சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம்

Faith for the Impossible 
சாத்தியமற்றது என நினைக்கும் காரியத்தில் விசுவாசம்

விசுவாசம்
  • விசுவாசத்தை வையுங்கள். 
  • விசுவாசத்தில் நடவுங்கள். 
  • விசுவாசத்தைக் கொண்டிருங்கள்.
  • நாம் எப்பொழுதும் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கிறோம்.
  • அப்படியென்றால் என்ன?? 
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.(Evidence of things)
 -எபிரேயர் 11 : 1

Increasing Faith:

அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்(Increase our faith) என்றார்கள்.
 -லூக்கா 17 : 5

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
 -லூக்கா 17 : 6
  • உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி, தேவனுடைய வார்த்தையைப் படிப்பதாகும். 
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
 -ரோமர் 10 : 17
  • உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி ஜெபம்.
  • ஏனென்றால், ஜெபம் என்பது ஒரு நம்பிக்கையின் செயல். 
  • மற்றும் தேவனை அடையம் ஒரு வழி. 
அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
 -மத்தேயு 9 : 20

நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
 -மத்தேயு 9 : 21

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
 -மத்தேயு 9 : 22
  • இந்த பெண் தேவனை அணுகினாள்.
  • அவள் “அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டால்” அவள் குணமடைய முடியும் என்று நம்பினாள். 
  • அவள் உண்மையில் அந்த நொடியே குணமடைந்தாள். 
  • உங்கள் வாழ்க்கையின் காயமடைந்த பகுதிகள் குணமடையவும், பாவத்திலிருந்து மீட்டெடுக்கப்படவும் நீங்கள் ஜெபிப்பது போலவே, 
  • உங்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் தைரியத்துடன் தேவனிடம் ஜெபியுங்கள், அவர் செய்வார்!
  • தேவனிடம் ஜெபிப்பதும் கூட ஒரு பெரிய நம்பிக்கைச் செயலாகும். 
  • நீங்கள் தேவனின் முன்னிலையில்(God’s presence) இருக்கும்போதெல்லாம் உங்களுக்கு சுதந்திரமும்(freedom) விடுதலையும்(deliverance) கிடைக்கும். 
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
 -2 கொரி 3 : 17 
  • எப்போதெல்லாம் ‘உங்களை தேவன் எதிலிருந்தும்  விடுவிக்க மாட்டார்’ என்று சாத்தான் உங்களிடம் சொல்கிறானோ அப்போதெல்லாம், தேவனை மகிமைப்படுத்திப் பாடுங்கள். 
  • தேவனை மகிமைப்படுத்தும் போது, நான் விடுதலையை பெற்றுக் கொள்கிறேன் என்று தேவனுக்கு நன்றியை தெரிவியுங்கள். 
  • நீங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்கு உங்கள் மனம் மறுபடியும் திரும்பினால்  சோர்வடைந்து நேரத்தை வீணாக்காதீர்கள். 
  • விடுதலை(deliverance) என்பது தேவனிடமிருந்து வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • சில சமயங்களில் அது ஒரு தொடர்ச்சியான செயலாக மாறிவிடும்
  • தேவன் எப்போதும் ஒரு வேலையை முழுமையாகச் செய்கிறார், அவர் அதை இறுதிவரை செய்து முடிப்பார்.
  • நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கிறது என்பதால் சோர்ந்து போக வேண்டாம். 
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
 -பிலிப்பியர் 1 : 6

நமது நம்பிக்கையை அதிகரிப்பது பற்றி பேசினோம்.
இப்போது பிரிசில்லா ஷைரரின்(Pricilla Shirer) அவர்களின்  விசுவாசத்தின் கருத்தைக் கேளுங்கள்.
  • ஒரு நாற்காலியில் உட்காரும் போது அது நம் எடையைத் தாங்குமா இல்லையா என்ற சந்தேகம் நமக்கு எழும்பும்.
  • ஆனால் நமக்கு தேவன் செய்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் அது போல அல்ல.
  • உலகில் உள்ள அனைத்து விசுவாசத்தையும் நான் கொண்டிருந்தாலும், என்னுடைய விசுவாசம் நாற்காலியை இன்னும் பலமாகவோ அல்லது உறுதியானதாகவோ மாற்றாது. 
  • எனவே எனது விசுவாசத்தை அதிகரிப்பது அவசியமில்லை. 
  • ஆனால் நான் நாற்காலியின் வலிமையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். 
  • அது எவ்வளவு வலிமையானது என்பதை நான் கண்டறிந்தால்,
  • அதில் உட்கார்ந்து அதை என் எடையைச் சுமக்க அதிக விருப்பத்துடன் அனுமதிப்பேன்.
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
 -மத்தேயு 6 : 30

அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
 -மத்தேயு 8 : 26

இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
 -மத்தேயு 16 : 8
  • உங்கள் விசுவாசத்தின் அளவு எப்போதும் தேவனைப் பற்றிய உங்கள் கருத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
  • இயேசு தம்முடைய திறமையையும், அவர்களுக்கான தன்னுடைய அக்கறையையும் சீஷர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தார். 
  • விசுவாசத்தில் கவனம் செலுத்தும்படி அவர் அவர்களுக்கு சொல்லவில்லை. 
  • ஆனால் தம்மீது கவனம் செலுத்தும்படி இயேசு அவர்களிடம் கூறினார். 
  • அவர்களுக்கு தேவை பெரிய விசுவாசம் அல்ல.
  • அவர்கள் ‘தங்கள் தேவன் எவ்வளவு பெரியவர்’ என்பதை உணர வேண்டும். 
  • அவரை எவ்வளவு நம்பிக்கையுடனும்(faithful) and வலுவாகவும் (Strong) நம்புகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவரைச் சார்ந்திருக்க விரும்புவீர்கள். 
  • அவரைப் பற்றிய உங்கள் கருத்து தவறாக இருந்தால், உங்கள் நம்பிக்கை தவறாக இருக்கும். 
  • அவரைப் பற்றிய உங்கள் கருத்து சரியானதாக இருந்தால், உங்கள் நம்பிக்கையும் சரியானதாக இருக்கும்.
  • ஆகவே, "அதிக விசுவாசம்" எனக்கு வேண்டும் என்று நீங்கள் உணரும்போது, ​
  • நீங்கள் தேவனை இன்னும் ஆழமாக நம்பவும், அவர்கிட்ட நெருங்கவும் கற்றுக் கொள்ளுங்கள்
  • மேலும் நீங்கள் தேவனின் வார்த்தை, ஜெபம் மற்றும் ஆராதனைப்பாடல்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்தும்போது, உங்கள் விசுவாசம் அதிகரிக்கும். 

Being set free (விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருப்பது):
  • தேவன் சில நேரங்களில் உங்களை ஒரு நொடியில் விடுவிப்பார்.
  • ஆனால் சில சமயங்களில் நேரம் எடுக்கும். 
  • ஆனால் உங்கள் விசுவாசம் இல்லாமல் எதுவும் நடக்காது. 
  • நம் அனைவருக்குமே ஒரு விஷயத்தில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பது எப்போதுமே உள்ள பிரச்சனை.
  • ஏனென்றால், நாம் எவ்வளவு Spiritual ஆக இருந்தாலும், நாம் இன்னும் மனிதர்களாகவே இருக்கிறோம். 
  • நாம் எவ்வளவு சிறப்பாக வாழ முயற்சித்தாலும், நம் வாழ்வில் தீமையை விதைக்க சாத்தான் முயற்சித்துக் கொண்டே இருப்பான்.
  • தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எதிலிருந்தும் நாம் விடுபட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 
இயேசு மத்தேயு 6:13 இல் ஜெபித்தார்

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
 -மத்தேயு 6 : 13

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
 -கலாத்தியர் 1 : 4
  • நீங்கள் எதைச் செய்தாலும் தேவனிடம் இருந்து தொலைவில் இருப்பதாக உணர்கிறீர்களா?
  • உங்கள் ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை அல்லது பதிலளிக்கப்படவில்லை என்பது போல் தோன்றுகிறதா?
  • நீங்கள் தேவன் கொடுக்கிற மகிழ்ச்சியை உணருவதை விட, சோர்வையும் சோகத்தையும் உணர்கிறீர்களா?
  • உங்கள் செயல்கள் அல்லது எண்ணங்களில் அதே பழைய பிரச்சனைகள், அதே பழைய பழக்கங்கள் மீண்டும் மீண்டும் வருகிறதா?
  • உங்களைப் பற்றி நீங்கள் எப்போதும் மோசமாக உணர்கிறீர்களா? 
இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ஆம் என்று சொன்னால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி என்னிடம் உள்ளது. 
  • தேவன் உங்களை விடுவிக்க விரும்புகிறார்.
  • உங்களுக்கு மிகக் குறைந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், வலுவான நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம். 
  • இது ஒரு போராட்டமாக இருக்கலாம். 
  • ஏனெனில் இளம்வயதினர் உண்மைகளை(Truth/facts) விட அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள். 
  • உங்களுக்குத் தெரிந்த உண்மையை விட, நீங்கள் உங்கள் மனதின் உணர்வுகளின்படி நடக்க வேண்டும் என்று உங்கள் எதிரியாகிய சாத்தான் விரும்புகிறான். 
  • அதனால்தான் அவன் உங்களை பாதுகாப்பற்றவர்களாக, அன்பற்றவர்களாக, மற்றும் திறமையற்றவர்களாக அல்லது பயமுள்ளவர்களாக உணரச்செய்ய அதிகமாக முயற்சிக்கிறான். 
பேதுரு:

லூக்கா 5:1-11
  • பேதுரு ஒரு மீனவர் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். 
  • ஒரு மீனவனாக இருந்த அனுபவமோ அல்லது முந்தைய இரவில் ஏற்பட்ட ஏமாற்றமோ எதுவும் இயேசுவை நம்புவதைத் தடுக்க அவன் அனுமதிக்கவில்லை. 
  • பேதுரு மனதில் எப்படி உணர்ந்தாலும் இயேசுவுக்கு கீழ்ப்படிந்தார். 
  • அவர் அப்போது சுத்தப்படுத்தி வைத்த வலையை அழுக்காக்கவும் அவர் தயாராக இருந்தார். 
  • நமது விசுவாசத்தின் நிலை, நாம் எப்படி உணர்கிறோம் என்பதன் மூலம் அளவிடப்படுவதில்லை.
  • மாறாக தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான நமது விருப்பத்தால் அளவிடப்படுகிறது. 
  • பல சமயங்களில் நாம் பிசாசின் தந்திரங்களுக்கு செவி சாய்க்கக் கூடாது என்று தெரிந்தும் அவனின் திட்டங்களோடு சேர்ந்து செல்கிறோம்.
ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
 -கலாத்தியர் 5 : 1
  • கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுவிக்கப்பட்டோம்.
  • கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் விடுதலையில் பலமாக நிற்க வேண்டும் என விசுவாசிகளுக்கு பவுல் நினைவூட்டுகிறார். 
மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
 -ரோமர் 6 : 7

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
 -யோவான் 8 : 36
  • இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் போராடும் விஷயம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், உங்களை விடுவிக்கும் தேவனின் வல்லமை மிகவும் வலிமையானது என்று நம்புங்கள். 
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
 -மத்தேயு 17 : 19 

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 -மத்தேயு 17 : 20
  • ஒரு மலையை நகர்த்துவதற்கு உங்களுக்கு ஒரு சிறு கடுகு அளவுள்ள நம்பிக்கை இருந்தால் போதும், நிச்சயமாக உங்களால் முடியும். 
  • God is the God of the Impossible!
  • நீங்கள் ஒரு சாத்தியமற்ற(impossible) சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம், உங்களை சோர்வடையவோ அல்லது வருத்தப்படவோ அனுமதிக்காதீர்கள்.
  • உடனே தேவனிடம் சென்று ஜெபம் செய்யுங்கள்.
  • அவரிடம் பிரச்சனையை சொல்லுங்கள். 
  • பின்னர் அவருக்கு கடினமானது என்று எதுவும் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவருக்கு நன்றி சொல்லுங்கள். 
  • நீங்கள் என்ன தடைகள், பிரச்சனைகள், சோதனைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும் நீங்கள் அசையாதபடிக்கு, (யாக்கோபு 1:6-7; எபிரேயர் 11:6) உங்களிடத்தில் ஒரு வலுவான விசுவாசத்தை நிலைநாட்டும்படி தேவனிடம் கேளுங்கள்.
  • உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையின் ஒரு சிறு விதை, உங்கள் வாழ்வில் ஒரு பெரிய மலையை நகர்த்தக்கூடிய நம்பிக்கையாக மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! 
Conclusion:
  • எந்த தேவனுடைய சத்தியத்தை, விசுவாசத்தினால் உங்களுடையது ஆக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள்? 
  • எந்த ஜெபத்தை நீங்கள் தைரியமாக விசுவாசத்துடன் ஜெபித்து, பதிலை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 
  • உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வாழ்விலோ என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை மிகுந்த விசுவாசத்துடன் கூடிய ஜெபத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா?
  • உங்களிடம் உள்ள விசுவாசத்தின் விதையை எடுத்து, அதை ஒரு மாபெரும் விசுவாச மரமாக வளர்க்கும்படி தேவனிடம் கேளுங்கள், 
  • இதன் மூலம் மேற்கண்டது அனைத்தும்  நிறைவேறுவதை நீங்கள் காணலாம். 
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
 -ரோமர் 12 : 3

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4