மத்தேயு 18: 20 விளக்கம்

மத்தேயு 18:20 - விளக்கம்

ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
 -மத்தேயு 18 : 20

  • இந்த வசனம் பொதுவாக, “இரண்டு அல்லது மூன்று பேர் கூடினால் தான் தேவன் அவர்கள் நடுவில் இருப்பார்” என்று விளக்கப்படுகிறது.
  • ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவசமூகத்திற்கு (மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்) வர வேண்டும் என்பதற்காக தானே தேவன் சிலுவையில் அறையப்பட்டு அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையை இரண்டாக கிழித்து நாம் அவரண்டையில் சேர உதவி செய்தார். 
  • இன்று தேவனை விசுவாசித்து ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக ஜெபத்தின் மூலம் அவரிடம் நேரடியாக செல்ல முடியுமே!
  • பின் எதற்காக இந்த வசனம் இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. 
  • வேதாகமத்தின் முழு ஒளியில் இதை ஆராய்வோம் வாருங்கள். 

ஒவ்வொரு சொல்லாக எடுத்து ஆராய்வோம். 


இரண்டுபேராவது மூன்றுபேராவது 

இதன் கிரேக்கப் பதம்: Dyo e treis
இதன் எபிரேயப் பதம்: ஷ்னாயிம் ஓ ஷ்லோஷா (shnaim o shloshah)

  • ஷ்னாயிம் (שְׁנַיִם) என்பது இரண்டு (ஆண்பால் வடிவம்) என்று பொருள்.
  • ஷ்லாஷா (שְׁלֹשָׁה) என்பது மூன்று (ஆண்பால் வடிவம்) என்று பொருள். 
அர்த்தம்:  

  • இந்த 2 அல்லது 3 என்பது சாட்சிகளைக்(witness) குறிக்கிறது. 
  • எப்படியென தெரிய வேண்டும் என்றால் நாம் நியாயப்பிரமாண புத்தகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது. 

ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.
 -உபாகமம் 19 : 15

  • யூத கலாச்சாரத்தின்படி, "இரண்டு அல்லது மூன்று" என்ற கருத்து பெரும்பாலும் சட்ட (legal) அல்லது மதக்(religious) கொள்கைகளுடன் (principles) தொடர்புடையதாக இருக்கிறது.
  • அதாவது சாட்சியத்தை உறுதிப்படுத்துதலைக் குறிக்கிறது. 
  • இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தால் ஒரு விஷயம் உறுதிப்படுத்தப்படுகிறது.
  • எனவே மத்தேயு புத்தகத்தில் இயேசு குறிப்பிடும் 2 அல்லது 3 பேர்கள், சரீர ரீதியில் ஒன்று கூடுவதை அல்ல. 
  • 2 அல்லது 3 புதிய ஏற்பாட்டு சாட்சிகளை கொண்டு யாதொருவன் ஜெபித்தால் அந்த இடத்தில் கர்த்தர் இருப்பார் என்பதே இதன் இரகசியம். 

என் நாமத்தினாலே 


இதன் கிரேக்கப் பதம்eis ho emos onoma

இதன் எபிரேயப் பதம் - b’shem Adonai


B'shem: "In the Name of".

Adonai: "The Lord" (a Hebrew name for God). 


அர்த்தம்:

  • பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையின் தேவன்(Adonai), தான் கொடுத்த சாட்சியின் உடன்படிக்கையை (உபாகமம் 19 : 15), இங்கு நினைவுகூர்ந்து இங்கு புதிய உடன்படிக்கையின் சாட்சிகளை (2 or 3) கொண்டு எவன் ஒருவன் தன்னுடைய நாமத்தில் ஜெபிக்கிறானோ அவன் நடுவிலே நான் இருப்பார் என்று சொல்லுகிறார். 

எங்கே கூடியிருக்கிறார்களோ, 

இதன் கிரேக்கப் பதம்: Synago

இதன் எபிரேயப் பதம்: ne’ esfu or asaf

எபிரேய மொழியில், ஆசாஃப் என்பது உடன்படிக்கை அல்லது சாட்சியத்தில் ஒன்றிணைவதைக் குறிக்கிறது.


அர்த்தம்:

  • மூன்று சாட்சிகள் ஒன்று கூடுதல்.

அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

இதன் கிரேக்கப் பதம்: en mesos autos 
இதன் எபிரேயப் பதம்:  b’tokh adatam

அர்த்தம்:

இயேசு:

“நான் வருவேன்” என்று சொல்லவில்லை

“நான் இருக்கிறேன்” என்று சொன்னார்.

இதன் அர்த்தம்:

  • தேவனுடைய பிரசன்னம் அழைக்கப்பட வேண்டியது அல்ல (not summoned); அது அங்கீகரிக்கப்பட வேண்டியது (revealed).
  • அவர் நாமத்தில் உண்மையான ஒப்புதல் இருக்கும் இடத்தில் அவர் ஏற்கனவே இருக்கிறார். (His presence is recognized where agreement in His name exists).
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். -கொலோசெயர் 1 : 27 

பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைப்பெட்டி - சாட்சிப் பெட்டி

அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
 -யாத்திராகமம் 25 : 22
  • இங்கு சாட்சிப்பெட்டியாகிய உடன்படிக்கை பெட்டியிலும் 3 சாட்சிகள் (மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், ஆரோனின் துளிர்த்த கோல், 10 கட்டளைக் கொண்ட கற்பலகைகள்) இஸ்ரவேலருடனான உடன்படிக்கைக்கு சாட்சியாக விளங்குகின்றன. 

