அர்வனாவின் களம்

          அர்வனாவின் களம்

சாமுவேல்-நாளாகமம்:

  • சாமுவேல் புத்தகத்தை எழுதினது சாமுவேல்.
  • நாளாகமம் புத்தகத்தை எழுதினது யார் என்பது நமக்கு தெரியாது
  • 1 சாமுவேல் 24 ல் வருகிற அதே கதை 1 நாளாகமம் 21 லும் வருகிறது. 
  • அதில் 2 இடங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. 
  • ஏன் அப்படி வித்தியாசமாக வருகிறது என்று பார்ப்போம். 
தாவீது ராஜா செய்த தவறு:
  • தாவீது ராஜா ஒரு தவறு செய்கிறார். 
  • ஜனங்களை இலக்கம் பார்க்கிறார். 
  • தாவீதின் முதல் யுத்தம் முதல் அவர் மேற்கொண்ட எந்த யுத்தத்திலும் அவர் தோல்வியடையவில்லை. 
  • ஆண்டவர் தாவீதுக்கு அத்தனை வெற்றியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, 
  • தாவீது தன் ஜனங்களில் எத்தனை யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க நினைத்தது தவறு. 
  • அது தவறு என்று யோவாபுக்கே தெரிந்தது. 
  • ஆனால் தாவீதுக்கு தோன்றவில்லை.
  • எனவே, தாண் முதல் பெயர்செபா வரை எண்ணினார்கள்.
3 தண்டனை:
  • காத் தீர்க்கத்தரிசி மூலம், ஆண்டவர் தாவீதுக்கு 3 தண்டனைகளில் ஒன்றை தெரிவு செய்துக்கொள்ளும்படி சொல்லுகிறார். 
  1. 7 வருட பஞ்சம்
  2. 3 வருடம் சத்துருக்கள் பின்தொடருவார்கள்
  3. தேசத்தில் 3 நாள் கொள்ளைநோய்
  • அதில், 3 நாள் கொள்ளைநோயை தாவீது ஏற்றுக்கொள்கிறார். 
ஏன் அர்வனாவின் களம்:

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
 -2 சாமுவேல் 24 : 16
  • தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேல் ஜனங்கள் செத்து விழுந்த போது மனமிறங்காத ஆண்டவர் அர்வனாவின் களம் வந்த போது ‘போதும்’ என்கிறார்.
  • ஏன் சரியாக அந்த இடத்தில் ஆண்டவர் நிறுத்த சொல்லுகிறார்?
  • அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன?
ஏன் முரண்பாடு:

அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
 -2 சாமுவேல் 24 : 18

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
 -1 நாளாகமம் 21 : 18

களம் என்றால் என்ன?:
  • கோதுமை வயலில் இருந்து கோதுமையை அறுவடை செய்து கொண்டு வந்து ஒரு இடத்திலே போட்டு, 
  • மாடுகள் அந்த கோதுமையை மிதித்து மிதித்து கோதுமை வேறாகவும், பதர் வேறாகவும் பிரித்தெடுப்பார்கள். 
  • அந்த இடத்திற்கு பெயர் தான் களம். 
அர்வனாவின் களமா? ஒர்னானின் களமா? :
  • இந்த இரண்டு பெயர்களும் எபிரேயப் பெயர்கள் அல்ல. 
  • எபூசிய மொழிப் பெயர்கள்.
ஒர்னான்:
  • ஒர்னான் என்றால் ‘மகிமையான துதி’ என்று அர்த்தம். (ஆனால் அது இஸ்ரவேல் தேவனின் துதி அல்ல) 
அர்வனா:
  • அர்வனா என்பது ஒர்னான் என்பது போல ஒரு பெயர் அல்ல. 
  • அது அவனுடைய பதவியை காட்டுகிறது. 
  • எபூசிய மொழியில் Aha’v’nah (அர்வனா) என்றால் ‘மகாராஜா’ என்று அர்த்தம். 
  • இவன் பெயரளவில் மகாராஜா அல்ல.
  • இவன் தான் எபூசியனின் அரசனாக இருந்தவன். 
தாவீது மேல் நல்ல அபிப்பிராயம்:
  • அர்வனாவும், எபூசியர்களும் தாவீதின் மேல் மிக நல்ல அபிப்பிராயத்தை வைத்திருந்தார்கள். 
எருசலேமும், சீயோனும் அமையப்பட்டுள்ள இடம்:
  • ஒலிவ மலையின் கீழே ஒரு பள்ளத்தாக்கு வரும். அதற்கு 
  1. கெதரோன் பள்ளத்தாக்கு என்றும்,
  2. ராஜாக்களின் பள்ளத்தாக்கு என்றும், 
  3. யோசபாத்தின் பள்ளத்தாக்கு என்றும் பெயர்.
  • அந்த பள்ளத்தாக்கு முடிய அடுத்த மலைத்தொடர் தொடங்குகிறது. 
  • அது தான் எருசலேம் மலை. 
  • எருசலேம் அடுத்த பக்கத்தில் முடிகின்ற இடத்திலிருந்து தொடங்குவது தான் சீயோன். 
  • அதாவது எருசலேமும், சீயோனும் ஒரே மலையின் மேல் அமையப்பட்டுள்ள இரு பட்டணங்கள். 
நடுமலையில் எபூசியர்கள் குடியிருந்தார்கள்:
  • அந்த மலையின் உச்சியில் எபூசியர்கள் அரண்களை கட்டியிருந்தார்கள். 
  • எனவே, யாராவது கிதரோன் பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி வர நினைத்தால் அவர்கள் மேலே இருந்து அம்பு எய்வார்கள். 
  • எனவே வருகிறவர்களுக்கு எருசலேமை பிடிக்க முடியாது. 
  • கானானியருடைய காலத்தில் எருசலேமும், சீயோனும் கோட்டைகள் என்று சொல்லப்பட்டன. 
தாவீது- எருசலேமையும், சீயோனையும் பிடித்தார்:
  • தாவீது எப்ரோனிலே 7 வருடங்களும், 6 மாதமும் ராஜாவாக இருந்த பிறகு தன்னுடைய சேனையை கூட்டிக் கொண்டு எருசலேமை பிடிக்க வருகிறார்.    (2 சாமு 5)
  • தாவீது அதை எபூசியர்கள் கையிலிருந்து பிடித்த போது இந்த எருசலேமையும், சீயோனையும் ஒன்றாய் இணைத்து தன்னுடைய அரண்மனையை சீயோனில் வைத்து கொண்டார். 
  • சீயோன் தாவீதின் நகரம் என்னப்பட்டது. 
எபூசியர்கள் கேள்விப்பட்ட போது:
  • தாவீது இந்த எருசலேமையும், சீயோனையும் பிடிக்க வருகிறார் என்று எபூசியர்கள் கேள்விப்பட்டார்கள்.
  • அப்போது எபூசியர்களை ஆட்சி செய்த ராஜா  ‘அர்வனா’ .
  • இவர் தான் செய்தி அனுப்பினார் தாவீதுக்கு , எருசலேமை பிடிப்கதற்கு நீ முயற்சி செய்ய வேண்டாம். 
  • அப்படி வந்தால் எங்கள் சப்பாணிகளும், குருடர்களுமே உம்மை எதிர்த்து வீழ்த்தி விடுவார்கள் என்று. 
  • ஆனால் தாவீது வந்து எருசலேமையும், சீயோனையும் பிடித்துவிட்டார். 
வெற்றி அடைந்த ராஜா, தோல்வி அடைந்த ராஜாவுக்கு என்ன செய்ய வேண்டும்:
  1. எதிரி அரசனையும் கொன்று, ஜனங்களையும் கொன்றிருக்க வேண்டும். ஆனால் தாவீது அதை செய்யவில்லை. 
  2. பிடிப்பட்டவர்களை நாட்டை விட்டு துரத்தி இருக்க வேண்டும். ஆனால் தாவீது அதை செய்யவில்லை. 
  3. நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை தாவீது செய்யவில்லை. 
  • தாவீது சீயோனில் இருந்து கொண்டு, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகரமாக்கினார். 
அர்வனாவை தாவீது ஒன்றும் செய்யவில்லை:
  • அர்வனாவை “உன் அரண்மனையையும், நிலங்களையும் நீயே வைத்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார் தாவீது.
  • ஒரே வித்தியாசம் இனி நீ ஆட்சி செய்ய முடியாது 
  • ஆனால், ஒரு குறையும் இல்லாமல் ‘உன்னையும், உன் ஜனங்களையும் நான் வைத்து கொள்வேன்’ என்று தாவீது சொன்னார். 
  • எபூசியர்களுக்கு ஒரே ஆச்சர்யம். 
  • எனவே அவர்களுக்கு தாவீதின் மேல் ஒரு பெரிய அன்பு, மரியாதை வந்தது. 
  • எபூசியர்களின் ராஜாவாகிய ஒர்னானுக்கும் தாவீதின் மேல் ஒரு பெரிய மதிப்பு வந்தது. 
ஆவிக்குரிய சத்தியம்- கீழ்ப்படிதல்:

காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
 -2 சாமுவேல் 24 : 19
  • எவ்வளவோ நல்ல இடங்கள் இருந்தும் ஏன் அர்வனாவின் களத்தில் பலிபீடம் கட்ட வேண்டும் என்று தாவீது கேட்கவில்லை.
  • மாறாக கீழ்ப்படிந்தார். 
  • ஆண்டவர் அவரவருக்கு என்று ‘ஒரு அர்வனாவின் களத்தை’ வைத்திருக்கிறார். 
  • ஆண்டவர் தங்களுக்கு நியமித்த சபையில், இடத்தில், ஊழியத்தில் அடங்கி இருக்க வேண்டும். 
  • அது தான் முழுமையான கீழ்ப்படிதல். 
ஆபிரகாமின் கீழ்ப்படிதல்:
  • ஆண்டவர் பெயர்செபாவில் வைத்து ஆபிரகாமிடம் ஈசாக்கை பலி கொடுக்க மோரியா மலைக்கு போகும்படி சொன்னார். 
  • பெயர்செபாவில் இருந்து மோரியா மலை 3 நாள் பிரயாணம். 
  • ஆனால் ஆண்டவர் அங்கு தான் பலியிடச் சொன்னார். 
  • ஆபிரகாம் ஏன் அந்த இடத்தில் என்று கேள்விக் கேட்கவில்லை.
  • மாறாக கீழ்ப்படிந்தார்.
தாவீதின் கீழ்ப்படிதல்:
  • ஆண்டவர் அந்த அர்வனாவின் களத்தில் தான் பலிபீடம் கட்ட சொல்லி காத் தீ்ர்க்கத்தரிசியைக் கொண்டு தாவீதுக்கு அறிவுறுத்தினார். 
  • தாவீது ஏன், எதற்கு, ஏன் என்றெல்லாம் கேள்விக் கேட்கவில்லை. 
  • கீழ்ப்படிந்தார். 
அதே போல நாமும் கீழ்ப்படிவோம்:
  • ஆண்டவர் எங்கு இருக்க சொல்லுகிறாரோ, அங்கு இருங்கள்.
  • ஏன் இந்த காலத்தில் நாம் பிறந்தோம்.
  • ஏன் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறோம்.
  • ஏன் குறிப்பிட்ட இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும். 
  • உங்களுக்கென ஒரு ஊழியம் கொடுக்கப்பட்டது ஏன்?
  • ஏன் என்ற காரணம் தாவீது கேட்காதது போல, நமக்கும் காரணம் தேவையில்லை. 
  • கீழ்ப்படிய வேண்டியது தான் ஒரு கிறிஸ்தவனின் கடமை.
  • அவனவனுக்குரிய அர்வனாவின் களத்திலே தான் அவனவன் இருக்க வேண்டும். 
  • ஊழியம் செய்ய வேண்டும். 
மோரியாமலை - மெல்கிசெதேக்கு கட்டிய பலிபீடம்:
  • அந்த மோரியா மலையிலே ஏற்கனவே மெல்கிசெதேக்கு கட்டிய பலிபீடம் ஒன்று இருந்தது. 
எருசலேம் நகரம் - சாலேம் தேசம்:
  • அந்நேரத்தில் எருசலேம் என்ற நகரம் ‘சாலேம்’ என்று ஒரு தேசமாக இருந்தது. 
  • அந்த சாலேமை ஆட்சி செய்த ராஜா தான் ‘மெல்கிசெதேக்கு’.
  • அவர்கள் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி, ஆராதனை செய்த ஸ்தலம் அந்த மோரியா மலை.  
ஆண்டவர் அறிவுறுத்தலின்படி தான்:
  • மெல்கிசெதேக்கை பற்றி வேதத்தில் உள்ளதை தவிர வேறு எதுவும் நமக்கு தெரியாது.
  • ஆனால் அந்த மெல்கிசெதேக்கு ஆண்டவர் அறிவுறுத்தியபடி தான் மோரியா மலையில் பலி செலுத்தி இருக்க வேண்டும்.
  • ஏனென்றால் மெல்கிசெதேக்கு 
  1. தேவனுடைய மனுஷன்
  2. தேவனுடைய ஆசாரியன்
  3. தேவனுடைய ராஜா
வெவ்வேறு பகுதிகள்:
  • ஆபிரகாம் வாழ்ந்தது சீகேமில்
  • மெல்கிசெதேக்கு இருந்தது சாலேமில்
  • லோத்து வாழ்ந்தது சோதோமில்
  • 3 வித்தியாசமான தூர இடங்கள். 
  • ஆனால் எங்கேயோ இருந்த மெல்கிசெதேக்குக்கு இவ்வளவும் தெரிந்து ஆபிரகாமை சந்திக்க போனார் என்றால் அது தேவன் மூலமாய் தான்.
சாமுவேல் காலத்தில் எபூசியர்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள்:
  • ஆனால் மெல்கிசெதேக்குக்கும், அந்த சாலேம் நாட்டாருக்கும் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. 
  • சரித்திரத்திலும் இல்லை. வேதத்திலும் இல்லை. 
  • ஆனால் திடீரெனப் பார்த்தால் அங்கு எபூசியர்கள் வாழுகிறார்கள். 
மோரியா மலை - எபூசியர்கள்:
  • எபூசியர்கள் வந்து எருசலேமை கைப்பற்றி வாழ்ந்தார்களே!
  • அந்த நேரத்தில் எருசலேமில் ஒரு நல்ல பிரதேசத்தை தனக்கென தெரிவு செய்து கொண்டு அதை தனக்கென வைத்து கொண்டிருந்தார் அந்த எபூசியர்களின் ராஜாவாகிய ஒர்னான். 
  • அதிலே அவர்கள் கோதுமையை அறுவடை செய்துக்கொண்டு, ஒரு களத்திலே கொண்டு வந்து போட்டு, மாடுகளை கொண்டு மிதித்து மிதித்து கோதுமையை பதரிலே இருந்து வேறு பிரித்தார்களே!
  • அந்த ஸ்தலம் தான் மோரியா
ஒரே இடம் - மோரியா:
  • எபூசியர்கள் வாழ்ந்த இடம். 
  • மெல்கிசெதேக்கு பலிகொடுத்த இடம்.
  • ஆபிரகாம் ஈசாக்கை பலிசெலுத்த கொண்டு வந்த இடம். 
  • பிற்காலத்தில் சாலொமோன், தேவாலயம் கட்டின இடம். 
  • பிற்காலத்தில் செருபாபேல், தேவாலயம் கட்டின இடம். 
  • இயேசுவானவர் கழுதைக்குட்டியில் ஏறி, ஒலிவமலையில் இருந்து இறங்கி, எருசலேமிற்குள் நுழைந்து வந்தடைந்த இடம். 
  • மூன்றாம் தேவாலயம் கட்டப்படப் போகின்ற இடம். 
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆயிரம் வருட அரசாட்சியை நடத்தப்பட்ட போகிற இடம். 
அர்வனாவை - தாவீது சந்தித்தல்:

அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
 -2 சாமுவேல் 24 : 20

ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
 -2 சாமுவேல் 24 : 21
  • தாவீது அர்வனாவிடம் இந்தக் களத்தை ‘உன் கையிலே கொள்ளவந்தேன்’ என்றார்.
  • அதாவது பணம் கொடுத்து வாங்க வந்திருக்கிறேன் என்று.
அர்வனா- இலவசமாய் கொடுக்கிறேன் என்றான்:

அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக் (free) கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
 -2 சாமுவேல் 24 : 22

அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.
 -2 சாமுவேல் 24 : 23
  • ஆனால் தாவீது இலவசமாய் பெற்றுக்கொள்ளவில்லை. 
அர்வனாவின் வாழ்வு - தாவீது அருளிய கருணை:
  • அர்வனா என்பவன் தாவீதிடம் தோல்வியடைந்து, அவன் கொடுத்த இடத்தில் வாழ்பவன்.
  • அர்வனாவுக்கு எப்படி இருந்திருக்கும்?
  • அர்வனாவுக்கு தாவீது போட்ட பிச்சை தான் அவன் உயிரும், அவன் இருக்கின்ற இடமும், அவன் வாழ்கின்ற இடமும்.
  • எனவே, தாவீதுக்கு அதிகாரம் இருந்தும், இலவசமாய் பெற்றுக்கொள்ளவில்லை. 
முக்கிய வசனம் - இலவசமாக வேண்டாம்:

ராஜா அர்வனாவைப் பார்த்துஅப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
 -2 சாமுவேல் 24 : 24
  • நான் ஆண்டவருக்கு பலி செலுத்தும் போது அது எனக்கு செலவாக இருக்க வேண்டும் என்று தாவீது சொன்னார். 
  • தாவீது ஆண்டவருடைய இருதயத்திற்கு நெருங்கின காரணங்களுள் இதுவும் ஒன்று. 
  • தாவீது இப்போது இருந்திருந்தால் ‘நான் கஷ்டப்படாமல் ஊழியம் செய்யமாட்டேன்” என்று சொல்லியிருப்பார்.
  • சும்மா வந்நதையே தாவீது வேண்டாமென்றார். 
என்ன விலையைக் கொடுத்தார்:

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
 -2 சாமுவேல் 24 : 24

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
 -1 நாளாகமம் 21 : 25
  • ஒரு நிலத்தை வாங்கினால், அதிலுள்ள களமும் நமக்கு சொந்தம் தான். 
  • ஆனால் தாவீது தனித்தனியாக காசு கொடுத்து வாங்கினார். 
இஸ்ரவேலின் அரசர்களின் குறிப்பேடு- நாளாகமம்
சாமுவேல் தனிப்பட்ட ரீதியில் எழுதினது - சாமுவேல்
  • கொடுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும். 
  • நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (மத்தேயு 7 : 2)

தாவீது அளந்த அளவிலேயே கொடுக்கப்பட்டது:
  • தாவீது என்ன அளவில் அளந்தாரோ, அந்த அளவில் ஆண்டவரும் தாவீதுக்கு அளந்து கொடுத்தார். 
அந்த நிலத்தின் அன்றைய பெருமதி:
  • 3004 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடக்கிறது. 
  • அந்த முழு மோரியா மலையின் அன்றைய பெருமதி 100 சிக்கல் பொன். 
இன்றைக்கு யாரோ அனுபவிக்கிறார்கள்:
  • இன்றைக்கு இஸ்ரவேலர்களுக்கு அந்த இடம் சொந்தமில்லை என்று இஸ்லாமியர்கள் Al Amar பள்ளிவாசலையும், Al Axa பள்ளிவாசலையும் அங்கு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!
  • ஐக்கிய நாடுகளின் சபை பல தேசங்களும், பல உலகநாடுகளும், பலரும் இது பாலஸ்தீனருக்கு சொந்தமானது இவர்கள் ஏன் ஆக்கிரமிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே!
  • உண்மையிலே தாவீது 600 சேக்கல் பொன் கொடுத்து வாங்கிய நிலம் அது. 
  • இன்றைக்கு மற்றவன் அனுபவித்து கொண்டிருக்கிறான். 
ஆபிராகாம் - ஏத்தியர்கள் கையில்:
  • ஆபிரகாம் ஏத்தியர்கள் கையில் எப்ரோனை வாங்கினார். 
  • இலவசமாய் வந்ததை வேண்டாமென்று பெருமதி கொடுத்து தான் வாங்கினார்.  
தாவீது - எபூசியனின் கையில்:
  • அதே போல தான் இங்கும் தாவீது எபூசியர்களின் கையில் வாங்குகிறார். 
  • அந்த நிலத்தின் பெருமதி 100 சேக்கல் பொன் தான்.
  • ஆனால் 600 சேக்கல் பொன் கொடுத்து (ஆறு மடங்கு) தாவீது வாங்குகிறார்.   
கொடுக்கின்ற அளவு:
  • தாவீது ‘பொருள்’ என்ற அளவையும் பயன்படுத்தவில்லை (Actual price of the Land)
  • தாவீது ‘பெற்றுக்கொள்ளுகிறவனின்’ அளவையும் பயன்படுத்தவில்லை (Price that satisfy the opposite person)
  • தாவீது ‘கொடுக்கின்ற நான்’ என்ற அளவை பயன்படுத்தினார். (Price that satisfies me)
  • நான் யார்?
  • தேவனுடைய அபிஷேகம் பெற்ற ராஜா
  • ஆகவே நான் “என் அளவின்படி” கொடுப்பேன்.
600 சேக்கல் பொன்:
  • அது இந்திய ரூபாய் மதிப்பில் - 40 கோடி ரூபாய் (3000 ஆண்டுகளுக்கு முன்பு)
50 சேக்கல் வெள்ளி:
  • அது இந்திய ரூபாயில் 70,000 ரூபாய் (3000 ஆண்டுகளுக்கு முன்பு)
ஆண்டவர் தாவீதுக்கு கொடுத்தது ‘தன் அளவின் படி’
  • எந்த அளவின்படி கொடுக்கிறோமோ, அந்த அளவு தான் ஆண்டவரிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்வோம்.
  • சாலொமோன் தேவாலயத்தை கட்டினாரே! 
  • அந்த பெருமதிக்கு ஏற்ற செலவில் இன்று வரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4