அர்வனாவின் களம்
அர்வனாவின் களம்
சாமுவேல்-நாளாகமம்:
- சாமுவேல் புத்தகத்தை எழுதினது சாமுவேல்.
- நாளாகமம் புத்தகத்தை எழுதினது யார் என்பது நமக்கு தெரியாது
- 1 சாமுவேல் 24 ல் வருகிற அதே கதை 1 நாளாகமம் 21 லும் வருகிறது.
- அதில் 2 இடங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன.
- ஏன் அப்படி வித்தியாசமாக வருகிறது என்று பார்ப்போம்.
தாவீது ராஜா செய்த தவறு:
- தாவீது ராஜா ஒரு தவறு செய்கிறார்.
- ஜனங்களை இலக்கம் பார்க்கிறார்.
- தாவீதின் முதல் யுத்தம் முதல் அவர் மேற்கொண்ட எந்த யுத்தத்திலும் அவர் தோல்வியடையவில்லை.
- ஆண்டவர் தாவீதுக்கு அத்தனை வெற்றியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் போது,
- தாவீது தன் ஜனங்களில் எத்தனை யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க நினைத்தது தவறு.
- அது தவறு என்று யோவாபுக்கே தெரிந்தது.
- ஆனால் தாவீதுக்கு தோன்றவில்லை.
- எனவே, தாண் முதல் பெயர்செபா வரை எண்ணினார்கள்.
3 தண்டனை:
- காத் தீர்க்கத்தரிசி மூலம், ஆண்டவர் தாவீதுக்கு 3 தண்டனைகளில் ஒன்றை தெரிவு செய்துக்கொள்ளும்படி சொல்லுகிறார்.
- 7 வருட பஞ்சம்
- 3 வருடம் சத்துருக்கள் பின்தொடருவார்கள்
- தேசத்தில் 3 நாள் கொள்ளைநோய்
- அதில், 3 நாள் கொள்ளைநோயை தாவீது ஏற்றுக்கொள்கிறார்.
ஏன் அர்வனாவின் களம்:
தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
-2 சாமுவேல் 24 : 16
- தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேல் ஜனங்கள் செத்து விழுந்த போது மனமிறங்காத ஆண்டவர் அர்வனாவின் களம் வந்த போது ‘போதும்’ என்கிறார்.
- ஏன் சரியாக அந்த இடத்தில் ஆண்டவர் நிறுத்த சொல்லுகிறார்?
- அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன?
ஏன் முரண்பாடு:
அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
-2 சாமுவேல் 24 : 18
அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
-1 நாளாகமம் 21 : 18
களம் என்றால் என்ன?:
- கோதுமை வயலில் இருந்து கோதுமையை அறுவடை செய்து கொண்டு வந்து ஒரு இடத்திலே போட்டு,
- மாடுகள் அந்த கோதுமையை மிதித்து மிதித்து கோதுமை வேறாகவும், பதர் வேறாகவும் பிரித்தெடுப்பார்கள்.
- அந்த இடத்திற்கு பெயர் தான் களம்.
அர்வனாவின் களமா? ஒர்னானின் களமா? :
- இந்த இரண்டு பெயர்களும் எபிரேயப் பெயர்கள் அல்ல.
- எபூசிய மொழிப் பெயர்கள்.
ஒர்னான்:
- ஒர்னான் என்றால் ‘மகிமையான துதி’ என்று அர்த்தம். (ஆனால் அது இஸ்ரவேல் தேவனின் துதி அல்ல)
அர்வனா:
- அர்வனா என்பது ஒர்னான் என்பது போல ஒரு பெயர் அல்ல.
- அது அவனுடைய பதவியை காட்டுகிறது.
- எபூசிய மொழியில் Aha’v’nah (அர்வனா) என்றால் ‘மகாராஜா’ என்று அர்த்தம்.
- இவன் பெயரளவில் மகாராஜா அல்ல.
- இவன் தான் எபூசியனின் அரசனாக இருந்தவன்.
தாவீது மேல் நல்ல அபிப்பிராயம்:
- அர்வனாவும், எபூசியர்களும் தாவீதின் மேல் மிக நல்ல அபிப்பிராயத்தை வைத்திருந்தார்கள்.
