பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி

பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி

பவுலின் 13 நிருபங்கள் பைபிளில் உள்ள வரிசை
  1. ரோமர்
  2. 1 கொரிந்தியர்
  3. 2 கொரிந்தியர்
  4. கலாத்தியர்
  5. எபேசியர்
  6. பிலிப்பியர்
  7. கொலோசெயர்
  8. 1 தெசலோனிக்கேயர்
  9. 2 தெசலோனிக்கேயர்
  10. 1 தீமோத்தேயு
  11. 2 தீமோத்தேயு
  12. தீத்து
  13. பிலேமோன்

பவுலின் நிருபங்களின் காலவரிசை

பவுலின் நிருபங்கள் பொதுவாகக் கருதப்படும் காலவரிசையில்:

  1. கலாத்தியர் — கி.பி. 48–49
  2. 1 தெசலோனிக்கேயர் — கி.பி. 50–51
  3. 2 தெசலோனிக்கேயர் — கி.பி. 51–52
  4. 1 கொரிந்தியர் — கி.பி. 54–55
  5. 2 கொரிந்தியர் — கி.பி. 55–56
  6. ரோமர் — கி.பி. 56–57
  7. எபேசியர் — கி.பி. 60–62
  8. பிலிப்பியர் — கி.பி. 60–62
  9. கொலோசெயர் — கி.பி. 60–62
  10. பிலேமோன் — கி.பி. 60–62
  11. 1 தீமோத்தேயு — கி.பி. 62–64
  12. தீத்து — கி.பி. 63–65
  13. 2 தீமோத்தேயு — கி.பி. 66–67

இப்போது இந்த வரிசையில் பவுல் தன்னை எவ்வாறு விவரிக்கிறார் என்பதை கவனியுங்கள்.


மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,

 -கலாத்தியர் 1 : 1


நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

 -1 கொரி 15 : 9


பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 -எபேசியர் 3 : 8


பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

 -1 தீமோத்தேயு 1 : 15

  • அவர் கிறிஸ்துவுடன் நெருங்கி நடந்துகொண்டே போகப் போக, தன்னைப் பற்றிய பெருமை குறைந்தது. கிறிஸ்துவைப் பற்றிய மகிமை பெருகியது.

முடிவுரை:

பவுலின் வாழ்க்கையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்:

“நான் சிறுக வேண்டும்; கிறிஸ்து பெருக வேண்டும்.”


ஆரம்பத்தில்:

“நான் அப்போஸ்தலன்.”

பின்னர்:

“அப்போஸ்தலர்களில் சிறியவன்.”

அதன்பின்:

“பரிசுத்தவான்களில் சிறியவன்.”

இறுதியில்:

“பாவிகளில் பிரதானமானவன்.”

  • இது மனச்சோர்வு அல்ல.
  • இது தாழ்வு மனப்பான்மையும் அல்ல.
  • நான் என் பலவீனத்தை ஒப்புக்கொள்ளும்போது, அவருடைய வல்லமை வெளிப்படுகிறது.
  • நான் என்னை வெறுமையாக்கும்போது, அவர் என்னை நிரப்புகிறார்.
  • நான் என்னை தாழ்த்தும் போது , அவர் உயர்த்துகிறார்.

கிறிஸ்துவின் சுபாவம் பவுலில் வெளிப்படுகிறது. இது ஒரு ஆவிக்குரிய வளர்ச்சி அல்ல, ஆவிக்குரிய முதிர்ச்சி. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம்