சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம்
Faith for the Impossible
சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம்
விசுவாசம்
- விசுவாசத்தை வையுங்கள்.
- விசுவாசத்தில் நடவுங்கள்.
- விசுவாசத்தைக் கொண்டிருங்கள்.
- நாம் எப்பொழுதும் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கிறோம்.
- அப்படியென்றால் என்ன??
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(Evidence of things)
-எபிரேயர் 11 : 1
Increasing Faith:
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்(Increase our faith) என்றார்கள்.
-லூக்கா 17 : 5
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
-லூக்கா 17 : 6
- உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி, தேவனுடைய வார்த்தையைப் படிப்பதாகும்.
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
-ரோமர் 10 : 17
- உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி ஜெபம்.
- ஏனென்றால், ஜெபம் என்பது ஒரு நம்பிக்கையின் செயல்.
- மற்றும் தேவனை அடையம் ஒரு வழி.
அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
-மத்தேயு 9 : 20
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
-மத்தேயு 9 : 21
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
-மத்தேயு 9 : 22
- இந்த பெண் தேவனை அணுகினாள்.
- அவள் “அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டால்” அவள் குணமடைய முடியும் என்று நம்பினாள்.
- அவள் உண்மையில் அந்த நொடியே குணமடைந்தாள்.
- உங்கள் வாழ்க்கையின் காயமடைந்த பகுதிகள் குணமடையவும், பாவத்திலிருந்து மீட்டெடுக்கப்படவும் நீங்கள் ஜெபிப்பது போலவே,
- உங்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் தைரியத்துடன் தேவனிடம் ஜெபியுங்கள், அவர் செய்வார்!
- தேவனிடம் ஜெபிப்பதும் கூட ஒரு பெரிய நம்பிக்கைச் செயலாகும்.
- நீங்கள் தேவனின் முன்னிலையில்(God’s presence) இருக்கும்போதெல்லாம் உங்களுக்கு சுதந்திரமும்(freedom) விடுதலையும்(deliverance) கிடைக்கும்.
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
-2 கொரி 3 : 17
- எப்போதெல்லாம் ‘உங்களை தேவன் எதிலிருந்தும் விடுவிக்க மாட்டார்’ என்று சாத்தான் உங்களிடம் சொல்கிறானோ அப்போதெல்லாம், தேவனை மகிமைப்படுத்திப் பாடுங்கள்.
- தேவனை மகிமைப்படுத்தும் போது, நான் விடுதலையை பெற்றுக் கொள்கிறேன் என்று தேவனுக்கு நன்றியை தெரிவியுங்கள்.
- நீங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்கு உங்கள் மனம் மறுபடியும் திரும்பினால் சோர்வடைந்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
- விடுதலை(deliverance) என்பது தேவனிடமிருந்து வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- சில சமயங்களில் அது ஒரு தொடர்ச்சியான செயலாக மாறிவிடும்
- தேவன் எப்போதும் ஒரு வேலையை முழுமையாகச் செய்கிறார், அவர் அதை இறுதிவரை செய்து முடிப்பார்.
- நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கிறது என்பதால் சோர்ந்து போக வேண்டாம்.
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
-பிலிப்பியர் 1 : 6
நமது நம்பிக்கையை அதிகரிப்பது பற்றி பேசினோம்.
இப்போது பிரிசில்லா ஷைரரின்(Pricilla Shirer) அவர்களின் விசுவாசத்தின் கருத்தைக் கேளுங்கள்.
- ஒரு நாற்காலியில் உட்காரும் போது அது நம் எடையைத் தாங்குமா இல்லையா என்ற சந்தேகம் நமக்கு எழும்பும்.
- ஆனால் நமக்கு தேவன் செய்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் அது போல அல்ல.
- உலகில் உள்ள அனைத்து விசுவாசத்தையும் நான் கொண்டிருந்தாலும், என்னுடைய விசுவாசம் நாற்காலியை இன்னும் பலமாகவோ அல்லது உறுதியானதாகவோ மாற்றாது.
- எனவே எனது விசுவாசத்தை அதிகரிப்பது அவசியமில்லை.
- ஆனால் நான் நாற்காலியின் வலிமையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
- அது எவ்வளவு வலிமையானது என்பதை நான் கண்டறிந்தால்,
- அதில் உட்கார்ந்து அதை என் எடையைச் சுமக்க அதிக விருப்பத்துடன் அனுமதிப்பேன்.
