You said YES book in Tamil

Page 3

இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது?

வரவேற்பு -1
அறிமுகம் - 4
உதவிகரமான வளங்கள் - 5

வாரம் 1: இயேசுவை பின்தொடரத் தொடங்குதல்
இயேசுவுக்கு “ஆம்” என்று சொல்வது என்றால் என்ன அர்த்தம்? - 6
நான் இயேசுவுக்கு “ஆம்” சொன்ன பிறகு என்ன நடக்கும்?
தேவன் யார்? - 8
தேவன் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்? - 10
ஞானஸ்நானம்  என்றால் என்ன? - 14
நான் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? - 16
நான் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறேன்? - 18

வாரம் 2: இயேசு வாழ்ந்ததுபோல் வாழுதல்
நான் யாராக மாறிக்கொண்டு இருக்கிறேன்? - 20
நான் வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும்?  22
நான் எப்படி ஜெபிக்க வேண்டும்? - 24
நான் எப்படி நண்பர்களை உருவாக்க வேண்டும்? - 26
துதி (worship) என்றால் என்ன? - 28
எனக்கு தீமையானவற்றை எனக்கு நானே செய்து கொள்வதை எப்படி நிறுத்துவது? - 30
இயேசு ஏன் ஓய்வெடுக்கிறார்? - 32

வாரம் 3: இயேசு நேசித்ததுபோல் நேசித்தல்
இயேசு நேசித்ததுபோல் நான் எப்படி நேசிப்பது? - 34
மற்றவர்களை வரவேற்பது எப்படி? - 36
தாராளமான (உதாரமான) மனிதராக மாறுதல் - 38
தேவைகளை கவனித்து பூர்த்தி செய்தல் - 40
மற்றவர்களை மன்னித்தல் - 42
இயேசுவைப் பற்றி மக்களிடம் சொல்லுதல் - 44
அடுத்தது என்ன நடக்கும்? - 46

அடுத்த படிகள் - 48

Page 5

அறிமுகம்- introduction

நீங்கள் இயேசுவுக்கு “ஆம் என்று சொல்லி விட்டீர்கள்” இப்போது அடுத்தது என்ன?

இந்தச் சிறிய புத்தகத்தின் உள்ளே, இயேசுவைப் பின்தொடர வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு என்ன அர்த்தம் கொண்டது என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் வேதாகமத்திலிருந்து தினசரி சிந்தனைகளும், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முயற்சி செய்யக்கூடிய யோசனைகளும் இதில் இடம்பெறும்.

“இதன் அர்த்தம் என்ன?”,
“நான் என்ன செய்ய வேண்டும்?”,
“இதனால் என்ன மாற்றம் வருகிறது?”
என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் ஒன்றாகப் பதில் காண்போம். இயேசுவைப் பின்தொடருகிற உங்கள் பயணத்தைத் தொடங்கும் போது, இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதே எங்கள் நம்பிக்கை.

இந்தப் புத்தகம் 21 நாட்களின் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களை வளரச்செய்ய உதவும் வேகத்தில் நீங்கள் இதை படிக்கலாம். நீங்கள் இதை 100 நாட்களிலோ, 21 நாட்களிலோ, அல்லது ஒரு வாரத்தில்கூட முடிக்கலாம். ஒருவேளை இதை மீண்டும் மீண்டும் வாசிக்கவும் செய்யலாம். புத்தகத்தை முடிப்பது முக்கியமல்ல; வழிகாட்டுதலைக் கண்டுபிடிப்பது, நம்பிக்கையில் வளர்வது, மேலும் நீங்கள் கற்றுக்கொள்வதை பிறருடன் பகிர்ந்து உரையாடலைத் தொடங்குவது தான் முக்கியம்.

இயேசுவைப் பின்தொடர்வது என்பது, ஒரு நாளுக்கு ஒரு படி எடுத்து முன்னேறும் ஒரு செயல்முறை. இந்தப் பயணத்தில் உங்களுடன் சேர்ந்து நடப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!

Page 6

நாள் - 1

இயேசுவுக்கு 'ஆம்' என்று சொல்வதன் அர்த்தம் என்ன? 


நீங்கள் இயேசுவுக்கு 'ஆம்' என்று சொல்லிவிட்டீர்கள்—அதற்காக நாங்கள் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். 


இயேசுவுக்கு 'ஆம்' என்று சொல்வது பற்றி மக்கள் பேசுவதை நீங்கள் பல வழிகளில் கேட்கலாம். "உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணிப்பது," "ஒரு கிறிஸ்தவராக மாறுவது," "இரட்சிப்பைப் பெறுவது," அல்லது "இயேசுவைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுப்பது" போன்ற சொற்றொடர்களை நீங்கள் கேட்டிருக்கலாம்.


ஆனால் இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன, என்ன நிகழவில்லை? ஏன்? 


இந்தக் கேள்விகளில் சிலவற்றிற்குப் பதிலளிக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். 


எனவே, முதல் கேள்வியிலிருந்து தொடங்குவோம். இயேசுவுக்கு 'ஆம்' என்று சொல்வதன் அர்த்தம் என்ன? 


இயேசுவைப் பின்பற்றுவது என்றால் அவரைப் போல மாறுவது. ஆனால் இயேசு யார், நாம் ஏன் அவரைப் போல மாற விரும்ப வேண்டும்? 


அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, நாம் பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்திற்குச் செல்ல வேண்டும். ஆதியில், தேவன் உலகத்தையும், மனிதகுலத்தையும் படைத்தார் என்று அது நமக்குச் சொல்கிறது. அவர் படைத்தவற்றை அனுபவிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் அவர் நமக்குக் கட்டளை கொடுத்தார். ஆனால் மனிதகுலம் தங்களையும், மற்றவர்களையும், உலகத்தையும் காயப்படுத்தும் விஷயங்களை தெரிவு (choices) செய்தது. இந்தத் தேர்வுகள்—பைபிள் பாவம் என்று அழைப்பவைகளாகும்—நம்மை நமது பரிபூரண தேவனிடமிருந்து பிரித்து, அவர் நமக்குக் கொடுத்த வேலையைச் செய்யும் நமது திறனைக் கட்டுப்படுத்தினது. 


Page 7

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தேவனுடைய குமாரன் இயேசு என்ற பெயருடைய ஒரு குழந்தையாக இந்த உலகில் வந்தார். இயேசு பூமியில் சுமார் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அந்த காலத்தில், தேவனை நேசிப்பதும் பிறரை நேசிப்பதும் தான் சிறந்த வாழ்க்கை முறையென்று நமக்குக் காட்டினார். பின்னர், சிலுவையில் மரித்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததினால், நமக்கும் தமது பிதாவான தேவனுக்கும் இடையிலிருந்த பிரிவை அவர் நீக்கினார்.

முழுமையாக தேவனாகவும் முழுமையாக மனிதனாகவும் இருந்த இயேசு, ஏன் நமக்காக இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்? அவர் மரணமடைவதற்கு முன்பு, நிக்கோதேமு என்ற ஒருவருடன் ஒரு இரவு நேரத்தில் இயேசு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இயேசுவைப் பின்தொடர்வது என்றால் என்ன என்பதைக் குறித்து நிக்கோதேமுக்கு பல கேள்விகள் இருந்தன.

நிக்கோதேமின் கேள்விகளுக்குப் பதிலாக, இயேசு தமது மிகப் புகழ்பெற்ற வார்த்தைகளில் சிலவற்றை பகிர்ந்தார்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
 -யோவான் 3 : 16
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
 -யோவான் 3 : 17

நம்மீது தேவனுக்குள்ள அன்பு மிகவும் பெரிதானதால், நமது பாவங்களுக்காக இயேசு மரிக்கத் தயார் ஆனார். அதனால் நாம் என்றென்றும் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும். இப்படிப்பட்ட அன்பே, யாரையும் அவரது அன்புக்கும், மன்னிப்புக்கும், புதிய வாழ்க்கை முறைக்கும் “ஆம்” என்று சொல்லத் தூண்டும்.

இது எவ்வாறு நடக்கிறது என்பதை நாளை நாம் பேசுவோம். ஆனால் இன்று, ஜெபத்தில் அவருடன் பேசும்போது இயேசுவின் பதிலை சிந்திப்போம்.

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபிக்கலாம், அல்லது இதைப் பயன்படுத்தலாம்:

ஜெபம்: தேவனே, இயேசு உம்முடைய குமாரன் என்றும், அவர் என்னையும் உலகத்தையும் இரட்சிக்க வந்தார் என்றும் நான் நம்ப முடிவு செய்துள்ளேன். இதன் அர்த்தம் என்ன என்பதை நான் இன்னும் முழுமையாக அறியவில்லை. ஆனால், இயேசுவைப் பின்தொடரவும், அவர் காட்டிய வழியில் வாழவும் நான் விரும்புகிறேன். இயேசுவை அனுப்பி என்னை இவ்வளவு நேசித்ததற்காக உமக்கு நன்றி. உமது குடும்பத்தில் என்னை அழைத்ததற்காக நன்றி. ஆமென்.

Page 8

நாள் - 2

நான் இயேசுவுக்கு “ஆம்” சொன்ன பிறகு என்ன நடக்கும்?

நேற்று நாம் ஜெபத்துடன் முடித்தோம்; இன்றும் ஜெபத்தோடு தொடங்குவோம். தேவன் நாம் பேசுவதை கேட்பதற்கு எந்த நேரத்திலும் பிரியமாயிருக்கிறார்.

நீங்கள் உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபிக்கலாம், அல்லது இதைப் பயன்படுத்தலாம்: 

ஜெபம்: தேவனே, இரட்சிப்பின் வரத்திற்காக உமக்கு நன்றி: என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி, உம்மோடு குணமளிக்கும் உறவிற்குள் என்னை கொண்டு வந்ததற்காக நன்றி.
இன்றும், வரும் வாரங்களிலும்,
என் வாழ்நாள் முழுவதும் உமது அன்பு என்னை வடிவமைக்கட்டும்.
என்னை புதிதாக்குவீர் என்று நான் உம்மை நம்புகிறேன்.
இயேசுவின் நாமத்தில், ஆமென்.

கிறிஸ்தவர்கள் ஜெபங்களை “இயேசுவின் நாமத்தில்” என்று சொல்லி முடிப்பார்கள். ஏனெனில் இயேசு எங்களுக்கு இப்படியே ஜெபிக்க சொல்லியுள்ளார் என்று கூறுவார்கள். நம்முடைய பாவங்களுக்காக “இயேசு என்ற நபர்” செய்த தியாகத்தின் காரணமாக, “அந்தப் பெயரையே”ஜெபத்தில் உபயோகிக்கிறோம். நாம் தேவனுடன் நெருக்கமான, தனிப்பட்ட உறவில் இணைக்கப்படுகிறோம். நாம் அவருடைய வழியில் வாழவும், அவரைப் போல மாறவும் இந்த வகையான உறவு அவசியம்.

இயேசு நேர்மையுடன் வாழ்ந்தார். அவர் தம்மை எதிர்த்தவர்களையும் நேசித்தார், அநியாயத்திற்கு எதிராக நின்றார், சமூகம் நிராகரித்த மக்களை ஏற்றுக்கொண்டார். நாம் இயேசுவுக்கு “ஆம்” சொன்ன பிறகு, அவரை வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிற நீளும் பயணம் தொடங்குகிறது. அதனால் காலப்போக்கில், அதே குணங்களை நாமும் பெற ஆரம்பிக்கிறோம். உண்மையில், வேதாகமத்தில் உள்ள எல்லா கட்டளைகளையும் இயேசு ஒரே வார்த்தையில் சுருக்கும்போது, “நீங்கள் முழு இருதயத்தோடும் தேவனை நேசிக்க வேண்டும்;உங்களை நேசிப்பது போல பிறனுடத்திலும் அன்பு கூற வேண்டும்” என்று கூறினார்.

Page 9

ஆனால் அந்த மாற்றம் தானாகவே நடக்குமா,
அல்லது அது நடக்க நமக்கும் ஒரு பங்கு உள்ளதா?
முதல் கட்டளை மாத்திரம் அல்ல—அவர் சொன்ன இரண்டு கட்டளைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
 -1 யோவான் 2 : 2
 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
 -1 யோவான் 2 : 5
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
 -1 யோவான் 2 : 6

இயேசுவைப் போல மாறுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.
தேவன் பெரும்பான்மையான பணியைச் செய்கிறார்,
ஆனால் அவர் செய்கிற பணியில் நாமும் அவருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இனி நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்த முழு காலத்திலும்,
அதைச் செய்வதற்கான மூன்று வழிகளை நாம் பார்க்கப் போகிறோம்:

இயேசுவைப் பின்பற்றுவதின் அடிப்படைகளை கற்றுக்கொள்வது
தேவன் யார்? தேவனோடு பேசுவது எப்படி இருக்கும்?
அவரைப் பற்றி மேலும் அறிய நாம் என்ன செய்யலாம்?
அடுத்து எடுக்கக்கூடிய நல்ல படிகள் என்ன?
இந்த வாரம் முழுவதும், இப்படிப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு
நாம் பதில்களைத் தேடப் போகிறோம்.

