Posts

Showing posts from May, 2022

சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம்

Faith for the Impossible  சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம் விசுவாசம் விசுவாசத்தை வையுங்கள்.  விசுவாசத்தில் நடவுங்கள்.  விசுவாசத்தைக் கொண்டிருங்கள். நாம் எப்பொழுதும் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கிறோம். அப்படியென்றால் என்ன??  விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(Evidence of things)  -எபிரேயர் 11 : 1 Increasing Faith: அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்(Increase our faith) என்றார்கள்.  -லூக்கா 17 : 5 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.  -லூக்கா 17 : 6 உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி, தேவனுடைய வார்த்தையைப் படிப்பதாகும்.  ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.  -ரோமர் 10 : 17 உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி ஜெபம். ஏ...

தேவனின் பயன்பாட்டிற்காக நான் வைக்கப்பட்டிருக்கேன் - Poem

Tamil தேவனின் பயன்பாட்டிற்காக நான் வைக்கப்பட்டிருக்கேன்  என் வாழ்க்கையை எடுத்து கொள்ளுங்கள்; அது உமக்கென்று  பரிசுத்தப்படுத்தி பயன்படுத்தப்படட்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு  தருணங்களையும், நாட்களையும் எடுத்து  கொள்ளுங்கள்; அதை இடைவிடாத  புகழ்ச்சியில் நிரம்பட்டும். என் கைகளை எடுத்து  கொள்ளுங்கள்; அவைகள்  உங்கள் அன்பின் தூண்டுதலால்  நகரட்டும். என் கால்களை எடுத்து  கொள்ளுங்கள்; அவைகள்  உங்களுக்காக  நடக்கிற அழகான கால்களாக மாறட்டும். என் குரலை எடுத்து  கொள்ளுங்கள்; அது  என் ராஜாவுக்காக மட்டுமே பாடுகிற குரலாக மாறட்டும். என் உதடுகளை எடுத்து  கொள்ளுங்கள்; அது  உங்களிடம் இருந்து வருகிற வார்த்தைகளை மாத்திரம் உச்சரிப்பதாக  மாறட்டும் .  என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்துக்கொள்ளுங்கள்;  அதில் ஒரு சிறு பகுதி கூட எனக்கு சொந்தமில்லை. என் அறிவாற்றலை எடுத்து பயன்படுத்துங்கள்; நீங்கள் கொடுக்க விரும்பும் ஆற்றலை  கொடுங்கள். என் விருப்பத்தை எடுத்து உங்களுடையதாக ஆக்குங்கள்;  அது இனி என்னுடையதாக இருக்காது....

உயிர் கொடுக்கும் வார்த்தைகளை பேசுங்கள்

Speak words that bring life   உயிர் கொடுக்கும் வார்த்தைகளை பேசுங்கள் வாய் - மிகப்பெரியப் பிரச்சனை: நம் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் ஒன்று வாய்.  நம் வாயால் நாம் சொல்லக்கூடாதவற்றைச் சொல்லி பிறரைக் காயப்படுத்தலாம்.  ஒருமுறை சொல்லி விட்டால் நாம் நம் வார்த்தைகளை திரும்பப் பெற முடியாது.  நம் வாயிலிருந்து வருகிற வார்த்தை ஒரு ‘டூத் பேஸ்ட்டைப்’ போன்றது. அது குழாயிலிருந்து வெளியேறியவுடன் அதை மீண்டும் உள்ளே வைக்க முடியாது.  நீங்கள் எப்போதாவது அதிகமாகப் பேசி, கவனக்குறைவான வார்த்தை உங்கள் வாயிலிருந்து பிறந்தது உண்டா? நீங்கள் பேசிய வார்த்தைகளால் யாராவது காயப்பட்டு இருக்கிறார்களா?  உங்கள் வார்த்தைகளின் மூலம்  வரக்கூடிய ஜீவன் அல்லது மரணத்தை நீங்கள் எவ்வளவு அதிகமாக புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு கவனமாக அவற்றைப் பயன்படுத்துவீர்கள்.  சில நேரங்களில் வாயை திறந்து பேசுவதை விட  எதையும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.  நம் வாயிலிருந்து வெளிவருவது நல்லது என்பதை உறுதிப்படுத்த சிறந்த வழி, நல்ல எண்ணங்களை நம் இதயத்தில் வைப்பதுதான்....

