சத்தியம் என்னும் இடைக்கச்சை
சத்தியம் என்னும் இடைக்கச்சை
-எபேசியர் 6 : 14
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
-எபேசியர் 6 : 15
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
-எபேசியர் 6 : 16
இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
-எபேசியர் 6 : 17
மேற்கண்ட வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசியின் ஆவிக்குரிய ஆயுதங்களை பற்றி விளக்குகிறார். அவையாவன
- சத்தியம் என்னும் கச்சை - Belt of truth
- நீதியென்னும் மார்க்கவசம் - Breastplate of Righteousness
- சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - Shoes of Peace
- விசுவாசமென்னும் கேடகம் - Shield of Faith
- இரட்சணியமென்னும், தலைச்சீரா - Helmet of Salvation
- தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - Sword of the Spirit - Word of God
உலக யுத்தம்:
உலக யுத்தத்தில்,
- மார்க்கவசம் என்பது எதிரிகள் எய்யும் அம்பில் இருந்து காத்துக் கொள்ள உதவும்.
- பாதரட்சை யுத்தத்தில் ஓடுவதற்கு உதவியாக இருக்கும்.
- கேடகம் தன்னை தற்காத்து கொள்ள உதவும்.
- தலைச்சீரா தலையில் அடிபடாமல் காக்கும்.
- பட்டயம் மற்றவர்களை வெட்ட உதவும்.
- ஆனால் யுத்தத்திற்கு நேரடி சம்பந்தமே இல்லாத இடைக்கச்சை எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது?
உலக யுத்தத்தில் இடைக்கச்சை எதற்கு?
ஒரு ரோமப் போர்சேவகனுக்கு, இடைக்கச்சை என்பது
- பட்டயத்தை நிலையாகப் பிடித்து வைக்கவும்,
- மார்க்கவசத்தைப் பாதுகாக்கவும்,
- Free ஆக நடமாடுவதற்காகவும்,
- மேலங்கியை இறுக்கமாக வைத்திருப்பதற்காகவும்,
ஆவிக்குரிய யுத்தத்தில் இடைக்கச்சை எதற்கு?
- ஆவிக்குரிய ரீதியில் பார்க்கும் போது இங்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறதே!
- என்னவென்றால் சத்தியம் என்றால் தேவ வார்த்தை.
- ஆனால் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வார்த்தை என்று தனியாக ஒரு ஆயுதம் கூறப்பட்டுள்ளதே!
- அப்படியென்றால் சத்தியம் என்பது என்ன?
- சத்தியம் என்ற கச்சைக்கும், ஆவியின் பட்டயத்திற்கும் என்ன வேறுபாடு. கீழே காண்போம்.
சத்தியம் என்றால் என்ன?
- சத்தியம் என்பது அடிப்படை (foundation/stability/basic principles). இதை கிரேக்க மொழியில் Logos என்று குறிப்பிடுவார்கள்.
- Logos என்பது தேவனின் முழுமையான செய்தி (the full message of God - often written or eternal truth)
-யோவான் 14 : 6
2) சத்திய ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறார்.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
-யோவான் 14 : 17
3) வேத வசனமே சத்தியம்.
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
-யோவான் 17 : 17
4) சத்தியத்திற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சத்தியம் நம்முடைய விருப்பத்திற்கேற்ப மாறாது.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
-ரோமர் 12 : 2
5) சத்தியம் உலகின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குகிறது.
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
-யோவான் 8 : 32
6) சத்தியம் மாறாதது.
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
-ஏசாயா 40 : 8
7) சத்தியம் (வார்த்தையானவர்) மாறாதவர்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
-எபிரேயர் 13 : 8
8) சத்தியம் அறிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, கைகொண்டு வாழ்வதற்கு
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
-எபேசியர் 4 : 15
9) சத்தியத்தினால் நிறைந்தவர் (நித்திய சத்தியம் - Eternal Truth).
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
-யோவான் 1 : 14
10) அடிப்படை சத்தியம்.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
-கொலோசெயர் 3 : 16
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
-கொலோசெயர் 3 : 17
தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் என்றால் என்ன?
- ஆவியின் பட்டயம் என்பதை தேவனுடைய வார்த்தையைச் செயல்பூர்வமாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
- உதாரணமாக இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படும் போது “எழுதப்பட்டிருக்கிறதே” என்று மேற்கொள் காட்டினார்.
- அது தான் இங்கு சொல்லப்படுகிறது.
- இதை கிரேக்க மொழியில் Rhema என்று குறிப்பிடுவார்கள்.
- Rhema என்பது பேசப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அல்லது உபயோகிப்பட்ட வார்த்தை ( a specific word spoken or revealed for a moment or situation)
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
-மத்தேயு 4 : 4
ஒரு ஒப்பீடு - Comparison
சத்தியம் எனும் கச்சை = கணிதக் கோட்பாடுகளை ஆழமாக அறிதல் (Belt of truth = Knowing math principles deeply)
ஆவியின் பட்டயம் = அந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல் (Sword of the Spirit = Solving problems using those principles)
Comments
Post a Comment