இயேசு வாழ்ந்தது போல வாழ்வது
இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில்,
தேவனுக்கு நெருக்கமாக வரவும்,
அவருடன் இணைந்து வாழவும்,
அவரைப் போல வாழ உதவும் பல வாழ்க்கை முறைகளை அவர் நமக்கு காட்டினார்.
இவை ஆவிக்குரிய பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இரண்டாம் வாரத்தில், இவற்றில் சிலவற்றை நாம் ஆராயப் போகிறோம்.

இயேசு நேசித்தது போல நேசிப்பது
நாம் அவரைப்போல வளர வேண்டுமென்றால் இயேசு நேசித்தது போல நாமும் நேசிக்க வேண்டும். 
மூன்றாம் வாரத்தில்,
இயேசுவின் அன்பை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.

சிந்திக்க சிறிது இடைவேளை:
என் வாழ்க்கையின் எந்த பகுதிகளை தேவன் புதிதாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்?

தேவனுடன் இணைந்து நான் செயல்பட விரும்பனால்
மற்றவர்களையும், என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் நான் கவனிக்க வேண்டும்? அது எப்படி?

Page 10

நாள் - 3

தேவன் யார்?

தேவன் யார் என்று கேட்டால்:
தேவனாகிய பிதாவா?
குமாரனாகிய இயேசுவா?
பரிசுத்த ஆவியானவரா?
மூவரும் ஒன்றாகவா?

ஆம்!

இயேசுவைப் பின்பற்றத் தீர்மானிப்பது என்பது மூன்றும் ஒன்றாக உள்ள தீர்மானம்:
தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் வரும் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு,
தேவனாகிய பிதாவின் பிள்ளையாக மாறுகிறீர்கள்;
பரிசுத்த ஆவியால் நிறைந்து,
தேவனுடைய மகளாகவோ மகனாகவோ வாழ வலிமை பெறுகிறீர்கள்.
தேவன் மூன்றில் ஒருவராக இருக்கிறார். 

வேதாகமம் முழுவதும்,
திரித்துவமாக (Trinity) இந்த வகையில் தேவன் வெளிப்படுவதை நாம் காணலாம்.
படைப்பின் ஆரம்பத்திலிருந்தே,
தேவனாகிய பிதாவுடன் சேர்ந்து தேவனுடைய ஆவி இருந்தார் என்பதை
வேதாகமத்தின் முதல் இரண்டு வசனங்களிலேயே பார்க்கிறோம்.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
 -ஆதியாகமம் 1 : 1
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
 -ஆதியாகமம் 1 : 2

Page 11

பின்னர், யோவான் -  நற்செய்தியின் ஆசிரியர் படைப்பின் கதையை மீண்டும் விவரிக்கிறார்.
இந்த முறையில், இயேசுவும் குறிப்பிடப்படுகிறார்;
அவரை தேவனுடைய வார்த்தை என்று ஆசிரியர் அழைக்கிறார்.
யோவான் நற்செய்தி முழுவதையும் விரைவில் வாசிக்க,
நிச்சயமாக ஒரு வேதாகமத்தைப் பெறுங்கள் அல்லது
YouVersion என்ற பைபிள் app ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
தேவனுடைய இயல்பின் மூன்று பகுதிகளை விவரிக்கும்
யோவான் 1-ஆம் 
அத்தியாயத்திலிருந்து சில வசனங்கள் இங்கே:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
 -யோவான் 1 : 1
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
 -யோவான் 1 : 2
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 -யோவான் 1 : 12
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
 -யோவான் 1 : 14
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
 -யோவான் 1 : 18
நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
 -யோவான் 1 : 33
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
 -யோவான் 1 : 34
— யோவான் 1:1–2, 12, 14, 18, 33–34

இவை எல்லாம் நிறைய தகவல்கள். இதுதான் சாரம்:
இயேசு, தேவனாகிய பிதா, மற்றும் பரிசுத்த ஆவியானவர் —
மூவரும் ஒரே தேவன்.
இயேசு, தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நமக்குக் காட்டுவதற்காக மட்டும் அல்ல;
பரிசுத்த ஆவியானவர் மூலம்,
எந்நாளும் பிதாவை நேரடியாக அணுகும் உரிமையையும்
நமக்கு அளிக்க வந்தார்.

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபியுங்கள், அல்லது இதைப் பயன்படுத்துங்கள்:

ஜெபம்: தேவனே,
உம்மை பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும்
நான் அறிந்து கொள்ள உதவுங்கள்.
பிதாவே, நீர் என் பராமரிப்பாளர்.
இயேசுவே, நீர் என் இரட்சகர்.
பரிசுத்த ஆவியானவரே, நீர் என் வழிகாட்டி.
இயேசுவின் நாமத்தில், ஆமென்.

page 12

நாள் - 4

தேவன் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்?

நேற்று நாம் இப்படியாக ஜெபித்தோம்:
“தேவனே, உம்மை பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும்
நான் அறிந்து கொள்ள உதவுங்கள்.
பரிசுத்த ஆவியானவரே, நீர் என் வழிகாட்டி.”

பரிசுத்த ஆவி யார்?
அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்?
அவருடைய கவனத்தைப் பெற நாம் மிகுந்த ஆவிக்குரியவர்களாக நடிக்க வேண்டுமா?
இயேசு இதற்குப் பதிலாக வேறொன்றை வாக்குறுதி செய்திருக்கிறார்.

இயேசு பரிசுத்த ஆவியானவரை
ஆறுதலளிப்பவர் (comforter), ஆதரவாளர்(Advocate), உதவியாளர்(helper), மற்றும் நண்பர்(friend) என்று விவரித்துள்ளார்.
உங்களுக்குத் தெரிந்த இப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறாரா?
ஒரு வழிகாட்டி, தாய், அல்லது ஞானமுள்ள நண்பர் போல?
இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும் போது,
பரிசுத்த ஆவியானவரை உங்கள்
ஆறுதலளிப்பவராகவும், ஆதரவாளராகவும்,
உதவியாளராகவும், நண்பராகவும் நினைத்துப் பாருங்கள்.

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
 -யோவான் 14 : 16
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
 -யோவான் 14 : 17

பிதாவுடன் இருக்க விரைவில் செல்லப்போகிறேன் என்று தமது சீஷர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோதே இயேசு இந்த வாக்குறுதியை அளித்தார்.

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
 -யோவான் 16 : 7

page 13

அவருடைய சீஷர்கள் குழப்பமடைந்திருக்கலாம், கவலையடைந்திருக்கலாம்,
அல்லது தங்களைத் தனியாக விட்டுவிட்டார் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் இயேசு அதை தெளிவுபடுத்தினார்:
அவர் சரீரபூர்வமாக விலகிச் செல்வது என்பது
தூரம் போவது குறித்ததல்ல;
மாறாக இன்னும் நெருக்கமாக வருவது பற்றியது.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
 -யோவான் 14 : 18
இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
 -யோவான் 14 : 19
நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
 -யோவான் 14 : 20

இயேசு இன்னும் நெருக்கமாக வந்து விட்டார்,
ஏனெனில் பரிசுத்த ஆவியானவர்
நம்மோடு மட்டும் இல்லாமல்,
நமக்குள் வாழப்போகிறார்.
இயேசு வாக்குறுதி செய்ததுபோலவே,
அதே ஆறுதல், வல்லமை, அன்பு ஆகியவற்றால்
அவருடைய சீஷர்களை நிரப்புவதற்காக
பரிசுத்த ஆவியானவர் வந்தார்.

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
 -யோவான் 14 : 20

“ஆம்” என்று சொல்வதன் மூலம், நம்மை வழிநடத்தவும், ஆறுதல் அளிக்கவும், நமக்காகவும் நம்மூடாகவும் பேசவும் பரிசுத்த ஆவியானவரை அழைக்கிறோம்.

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
 -யோவான் 14 : 26

தேவன் நமக்குள் வாசம் செய்து வழிநடத்த நம்மை தேர்ந்தெடுத்து இருக்கிறார்
வரும் வாரங்களில்,
நமது வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை
மேலும் வரவேற்கும் நடைமுறைகளை
நாம் கண்டறியப் போகிறோம்.

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபியுங்கள், அல்லது இதைப் பயன்படுத்துங்கள்:

ஜெபம்: தேவனே,
பரிசுத்த ஆவியானவருக்காக உமக்கு நன்றி.
ஆறுதலளிப்பவராகவும், உதவியாளராகவும்,
ஆதரவாளராகவும், நண்பராகவும்
உம்மை நான் அதிகமாக அறிந்து கொள்ள
என்னிடம் தொடர்ந்து உதவுவீரா?
இயேசுவின் வழியை நான் பின்பற்றும் போது,
நீர் என்னை வழிநடத்துவீர் என்று நான் நம்புகிறேன்.
இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Page 14

நாள் - 5

ஞானஸ்நானம் என்றால் என்ன?

கடந்த சில நாட்களில்,
தேவனுடைய மூன்றில் ஒன்றான இயல்பைப் பற்றி—
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்—
மேலும் பரிசுத்த ஆவியானவரின் மூலம்
தேவன் இன்று எவ்வாறு நமக்குள் வாசம் செய்கிறார் என்பதையும் கற்றுக்கொண்டோம்.
இன்று, திரித்துவத்தின் மூன்று பகுதிகளும் இடம்பெறுகின்ற
பைபிளில் உள்ள இன்னொரு கதையை வாசிக்கப் போகிறோம்.

இன்று நாம் ஆராயும் முக்கிய தலைப்பு ஞானஸ்நானம்.

அவரை பின்பற்றுபவர்கள் நான்
இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறேன் என்று பிரசித்தப்படுத்தும்
ஒரு வழி தான் ஞானஸ்நானம்
ஒரு மேய்ப்பர் (pastor) அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர்,
ஒரு குளம் (அல்லது வேறு நீர்நிலையம்) அருகில் உங்களுடன் நின்று,
உங்களை நீருக்குள் மூழ்க செய்து,
உடனே மீண்டும் மேலே எழும்ப உதவி செய்வார்.

ஆனால் ஏன் நீருக்குள் செல்ல வேண்டும்?
அது இயேசுவின் மரணம்,
உயிர்த்தெழுதல்,
அவரூடாக கிடைக்கும் புதிய வாழ்க்கை
ஆகியவற்றை குறிக்கும் ஒரு அடையாளம்.

  • நீருக்குள் மூழ்குவது,
    இயேசுவின் மரணத்தின் மூலம்
    உங்கள் பாவங்கள் கழுவப்பட்டதை குறிக்கிறது.

  • நீரிலிருந்து மேலே எழுப்பப்படுவது,
    இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, உங்கள் வாழ்க்கையும்
    புதிய வாழ்க்கைக்குள் கொண்டு வரப்பட்டதை அடையாளப்படுத்துகிறது.

இயேசுவோடு நமக்கு கிடைத்த புதிய வாழ்க்கையை
பொதுவாக அறிவிப்பது,(public declaration)
இயேசு தாமே ஞானஸ்நானம் பெற்ற விதத்துக்கு ஒத்ததாகும்.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
 -மத்தேயு 3 : 13
யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
 -மத்தேயு 3 : 14
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
 -மத்தேயு 3 : 15
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
 -மத்தேயு 3 : 16
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.  
 -மத்தேயு 3 : 17

Page 15

இந்தப் பகுதியை மீண்டும் வாசித்து,
யோவான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதுப் போல கற்பனை செய்யுங்கள்.
அந்தத் தண்ணீர் எப்படி இருக்கிறது?
தேவனுடைய ஒப்புதலை கேட்கும் போது உங்களுக்குள் என்ன உணர்வு வந்து இருக்கும்?
தேவனுடைய குரல் உங்களிடம் தனிப்பட்ட ரீதியில் என்ன சொல்கிறது?
பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள்?

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தின் இறுதியில்,
அவர் தமது சீஷர்களை ஒன்றாக கூட்டி, இந்த பணியை பகிர்ந்தார்:

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
 -மத்தேயு 28 : 19

நீங்கள் இயேசுவின் வாழ்க்கை முறைக்கு “ஆம்” என்று சொன்னப் பிறகு, ஞானஸ்நானம் என்பது எடுக்க வேண்டிய அடுத்த படி.
நினைவில் வையுங்கள்:நான் ஞானஸ்நானம் எடுக்கும் போது உலகத்திற்கு நான் பொதுவாக அறிவிக்கிறேன்

“நான் இயேசுவைப் பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்!” என்று.

சிந்திக்க சிறிது இடைவேளை:
நீங்கள் ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்து விட்டீர்களா?
இயேசுவைப் பின்பற்றும் அடுத்த படியாக
இதை எடுப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
ஞானஸ்நானம் பற்றி நீங்கள் இன்னும் என்னென்ன கேள்விகள் வைத்திருக்கிறீர்கள்?