எருசலேமும், சீயோனும் அமையப்பட்டுள்ள இடம்:
- ஒலிவ மலையின் கீழே ஒரு பள்ளத்தாக்கு வரும். அதற்கு
- கெதரோன் பள்ளத்தாக்கு என்றும்,
- ராஜாக்களின் பள்ளத்தாக்கு என்றும்,
- யோசபாத்தின் பள்ளத்தாக்கு என்றும் பெயர்.
- அந்த பள்ளத்தாக்கு முடிய அடுத்த மலைத்தொடர் தொடங்குகிறது.
- அது தான் எருசலேம் மலை.
- எருசலேம் அடுத்த பக்கத்தில் முடிகின்ற இடத்திலிருந்து தொடங்குவது தான் சீயோன்.
- அதாவது எருசலேமும், சீயோனும் ஒரே மலையின் மேல் அமையப்பட்டுள்ள இரு பட்டணங்கள்.
நடுமலையில் எபூசியர்கள் குடியிருந்தார்கள்:
- அந்த மலையின் உச்சியில் எபூசியர்கள் அரண்களை கட்டியிருந்தார்கள்.
- எனவே, யாராவது கிதரோன் பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி வர நினைத்தால் அவர்கள் மேலே இருந்து அம்பு எய்வார்கள்.
- எனவே வருகிறவர்களுக்கு எருசலேமை பிடிக்க முடியாது.
- கானானியருடைய காலத்தில் எருசலேமும், சீயோனும் கோட்டைகள் என்று சொல்லப்பட்டன.
தாவீது- எருசலேமையும், சீயோனையும் பிடித்தார்:
- தாவீது எப்ரோனிலே 7 வருடங்களும், 6 மாதமும் ராஜாவாக இருந்த பிறகு தன்னுடைய சேனையை கூட்டிக் கொண்டு எருசலேமை பிடிக்க வருகிறார். (2 சாமு 5)
- தாவீது அதை எபூசியர்கள் கையிலிருந்து பிடித்த போது இந்த எருசலேமையும், சீயோனையும் ஒன்றாய் இணைத்து தன்னுடைய அரண்மனையை சீயோனில் வைத்து கொண்டார்.
- சீயோன் தாவீதின் நகரம் என்னப்பட்டது.
எபூசியர்கள் கேள்விப்பட்ட போது:
- தாவீது இந்த எருசலேமையும், சீயோனையும் பிடிக்க வருகிறார் என்று எபூசியர்கள் கேள்விப்பட்டார்கள்.
- அப்போது எபூசியர்களை ஆட்சி செய்த ராஜா ‘அர்வனா’ .
- இவர் தான் செய்தி அனுப்பினார் தாவீதுக்கு , எருசலேமை பிடிப்கதற்கு நீ முயற்சி செய்ய வேண்டாம்.
- அப்படி வந்தால் எங்கள் சப்பாணிகளும், குருடர்களுமே உம்மை எதிர்த்து வீழ்த்தி விடுவார்கள் என்று.
- ஆனால் தாவீது வந்து எருசலேமையும், சீயோனையும் பிடித்துவிட்டார்.
வெற்றி அடைந்த ராஜா, தோல்வி அடைந்த ராஜாவுக்கு என்ன செய்ய வேண்டும்:
- எதிரி அரசனையும் கொன்று, ஜனங்களையும் கொன்றிருக்க வேண்டும். ஆனால் தாவீது அதை செய்யவில்லை.
- பிடிப்பட்டவர்களை நாட்டை விட்டு துரத்தி இருக்க வேண்டும். ஆனால் தாவீது அதை செய்யவில்லை.
- நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை தாவீது செய்யவில்லை.
- தாவீது சீயோனில் இருந்து கொண்டு, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகரமாக்கினார்.
அர்வனாவை தாவீது ஒன்றும் செய்யவில்லை:
- அர்வனாவை “உன் அரண்மனையையும், நிலங்களையும் நீயே வைத்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார் தாவீது.
- ஒரே வித்தியாசம் இனி நீ ஆட்சி செய்ய முடியாது
- ஆனால், ஒரு குறையும் இல்லாமல் ‘உன்னையும், உன் ஜனங்களையும் நான் வைத்து கொள்வேன்’ என்று தாவீது சொன்னார்.
- எபூசியர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
- எனவே அவர்களுக்கு தாவீதின் மேல் ஒரு பெரிய அன்பு, மரியாதை வந்தது.
- எபூசியர்களின் ராஜாவாகிய ஒர்னானுக்கும் தாவீதின் மேல் ஒரு பெரிய மதிப்பு வந்தது.
ஆவிக்குரிய சத்தியம்- கீழ்ப்படிதல்:
காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
-2 சாமுவேல் 24 : 19
- எவ்வளவோ நல்ல இடங்கள் இருந்தும் ஏன் அர்வனாவின் களத்தில் பலிபீடம் கட்ட வேண்டும் என்று தாவீது கேட்கவில்லை.
- மாறாக கீழ்ப்படிந்தார்.
- ஆண்டவர் அவரவருக்கு என்று ‘ஒரு அர்வனாவின் களத்தை’ வைத்திருக்கிறார்.
- ஆண்டவர் தங்களுக்கு நியமித்த சபையில், இடத்தில், ஊழியத்தில் அடங்கி இருக்க வேண்டும்.
- அது தான் முழுமையான கீழ்ப்படிதல்.
ஆபிரகாமின் கீழ்ப்படிதல்:
- ஆண்டவர் பெயர்செபாவில் வைத்து ஆபிரகாமிடம் ஈசாக்கை பலி கொடுக்க மோரியா மலைக்கு போகும்படி சொன்னார்.
- பெயர்செபாவில் இருந்து மோரியா மலை 3 நாள் பிரயாணம்.
- ஆனால் ஆண்டவர் அங்கு தான் பலியிடச் சொன்னார்.
- ஆபிரகாம் ஏன் அந்த இடத்தில் என்று கேள்விக் கேட்கவில்லை.
- மாறாக கீழ்ப்படிந்தார்.
தாவீதின் கீழ்ப்படிதல்:
- ஆண்டவர் அந்த அர்வனாவின் களத்தில் தான் பலிபீடம் கட்ட சொல்லி காத் தீ்ர்க்கத்தரிசியைக் கொண்டு தாவீதுக்கு அறிவுறுத்தினார்.
- தாவீது ஏன், எதற்கு, ஏன் என்றெல்லாம் கேள்விக் கேட்கவில்லை.
- கீழ்ப்படிந்தார்.
அதே போல நாமும் கீழ்ப்படிவோம்:
- ஆண்டவர் எங்கு இருக்க சொல்லுகிறாரோ, அங்கு இருங்கள்.
- ஏன் இந்த காலத்தில் நாம் பிறந்தோம்.
- ஏன் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறோம்.
- ஏன் குறிப்பிட்ட இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும்.
- உங்களுக்கென ஒரு ஊழியம் கொடுக்கப்பட்டது ஏன்?
- ஏன் என்ற காரணம் தாவீது கேட்காதது போல, நமக்கும் காரணம் தேவையில்லை.
- கீழ்ப்படிய வேண்டியது தான் ஒரு கிறிஸ்தவனின் கடமை.
- அவனவனுக்குரிய அர்வனாவின் களத்திலே தான் அவனவன் இருக்க வேண்டும்.
- ஊழியம் செய்ய வேண்டும்.
மோரியாமலை - மெல்கிசெதேக்கு கட்டிய பலிபீடம்:
- அந்த மோரியா மலையிலே ஏற்கனவே மெல்கிசெதேக்கு கட்டிய பலிபீடம் ஒன்று இருந்தது.
எருசலேம் நகரம் - சாலேம் தேசம்:
- அந்நேரத்தில் எருசலேம் என்ற நகரம் ‘சாலேம்’ என்று ஒரு தேசமாக இருந்தது.
- அந்த சாலேமை ஆட்சி செய்த ராஜா தான் ‘மெல்கிசெதேக்கு’.
- அவர்கள் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி, ஆராதனை செய்த ஸ்தலம் அந்த மோரியா மலை.
ஆண்டவர் அறிவுறுத்தலின்படி தான்:
- மெல்கிசெதேக்கை பற்றி வேதத்தில் உள்ளதை தவிர வேறு எதுவும் நமக்கு தெரியாது.
- ஆனால் அந்த மெல்கிசெதேக்கு ஆண்டவர் அறிவுறுத்தியபடி தான் மோரியா மலையில் பலி செலுத்தி இருக்க வேண்டும்.
- ஏனென்றால் மெல்கிசெதேக்கு
- தேவனுடைய மனுஷன்
- தேவனுடைய ஆசாரியன்
- தேவனுடைய ராஜா
வெவ்வேறு பகுதிகள்:
- ஆபிரகாம் வாழ்ந்தது சீகேமில்.