புதிய ஏற்பாட்டு சாட்சிகள் 

இயேசு இதே விதியை மத்தேயு 18-ல் பயன்படுத்துகிறார்

மத்தேயு 18-ஆம் அதிகாரத்தில் இயேசு பேசுவது:

அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்,(agree) பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 -மத்தேயு 18 : 19

அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் 18:20-ஐ சொல்கிறார்.

ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
 -மத்தேயு 18 : 20

  • முக்கியமானது எண்ணிக்கை அல்லஒப்புதல் வாக்குமூலம் (agreement).
  • பூமியின் சாட்சிகள் ஒருமனப்படுதல். 
  • அந்த பூமியின் சாட்சிகள் யாவை என்பதைக் கீழேக் காண்போம். 

புதிய ஏற்பாட்டில் 

பவுலும் இதை உறுதிப்படுத்துகிறார்

இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
 -2 கொரி 13 : 1

இதன் மூலம்:
  • இந்த நியாயப்பிரமாண விதி(principle) பழைய ஏற்பாட்டோடு முடிவடையவில்லை.
  • புதிய ஏற்பாட்டிலும் அது தொடர்கிறது.
இயேசு குறிப்பிட்ட அந்த விதிகள் கிருபையின் கீழும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.

இயேசுவும் இதை உறுதிப்படுத்துகிறார்

அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
 -மத்தேயு 18 : 16

முக்கியக் குறிப்பு: இந்த மத் 18:20வது வசனம், 4 சுவிசேஷ புத்தகங்களில், மத்தேயு புத்தகத்தில் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த புத்தகம் முக்கியமாக யூதர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த வசனத்தை வாசிக்கிற யூதர்களுக்கு இதன் பிண்ணனி நன்றாக புரியும். அந்த 20 வது வசனத்திற்கு சற்று முன்பு 16வது வசனத்திலும் இயேசு அந்த சாட்சிகளை பற்றி பதிவு செய்கிறார். 

பரலோகத்தின் சாட்சிகள்; பூமியின் சாட்சிகள்
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
 -1 யோவான் 5 : 7

பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
 -1 யோவான் 5 : 8 

ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தவுடன் (born again), அவன் ஆவிக்குரிய ரீதியில் ஒருவன் மட்டும் அல்ல.

அவனுக்குள் இருக்கிறவர்கள்:

  1. மனிதனுடைய ஆவி (The Spirit of the man)

  2. கிறிஸ்துவின் ஆவி (The Spirit of Christ)

  3. பரிசுத்த ஆவியின் சாட்சி (The Witness of the Holy Spirit )

மனிதனுடைய ஆவி, பரிசுத்த ஆவி:
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
 -ரோமர் 8 : 16 

கிறிஸ்துவின் ஆவி:
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
 -கலாத்தியர் 2 : 20

1 யோவான் 5:8 ல் கொடுக்கப்பட்டுள்ள சாட்சிகள்

விசுவாசியிடம் காணப்படுகிற சாட்சிகள்

ஜலம் (Water)

மனிதனின் ஆவி (The Spirit of Man). மனிதனில் மரித்து போயிருந்த ஆவி, தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலம் உயிரடைந்து நமக்குள் சாட்சிக் கொடுக்கிறது.

இரத்தம் (Blood)

கிறிஸ்துவின் ஆவி (The Spirit of Christ). பின்பு கிறிஸ்து நமக்காக சிந்தின பரிசுத்த இரத்தத்தின் மூலம் நாம் கழுவப்பட்டு அவருடைய இரத்தம் என்கிற ஜீவனை(life)பெற்றுக் கொண்டு, நம் ஆவி உயிர்பிக்கப்பட்டபடியினால் அந்த கிறஸ்துவின் ஆவி நமக்குள் சாட்சிக் கொடுக்கிறது.

ஆவி (Spirit)

பரிசுத்த ஆவி (Holy Spirit). இவை இரண்டுக்கும் அடையாளமாக (witness) ஆக பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்து நமக்காக சாட்சிக் கொடுக்கிறவராக இருக்கிறார். 


இதன் பொருள், சத்தியத்தில் நிலைத்து நிற்கும் ஒரே ஒரு விசுவாசிகூட பரலோகத்தின் சாட்சிகளையும், பூமியின் சட்சிகளையும் கொண்டு ஒரு ஜெபத்தை ஏறெடுக்கும் போது அந்த மனிதனின் ஜெபம் கர்த்தரிடம் சென்று விட்டது என நாம் அறிந்து கொள்ளலாம். 

முடிவுரை:

  • மத்தேயு 18:20 என்பது ஒரு அறையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. 
  • பூமியில் சாட்சியிடுகிற மனிதனின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி இந்த மூன்று inner witness ம் எந்த மனிதனில் இருக்கிறதோ, அந்த மனிதன் ஏறெடுக்கிற ஜெபத்தை தேவன் கேட்பார், அந்த மனிதினின் மத்தியில் அவர் இருப்பார். 
  • இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜெபிப்பது தவறு என நான் குறிப்பிடவில்லை. 
  • இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜெபித்தால் தான் அவர் நம் நடுவிலே இருப்பார் என்ற கருத்து மிகவும் தவறானது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?