அர்வனாவின் களம்

          அர்வனாவின் களம் சாமுவேல்-நாளாகமம்: சாமுவேல் புத்தகத்தை எழுதினது சாமுவேல். நாளாகமம் புத்தகத்தை எழுதினது யார் என்பது நமக்கு தெரியாது 1 சாமுவேல் 24 ல் வருகிற அதே கதை 1 நாளாகமம் 21 லும் வருகிறது.  அதில் 2 இடங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன.  ஏன் அப்படி வித்தியாசமாக வருகிறது என்று பார்ப்போம்.  தாவீது ராஜா செய்த தவறு: தாவீது ராஜா ஒரு தவறு செய்கிறார்.  ஜனங்களை இலக்கம் பார்க்கிறார்.  தாவீதின் முதல் யுத்தம் முதல் அவர் மேற்கொண்ட எந்த யுத்தத்திலும் அவர் தோல்வியடையவில்லை.  ஆண்டவர் தாவீதுக்கு அத்தனை வெற்றியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் போது,  தாவீது தன் ஜனங்களில் எத்தனை யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க நினைத்தது தவறு.  அது தவறு என்று யோவாபுக்கே தெரிந்தது.  ஆனால் தாவீதுக்கு தோன்றவில்லை. எனவே, தாண் முதல் பெயர்செபா வரை எண்ணினார்கள். 3 தண்டனை: காத் தீர்க்கத்தரிசி மூலம், ஆண்டவர் தாவீதுக்கு 3 தண்டனைகளில் ஒன்றை தெரிவு செய்துக்கொள்ளும்படி சொல்லுகிறார்.  7 வருட பஞ்சம் 3 வருடம் சத்துருக்கள் பின்தொடருவார்கள...

Doubts and answers

Questions: 1 kings 13:11-32 I have more questions on the story. 1)Why did the old prophet lied and misguided the Man of God? 2)And then again in the verse 20, why the word of the LORD came to the prophet (the lied person) 3)In the verse 20 why the prophet said, lay my bones beside his bones. 4)Why Lion and donkey? Any significance?  Answers: If you read Numbers 22-24 you will find a similarities.  Balaam was NOT a prophet of God yet he ended up speaking the Word of God.  The “old prophet” in 1 Kings 13 is called a “prophet” yet he lied and  yet, like Balaam, God used his mouth to speak His Word to the prophet who didn’t obey.  There may have been some respect from the old “prophet”toward the younger real prophet because God used the younger prophet to prophesy against the altar in Samaria,  the younger prophet did what the old “prophet” could never do.  That may be why he wanted to be buried with him.  He held him in honor.  Remember also tha...

உறுதியாக இருங்கள்

                        உறுதியாக இருங்கள் பரிசுத்த ஆவியானவரின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று "ஆறுதல்".  ஒளிக்காக நாம் சூரியனிடம் கெஞ்ச வேண்டியதில்லை என்பது போல, ஆறுதலுக்காக நாம் பரிசுத்த ஆவியிடம் கெஞ்ச வேண்டியதில்லை.  ஏனென்றால் அவர் பெயரே ஆறுதல்!  நீங்கள் ஒரு மோசமான நேரத்தைச் சந்திக்கும் போதெல்லாம், பரிசுத்த ஆவியானவர் அதில் தம்முடைய ஆறுதலைப் பற்றிய அதிக உணர்வைத் தரும்படி ஜெபிக்கவும்.  இயேசு சொன்னார், “துக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.” -மத்தேயு 5:4 நம் அனைவருக்கும் ஒரு சமயம் அல்லது இன்னொரு சமயத்தில் கடினமான நேரங்கள் ஏற்படும்.  வலியும் இழப்பும் வாழ்வின் ஒரு பகுதி.  ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் தாங்கள் விரும்பும் ஒருவர் இறந்திருப்பார்கள் அல்லது விலகிச் சென்றிருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதாவது, எப்போதாவது, எதையாவது அல்லது யாரையாவது இழந்திருப்பார்கள்.  எல்லோரும் ஏமாற்றம், மனச்சோர்வு அல்லது ஒருவித பெரும் வேதனையை அனுபவித்து இருப்பார்கள்.  இவை ...