Page 16

நாள் - 6

நான் தேவனை எப்படி அறிந்து கொள்கிறேன்?

யாரையாவது அறிந்து கொள்வது எப்படி?
புதிய நண்பரைப் பற்றிக் கற்றுக்கொள்ள, பெரும்பாலானவர்கள் கேள்விகள் கேட்டு, ஒன்றாக நேரம் செலவிட்டு, வாழ்க்கையில் நடந்த முக்கியமான கதைகளைப் பகிர்ந்து கொள்வதால்தான் அறிகிறார்கள்.

ஆனால் தேவனுடன் தொடர்பு கொள்ளுவது, நண்பர்களுடன்_TACOS சாப்பிட்டு உரையாடுவதைப் போன்றதாக இல்லாமல், சிறிது வேறுபட்டதாக உணரலாம்.

அப்போ, நாம் தேவனை எப்படி அறிந்து கொள்வோம்?

1. ஜெபத்துடன் தேவனுடன் நேரம் செலவிடுதல்
ஜெபம் என்பது அனுபவங்கள், உரையாடல்கள், மகிழ்ச்சி, தேவைகள், நம்பிக்கை moments ஆகியவற்றை தேவனுடன் பகிர்வதற்கான சிறந்த வழி.

நீங்கள் எப்படி ஜெபிப்பீர்கள்?
ஜெபம் என்பது தேவனுடன் தொடர்பு கொள்வது.
நீங்கள் ஜெபத்தில் தேவனை அவர் யாராக இருக்கிறார் என்பதைப் புகழ்ந்து கொண்டாடலாம், உதவியை கேட்டுக்கொள்ளலாம், அல்லது மௌனமாக கூட இருக்கலாம். 
ஜெபம் ஒரு கலை நிகழ்ச்சி அல்ல, எனவே “தவறான” வார்த்தைகளைப் பேசுவதைப் பற்றி கவலை தேவையில்லை.
பின்னர், அது உங்களை நேசிக்கும் தேவனுடன் தொடர்பு கொள்ளும் வழி. ஆகவே நேர்மையாக இருங்கள்.
உங்களுக்கு எது முக்கியமான விஷயமோ, அதை தேவனுடன் பகிருங்கள்.

முடிவாக, தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்;
நீங்கள் ஜெபிக்கும் பொழுதும், உங்கள் வாழ்நாள் முழுவதும் கூட,
தேவன் உங்கள் கவனத்தை ஈர்க்க எப்படி முயற்சிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

2. வேதாகமத்தை வாசிப்பது
வேதாகமம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு.
அப்படியானால், இன்று நாம் அதை ஏன் வாசிக்க வேண்டும்?

Page 17

நாம் வேதாகமத்தைப் பற்றித் தொடர்ந்து பேசப் போகிறோம், ஆனால் சில அடிப்படைகளை இங்கே பார்க்கலாம்.

வேதாகமம் நம்மை தேவன் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்க உதவுகிறது,
மற்றும் நம்மைப் போன்ற மக்கள் அவரைப் பற்றி எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதையும் காட்டுகிறது.
அதன் ஆசிரியர்கள், பரிசுத்த ஆவியானவரால்
 வழிநடத்தப்பட்டு, தேவன் செய்த நன்மைகளை சொல்லுகின்றனர், பொருந்தக்கூடிய கேள்விகளை கேட்கின்றனர், வாழ்க்கையின் கடுமையான பகுதிகளை விவரிக்கின்றனர்.

பைபிள் முழுவதும்,

நாம் தேவனுடைய பணிவு, மன்னிப்பு, நீதி ஆகியவற்றை பார்க்கிறோம்.
மற்றும் அந்த பண்புகள் இயேசுவின் வாழ்க்கையில் எப்படி வெளிப்பட்டன என்பதை காண்கிறோம்.

3. மற்ற இயேசுவின் சீஷர்களுடன் ஒன்று சேர்வது

தேவனை அறிந்து கொள்வது என்பது “இயேசு மற்றும் நான்” மற்றும் “இயேசு மற்றும் நாமே” பற்றியது.
வேதாகமம் நமக்கு மிகவும் நடைமுறையில்,
இயேசுவை பின்பற்றவும், தேவனை ஒன்றாக அறியவும் எப்படி முடியும் என்பதைக் காட்டுகிறது.

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
 -எபிரேயர் 10 : 24
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
 -எபிரேயர் 10 : 25

நாம் தேவனுடைய விசுவாசத்திற்கான கதைகளை கேட்டு,
வேதாகமத்திலிருந்து ஞானத்தை கேட்டு,
தேவனுடைய அன்பைப் பற்றிய பாடல்களை பாடுவதன் மூலம் அவரை மேலும் நன்கு அறிந்து கொள்கிறோம்.

இயேசு சீஷர்களுடன் சந்திக்கும் பழக்கத்தை வளர்க்க மிகவும் எளிய வழி,
தீர்மானமாக church செல்வதாகும். 
அது நண்பர்களை அமைத்து கொள்வதற்கும்,
உங்கள் வாழ்க்கையில் தேவன் எப்படி வேலை செய்கிறார் என்பதைக் பகிர்வதற்கும்,
மற்றவர்களை சேவை செய்து ஊக்குவிப்பதற்கும் ஒரு நல்லவாய்ப்பு.

நீங்கள் இதுவரை சென்றது இல்லையெனில்,
இந்த வாரம் churchல் மற்றவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள்.
நண்பர், குடும்ப உறுப்பினர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரையோ அழைத்து,
இயேசுவின் மூலம் தம் வாழ்க்கையை மாற்றும் வழியை அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

Page 18

நாள் - 7

நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

அரவணை! நீங்கள் முதல் வாரத்தின் முடிவை அடைந்துள்ளீர்கள்.
உங்கள் நம்பிக்கையில் வளர்வதற்காக மனதுடன் எடுத்த முதல் படிகளைப் பார்த்து,
நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்தது ஒரு பெரிய தீர்மானம்,
மற்றும் இது புதிய எண்ணங்கள், கேள்விகள், சில சந்தேகங்களையும் உருவாக்கியிருக்கலாம்.
அது சரி. நினைவில் வையுங்கள், இயேசுவைப் பின்பற்றுவது வாழ்நாள் முழுவதும் நடக்கும் பயணம்,
ஆகவே ஒரு வாரத்தின் பின்னர் நம்பிக்கையின் எல்லா மர்மங்களையும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

இவையெல்லாவற்றையும் மனதில் வைத்து—
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

கீழே, உங்கள் நம்பிக்கைப் பயணத்தைப் பற்றிய உங்கள் உணர்வுகளை விவரிக்க
இரு அல்லது மூன்று வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை எழுதும் இடம் உள்ளது.
நீங்கள் களிப்பாகவும் எதிர்பார்ப்புடன் இருக்கலாம்,
அல்லது சிறிது குழப்பமாகவும் இருக்கலாம்.
மீதமுள்ள உணர்வுகளைச் சரியாக விளக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.

“சரி” என்ற பதில் இருக்க வேண்டும் என்று கவலைப்படாதீர்கள்.
உங்கள் நேர்மையான பதில் தான் சிறந்த பதில்.

இந்த வார்த்தைகளை யாருடனும் பகிர தேவையில்லை;
இது உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தும் தகுதியான ஒரு வாய்ப்பு மட்டுமே.

1.
2.
3.

Page 19

கடந்த வாரம், தேவன் நம்மை நேசிக்கிறார், நம்மை மன்னிக்கிறார்,
மற்றும் ஒரு நோக்கத்தையும் வழங்குகிறார் என்று பார்த்தோம —ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல மாற நாம் முயற்சிக்க வேண்டும்.
மேலும், அவர் நம்முடன் நெருக்கமான உறவு கொள்ள விரும்புகிறார்;
அதற்காக அவர் நம்மை அவருடன் தொடர்பு கொள்ள வழிகளை வழங்கியுள்ளார்.

இயேசுவைப் பின்பற்றுவதில் தெரிந்திருக்கும் அனைத்தையும் நாம் இன்னும் அடிப்படையாகப் பார்க்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்,
மற்றும் இந்த பயணத்தை ஒன்றாக தொடர முனைகிறோம்.

முதல் வாரத்தை முடித்து, இரண்டாம் வாரத்திற்கு தயாராகும் போது,
தேவன், நம்பிக்கை, பைபிள் பற்றிய நீங்கள் கேட்டுக் கொள்ள விரும்பும் கேள்வியை ஒன்று அல்லது இரண்டு எழுதி பாருங்கள்.
பிறகு, இந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் உங்கள் கேள்வியை
மேய்ப்பர் (pastor) அல்லது நம்பிக்கைக்குரிய நண்பருடன் பகிருங்கள்.

கீழே உள்ள வசனத்தை வாசித்து, அது பற்றி ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் சிந்தித்து,
மேலே நீங்கள் எழுதியதை தேவனுடன் பேசுங்கள்.

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
 -பிலிப்பியர் 1 : 5

Page 20

நாள் - 8

நான் யாராக மாறிக்கொண்டிருக்கிறேன்?

மூன்று வார பயணத்தில், இரண்டாம் வாரத்திற்கு வரவேற்கிறோம்
(அல்லது நான்காம், ஐந்தாம் வாரம், அல்லது உங்கள் நேரம் எவ்வளவு தேவைப்படும் என்பது பொருட்டு)!
கடந்த வாரம், கிறிஸ்தவனாக இருப்பது எவ்வாறு ஆரம்பிக்கிறது என்பதை நாம் கண்டோம்—
தேவனுடைய மன்னிப்பின் பரிசை ஏற்றுக் கொள்வது என்பது ஒரு தீர்மானத்திலிருந்து தொடங்கி,
அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போன்றவராக மாறும் வாழ்நாள் முழுவதும் நீளும் ஒரு செயல்முறை.

இப்போது, நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம்:
இயேசுவைப் போல மாறுவது உண்மையில் எப்படி இருக்கும்?
நாம் இயேசுவைப் போல மாற முடியுமா?

என்ன நடக்கும்? இயேசு தேவன், எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவரே, எப்போதும் இருக்கிறவர், ஒருபோதும் பாவம் செய்யாதவர்.
நாம் அவரைப் போல எப்படி மாறலாம்?

நீங்கள் ஒரு இசைக் கலைஞர், பிரோ பாஸ்கெட்பால் வீரர், அல்லது நிபுணர் சமையலர் ஆக விரும்பினால் எப்படி தொடங்குவீர்கள ?
முதலில், நீங்கள் எங்கோ தொடங்குவீர்கள்.
ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு “ஆம்” சொல்வீர்கள்.
ஆம் என்பது உங்களை நிபுணராக மாற்றாது, ஆனால்
உங்களை மேலும் வளர்ந்து வரும் ஒரு கற்றுக்கொள்கிற மாணவராக மாற்றுகிறது.

கற்றுக்கொள்ளும் மாணவராக, நீங்கள் அறிவை பெறுகிறீர்கள், உறவுகளை வளர்க்கிறீர்கள், திறன்களை பயிற்சி செய்கிறீர்கள்,
மற்றும் தடைகளை வெல்லுகிறீர்கள்.
மாணவர்கள் தவறுகளும் செய்யலாம், தோல்வியின் வீழ்ச்சியையும் காண்பார்கள், ஆனால் முன்னேறியும் செல்வார்கள்.
இயேசு “மாணவர்” என்று கூறியது “சீஷர் (disciple)”.

நாம் இயேசுவிடம் ஆம் சொன்ன போது,
நாம் அவரது சீஷராக மாறும் வாழ்நாள் முழுவதுமான நீளமான பயணத்துக்கும் ஆம் சொன்னோம்.

Page 21

அடுத்த இரண்டு வாரங்களுக்கு, நாம் இயேசுவின் சீஷராக எப்படி இருக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.
முதலில், இயேசுவை மதித்து வாழ்ந்து வந்த சில பழக்கவழக்கங்கள் மற்றும் மனப்பான்மைகள் பற்றி கற்றுக்கொள்வோம்;
இவற்றை ஆவிக்குரிய பயிற்சிகள் என்றும் அழைக்கிறோம்.
பிறகு, இயேசு எப்படி நேசித்தார் என்பதையும்,
நாமும் பிறருக்கு அதே வகையான தியாகமான அக்கறையை எப்படி காட்ட முடியும் என்பதையும் ஆராய்வோம்.