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
-மத்தேயு 6 : 30
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
-மத்தேயு 8 : 26
இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
-மத்தேயு 16 : 8
- உங்கள் விசுவாசத்தின் அளவு எப்போதும் தேவனைப் பற்றிய உங்கள் கருத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
- இயேசு தம்முடைய திறமையையும், அவர்களுக்கான தன்னுடைய அக்கறையையும் சீஷர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தார்.
- விசுவாசத்தில் கவனம் செலுத்தும்படி அவர் அவர்களுக்கு சொல்லவில்லை.
- ஆனால் தம்மீது கவனம் செலுத்தும்படி இயேசு அவர்களிடம் கூறினார்.
- அவர்களுக்கு தேவை பெரிய விசுவாசம் அல்ல.
- அவர்கள் ‘தங்கள் தேவன் எவ்வளவு பெரியவர்’ என்பதை உணர வேண்டும்.
- அவரை எவ்வளவு நம்பிக்கையுடனும்(faithful) and வலுவாகவும் (Strong) நம்புகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவரைச் சார்ந்திருக்க விரும்புவீர்கள்.
- அவரைப் பற்றிய உங்கள் கருத்து தவறாக இருந்தால், உங்கள் நம்பிக்கை தவறாக இருக்கும்.
- அவரைப் பற்றிய உங்கள் கருத்து சரியானதாக இருந்தால், உங்கள் நம்பிக்கையும் சரியானதாக இருக்கும்.
- ஆகவே, "அதிக விசுவாசம்" எனக்கு வேண்டும் என்று நீங்கள் உணரும்போது,
- நீங்கள் தேவனை இன்னும் ஆழமாக நம்பவும், அவர்கிட்ட நெருங்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- மேலும் நீங்கள் தேவனின் வார்த்தை, ஜெபம் மற்றும் ஆராதனைப்பாடல்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்தும்போது, உங்கள் விசுவாசம் அதிகரிக்கும்.
Being set free (விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருப்பது):
- தேவன் சில நேரங்களில் உங்களை ஒரு நொடியில் விடுவிப்பார்.
- ஆனால் சில சமயங்களில் நேரம் எடுக்கும்.
- ஆனால் உங்கள் விசுவாசம் இல்லாமல் எதுவும் நடக்காது.
- நம் அனைவருக்குமே ஒரு விஷயத்தில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பது எப்போதுமே உள்ள பிரச்சனை.
- ஏனென்றால், நாம் எவ்வளவு Spiritual ஆக இருந்தாலும், நாம் இன்னும் மனிதர்களாகவே இருக்கிறோம்.
- நாம் எவ்வளவு சிறப்பாக வாழ முயற்சித்தாலும், நம் வாழ்வில் தீமையை விதைக்க சாத்தான் முயற்சித்துக் கொண்டே இருப்பான்.
- தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எதிலிருந்தும் நாம் விடுபட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இயேசு மத்தேயு 6:13 இல் ஜெபித்தார்
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
-மத்தேயு 6 : 13
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
-கலாத்தியர் 1 : 4
- நீங்கள் எதைச் செய்தாலும் தேவனிடம் இருந்து தொலைவில் இருப்பதாக உணர்கிறீர்களா?
- உங்கள் ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை அல்லது பதிலளிக்கப்படவில்லை என்பது போல் தோன்றுகிறதா?
- நீங்கள் தேவன் கொடுக்கிற மகிழ்ச்சியை உணருவதை விட, சோர்வையும் சோகத்தையும் உணர்கிறீர்களா?
- உங்கள் செயல்கள் அல்லது எண்ணங்களில் அதே பழைய பிரச்சனைகள், அதே பழைய பழக்கங்கள் மீண்டும் மீண்டும் வருகிறதா?
- உங்களைப் பற்றி நீங்கள் எப்போதும் மோசமாக உணர்கிறீர்களா?
- தேவன் உங்களை விடுவிக்க விரும்புகிறார்.
- உங்களுக்கு மிகக் குறைந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், வலுவான நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம்.
- இது ஒரு போராட்டமாக இருக்கலாம்.
- ஏனெனில் இளம்வயதினர் உண்மைகளை(Truth/facts) விட அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள்.
