மாற்கு பவுலோடு ஊழியம் செய்தாரா?
அப்போஸ்தலர் 15:37 — “இந்த மாற்கு யார்?”
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
-அப்போஸ்தலர் 15 : 37
யார் இந்த மாற்கு
- இங்கு குறிப்பிடப்படும் மாற்கு என்பவர் “யோவான் மாற்கு (John Mark)” ஆவார்.
- இந்த மாற்கு, எருசலேமில் இருந்த ஒரு விசுவாசி.
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
-அப்போஸ்தலர் 12 : 12
- மாற்குவின் தாய் மரியாள்.
- அவர்களுடைய வீடு ஆரம்ப சபையின் கூடுகைக்கான இடமாக இருந்தது.
- பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது விசுவாசிகள் அந்த வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
- அதனால் மாற்கு சிறுவயதிலிருந்தே சபை சூழலில் வளர்ந்தவர்.
மாற்கு பவுலுடன் எப்போது சென்றார்?
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
-அப்போஸ்தலர் 12 : 25
பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்திற்கு சென்றபோது மாற்கு அவர்களுடன் சென்றார்
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
-அப்போஸ்தலர் 13 : 5
பிரச்சனை எங்கே ஏற்பட்டது?
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
-அப்போஸ்தலர் 13 : 13
- மாற்கு, பயணத்தின் நடுவில் குழுவை விட்டு திரும்பினார்.
- ஏன் திரும்பினார் என்று வேதாகமம் காரணம் சொல்லவில்லை.
- இது பவுலுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.
அப்போஸ்தலர் 15:37-39 இல் என்ன நடந்தது?
- பவுல் சொன்னார், “மாற்குவை கூட்டிக்கொண்டு போக வேண்டாம்” என்று.
- ஏனெனில், முன்பு அவர் ஊழியத்தை விட்டுச் சென்று விட்டார்.
- மீண்டும் அதே பிரச்சனை வருமோ என்று பவுல் நினைத்தார்.
- ஆனால் பர்னபா, மாற்குவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினார்.
- ஏனென்றால் பர்னபாவுக்கு மாற்கு சொந்தம்.
- பர்னபாவினுடைய அக்கா பையன் தான் மாற்கு.
- இதனால், பர்னபா + மாற்கு → கப்பல் ஏறி சீப்புரு சென்றார்கள்.
- பவுல் + சீலா → வேறு பாதையில் சென்றார்கள்.
பிற்காலத்தில் பவுல் மாற்குவுடன் மீண்டும் ஊழியம் செய்தார். எப்படி?
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.
-கொலோசெயர் 4 : 10
- மாற்குவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
- இங்கு பவுல் மாற்குவை தன்னுடன் இருப்பவராக குறிப்பிடுகிறார்.
- அதாவது, ஒரு காலத்தில் பவுல் மறுத்தவர், பின்னர் பவுலின் ஊழிய நண்பராக மாறினார்.
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
-பிலேமோன் 1 : 24
- இங்கு பவுல் அவரை “உடன் ஊழியக்காரர்” என்று அழைக்கிறார்.
- இது பவுலின் கடைசி நாட்களில் எழுதப்பட்டது.
- ஒரு காலத்தில்: “அவனை கூட்டிக்கொண்டு போக வேண்டாம்” என்று சொன்ன பவுலே,
- பின்னர்: “அவன் எனக்கு பிரயோஜனமுள்ளவன்”என்று சொல்கிறார்.
மாற்கு பேதுருவுடனும் ஊழியம் செய்தார்?
- மாற்கு பேதுருவுடன் நெருக்கமாக ஊழியம் செய்தார்.
- பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார் என்று ஆரம்பகால கிறிஸ்தவ பாரம்பரியம் கூறுகிறது.
- பேதுரு மாற்குவை “என் மகன்” என்று அழைக்கிறார்.
ஆவிக்குரிய பாடம்
- ஒரு தோல்வி வாழ்க்கையின் முடிவு அல்ல. மாற்கு ஒரு கட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேவன் அவரை மீண்டும் எழுப்பினார்.
- மனிதர்கள் மறுக்கும் இடத்தில் தேவன் மீண்டும் உருவாக்குகிறார்- பவுல் ஒரு நேரத்தில் மாற்குவை ஏற்கவில்லை. ஆனால் தேவன்: பர்னபா மூலம் அவனுக்கு உதவி செய்தார். பின்னர் பவுலுக்கும் பயனுள்ளவராக மாற்றினார்.
- முதிர்ந்த விசுவாசி மற்றவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பார். பர்னபாவின் பெயரின் அர்த்தம்:“ஆறுதலின் மகன்” (Son of encouragement). அவர் மாற்குவை கைவிடவில்லை.
Comments
Post a Comment