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், சிலர் இயேசு உண்மையில் தேவனுடைய குமாரனா என புரிந்து கொள்ள முயற்சித்தனர்.
அவர்கள் அவரிடம் கேட்டனர்:
“தேவனுடைய மிக முக்கியமான கட்டளை எது?”
அவர் பதில் கூறினார்:

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
 -மத்தேயு 22 : 37
இது முதலாம் பிரதான கற்பனை.
 -மத்தேயு 22 : 38
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
 -மத்தேயு 22 : 39
இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
 -மத்தேயு 22 : 40

இயேசு நமக்கு தேவனுடைய எல்லா வார்த்தைகளையும் சுருக்கி சொன்னார்:
உன்னை நேசிப்பது போல, உன் அயலாரையும் உன்னைப் போலவே நேசி.
தேவனையும் அயலாரையும் நேசிக்கும் வகை மனிதராக மாறுவது, உங்கள் வாழ்நாள் முழுவதும கடைபிடிக்கும் ஒரு செயல்முறை.

ஒவ்வொரு சீஷரும் தடைகள் மற்றும் தோல்விகளை அனுபவிப்பார்கள்.
நீங்களும் மற்றவர்களைப் போல இருந்தால், நீங்கள் ஏற்கனவே சில தடைகளை அனுபவித்திருக்கலாம்.
மீண்டும் பழைய பழக்கத்திற்கு திரும்பியிருக்கலாம்,
வலிக்கக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம்,
அல்லது கடந்த வாரத்தில் தோல்வியடைந்திருக்கலாம்.

நாம் குறைவாக இருந்தாலும், மற்றவர்களிடமோ ஓடவோ, அல்லது தேவனிடமிருந்து மறைந்து கொள்ளவோ வேண்டியதில்லை.

நாம் இயேசுவைப் போல மாறும் முயற்சியில் தொடர்ந்து உதவ 
அவருடைய மன்னிப்பு நிறைந்த அன்பு எப்போதும் நமக்கு கிடைக்கிறது.

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபியுங்கள், அல்லது இதைப் பயன்படுத்துங்கள்:

ஜெபம்: தேவனே, நான் செய்யும் தவறுகளை நீ காண்கிறீர்.
என்னை மன்னித்து, இயேசுவைப்போல மாறும் வழியில் என்னை வழிநடத்தியதற்காக உனக்கு நன்றி.
பரிசுத்த ஆவியானவரே, இன்று உம்மையும , என்னையும , மற்றவர்களையும் நேசிப்பதற்கு நான் எடுக்கும் ஒரு படியை காண உதவுவீரா?
இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Page 22

நாள் - 9

நான் பைபிளை எவ்வாறு வாசிப்பது?

இயேசுவுக்கு, பைபிள் என்பது காகிதத்தில் எழுத்துவடிவில் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் மேலானது. 
அதன் காரணம், தேவனே வேதாகமத்தை வடிவமைத்தார்,
இயேசுவைப் பின்பற்றுவோருக்கு தலைமுறை தலைமுறையாக எப்படி அன்பு கூர்ந்து வாழ வேண்டும் என்று போதிக்கும் வகையிலே பைபிள் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துவோம்?
முடிவில், அது பண்டைய கவிதைகள், பாடல்கள், வரலாறு, சட்டங்கள், கடிதங்கள் நிறைந்த பெரிய புத்தகம்.

நவீன வேதாகமங்களில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
முதல் பகுதி எபிரேய வேதாகமம் அல்லது பழைய ஏற்பாடு (Old Testament) என அழைக்கப்படுகிறது.
இரண்டாவது பகுதி கிரேக்க வேதாகமம் அல்லது புதிய ஏற்பாடு (New Testament).
புதிய ஏற்பாடு இயேசுவின் வாழ்க்கைக்குப் பிறகு எழுதப்பட்டவை.

இயேசு பழைய ஏற்பாட்டை மட்டுமே வாசித்திருந்தாலும்,
அவர் அதை எவ்வாறு பயன்படுத்தினார் என்பது, நமக்கு முழு வேதாகமத்தை வாசிப்பதில் வழிகாட்டும்.

இப்போது, இயேசு வேதாகமத்தை பயன்படுத்திய இரண்டு வழிகளை பார்க்கலாம்.

1. இயேசு வேதாகமத்தை மனிதர்களுக்கு தேவனுடைய அன்பை காட்ட பயன்படுத்தினார்

மாத்தேயு 22-ல் ஒருவன் இயேசுவிடம் கேட்டான்,
“தேவனுடைய மிக முக்கியமான கட்டளை எது?”
பரிச்சயமாக இருக்கிறதா?
நேற்று நாம் இதைப் படித்தோம்; ஆனால் அதை மீண்டும் வாசித்து,
வேதாகமத்தை நன்றாக வாசிப்பதில் எவ்வாறு உதவும் என்பதை பார்ப்போம்.

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
 -மத்தேயு 22 : 37
இது முதலாம் பிரதான கற்பனை.
 -மத்தேயு 22 : 38
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
 -மத்தேயு 22 : 39
இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
 -மத்தேயு 22 : 40

Page 23

மனிதர்கள் தேவனுடைய மனதைப் புரிந்து கொள்ளவும், நம்மை எப்படி வாழ அழைத்திருக்கிறார் என்பதைக் காண உதவவும் இயேசு வேதாகமத்தை மேற்கோள் காட்டினார்,

அதனால், வேதாகமத்தை வாசிக்கும் போது,
“இந்த வார்த்தைகள் என்னை தேவனையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுவது எப்படி?” என்று கேட்பது பயனுள்ளதாக இருக்கும்.

2. இயேசு வேதாகமத்தை சூழலுடன் இணைத்து பேசினார்.

மாத்தேயு 4-ல், இயேசு ஒரு ஆவிக்குரிய எதிரி அதாவது சாத்தானின் சோதனைக்கு உட்படுகிறார்.
சாத்தான் வேதாகமத்தை மேற்கோள் காட்டி, தனது பொய்களை ஆவிக்குரிய ஞானமாகக் காட்ட முயற்சிக்கிறான்—ஆனால் இயேசு மயங்கவில்லை.
காரணம், அவர் சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார்.

பண்டைய ஆசிரியர்கள் வேதாகமத்தை இன்று நமக்கு உள்ள மொழிகளில் வேறுபட்ட பார்வைகளுடன் எழுதியுள்ளனர்.

நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, பல கேள்விகள் கேட்பது முக்கியம்:

  • இது யார் எழுதியது?

  • யாருக்கு எழுதப்பட்டது?

  • இந்த புத்தகம் என்ன? (கவிதை, வரலாறு, கடிதம், போன்றவை)

  • இந்த புத்தகம் அல்லது அதிகாரத்தில் என்ன நடக்கிறது?

சூழலை கவனிக்காமல் வாசித்தால், வேதாகமம் கூற நினைக்கும் முக்கியக் கருத்தை நாம் தவறவிடலாம்.
மிக மோசமாக, தேவனுடைய வாழ்க்கை முறைக்கு எதிரான முடிவுக்கு வந்து விடலாம்.
கேள்விகள் வரும் போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:
“வேதாகமத்தில் உள்ள இந்த வார்த்தைகள் என்னை தேவனையும் அயலாரையும் நேசிக்க உதவுவது எப்படி?”

வேதாகமம் வெறும் பக்கத்தில் உள்ள வார்த்தைகள் அல்ல;
இது தேவனிடமிருந்து கிடைக்கும் ஒரு பரிசு,
நம்மை உள்ளிருந்து வெளியாக மாற்றும் வல்லமை கொண்டது.

இதனால், வேதாகமத்தைப் படிப்பதை விட, கற்றுக்கொள்ளும் அல்லது ஆய்வு செய்வதாக நினைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
வேதாகமம் வாசிக்க, மீண்டும் வாசிக்க, ஆராய, தியானிக்க, சிந்திக்க—மீண்டும் மீண்டும்—எப்படியோ வாசிக்கப்பட வேண்டும்.

page 24

நாள் - 10

நான் எப்படி ஜெபிப்பேன்?

இயேசு ஜெபத்தில் நிறைய நேரம் செலவிட்டார் என்று
வேதாகமம் பல இடங்களில் கூறுகிறது, இயேசு ஜெபிக்க இராத்திரி முழுவதும் முழுத்து இருந்தார்.
ஏன்? அவர் தேவன் அல்லவா? அவர் ஏன் ஜெபிக்க வேண்டும்?

இயேசு பூமியில் வாழ்ந்த போது, அவர் முழுமையாக தேவனாகவும், முழுமையாக மனிதனாகவும் இருந்தார்.
மனிதராக, அவர் நம்மைப் போலவே இருந்தார் மற்றும் தேவனான பிதாவுடன் உறவை நிலைநாட்ட தொடர்ச்சியான பழக்கங்களை கடைபிடித்துக் கொண்டும் இருந்தார்.

இயேசுவின் ஜெபம் வழிகாட்டுதல், தைரியம், மற்றும் தேவனுடன் தொடர்பு ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது—
இது நமக்கும் அதே வகையில் உதவும்.

இயேசு ஒரு பெரிய தீர்மானம் எடுக்க தயாராகிய விதத்தை பாருங்கள்—
சிறந்த சீஷர்களை தெரிவு செய்து, அவர்கள் பின்னர் சபையை (church) நிறுவுவார்கள்.

அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
 -லூக்கா 6 : 12
பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
 -லூக்கா 6 : 13

இயேசு பெரிய தீர்மானங்கள் எடுக்கும்போது மட்டுமே ஜெபித்தார் என்று அல்ல.
அவர் தேவனுடன் நெருக்கமாக இருக்கவும், கடுமையான சூழல்களை எதிர்கொள்உம் முன் வல்லமை பெறவும் ஜெபித்தார்.

நாம் இயேசுவைப் போன்ற ஜெப பழக்கத்தை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்?

முதலில், இயேசு ஜெபித்த விதத்தைப் பற்றி பேசுவோம்.

  • இயேசு ஜெபத்தில் அலங்காரமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை.

  • இயேசு அவரைச் சுற்றியுள்ள மக்களை மயக்கும் வகையில் ஜெபிக்கவில்லை.

  • இயேசு தேவனை முடிவுகள் அல்லது கோரிக்கைகளின் பட்டியலுடன் ஜெபிக்கவில்லை.

Page 25

ஜெபம் என்பது தேவனுடன் தனிப்பட்ட உரையாடலாக இருக்க வேண்டும்—

நீங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அல்லது ஒரு வழிகாட்டியுடன் உரையாடுவது போல.
மிகவும் மன அழுத்தம் கொள்ள வேண்டாம்.
நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கும் முறையை விட்டுவிட்டு,
தேவனுடன் திறந்த மனதோடும், நேர்மையான மனதோடும் பேசுங்கள்.

ஆக, இயேசு எப்படி ஜெபித்தார் என்று பார்ப்போம். 

  • இயேசு ஜெபத்தை முன்னுரிமையாக வைத்தார்.

  • இயேசு மற்றவர்களுடன் இருக்கையில் ஜெபித்தார்.

  • இயேசு தனியாக ஜெபித்தார்.

ஜெபம்: இன்று, ஜெபத்தின் பழக்கத்தை ஆரம்பிப்போம்.
பணியிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது அல்லது படுக்கைக்கு முன் சில நிமிடங்கள் தேவனுடன் பேசுங்கள்.
நீங்கள் நன்றி கூற வேண்டியவற்றை சொல்லுங்கள்,
உங்களுக்கு தேவைப்படும் உதவியை அவரிடம் கேளுங்கள்,
அவருடைய குரலை கவனமாகக் கேளுங்கள்.

இதுபோல் செய்தால், ஒவ்வொரு நாளும் இயேசுவுடன் நெருக்கமான உறவை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

Page 26

நாள் - 11

நான் நண்பர்களைப் எப்படி அடைவேன்?

இயேசு தனது ஊழியத்தில், அவரை ஊக்குவிக்கவும், ஜெபிக்கவும், ஆதரிக்கவும் முடியும் மனிதர்களைச் சுற்றி வைத்திருந்தார்.
ஆம், இயேசு அவர்களது இரட்சகராக இருந்தார், ஆனால் அவர் அவர்களது நண்பராகவும் இருந்தார்.

இயேசு தமது சீஷர்களுடன் உள்ள உறவை பற்றி இவ்வாறு கூறினார்:

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
 -யோவான் 15 : 15

இயேசு நெருக்கமான உறவுகளைத் தேர்ந்தெடுத்தார் என்பதால்,
நாம் மற்ற இயேசு சீஷர்களுடன் நெருக்கமான உறவுகளை அமைப்பது நல்லது.

சில சமயங்களில் வாழ்க்கை மிகக் கடுமையாக தோன்றும்,
அந்த நேரங்களில், ஜெபம் செய்ய, வழிகாட்டுதலைக் கேட்க, ஆதரவு பெற நமக்கு மனிதர்கள் தேவை.
மகிழ்ச்சியான நேரங்களில், நண்பர்களுடன் கொண்டாடுவது அந்த தருணங்களை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கும்.

இந்த உறவுகள் உண்மையாக இருக்க காரணம், தேவன் நம்மை தம்மைப் போலவே உருவாக்கினார்.
பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோருடன் தேவன் உயிர் கொடுக்கும் உறவில்(life-giving relationship )இருக்கிறார்,
மற்றும் அவர் நம்முடன் உறவு கொள்ள விரும்புகிறார்.