- உங்களுக்குத் தெரிந்த உண்மையை விட, நீங்கள் உங்கள் மனதின் உணர்வுகளின்படி நடக்க வேண்டும் என்று உங்கள் எதிரியாகிய சாத்தான் விரும்புகிறான்.
- அதனால்தான் அவன் உங்களை பாதுகாப்பற்றவர்களாக, அன்பற்றவர்களாக, மற்றும் திறமையற்றவர்களாக அல்லது பயமுள்ளவர்களாக உணரச்செய்ய அதிகமாக முயற்சிக்கிறான்.
பேதுரு:
லூக்கா 5:1-11
- பேதுரு ஒரு மீனவர் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள்.
- ஒரு மீனவனாக இருந்த அனுபவமோ அல்லது முந்தைய இரவில் ஏற்பட்ட ஏமாற்றமோ எதுவும் இயேசுவை நம்புவதைத் தடுக்க அவன் அனுமதிக்கவில்லை.
- பேதுரு மனதில் எப்படி உணர்ந்தாலும் இயேசுவுக்கு கீழ்ப்படிந்தார்.
- அவர் அப்போது சுத்தப்படுத்தி வைத்த வலையை அழுக்காக்கவும் அவர் தயாராக இருந்தார்.
- நமது விசுவாசத்தின் நிலை, நாம் எப்படி உணர்கிறோம் என்பதன் மூலம் அளவிடப்படுவதில்லை.
- மாறாக தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான நமது விருப்பத்தால் அளவிடப்படுகிறது.
- பல சமயங்களில் நாம் பிசாசின் தந்திரங்களுக்கு செவி சாய்க்கக் கூடாது என்று தெரிந்தும் அவனின் திட்டங்களோடு சேர்ந்து செல்கிறோம்.
ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
-கலாத்தியர் 5 : 1
- கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுவிக்கப்பட்டோம்.
- கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் விடுதலையில் பலமாக நிற்க வேண்டும் என விசுவாசிகளுக்கு பவுல் நினைவூட்டுகிறார்.
மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
-ரோமர் 6 : 7
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
-யோவான் 8 : 36
- இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் போராடும் விஷயம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், உங்களை விடுவிக்கும் தேவனின் வல்லமை மிகவும் வலிமையானது என்று நம்புங்கள்.
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
-மத்தேயு 17 : 19
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
-மத்தேயு 17 : 20
- ஒரு மலையை நகர்த்துவதற்கு உங்களுக்கு ஒரு சிறு கடுகு அளவுள்ள நம்பிக்கை இருந்தால் போதும், நிச்சயமாக உங்களால் முடியும்.
- God is the God of the Impossible!
- நீங்கள் ஒரு சாத்தியமற்ற(impossible) சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம், உங்களை சோர்வடையவோ அல்லது வருத்தப்படவோ அனுமதிக்காதீர்கள்.
- உடனே தேவனிடம் சென்று ஜெபம் செய்யுங்கள்.
- அவரிடம் பிரச்சனையை சொல்லுங்கள்.
- பின்னர் அவருக்கு கடினமானது என்று எதுவும் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
- நீங்கள் என்ன தடைகள், பிரச்சனைகள், சோதனைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும் நீங்கள் அசையாதபடிக்கு, (யாக்கோபு 1:6-7; எபிரேயர் 11:6) உங்களிடத்தில் ஒரு வலுவான விசுவாசத்தை நிலைநாட்டும்படி தேவனிடம் கேளுங்கள்.
- உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையின் ஒரு சிறு விதை, உங்கள் வாழ்வில் ஒரு பெரிய மலையை நகர்த்தக்கூடிய நம்பிக்கையாக மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!
- எந்த தேவனுடைய சத்தியத்தை, விசுவாசத்தினால் உங்களுடையது ஆக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள்?
- எந்த ஜெபத்தை நீங்கள் தைரியமாக விசுவாசத்துடன் ஜெபித்து, பதிலை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
- உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வாழ்விலோ என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை மிகுந்த விசுவாசத்துடன் கூடிய ஜெபத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா?
- உங்களிடம் உள்ள விசுவாசத்தின் விதையை எடுத்து, அதை ஒரு மாபெரும் விசுவாச மரமாக வளர்க்கும்படி தேவனிடம் கேளுங்கள்,
- இதன் மூலம் மேற்கண்டது அனைத்தும் நிறைவேறுவதை நீங்கள் காணலாம்.
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
-ரோமர் 12 : 3
Comments
Post a Comment