சாக்கு போக்குகள்
சாக்கு போக்குகள் (Excuses)
Songwriters: Jim Kimberley / William Topley
சாக்கு போக்குகள், சாக்கு போக்குகள் நீங்கள் ஒவ்வொரு நாளும் அவற்றைக் கேட்பீர்கள்.
நீங்கள் சர்ச்-ல் இருந்து விலகி சென்றால், பிசாசு உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பான்.
மக்கள் தேவனை அறிந்து கொள்ளும்போது பிசாசு எப்போதும் தோற்றுப் போகிறான்.
எனவே, அவர்களை தேவாலயத்திலிருந்து விலக்கி வைக்க, அவன் அவர்களுக்கு சாக்குபோக்குகள்/காரணங்களை வழங்குகிறான்.
எனவே, அவர்களை தேவாலயத்திலிருந்து விலக்கி வைக்க, அவன் அவர்களுக்கு சாக்குபோக்குகள்/காரணங்களை வழங்குகிறான்.
சர்ச்-கு போகாமல் இருக்க மக்களுக்கு சாக்கு போக்குகள் நிறைய உள்ளன.
அதில் சில,
-கோடையில் மிகவும் சூடாக இருக்கிறது என்பார்கள்; குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கிறது என்பார்கள்.
-வசந்த காலத்தில் வானிலை சரியாக இருக்கும் போது தான் நாங்கள் வேறு சில இடங்களைக் காண முடியும் என்பார்கள்.
-ஆனால் தங்கள் பழைய நண்பர்களைக் காண மலையின் உச்சிகானாலும், கடற்கரையின் ஆழத்துக்கானாலும் செல்வார்கள்.
-எனக்கு சில நேரம் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க தோன்றுகிறது, உறவினர்கள் வந்தால் அவர்களோடு நேரம் செலவிடலாம் என்பார்கள்.
-தேவாலய பெஞ்சுகள் மிகவும் கடினமானவைகளாக அவர்களுக்கு தோன்றும்.
-சர்ச்-ல் பாடல் பாடுகிற குழு மிகவும் சத்தமாக பாடுகிறது.
-நான் ஒரு பெரிய கூட்டத்தில் நடுவில் உட்கார்ந்தால் எனக்கு பதட்டமாக இருக்கும் என்பார்கள்.
-என் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார், "நீ கூட்டத்தின் நடுவில் இருக்கும் பொழுது கவனமாக இரு, ஏனென்றால் அவர்கள் உன்னை பின்தங்க வைத்து விடுவார்கள் என்று."
-ஆனால், அவர்கள் பழைய பந்து விளையாட்டிற்கு செல்வார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு ஓய்வெடுக்க உதவுகிறது.
-ஞாயிறு காலை தலைவலி மற்றும் ஞாயிறு இரவு முதுகுவலி. ஆனால் திங்கள் காலை வேலை நேரத்தில், அவர்கள் நன்றாக உணர்கிறார்கள்.
-குழந்தைகளில் ஒருவருக்கு சளி பிடித்திருக்கும் போது,
அந்த ஏழைக் குழந்தையின் மூக்கைச் சிந்த, மொத்தக் குடும்பமும் ஏன் வீட்டில் இருக்க வேண்டும்?
-பாஸ்டர் மிகவும் சிறியவராக இருக்கிறார்; அவர் கொஞ்சம் பெரியவராக இருந்தால் நல்லா இருக்கும்.
-பாஸ்டரின் போதனைகள் கடினமாக இல்லை; அவைகள் இன்னும் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம்.
-பாஸ்டரின் குரல் மிகவும் அமைதியாக இருக்கிறது; சில நேரங்களில் அவர் மிகவும் சத்தமாக பேசுகிறார்.
-பாஸ்டருக்கு இன்னும் கண்ணியம் வர வேண்டும்; அவர் மிகவும் கர்வமாக இருக்கிறார்.
-பிரசங்கங்கள் மிக நீளமாக உள்ளன; அவைகள் மிகவும் குறுகியதாக இருக்கலாம்.
-அவர் "கத்தி கத்தி பிரசங்கிப்பதற்கு" பதிலாக கண்ணியத்துடன் வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும்.
-நமக்குக் கிடைத்திருக்கும் பாஸ்டர் "உலகின் மிகவும் சிறந்த மனிதனாக" இருக்க வேண்டும்.
-ஒரு பெண்மணி ஒரு நாள் சொன்னார்; பாஸ்டர் எனக்கு கை கூட கொடுக்கவில்லை என்று.
Comments
Post a Comment