அதனால், இயேசுவைப் பின்பற்றும் மனிதர்களைச் சுற்றி வாழ்வது ஒரு முக்கிய ஆவிக்குரிய பழக்கம்—
நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் தேவனுடைய உதாரணத்தை பின்பற்றுகிறீர்கள்.

Page 27

நீங்கள் வாழ்க்கையில் தேவையான நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளீர்களா?
இயேசுவுடன் உள்ள உங்கள் உறவுக்கு ஊக்கமளிப்பவர்கள், வாழ்க்கையின் உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உங்களை ஆதரிக்கும் மனிதர்களா?

இல்லையெனில், தற்போது உங்களிடம் உள்ள உறவுகளில் நீங்கள் எப்படி முதலீடு செய்யலாம் என்றும்,
நீங்கள் தேவைப்படும் நண்பர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றும் யோசிக்கவும்.

நீங்கள் தற்போது நெருக்கமான, இயேசுவைப் பின்பற்றும் நண்பர்களைக் கொண்டிருக்கவில்லை என்றால்,
இயேசுவைப் பின்பற்றும் சிறிய குழுவில் சேருதல் ஒரு நல்ல தொடக்கமாகும்.

நண்பர்களை கண்டுபிடித்து, உறவு அமைப்பது சில சமயங்களில் சிரமமாகவும், கஷ்டமாகவும் தோன்றலாம்,

ஆனால் உங்களுக்கான நணபர்களை கண்டுபிடிப்பது கடினம் தான். ஆனால் அந்த நட்புக்கு பிறகு அந்த கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும். 
அந்த நண்பர்களால் நீங்கள் கொண்டாடப்படுவீர்கள், ஆதரிக்கப்படுவீர்கள், ஒவ்வொரு நாளும் இயேசுவைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு ஊக்கமளிக்கப்படுவீர்கள் என்றால், அது வாழ்க்கைக்கு உயிரூட்டும் அனுபவமாகும்.

Page 28

நாள் - 12

துதி என்றால் என்ன?

நீங்கள் இயேசுவைப் பின்பற்றும் குழுவில் சேர்ந்து, வேதாகமத்தை கற்றுக்கொண்டால், தேவனிடம் ஜெபித்தால், வாழ்க்கையை மாற்றும் உறவுகளை உருவாக்கி கொண்டால்
அது தான் துதி.

இயேசுவின் வாழ்க்கை துதியால் சிறப்பிக்கப்பட்டு இருந்தது.
துதி குறித்து நினைக்கும்போது உங்களுக்குத் தோன்றும் வார்த்தைகள் எவை?
சங்கீதம், கருவிகள், பாடல்கள் போன்ற வார்த்தைகள் தான்—அது சரியானது!
பாடல்கள்- இயேசுவை துதிக்கும் ஒரு வழியாக இருந்தது என்பது உறுதியாகும்.

இயேசுவின் சிலுவைக்கு முன் இரவு, அவர் தமது நண்பர்களுடன் ஒரு உணவு பகிர்ந்தார்.
அது பஸ்கா (Passover) என்ற யூத மக்களுக்கான முக்கியப் பண்டிகை.

உணவுக்குப் பிறகு, இயேசு மற்றும் சீஷர்கள் ஒன்றாக பாடல் பாடினார்கள்.
பண்டைய யூத கலாச்சாரத்தில், பஸ்கா கொண்டாடும் போது பாடப்பட்ட சங்கீதங்கள் தான் 113–118.
இயேசு இதுபோன்ற துதி வார்த்தைகளை பாடியிருக்க வாய்ப்புள்ளது:

உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
 -சங்கீதம் 113 : 5
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
 -சங்கீதம் 113 : 6
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
 -சங்கீதம் 113 : 7
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
 -சங்கீதம் 113 : 8

அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
 -சங்கீதம் 116 : 4
கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்.
 -சங்கீதம் 116 : 5
கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.
 -சங்கீதம் 116 : 6
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
 -சங்கீதம் 116 : 7

Page 29

இந்த துதியின் வார்த்தைகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றன மற்றும் தேவனுடைய பண்புகளையும் தன்மையையும் கொண்டாடுகின்றன.
அவர் உலகத்தை சிருஷ்டித்தவரும் ஆட்சி செய்பவருமாக இருக்கிறார்.
அவர் நமக்காக கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் அவர் நம்மை நேசிப்பதால் நம் மேல் அக்கறை கொள்கிறார். மாம்சம் (Physical) மற்றும் ஆவிக்குரியவைகளை (spiritual) தேவைப்பட்டவைகளை அவர் சிறப்பாக கவனிக்கிறார்.

இன்று, பஸ்கா கொண்டாட்டத்தில் மக்கள் எப்படி துதிப்பர்களோ அதேப்போல இப்போதும் துதிக்கிறார்கள். 
துதிப் பாடல்கள் இயேசுவைப் பின்பற்றும் மக்களுக்கு, தேவன் யார், அவர் என்ன செய்தார் என்பதைக் நினைவுபடுத்தும் வாய்ப்பையும், தேவனுக்கு அவர் உரிய புகழை வழங்கும் வாய்ப்பையும் தருகின்றன.

பாடல் பாடுவது தேவனை துதிக்கும் ஒரு வழிமுறை, ஆனால் துதிப்பது இசை மூலம் மட்டுமல்ல.
நாம் தேவனிடம் நம்முடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் போது நாம் அவரை துதிக்கிறோம். 

நாம் தேவனை துதி செய்யும் போது, அவர் கொண்டிருக்கும் ஆச்சரியமான பபண்புகளையும், அவர் செய்த அற்புதங்களையும் நாம் உணர்கிறோம்.

சூரியன் அஸ்தமிக்கும்போது காண்பது, ஒரு குழந்தையின் பிறப்பை பார்த்தல், அல்லது ஜெபத்திற்கான பதிலை அனுபவித்தல் ஆகியவை கூட துதிக்கும் தருணங்களை உருவாக்கலாம்.
தேவனுடைய பண்புகளையும் தன்மையையும் நினைவூட்டும் எந்த தருணமும் துதி செய்யும் வாய்ப்பாகும்.

இந்த வார இறுதியில், உங்களுக்கு church ல் மற்ற சீஷர்களுடன் பாட அதாவது தேவனை துதி செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்.  ஆனால் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திராதீர்கள்.

சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, நீங்கள் தேவனுக்கு எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்பதை யோசியுங்கள்.
இது தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகு, ஒரு உறவு, அல்லது இயேசுவின் மூலம் தேவனுடைய மன்னிப்பு ஆகியவற்றாக இருக்கலாம்.
தேவனுக்காக அவர் யார் மற்றும் அவர் என்ன செய்தார் என்பதில் உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்.

Page 30

நாள் - 13

நான் எனக்கே தீங்கு செய்து கொள்வதை  எவ்வாறு நிறுத்துவேன்?

நீங்கள் அதை தவறானது என்று அறிந்தும் சில நேரங்களில் அதைச் செய்ய விரும்புகிறீர்களா?

மூன்று ஆண்டுகள், இயேசுவின் வாழ்க்கை வசதி இல்லாமல் காணப்பட்டது.
அவர் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கு அசௌகரியமான உண்மைகளை பகிர்ந்தார்,
தினந்தோறும் விமர்சகர்களின் தாக்கங்களை எதிர்கொண்டார்,
மற்றும் அவரை கொலை செய்யும் திட்டங்களை அடிக்கடி கேட்டார்.

ஆனால் அவருடைய கதையின் ஆரம்பத்தில், அனைத்து துன்பத்தையும் தவிர்த்து எளிய பாதையை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பையும் அவர் பெற்றிருந்தார்.

நாற்பது நாட்கள், இயேசு உணவு இல்லாமல் தனியாக வனாந்தரத்தில் இருந்தார்.
அவர் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது, சாத்தான் அவருக்கு துன்பத்திலிருந்து வெளியேறும் எளிய வழியை வழங்கினான்.

நாம் விரும்பும் விஷயத்திற்கு ஒரு சுருக்கமான வழியை வழங்கும்போது, நாம் சோர்வு அடைவோம்.
சோர்வு அடைவது பாவம் அல்ல. ஆனால், சோர்விற்கு உடன்படுவது நமது நேர்மையை பாதித்து, தவறான தேர்வுகளின் வலி நிறைந்த சுழற்சிக்கு வழிவகுக்கும்.

நாம் சோர்வை எவ்வாறு வெல்லலாம்? இயேசுவை நோக்கி பார்த்தால்.

இயேசுவின் ஆவிக்குரிய பழக்கங்கள் அவருக்கு சோர்வை வெல்ல உதவினது.
இயேசு வேதாகமத்தை அறிந்திருந்தார், மேலும் தமது நோக்கத்தையும் தெரிந்து வைத்திருந்தார்—
அதனைப் பின்பற்றுவது மற்றவர்களின் நலனுக்காக கடுமையான, அசௌகரியமான தேர்வுகளை செய்ய வேண்டியிருப்பதை உள்ளடக்கியது.

அந்த தேர்வுகளை மட்டுமே செய்ததினால், அவர் உலகத்தை மாற்ற முடிந்தது.
எளிய வழியும், சுருக்க வழிகளும் இல்லை.

page 31

மறுபடியும் சொல்லவேண்டும் என்றால், இயேசு யார் என்பதையும், யாருடையவரென்பதையும் தெரிந்திருந்தார்.

அதனால், செய்திமுறை சந்தோஷம் அல்லது தற்காலிக தளர்வுக்காக தனது அடையாளத்தையும் அழைப்பையும் தாழ்த்தவில்லை.

நாம் ஒவ்வொரு நாளும் பெரியதும் சிறியதுமான சோர்வுகளுக்கு முன்பாக வருகிறோம்,
அவை நம்மை நாம் யாராக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதில் கவனம் இழக்கச் செய்யும்.

சந்தோஷமான செய்தி இதுதான்: தேவன் உங்களுக்கு சோர்வை வெல்ல உதவ விரும்புகிறார்.

இயேசு சீஷர்களின் சோர்வைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை வாசிக்கவும்:

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
 -1 கொரி 10 : 13

சோர்வுக்கு முன்பே இயேசுவைப் போல தயார் ஆகலாம்.
இதற்காக நாம் செய்ய வேண்டியது:

  • வேதாகமத்தில் உள்ள தேவனுடைய உண்மைகளை படிக்கவும், நம்பவும், வாழவும்.

  • ஜெபத்தின் மூலம் தேவனிடம் உதவியை கேட்கவும்.

  • மற்றவர்களுடன் திறந்த மனதோடு பகிரவும்.

  • தேவன் வழங்கும் சோர்விலிருந்து விடுபடும் வாய்ப்புகளை கவனிக்கவும்.

சில சமயங்களில், தேவன் வழங்கும் வாய்ப்பு, பூரணமளிக்கும் குழுவில் சேருதல், மருத்துவ நிபுணருடன் பேசுதல், அல்லது மேய்ப்பரிடம் சந்தித்து சுதந்திரத்தை பெற தேவையான கருவிகளை கண்டுபிடித்தல் போன்றதாக தோன்றலாம்.

ஜெபம்: உங்கள் சொந்த வார்த்தைகளில் ஜெபியுங்கள், அல்லது இதைப் பயன்படுத்துங்கள்:

அன்புள்ள தேவனே, எப்போதும் எனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி.
சோர்வு வந்தால் அதை அறிந்து எதிர்த்து நின்று உதவவும்.
இயேசுவின் நாமத்தில், ஆமென்.

page 32

நாள் - 14

இயேசு எதற்காக ஓய்வெடுத்தார்?

நீங்கள் இந்த வாரம் முழுதும் நடந்த நிகழ்வுகளால் கவலையாக உணர்கிறீர்களா?
அல்லது, உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
இருக்குமானால், நீங்கள் நல்ல உறவில் இருக்கிறீர்கள்.
வாழ்க்கை பெரும்பாலும் நம்மிடம் பிஸியாக இருப்பதை எதிர்பார்க்கிறது.
ஆனால் இயேசு நமக்கு ஒரு வித்தியாசமான (மேலும் சிறந்த) வாழும் முறையை கற்றுக் கொடுக்கிறார்.

இயேசுவின் வாழ்க்கையில் இருந்து இந்த ஆச்சர்யமான வசனத்தை பாருங்கள்:

அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
 -லூக்கா 5 : 15
அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
 -லூக்கா 5 : 16

இந்த வசனம் என்ன சொல்கிறது என்று யோசிக்கவும்.
மக்கள் இயேசுவிடம் பேசவும் கேட்கவும் குணமடையவும் விரும்பினார்கள்—
ஆனால் ஓய்வெடுக்க இயேசு நடந்து சென்றார்.

அவர் மற்றவர்களுக்கு உதவுவதற்கான பணியையும் வாய்ப்புகளையும் தியாகம் செய்து ஓய்வெடுத்தபோது, அது நல்லது தான்.

