்தான்.

 -லூக்கா 23 : 51


53) இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாகஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக்காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 -யோவான் 3 : 3


54) இயேசு பிரதியுத்தரமாகஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலேபிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

 -யோவான் 3 : 5


55) அவர் பாடுபட்டபின்புநாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகிதேவனுடையராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசிஅநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத்தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

 -அப்போஸ்தலர் 1 : 3


56) தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்துபிலிப்புபிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோதுபுருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

 -அப்போஸ்தலர் 8 : 12


57) சீஷருடைய மனதைத் திடப்படுத்திவிசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லிநாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

 -அப்போஸ்தலர் 14 : 22


58) பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்துதைரியமாய்ப் பிரசங்கித்துமூன்று மாதமளவும் தேவனுடையராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணிபுத்திசொல்லிக்கொண்டு வந்தான்.

 -அப்போஸ்தலர் 19 : 8


59) இதோநான் உங்களுக்குள்ளே சஞ்சரித்துதேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப்பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்றுஅறிந்திருக்கிறேன்.

 -அப்போஸ்தலர் 20 : 25


60) அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்துஅநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில்வந்தார்கள்ய அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும்தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்துதேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.

 -அப்போஸ்தலர் 28 : 23


61) மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல்தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்துகர்த்தராகியஇயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.    

 -அப்போஸ்தலர் 28 : 31


62) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்லஅது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும்சந்தோஷமுமாயிருக்கிறது.

 -ரோமர் 14 : 17


63) தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்லபெலத்திலே உண்டாயிருக்கிறது.

 -1 கொரி 4 : 20


64) அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களாவஞ்சிக்கப்படாதிருங்கள்வேசிமார்க்கத்தாரும்விக்கிரகாராதனைக்காரரும்விபசாரக்காரரும்சுயபுணர்ச்சிக்காரரும்ஆண்புணர்ச்சிக்காரரும்,

 -1 கொரி 6 : 9


65) திருடனும்பொருளாசைக்காரரும்வெறியரும்உதாசினரும்கொள்ளைக்காரரும் தேவனுடையராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

 -1 கொரி 6 : 10


66) சகோதரரேநான் சொல்லுகிறதென்னவெனில்மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச்சுதந்தரிக்கமாட்டாதுஅழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

 -1 கொரி 15 : 50


67) பொறாமைகள்கொலைகள்வெறிகள்களியாட்டுகள் முதலானவைகளேஇப்படிப்பட்டவைகளைச்செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோலஇப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 -கலாத்தியர் 5 : 21


68) யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான்விருத்தசேதனமுள்ளவர்களில்இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்துஎனக்கு ஆறுதல்செய்துவந்தார்கள்.

 -கொலோசெயர் 4 : 11


69) நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்கஅந்த ராஜ்யத்திற்கு நீங்கள்பாத்திரரென்றெண்ணப்படும்படிக்குதேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்குஅதுவேஅத்தாட்சியாயிருக்கிறது.

 -2 தெசலோனிக்கேயர் 1 : 5




Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4