April 2023 - Bible Quiz Questions and Answers

April Quiz

ஆதியாகமம் 26-50 
ஈசாக்குயாக்கோபு மற்றும் யோசேப்பு

Questions:
1) ஈசாக்குடைய வேலைக்காரர் வாக்குவாதம் பண்ணி வெட்டப்பட்ட கிணறுகளின் பெயர் ஏசேக்கு மற்றும் ரெகொபோத். சரியா?தவறா?
2) ஈசாக்கு தேவன் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக் கொண்டான். சரியா?தவறா?
3) இஸ்ரவேல் ஏதேருக்கு அப்புறத்தில் தங்கிக் குடியிருக்கும் போது ரூபன் போய்தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய சில்பாளோடே சயனித்தான். சரியா?தவறா?
4) யோசேப்பின் சகோதரர்கள்பென்யமீனை கூட்டிக் கொண்டு வரப் போகும் போது சிமியோனை யோசேப்பினிடத்தில் விட்டு சென்றார்கள்சரியா?தவறா?
5) யாக்கோபு ஆசேர் கோத்திரத்துக்கு கொடுத்த ஆசீர்வாதம் “அவன் ஆகாரம் கொழுமையாயிருக்கும்ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்” என்பதே. சரியா?தவறா?

6) Match the following:
மக்னாயீம் - தேவன் தன்னோடே (யாக்கோபுபேசின ஸ்தலம் (1)
பெனியேல் - யாக்கோபு தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோதுஅங்கே தனக்கு தேவன்தரிசனமானபடியால் (2)
சுக்கோத் - உயிர் தப்பிப் பிழைத்தேன் (3)
ஏல்பெத்தேல் - வருத்தத்தை மறக்கும்படி தேவன் பண்ணினார் (4)
பெத்தேல் - சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் பலுகப்பண்ணினார் (5)
மனாசே - இது தேவனுடைய சேனை (6)
எப்பிராயீம் - யாக்கோபு தனக்கு ஒரு வீடு கட்டினான் (7)

7) Match the following 
சேபா - கலயெத் (1)
லூஸ்  இஸ்ரவேல் (2)
யாக்கோபு - பெயர்செபா (3)
பெனொனி - ஏதோம் (4)
சாலேம் -  பென்யமீன் (5)
ஜெகர்சகதூதா - பெத்தேல் (6)
ஏசா - சீகேமுடைய பட்டணம் (7)

8) Match the following 
ரூபன் - இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் (1)
நப்தலி - கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார் (2)
செபுலோன் - இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் (3)
யூதா - நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் (4)
யோசேப்பு - நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் (5)

9) Match the following 
சிமியோன் - பீறுகிற ஓநாய் (1)
இசக்கார் - நியாயம் விசாரிப்பான் (2)
தாண்பட்டயம் கொடுமையான கருவி (3)
காத் - இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை (4)
பென்யமீன் - அவன் மேல் ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும் (5)

10) ”கர்த்தர் ஈசாக்குக்கு தரிசனமாகிநீ எகிப்துக்குப் போகாமல்நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு” என்றார்அந்த தேசம் எது
11) யார் அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்?
12) எது ஈசாக்குடைய சம்பளம் என லாபான் குறிப்பிட்டார்?
13) யாக்கோபு சாலேமில் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன
14) லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாளை தீட்டுப்படுத்தியது யார்
15) யோசேப்பு எத்தனை வயதாய் இருக்கையில்அவன் சகோதரர்கள் அவனை எகிப்தியருக்கு விற்றுப் போட்டார்கள்?
16) ”இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்று சொல்லி பெயரிட்டப்பட்டவர் யார்?
17) ஏழு பசுக்கள்ஏழு கதிர்கள் இந்த சொப்பனங்கள் பார்வோனுக்கு ஏன் இரட்டித்தது?
18) பென்யமீனுடைய சாக்கிலே என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
19) பஞ்சம் வந்த போதுயோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலும் உள்ளவர்களிடம் எந்த பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆகாரத்தை கொடுத்தார்? (மொத்தம் 9 இருக்கிறதுஅதில் 4 வது குறிப்பிட்டால் நலமாயிருக்கும்)
20) ரூபன் சிமியோன் என்பவர்களைப்போலயார் என்னுடையவர்கள் என்று யாக்கோபு சொன்னார்?

Answers:
1) தவறு (26:20-21) ஏசேக்கு மற்றும் சித்னா
2) தவறு (28:22) யாக்கோபு
3) தவறு (35:22) பில்காள்
4) சரி (42:24)
5) சரி (49:20)

6) 6, 3, 7, 2, 1, 4, 5
மக்னாயீம் - இது தேவனுடைய சேனை (32:2)
பெனியேல் - உயிர் தப்பிப் பிழைத்தேன் (32:30)
சுக்கோத் - யாக்கோபு தனக்கு ஒரு வீடு கட்டினான் (33:17)
ஏல்பெத்தேல் - யாக்கோபு தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோதுஅங்கே தனக்கு தேவன்தரிசனமானபடியால், (35:7)
பெத்தேல் - தேவன் தன்னோடே (யாக்கோபுபேசின ஸ்தலம் (35:15)
மனாசே - வருத்தத்தை மறக்கும்படி தேவன் பண்ணினார் (41:51)
எப்பிராயீம் - சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் பலுகப்பண்ணினார் (41:52)

7) 3, 6, 2, 5, 7, 1, 4
சேபா - பெயர்செபா (26:33)
லூஸ்  பெத்தேல் (28:19)
யாக்கோபு - இஸ்ரவேல் (32:28)
பெனொனி - பென்யமீன் (35:18)
சாலேம் - சீகேமுடைய பட்டணம் (33:18)
ஜெகர்சகதூதா - கலயெத் (31:47)
ஏசா - ஏதோம் (36:8)

8) 2, 4, 5, 1, 3
ரூபன் - கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார் (29:32)
நப்தலி - நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் (30:8)
செபுலோன் - நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் (30 : 18)
யூதா - இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் (29 : 35)
யோசேப்பு - இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் (30 : 24)

9) 3, 4, 2, 5, 1
சிமியோன் - பட்டயம் கொடுமையான கருவி (49:5)
இசக்கார் - இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை (49 : 14)
தாண் - நியாயம் விசாரிப்பான் (49 : 16)
காத் - அவன் மேல் ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும் (49:19)
பென்யமீன் - பீறுகிற ஓநாய் (49:27)

10) கேரார் (26:2,6)
11) யூதீத்பஸ்மாத் (26:34,35)
12) (1)புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும்(2)வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் (3) கலப்புநிறமானவைகள்
(30:32; 31:8)
13) ஏல்எல்லோகே இஸ்ரவேல் (33:18,20)
14) ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் (34:1-2)
15) 17 (37:2,28)
16) பாரேஸ் (38:29-30)
17) தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு (41:32)
18) வெள்ளிப்பாத்திரமாகிய யோசேப்பின் பானபாத்திரத்தையும் (44:2,12)

19) ஆதி 47
(1)பணத்தை (47:14)
(2)குதிரைகளை (47:17)
(3)ஆடுகளை (47:17)
(4)மாடுகளை (47:17)
(5)கழுதைகளை (47:17)
(6)மக்களை வேலையாட்களாக - எங்களையும் (47:19,23) 
(7)வயல்நிலங்களை (47:19,20)
(8)குடிமாறி போகப் பண்ணி (47:21)
(9)விளைவில் ஐந்தில் ஒரு பங்கை (47:24)

20) எப்பிராயீமும் மனாசேயும் (48:5)











Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4