ஏன்?
நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே மற்றவர்களுக்கு உதவ முடியும்.
அதனால், இயேசுவைப் போல, நாமும் நமது நேரத்துடன் எல்லைகளை அமைத்து, முடிவான காரணத்திற்காக நன்றாக மெதுவாக செல்ல முடியும்.
எல்லா மனிதருக்கும் ஓய்வு தேவை, மேலும் இயேசு பூமியில் முழுமையாக தேவனும், முழுமையாக மனிதனுமாக இருந்ததால்,
இந்த வரம்பு அவருக்கும் சரியானது.

page 33

உலகத்தில் இருந்து ஓய்வெடுப்பதும் துதி தான்.

வேதாகமம், தேவன் உலகத்தை படைத்ததை விவரிப்பதுடன் தொடங்குகிறது.
இந்தக் கதை ஏழு நாள் கட்டமைப்பைப் பயன்படுத்தி தேவனுடைய வேலைகளை விவரிக்கிறது.
ஆறாவது நாளில் தேவன் மனிதர்களை படைத்தார், ஆனால் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்.

இதன் முக்கியத்துவம் என்ன?
பூமியில் வாரத்தின் முதல் நாள் ஓய்வுக்கான நாள்—பணிக்கான நாள் அல்ல—ஆகும்.

வேதாகமம் முழுவதும், வாரத்தின் ஏழாவது நாளை ஓய்வு நாள் (Sabbath) என்று அழைக்கின்றது.
இந்த நாளில், மக்கள் வேலை செய்யாமல் துதி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால் இதுதான் எப்படி துதி ஆகிறது?

இந்த அடிப்படை ஆவிக்குரிய உண்மையை மறப்பது எளிது: தேவன் கட்டுப்பாட்டில் இருக்கிறார்; நாமல்ல.
நாம் அதை மறந்துவிட்டு, நாம் பார்க்கும் வேலை மூலம் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.
நாம் செய்யவேண்டிய பட்டியல்களை பற்றிச் சிந்திக்கத் தொடங்கி, பின்னடைவைப்பற்றி கவலைப்படுகிறோம்.


நாம் தேவனுக்காக நம் வேலைகளை ஒதுக்கி வைக்கும் போது அதுவே துதி. வாரத்தின் இறுதி நாள் தான் பல வேலைகள் நம் வீட்டில் காத்திருக்கிறது, துணி துவைப்பது, மடிப்பது, அடுத்த வாரத்திற்கு தயாராவது இப்படி பல. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்மு தேவனுக்கான நேரத்தை கொடுக்கும் போது அதுவே ஓய்வு நாள் - துதி ஆகும்.

நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்யலாம் மற்றும் உங்களை சார்ந்தவர்கள் இருக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் ஒரு முழு நாள் ஓய்வெடுக்க முடியாவிட்டாலும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
மாறாக, முடிந்த போது ஓய்வெடுக்கக் கூடிய தருணங்களை கண்டுபிடியுங்கள்.
இயேசுவும் அதையே செய்தார். ஒருமுறை அவர் பசுமையான கிணற்றுப் பக்கத்தில் அமர்ந்தார், மற்றொரு நேரத்தில் கயிறு படகில் தூங்கினார்.

ஆக, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
ஒவ்வொரு வாரத்திலும் ஓய்வு எடுப்பது எப்படி,
ஒவ்வொரு நாளிலும் ஓய்வு எடுப்பது எப்படி என யோசிக்கவும்.

page 34

நாள் - 15

நான் இயேசுவைப் போல எப்படி அன்புக் கூறுவேன்?

நமது பயணத்தின் இறுதி வாரத்திற்கு வரவேற்கிறோம்!

கடந்த வாரம், நாமும் இயேசு வாழ்ந்தது போல் வாழ உதவும் சில ஆவிக்குரிய பழக்கங்களை கற்றுக் கொண்டோம்.
அவருடைய நோக்கங்கள், பழக்கங்கள் மற்றும் பழமைகள் அவருடைய சேவைக்கு வழிகாட்டியது என்பதை நாம்தான் கண்டோம்.

இந்த வாரம், இயேசு எப்படி அன்பு கூர்ந்தார் என்பதை ஆராயப் போகிறோம்.
மறுபடி சொல்லவேண்டும் என்றால், இயேசு மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டார்?
அவர் மக்களை எவ்வாறு உணர வைத்தார்?
அவர் தனது வார்த்தைகளையும் செயல்களையும் எவ்வாறு தனது நோக்கத்தை சாதிக்க பயன்படுத்தினார்?

இப்போது, இயேசு தொடர்ச்சியாக முடித்த ஒரு விவாதத்தை பார்க்கலாம்.
இது அவரது சில நண்பர்கள் மற்றும் சீஷர்களுக்கு இடையில் நடந்தது:

பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
 -லூக்கா 9 : 46
இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
 -லூக்கா 9 : 47
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
 -லூக்கா 9 : 48

சீஷர்களுக்கு, இயேசுவைப் பின்பற்றுவதில் மிகப்பெரிய இடத்தை அடைவது எப்படி என்பதைக் குறித்து தவறான எண்ணங்கள் இருந்தது.
அவர்கள், மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தும் ஒருவர் அல்லது வேதாகமத்தை சிறப்பாக அறிந்தவர் தான் மிகப்பெரியவர் என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் மிகப்பெரிய இடத்தை குறித்து மாறுபட்ட வரையறையை இயேசு வைத்திருந்தார்.

page 35

இயேசு கூறினார், ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ளும் நபர் தான் பெரியவன்(greatest) என்று.
என்ன? அது எப்படி ஒருவரை மிகப்பெரியவனாக்குகிறது?

இயேசு விளக்கினார்:
 உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.”

மறுபடி சொல்லவேண்டுமானால், தேவனுடைய பார்வையில் பெரியவன் என்றால்,
புகழ், அதிகாரம், பதவி இவற்றை தேடாத ஒரு நபர் தான். 
மாறாக, தாழ்மையோடு மனமார்ந்த சேவையை செய்யும் ஓரு நபர் தான்.

தேவன் இயேசு, ஒரு சிறிய கிராமத்தில் மனத்தாழ்மையான குடும்பத்தில் குழந்தையாக பிறந்தார்.
அவர் வளர்ந்தப் பிறகு , அவர் தம்மை ஏற்றுக்கொண்ட சீஷர்களை அவர் வேலைக்காரர்கள் போல் நடத்தவில்லை.
மாறாக, பொறுமையாக வழிகாட்டினார் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிகளைத் தேடினார்.

அதே காரணத்தால், அவர் கூறுகிறார்: ராஜ்யத்தில் பெரியவனாக இருக்க வேண்டுமானால், அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலோ அல்லது புகழையோ  தேடாமல் எப்போதும் நல்லது செய்ய வேண்டும்.
சேவை அனைவருக்கும் சம நிலை உருவாக்குகிறது.
அது நம்மை தேவனுடைய பார்வையில் ஒருவரை மற்றொருவர் பார்க்க உதவுகிறது—அனைவரும் சமம், அவருடைய உருவில் படைக்கப்பட்டவர்கள்.
மேலும், நாம் சேவை செய்யும்போது, நாம் சேவை செய்யும் தேவன்—மிகப்பெரிய, வல்லமை நிறைந்த, அற்புதமான மற்றும் புகழுக்குரியவர் என்று காண உதவுகிறது.

நாம் இயேசுவைப் போல அன்புக்கூற விரும்பினால், அவரை நாம் பின்பற்ற வேண்டும்.
இயேசு மற்றவர்களை மையமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தார்; அது அவரை விருந்தோம்பல் , சேவை, மன்னிப்பு, பொதுவுடைமை மற்றும் தேவனுடைய அன்பை மற்றவர்களுக்கு சொல்வது போன்றவற்றுக்கு வழிநடத்தியது.
இந்த வாரம் நாமும் இந்த ஒவ்வொரு பகுதியையும் ஆராயப்போகிறோம்.

ஆக, நீங்கள் வாழ்க்கையில் எதைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?
உலகம் நமக்கு “மிகப்பெரியவன்” ஆக தன்னுடைய இலக்குகளை பின்பற்றச் சொல்கிறது, அது நமக்கு பாதிப்பையும் வசதியையும் தரும்.
இயேசு நம்மை வேறுபட்ட வகையான பெரிவனாக அழைக்கிறார்—அது மற்றவர்களை உயர்த்துவதை மையமாக கொண்டுள்ளது..

page 36

நாள் - 16

மற்றவர்களை வரவேற்பது

நீங்கள் எப்போதாவது உங்கள் வீடல்லாத ஒரு இடத்தில் “உங்கள் வீட்டைப் போல” உணர்ந்திருக்கிறீர்களா?
பொதுவாக, அது ஒரு church, காபி கடை, அல்லது நண்பரின் வீடு ஆக இருக்கலாம்.
அல்லது, குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் கூட “தன் வீடு போல” உணரலாம்.

நாம் அனைவரும் “தன் வீடு போல” எங்கு உணருவோம் என்றால் அந்த இடத்தில் நாம் பாதுகாப்பாக உணரும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் போது, ஏதாவது தவறாக சொல்லி விடுவோமோ என்ற பயம் இல்லாமல் இருக்கிறோமோ அங்கு தான். ஏனென்றால் நாம் நாமாக அங்கு இருக்க முடியும்.

நாம் அனைவரும் “தன் வீடு போல” உணரும் ஒரு இடத்தை விரும்புகிறோம்.
இயேசு இதை அறிந்திருந்தார், அதனால் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் அந்த மக்கள் தன் வீடு போன்ற உணர்வை பெற செய்தார். மக்களை தனது வாழ்க்கையில் வரவேற்க(welcome) நேரம் ஒதுக்கி, 
அவர்கள் பேசுவதை கேட்டு (listening), அவர்கள் மேல்பாசம் காட்டி (showing empathy), அவர்கள் உண்மையாக (honest) ஆக இருக்கவும  அனுமதி வழங்கியிருந்தார்  நாம் இதனை விருந்தோம்பல் (hospitality) என்று அழைக்கிறோம்.

லூக்கா 8-ல், இயேசுவின் ஊழியக் காலத்தில் அவரை பின்பற்றிய மக்களின் பட்டியலை நாம் காண்கிறோம்.

இவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் வரவேற்கப்பட்டவர்கள்.
அவர்கள் குறைகள் கொண்டவர்களாக இருந்தாலும், இயேசுவின் உபச்சாரம் இந்த வேறுபட்ட நபர்களை ஒரு குடும்பம் போல மாற்றியது.

பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
 -லூக்கா 8 : 1
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
 -லூக்கா 8 : 2
ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
 -லூக்கா 8 : 3

page 37

இந்த மக்கள் ஒருவரிடம் ஒருவர் மிகவும் வேறுபட்டவர்களாக காணப்பட்டனர்.
பன்னிரண்டு சீஷர்கள் வேறுபட்ட சமூக தரப்புகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்கள். அவர்கள் இயேசு அழைக்கும் போது அதை நிராகரிக்க பல காரணங்கள் அவர்களுக்கு இருந்தது. ஆனால், இயேசு ஒவ்வொருவரையும், அவர்கள் இருப்பது போலவே, தனது குடும்பத்தில் வரவேற்றுக் கொண்டார்.

இப்பொழுது, மகதலேனாள் மரியாள் பற்றி பேசலாம்.
ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருந்து இயேசு விடுவித்த பெண்மணி.
அவளது மோசமான பின்னணியைப் பாராமல், இயேசு அவளை தனது நெருங்கிய வட்டத்தில் ஏற்றுக் கொண்டார்.

இறுதியில், யோவன்னாளை பற்றி பேசுவோம்.
அவள் ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவி
ஏரோது ராஜா இயேசுவின் நண்பர் அல்ல.
மத்தேயு 14-ல், ஏரோது யோவான்ஸ்நாகனை கொலை செய்ய கட்டளையிட்டார் ஆனாலும் இயேசு யோவன்னாளை தனது ஊழியத்தில் ஏற்றுக் கொண்டார்.

ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
 -லூக்கா 8 : 3

விருந்தோம்பல் (Hospitality) சமூக தடைகளை முறியடிக்கிறது மற்றும் எதிர்பாராத நட்புகளை உருவாக்குகிறது.
அது நம்மை கடுமையாக மதிப்பீடு செய்யாமல், ஆர்வமுள்ளவராக இருக்க அழைக்கிறது.
அது மக்களுக்கு தேவனால் வழங்கப்பட்ட மதிப்பு மற்றும் திறனை உணர வைக்க உதவுகிறது.
அது பாசத்தை வளர்க்கிறது மற்றும் அறியாதவர்களை அண்டைநிலையினராக மாற்றுகிறது.