- மெல்கிசெதேக்கு இருந்தது சாலேமில்.
- லோத்து வாழ்ந்தது சோதோமில்.
- 3 வித்தியாசமான தூர இடங்கள்.
- ஆனால் எங்கேயோ இருந்த மெல்கிசெதேக்குக்கு இவ்வளவும் தெரிந்து ஆபிரகாமை சந்திக்க போனார் என்றால் அது தேவன் மூலமாய் தான்.
சாமுவேல் காலத்தில் எபூசியர்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள்:
- ஆனால் மெல்கிசெதேக்குக்கும், அந்த சாலேம் நாட்டாருக்கும் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.
- சரித்திரத்திலும் இல்லை. வேதத்திலும் இல்லை.
- ஆனால் திடீரெனப் பார்த்தால் அங்கு எபூசியர்கள் வாழுகிறார்கள்.
மோரியா மலை - எபூசியர்கள்:
- எபூசியர்கள் வந்து எருசலேமை கைப்பற்றி வாழ்ந்தார்களே!
- அந்த நேரத்தில் எருசலேமில் ஒரு நல்ல பிரதேசத்தை தனக்கென தெரிவு செய்து கொண்டு அதை தனக்கென வைத்து கொண்டிருந்தார் அந்த எபூசியர்களின் ராஜாவாகிய ஒர்னான்.
- அதிலே அவர்கள் கோதுமையை அறுவடை செய்துக்கொண்டு, ஒரு களத்திலே கொண்டு வந்து போட்டு, மாடுகளை கொண்டு மிதித்து மிதித்து கோதுமையை பதரிலே இருந்து வேறு பிரித்தார்களே!
- அந்த ஸ்தலம் தான் மோரியா
- எபூசியர்கள் வாழ்ந்த இடம்.
- மெல்கிசெதேக்கு பலிகொடுத்த இடம்.
- ஆபிரகாம் ஈசாக்கை பலிசெலுத்த கொண்டு வந்த இடம்.
- பிற்காலத்தில் சாலொமோன், தேவாலயம் கட்டின இடம்.
- பிற்காலத்தில் செருபாபேல், தேவாலயம் கட்டின இடம்.
- இயேசுவானவர் கழுதைக்குட்டியில் ஏறி, ஒலிவமலையில் இருந்து இறங்கி, எருசலேமிற்குள் நுழைந்து வந்தடைந்த இடம்.
- மூன்றாம் தேவாலயம் கட்டப்படப் போகின்ற இடம்.
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆயிரம் வருட அரசாட்சியை நடத்தப்பட்ட போகிற இடம்.
அர்வனாவை - தாவீது சந்தித்தல்:
அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
-2 சாமுவேல் 24 : 20
ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
-2 சாமுவேல் 24 : 21
- தாவீது அர்வனாவிடம் இந்தக் களத்தை ‘உன் கையிலே கொள்ளவந்தேன்’ என்றார்.
- அதாவது பணம் கொடுத்து வாங்க வந்திருக்கிறேன் என்று.
அர்வனா- இலவசமாய் கொடுக்கிறேன் என்றான்:
அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக் (free) கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
-2 சாமுவேல் 24 : 22
அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.
-2 சாமுவேல் 24 : 23
- ஆனால் தாவீது இலவசமாய் பெற்றுக்கொள்ளவில்லை.
- அர்வனா என்பவன் தாவீதிடம் தோல்வியடைந்து, அவன் கொடுத்த இடத்தில் வாழ்பவன்.
- அர்வனாவுக்கு எப்படி இருந்திருக்கும்?
- அர்வனாவுக்கு தாவீது போட்ட பிச்சை தான் அவன் உயிரும், அவன் இருக்கின்ற இடமும், அவன் வாழ்கின்ற இடமும்.
- எனவே, தாவீதுக்கு அதிகாரம் இருந்தும், இலவசமாய் பெற்றுக்கொள்ளவில்லை.
முக்கிய வசனம் - இலவசமாக வேண்டாம்:
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
-2 சாமுவேல் 24 : 24
- நான் ஆண்டவருக்கு பலி செலுத்தும் போது அது எனக்கு செலவாக இருக்க வேண்டும் என்று தாவீது சொன்னார்.
- தாவீது ஆண்டவருடைய இருதயத்திற்கு நெருங்கின காரணங்களுள் இதுவும் ஒன்று.