யோசிக்க நேரம்:
நாம் எவ்வாறு விருந்தோந்தம்பல் -ஐ (hospitality) வெளிப்படுத்துகிறோம்?
முதலில், யாரோ ஒருவர் உங்களை கவனித்தார், பராமரித்தார், மற்றும் சேர்த்துக் கொண்டார் என்று உணர்ந்த ஒரு தருணத்தை நினைத்து பார்க்கலாம்.
அவர்கள் காட்டிய உபசரணை உங்களை எப்படி மாற்றியது?

பின்னர், நீங்கள் தேவனுடன் இணைந்து அதே உணர்வையும், தாக்கத்தையும் வேறு ஒருவருக்கு உருவாக்க எவ்வாறு முடியும் என்று யோசிக்கவும்.

page 38

நாள் - 17

ஒரு பெருந்தன்மையுள்ள (generous) நபராக மாறுவது

இயேசுவின் ஊழியம் ஆரம்பிக்கும் மாதங்களுக்கு முன், உலகத்தின் இரட்சகரானவர் வருவார் என சொற்பொழிவுகள் பரவின.
அவரது இயல்பு குறித்த மக்களின் எண்ணங்கள் பரவலாக இருந்தது, அதனால் அவர்கள் யோவான்ஸ்நானகனை சந்தித்து பதில்களை கேட்டனர்.

பலர் இரட்சகரின் வரவுக்கு எப்படி தயார் ஆக வேண்டும் என்று அறிய விரும்பினர்.
யோவான்ஸ்நானகன் அவர்களுக்கு இதைச் சொன்னார்:

அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
 -லூக்கா 3 : 11

யோவான்ஸ்நானனின் படி, பெருந்தன்மையான இதயத்தில் இயேசுவுக்கு அதிக இடத்தை உருவாக்குகிறது.

பெருந்தன்மை என்பது உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை மற்றவருக்கு கொடுத்து உதவ வேண்டும்
எவ்வளவு எளிய வரையறை தானே?
இது நமது பணத்தை மட்டுமல்ல, நமது நேரம், திறன்கள், வளங்கள் அனைத்தையும் உள்ளடக்குகிறது.

ஆக, நீங்கள் ஒரு பெருந்தன்மையான நபராக எப்படி மாறலாம்? அது சிக்கலானது அல்ல. ஆனால் எளிதானதும் அல்லபெருந்தன்மையாக இருப்பதற்கு சில வழிகள்:

1. உங்களிடம் கேளுங்கள், “எனக்கு என்ன தேவை?”
தேவன் நம்மை நமது உடையதை அனுபவிக்க விரும்புகிறார்.
ஆனால் நமது சொத்துகள் நமக்கு சொந்தமானது இல்லை. அவை தேவனுடையவை,
அவர் நமக்கு நமது உடையதை மற்றவர்களுடன் பகிர அழைக்கிறார்.
அதனால், உங்களிடம் கேளுங்கள்: “எனக்கு உண்மையில் என்ன தேவை?”

page 39

2. உங்களிடம் கேளுங்கள், “நான் என்ன பகிர வேண்டும்?”
உங்களுக்கு கூடுதலான நேரம் இருக்கலாம் அல்லது நீங்கள் வளர்த்த ஒரு திறன் இருக்கலாம்.
அல்லது மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக்கூடிய பணம் இருக்கலாம்.
என்ன இருக்கிறதோ, அதை பகிர்வதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

3. உங்களிடம் கேளுங்கள், “என்ன என் சமுதாயத்திற்கு தேவை?”
உங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கிற மக்கள் நீங்கள் பூர்த்தி செய்யக்கூடிய தேவைகளைக் கொண்டிருக்கலாம்.
உங்கள் அண்டை நபர் ஒரு இழப்பை அனுபவித்திருந்தால், உங்கள் வார்த்தைகள் மற்றும் நேரடியாக அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருத்தல்
 மூலமாக அவர்களுக்கு உதவ முடியும்.

அல்லது, உங்கள் உள்ளூர் உணவுக் கையிருப்பு தன்னார்வலர்கள் அல்லது நன்கொடை தேவையாக இருக்கலாம்.
உங்கள் உள்ளூர் தேவாலயம் சமுதாயத்திற்கு தங்கள் கதவுகளை திறக்க சொத்தை கொடுத்தவர்கள் காரணமாக இருக்க முடியும்.
உங்கள் சமுதாயத்தின் தேவைகளை ஆராய்வது சொத்தை கொடுத்தல் மூலம் உருவான படைப்பாற்றலை ஊக்குவிக்கலாம்.

இயேசுவை பின்பற்றுவோர், ஒவ்வொரு வாரமும் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, தேவாலயத்திற்கு நன்கொடை தருவார்கள்.
ஏன்? காரணம், தேவாலயம் உங்கள் சமுதாயத்தில் தேவனுடைய பணியை செய்கிறது.
ஆகவே, தேவாலயத்திற்கு கொடுப்பதால், தேவாலயத்திற்கு சாதி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த மேலதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இயேசு பெருந்தன்மையானவர்களை, மேலும் அவர் நமக்கெல்லாம் அவரைப் போல வாழ அழைக்கிறார்.
நீங்கள் ஒரு பெருந்தன்மையான நபராக மாற தேவையானதை உங்களிடம் வைத்திருக்கிறீர்கள்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது:

  • உங்களுக்கு என்ன தேவை,

  • உங்களிடம் பகிர வேண்டியது என்ன,

  • உங்கள் சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Page 40

நாள் - 18

தேவைகளை கவனித்து பூர்த்தி செய்தல்

இன்று, இயேசு வேதாகமத்தில் நமக்கு காட்டும் ஒரு திறனை பற்றி பேசுவோம், இது சுலபமாக கவனிக்கப்படாமலே இருப்பது.
முதலில், இது சாதாரணமானதாக தோன்றலாம்.
ஆனால், இது இயேசுவைப் போல அன்புகூறுபவர்களை மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும்.

இயேசு தேவைகளை கவனிப்பதில் திறமைமிகுந்தவர்.

வேதாகமத்தில் பல கதைகள், இயேசு ஏதோ ஒரு இடத்திற்கு நடந்து சென்றும், அங்கு யாரோ ஒரு தேவையுள்ளவரை கவனித்தார் என்று தொடங்குகிறது.
சில நேரங்களில், அவர்களின் தேவைகள் காணக்கூடிய மற்றும் உடல் சார்ந்தவை ஆகும்.
மற்ற நேரங்களில், அது மறைமுக அல்லது ஆவிக்குரிய தேவையாக இருக்கும்.
எவ்வாறு இருந்தாலும், இயேசு அவரைச் சுற்றியுள்ள மக்களின் தேவைகளைப் பார்த்தார்.

ஒரு நேரத்தில், இயேசு ஒரு தேவையை கவனித்தவுடன், அவர் அதற்கு சொந்தமானவற்றை பூர்த்தி செய்ய பயன்படுத்தினார்.
சில நேரங்களில், அவர் ஆவிக்குரிய அல்லது மனமோட்ட தேவையை பூர்த்தி செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
அல்லது, அவர் தேவையான உடல் சார்ந்த தேவையை பூர்த்தி செய்ய தேவனுடைய ஆவியின் வல்லமையை பயன்படுத்தும் வகையில் தேவனிடம் உதவி கேட்டார்.

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், மற்றவர்களை மையமாகக் கொண்டு வாழ அழைக்கப்படுகிறோம்.
அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மற்றவர்களுக்கு சேவை செய்வது.
நாம் சேவை செய்யும் போது, மற்றவர்களின் தேவைகளை கவனித்து, நமக்குள்ளவற்றை பயன்படுத்தி அந்த தேவைகளை பூர்த்தி செய்வோம்.
நேற்றுக் குறித்து நாம் பேசியது போல, இது பெரும்பாலும் நமது நேரம், திறன்கள் மற்றும் வளங்களை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துவதை போல இருக்கும்.

சில நேரங்களில், நாம் தனியாக ஒரு தேவையை பூர்த்தி செய்ய முடியாது,
ஆனால் அதனால் நாம் உதவ முடியாது என்று பொருள் அல்ல.
மாறாக, அது எங்களால் முடியாத தேவையை பூர்த்தி செய்ய தேவனின் உதவியை கேட்கும் வாய்ப்பு ஆகும்.

Page 41

**நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இயேசுவைப் பின்பற்றுபவராக, நீங்கள் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாழ்கிறார்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் அவரது சீஷர்களை ஒன்றாக கூடி வரச் செய்து, அவர்களின் கால்களை கழுவினார்.
அந்த காலத்தில் உணவுக்கு முன் கால்கள் கழுவுவது ஒரு பொதுவான நடைமுறை, மற்றும் நீங்கள் கற்பனை செய்யும் படி, அது குறைந்த தரப்பின் பணியாளர்களுக்கான வேலை ஆகும்.

ஆனால் இயேசு, மனித வடிவில் தேவன், அவரது குறைபாடுள்ள மனித சீஷர்களின் கால்களை கழுவத் தேர்ந்தெடுத்தார்.

கால்கள் கழுவிய பின் அவர் கூறியது:

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
 -யோவான் 13 : 15
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
 -யோவான் 13 : 16
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
 -யோவான் 13 : 17

இயேசுவைப் பின்பற்றுவோர் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறார்கள்.
நாம் தேவைகளை கவனித்து, தேவனுடைய உதவியுடன் அவைகளை பூர்த்தி செய்கிறோம்.

ஆகையால், இன்று உங்கள் கண்களை திறந்து பாருங்கள்..
உங்கள் சுற்றுப்புறத்தில் யார் உற்சாகப்படுத்தும் வார்த்தை, சரீர அல்லது மனநலம் குணப்படுத்த வேண்டிய ஜெபம், அல்லது வேலையில் உதவி தேவைப்படும்?

நீங்கள் மற்றவர்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழும் போது, நீங்கள் தேவனுடன் மிகவும் நெருக்கமான உறவை அனுபவிப்பீர்கள்.

page 42

நாள் - 19

மற்றவர்களை மன்னித்தல்

மன்னிப்பு தேவனுக்கு மிக முக்கியமானது.
அவர் மன்னிப்பதை மிகவும் விரும்புகிறார்.
அதனால் வேதாகமம் முழுவதும், தேவன் எல்லா வகையான மக்களுக்கும் நிதானமாக மன்னிப்பு மற்றும் இரண்டாம் வாய்ப்புகளை வழங்குகிறார்.

கிறிஸ்தவர்கள் ஆகி நாம் மன்னிக்கப்பட்ட அனுபவத்தை அறிவோம்.
நாம் அனைவரும் தவறுகள் செய்தோம் மற்றும் காயப்படுத்தும் முடிவுகளை எடுத்தோம்.
ஆனால் தேவன் யேசுவின் மூலம் நமக்கு மன்னிப்பை வழங்குகிறார்—நாம் அதனை ஈட்டினால் அல்ல, தேவன் மன்னிப்பதை விரும்புகிறார் என்பதால்தான்.

இயேசு தனது சேவையின் போது பலரை மன்னித்தார் என்பது விசித்திரமில்லை.
அவர் மக்களின் பாவங்களை மன்னித்தார் என்று 4 சுவிஷேசங்களும் சொல்கின்றன.
இயேசுவின் ஊழிய முடிவில், அவர் அடிக்கப்பட்டார், அவமரியாதை செய்யப்பட்டார் மற்றும் மரத்தில் தூக்கப்பட்டு இறந்தார்.
அவர் அனுபவித்த எல்லா வேதனையையும் கடந்தபோதிலும், அவருடைய சில கடைசி வார்த்தைகள் இவை:

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
 -லூக்கா 23 : 34

இது தான் இயேசு மன்னிப்பதை எவ்வளவு விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது.
அவர் ஒவ்வொரு மனிதனிலும் தேவனுடைய கொடுக்கும் திறனையும் பார்க்கிறார் மற்றும் அவசரமாக தீர்மானிக்க மாட்டார்.

இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு இதன் அர்த்தம் என்ன?
நீங்கள் ஏற்கனவே கற்பனை செய்திருப்பீர்கள்: இயேசுவைப் பின்பற்றுவோர் மற்றவர்களை மன்னிக்கிறார்கள்.

இயேசுவின் சீஷர்கள் ஒருவரான பேதுரு, மன்னிப்பு பற்றி இயேசுவிடம் கேள்வி எழுப்பினார்.
ஒருவர் மீண்டும் மீண்டும் தவறு செய்யும்போது எவ்வளவு முறை அவரை மன்னிக்க வேண்டும்? என்று பேதுரு சிந்தித்தார்.
இது தொடர்புடைய கேள்வி தானே?

மத்தேயு 18-ல் இதை சொல்கிறது:

Page 43

பின்னர் பேதுரு இயேசுவிடம் வந்து கேட்டார்:

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
 -மத்தேயு 18 : 21
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
 -மத்தேயு 18 : 22

இப்போது, இது இயேசு நமக்குச் சொல்ல விரும்புவது, நாம் எத்தனை முறை ஒருவரை மன்னித்தோம் என்று எண்ணி, எழுபத்து ஏழுமுறை பிறகு அவரை விட்டு வைக்கும் என்று பொருள் அல்ல.
மாறாக, அவர் எப்போதும் மன்னிப்பை தொடர நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.