- தாவீது இப்போது இருந்திருந்தால் ‘நான் கஷ்டப்படாமல் ஊழியம் செய்யமாட்டேன்” என்று சொல்லியிருப்பார்.
- சும்மா வந்நதையே தாவீது வேண்டாமென்றார்.
என்ன விலையைக் கொடுத்தார்:
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
-2 சாமுவேல் 24 : 24
தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
-1 நாளாகமம் 21 : 25
- ஒரு நிலத்தை வாங்கினால், அதிலுள்ள களமும் நமக்கு சொந்தம் தான்.
- ஆனால் தாவீது தனித்தனியாக காசு கொடுத்து வாங்கினார்.
இஸ்ரவேலின் அரசர்களின் குறிப்பேடு- நாளாகமம்
சாமுவேல் தனிப்பட்ட ரீதியில் எழுதினது - சாமுவேல்
- கொடுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும்.
- நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (மத்தேயு 7 : 2)
தாவீது அளந்த அளவிலேயே கொடுக்கப்பட்டது:
- தாவீது என்ன அளவில் அளந்தாரோ, அந்த அளவில் ஆண்டவரும் தாவீதுக்கு அளந்து கொடுத்தார்.
அந்த நிலத்தின் அன்றைய பெருமதி:
- 3004 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடக்கிறது.
- அந்த முழு மோரியா மலையின் அன்றைய பெருமதி 100 சிக்கல் பொன்.
இன்றைக்கு யாரோ அனுபவிக்கிறார்கள்:
- இன்றைக்கு இஸ்ரவேலர்களுக்கு அந்த இடம் சொந்தமில்லை என்று இஸ்லாமியர்கள் Al Amar பள்ளிவாசலையும், Al Axa பள்ளிவாசலையும் அங்கு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!
- ஐக்கிய நாடுகளின் சபை பல தேசங்களும், பல உலகநாடுகளும், பலரும் இது பாலஸ்தீனருக்கு சொந்தமானது இவர்கள் ஏன் ஆக்கிரமிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே!
- உண்மையிலே தாவீது 600 சேக்கல் பொன் கொடுத்து வாங்கிய நிலம் அது.
- இன்றைக்கு மற்றவன் அனுபவித்து கொண்டிருக்கிறான்.
ஆபிராகாம் - ஏத்தியர்கள் கையில்:
- ஆபிரகாம் ஏத்தியர்கள் கையில் எப்ரோனை வாங்கினார்.
- இலவசமாய் வந்ததை வேண்டாமென்று பெருமதி கொடுத்து தான் வாங்கினார்.
தாவீது - எபூசியனின் கையில்:
- அதே போல தான் இங்கும் தாவீது எபூசியர்களின் கையில் வாங்குகிறார்.
- அந்த நிலத்தின் பெருமதி 100 சேக்கல் பொன் தான்.
- ஆனால் 600 சேக்கல் பொன் கொடுத்து (ஆறு மடங்கு) தாவீது வாங்குகிறார்.
கொடுக்கின்ற அளவு:
- தாவீது ‘பொருள்’ என்ற அளவையும் பயன்படுத்தவில்லை (Actual price of the Land)
- தாவீது ‘பெற்றுக்கொள்ளுகிறவனின்’ அளவையும் பயன்படுத்தவில்லை (Price that satisfy the opposite person)
- தாவீது ‘கொடுக்கின்ற நான்’ என்ற அளவை பயன்படுத்தினார். (Price that satisfies me)
- நான் யார்?
- தேவனுடைய அபிஷேகம் பெற்ற ராஜா
- ஆகவே நான் “என் அளவின்படி” கொடுப்பேன்.
600 சேக்கல் பொன்:
- அது இந்திய ரூபாய் மதிப்பில் - 40 கோடி ரூபாய் (3000 ஆண்டுகளுக்கு முன்பு)
50 சேக்கல் வெள்ளி:
- அது இந்திய ரூபாயில் 70,000 ரூபாய் (3000 ஆண்டுகளுக்கு முன்பு)
- எந்த அளவின்படி கொடுக்கிறோமோ, அந்த அளவு தான் ஆண்டவரிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்வோம்.
- சாலொமோன் தேவாலயத்தை கட்டினாரே!
- அந்த பெருமதிக்கு ஏற்ற செலவில் இன்று வரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை.
Comments
Post a Comment