மன்னிப்பு என்பது சொன்னது அல்லது செய்ததை மறந்துவிடுவதாக அல்ல, மற்றும் யாரோ செய்ததை மன்னிப்பதாகவும் அல்ல.
மாறாக, அது பழிவாங்குதல் அல்லது பத்திரம் பெறவேண்டும் என்ற தேவையை விடுவிப்பதாகும்.
மன்னிப்பு என்பது கோபம், காயம், வஞ்சனை உங்கள் மனதையும் செயல்களையும் கட்டுப்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு ஆகும்.

மன்னிப்பு முடிவுகோல் வரையறைகளையும் அடக்கலாம்.
சில நேரங்களில், நாம் ஒருவரை மன்னித்து, அவர்களை சிரமமாக அன்பு செய்ய வேண்டும், அது நம் ஆரோக்கியத்திற்கும் மற்றவர்களின் நலனுக்கும் அவசியம்.

நாம் மன்னிக்கப்பட்டவர்கள்—ஆகையால் நாம் மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும்.
இது எப்போதும் எளிதானது அல்ல, சில சமயங்களில் சாத்தியமற்றது போல தோன்றலாம், ஆனால் நாம் நமது மன்னிக்கும் தேவனைப் போல இருக்கக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

ஜெபம்: உங்கள் சொந்த வார்த்தைகளில் பிரார்த்தனை செய்யுங்கள், அல்லது இதைப் பயன்படுத்துங்கள்:

“தேவனே, நான் அதை பெறத் தகுதியில்லை என்றாலும் என்னை மன்னித்ததற்கு நன்றி. நான் யாரை மன்னிக்க வேண்டியுள்ளது என்பதை காட்டவும், உங்களைப் போல மன்னிக்க வல்லமையை கொடுக்கவும். இயேசுவின் பெயரில், ஆமென்.”

page 44

நாள் - 20

இயேசுவைப் பற்றி மக்களுக்கு சொல்லுதல்

இயேசுவின் ஊழியத்தின் கடைசி நாளில், அவர் சீஷர்களுக்கு கடைசிப் போதனைகளை விட்டுச் சென்றார்:

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 -மத்தேயு 28 : 18
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
 -மத்தேயு 28 : 19
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.    
 -மத்தேயு 28 : 20

இந்த வசனத்தை சேர்ந்து பார்க்கலாம்:

“வானிலும் பூமியிலும் உள்ள அனைத்து அதிகாரமும் எனக்குத் தரப்பட்டுள்ளது .”
இயேசு வானத்தின் மற்றும் பூமியின் ஆளுநர். அவர் ராஜா, நாம் அவருடைய ராஜ்யத்தில் வாழ்கிறோம்.
இயேசுவின் ராஜ்யம் பூமியில் உள்ள மற்ற எந்த நாட்டைப் போல இல்லாதது. ஏனெனில் அது இயேசுவைப் போல ஊழியம், அன்பு, பரிசளிப்பு, விருந்தோம்பல் மற்றும் மன்னிப்பில் வாழத் தேர்ந்தெடுத்த மக்களால் நிரம்பியுள்ளது.

“ஆகையால் நீங்கள் போய், அனைத்து தேசங்களிலும் சீஷர்களை உருவாக்குங்கள், அவர்களை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் நீரில் மூழ்க செய்து, நான் உங்களுக்குத் தெரிவித்த எல்லா கட்டளைகளையும் ஏற்கச் சொல்லுங்கள்.”

எல்லோரும் இயேசுவின் கிருபை, மன்னிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதலை அனுபவிக்கவில்லை.
இயேசு அதை மாற்ற விரும்புகிறார், மேலும் அவர் நமது உதவியை விரும்புகிறார்.
ஆகையால், அவர் நம் அருகில் உள்ள வீடுகளிலும், வேலைஸ்தலங்களிலும் சென்று, மக்களைச் சேர்க்க நமக்கு சொல்லுகிறார்.

Page 45

உலகின் அனைத்து இடங்களிலும், யேசு போல மக்களைக் காதலித்து, அவருக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் நோக்கம் என்பதை அவர்களுக்கு காட்டுவது இதன் பொருள்.

இதன் உதாரணமாக, உங்கள் அயலவர்கள் சென்று திருச்சபைக்கு அழைப்பது, தேவன் உங்கள் வாழ்வில் செய்ததைப் பகிர்வது, அல்லது தேவன் உங்கள் வழியாக மற்றவர்களுக்கு தனது அன்பை காட்ட பயன்படுத்தும் பலவிதமான வழிகள் இருக்கலாம்.

“நிச்சயம், நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன், உலகத்தின் கடைசி காலத்திற்கும்.”

நாம் யேசுவைப் பற்றி மக்களுக்கு சொல்லும் போது, நாம் தனியாக இல்லை.
யேசு பவித்திர ஆவியின் மூலம் ஒவ்வொரு படியிலும் நம்முடன் இருக்கிறார்.
ஆவி நம்மை ஊக்குவித்து, நம் பணியை தொடரும் சக்தியையும் தருகிறார்.

நாம் எப்படி இயேசுவின் செய்தி மற்றும் வாழ்க்கை முறையை உலகுடன் பகிரும் கட்டளையை ஏற்றுக்கொள்கிறோம்?
கிறிஸ்தவர்கள் இதை பெரும்பாலும் மிஷன்ஸ் (missions) என அழைக்கிறார்கள்.

நாம் உங்கள் அயலவர்கள் மற்றும் சமூக மக்களை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வதன் மூலம் உள்ளூரில் மிஷன்களில் ஈடுபடுகிறோம்.
நாங்கள் மற்றவர்களை அறிந்துகொள்ளும் போது, நம் கதை மற்றும் யேசு எவ்வாறு நம் வாழ்வை மாற்றுகிறார் என்பதையும் பகிர்கிறோம்.

நீங்கள் உங்கள் ஊர் அல்லது நகரில் முதலீடு செய்யும்போது, உலகளாவிய மிஷன்களுக்கு ஆதரவு வழங்கும் வழிகளையும் தேடுங்கள்.
உலகம் முழுவதும் முழு நேர மிஷனரி மற்றும் மிஷன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பலர் குறிப்பிட்ட தேவைகளில் கவனம் செலுத்துகிறார்கள், உதாரணமாக வேதாகம மொழிபெயர்ப்பு, கல்வி, பேரழிவு மீட்பு, மனித கடத்தலுடன் போராடுதல்.

நாம் அனைவரும் ஜெபத்தின் மூலம் மிஷன்களுக்கு ஆதரவளிக்க முடியும்.
மேலும், நீங்கள் அவர்கள் பணிக்கு நிதியளிப்பதன் மூலம் அல்லது தன்னார்வலராகச் செயல்படுவதன் மூலம் ஆதரிக்க முடியும்.
நமது திருச்சபையின் மிஷன் அணுகுமுறையை கீழே மேலும் அறியலாம்.

page 46

நாள் - 21

அடுத்த என்ன நடக்கும்?

நீங்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதில் மிகவும் முன்பாக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கதை இப்போது தான் தொடங்குகிறது.
இந்த பயணத்தை நீங்கள் மேற்கொண்டதற்காக நாங்கள் மிகப் பெருமையாக உள்ளோம்.

இன்று, இயேசுவின் ஆரம்ப சீஷர் பவுல் எழுதிய சில வார்த்தைகளை பகிர விரும்புகிறோம்:

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
 -பிலிப்பியர் 1 : 5 
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
 -பிலிப்பியர் 1 : 6

பவுல் இந்த வார்த்தைகளை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யேசுவைப் பின்பற்றும் ஒரு குழுவுக்கு எழுதியார்.
அந்த முழு அத்தியாயமும் ஒவ்வொரு நாளும் யேசுவை பின்பற்ற சிறந்த முயற்சியோடு வாழும் மக்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் நிரம்பியுள்ளது.
அவர்கள் பூரணமாக இல்லாதவர்கள், ஆனால் நேசிப்போல் முன்னேற்றம் காண்கிறார்கள், நாம் செய்யும் போல.

இயேசு உங்களை கண்டுபிடித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்றும், நீங்கள் அவரைப் பின்பற்ற தேர்ந்தெடுத்தீர்கள் என்றும் நாங்கள் அறியவில்லை.
மற்றும், கடந்த சில வாரங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களை நாங்கள் அறியவில்லை.
ஆனால், தேவன் உங்களில் நல்ல பணியைத் தொடங்கியுள்ளார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பணியை தொடர்வார்.

நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கும் வேண்டுகோள் பவுல் பழங்கால பிலிப்பி நகரில் சில ஆரம்ப சீஷர்களுக்காகப் பிரார்த்தித்தது போலவே:

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
 -பிலிப்பியர் 1 : 9

Page 47

நீங்கள் “ஆம்” என்றீர்கள். இப்போது, ஒவ்வொரு நாளும் இயேசுவிற்கு ஆம் சொல்லத் தொடருங்கள்.
நேர்த்தியைப் பார்த்து அல்ல, முன்னேற்றத்தைத் தேடுங்கள்.

தேவன் அன்பே; ஆகையால் வாழ்க்கை கடினமாகும்போது அல்லது நீங்கள் தவறு செய்யும்போது அவர் உங்களை ஒதுக்கமாட்டார்.
எப்போதும் எளிதாக இருக்குமென உணரப்படாது, ஆனால் நீங்கள் முன்னேற்றம் காணும்போது, நீங்கள் யேசுவைப் போல வாழ்ந்தும் அன்பை வெளிப்படுத்தியும் வாழும் போது, தேவன் உங்களுடைய சுற்றிலும் செயல்படும் என்பதை காண்வீர்கள்.

அடுத்து என்ன நடக்கும்?

இயேசுவை பின்பற்றும் உங்கள் பயணம் தனித்துவமானது:

  • நீங்கள் ஒரு சிறிய குழுவின் மூலம் நண்பர்களைக் காண தேர்ந்தெடுக்கலாம்.

  • உங்கள் திருச்சபை பற்றி அதிகமாக அறிய தேர்ந்தெடுக்கலாம்.

  • உங்கள் பரிசுகளை பயன்படுத்தி சேவை மூலம் வேறுபாடு உருவாக்க தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது, நீங்கள் முழுமையாக வேறெதையாவது தேர்ந்தெடுக்கலாம்!

இந்த வார இறுதியில் திருச்சபையில், நீங்கள் இந்த புத்தகத்தை முடித்தீர்கள் என்பதை உங்கள் பாஸ்டரிடம் சொல்லுங்கள்.
அவர்கள் உங்களைக் வாழ்த்தி, இயேசுவை பின்பற்றும் போது உங்கள் அடுத்த சிறந்த படியை கண்டுபிடிக்க உதவ விரும்புவார்கள்.

அவர்களை சந்திக்கும் வரை, உங்கள் விசுவாசத்தை வளர்க்கும் சில கூடுதல் வாய்ப்புகளை அடுத்தப் பக்கத்தில் பார்க்கலாம்.

page 48

அடுத்த படிகள்

இந்த புத்தகத்தை முடித்ததற்காக வாழ்த்துக்கள்!
இந்த புத்தகம் யேசுவைப் பின்பற்றுவோருக்கான தெளிவு, நம்பிக்கை மற்றும் வழிகாட்டலை வழங்கியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

இப்போது செய்யக்கூடிய சிறந்த விஷயம், நீங்கள் இந்த புத்தகத்தில் வாசித்த தினசரி படிகளை தொடர்வதே.
இயேசுவை பின்பற்றுவதற்கான ஒரே மாதிரி பாதை இல்லை, ஆனால் சில பொதுவான படிகளை நாம் கவனித்தோம்.

இந்த பொதுவான படிகளை வாசித்து, உங்களுக்கான அடுத்த படியைப் பற்றி ஒரு பாஸ்டருடன் பேசுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்:

  • ஞானஸ்நானம் (Baptism)

  • ஒரு வழிகாட்டியை (Mentor) கண்டறிதல்

  • ஒரு சிறிய குழுவில் சேர்தல்

  • உங்கள் யேசுவைப் பின்பற்றும் முடிவை நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பகிர்தல்

  • ஊழியத்தைத் தொடங்குதல்

  • ஆலோசனை தேடுதல்

  • யாரையாவது திருச்சபைக்கு அழைத்துச் செல்லுதல்

  • உங்கள் திருச்சபை மற்றும் சமூகத்திற்கு திரும்ப கொடுக்குதல்

  • அல்லது தேவனுடைய ஆவி உங்களை வழிநடத்தும்படி எதையாவது எடுத்தல்

மீண்டும் சொல்லலாம், இந்த புத்தகத்தை முடித்ததற்காக வாழ்த்துகள்!
இது உங்களுக்கே உரியது, அல்லது இதை மதிப்படையக்கூடிய ஒருவருக்கு கொடுக்கலாம்.


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?