வெண்கல அலங்கம் – உங்களில் தேவபலன்

வெண்கல அலங்கம் – உங்களில் தேவபலன்

உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 -எரேமியா 15 : 20
  • நீங்கள் அதிகமான கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்களா அல்லது எதிர்ப்பை எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு பலவீனமாக உணருகிறீர்களா? 
  • ஒரு கனமான அழைப்பைக் கொண்ட இளம் தீர்க்கதரிசியான எரேமியாவிடம், அவரை ஒரு வெண்கலச் அலங்கமாக மாற்றுவதாக கர்த்தர் கூறினார். 
  • வெறும் அலங்கமாக அல்ல - வலுவான, அசையாத, பிரகாசமான ஒன்றாக.
  • இது எரேமியாவின் பலத்தைப் பற்றியது அல்ல, ஆனால் அவர் மூலம் செயல்படும் கர்த்தரின் வல்லமையைப் பற்றியது. 
"நான் உன்னை ஒரு வெண்கலச் அலங்கமாக்குவேன்" என்று கர்த்தர் கூறும்போது அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். 

பைபிளில் காணப்படும் வெண்கலத்தின் தன்மை

  • வெண்கலம்  என்பது உலோகங்களைச் சுத்திகரித்து இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. 
  • பைபிளில், வெண்கலம் என்பது நெருப்பால் சோதிக்கப்பட்டு வலிமை பெறுவதைக் குறிக்கிறது.

அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
 -யோபு 40 : 18
 - அழிக்க முடியாத வல்லமையின் அடையாளம்.

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
 -வெளிப்படுத்தல் 1 : 15
 -  இயேசுவின் அசைக்க முடியாத, சுத்திகரிக்கப்பட்ட நீதியைக் குறிக்கிறது.

ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.
 -யாத்திராகமம் 27 : 1
அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
 -யாத்திராகமம் 27 : 2
பலிபீடத்தில் வெண்கலம் பயன்படுத்தப்படுகிறது, அங்கு காணிக்கைகள் எரிக்கப்பட்டது, அந்த வெண்கலம் நியாயத்தீர்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் கர்த்தரின் நீதியையும் குறிக்கிறது.

வெண்கலச் அவங்கத்தின் நோக்கம்

கர்த்தர் எரேமியாவை வெண்கலச் அலங்கமாக மாற்றுவேன் என்று கூறும்போது, அதன் அர்த்தம்:  

எதிர்ப்புக்கு எதிராக அசைக்க முடியாத வலிமை

எரேமியா, ராஜாக்கள், ஆசாரியர்கள் மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகளை எதிர்கொண்டார். ஆனால் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை, ஏனென்றால் கர்த்தர் அவரைப் பலப்படுத்தினார். 

அழுத்தத்தின் கீழ் பிரகாசம் 

வெண்கலம் மெருகூட்டப்படும் போது பளபளக்கிறது.  நாமும் சோதனைகளைக்(trials/test) கடந்து செல்லும்போது, கர்த்தரை இன்னும் தெளிவாகப் பிரதிபலிக்கிறோம்.


கர்த்தர் உங்களுக்காகப் போராடுவார் 


அவர்கள் போராடுவார்கள்... ஆனால் வெற்றி பெற மாட்டார்கள். நீங்கள் கர்த்தரால் கட்டப்படும்போது நீங்கள் உடைந்து போக வேண்டியதில்லை.

கடைபிடிப்பது எப்படி: நீங்கள் எப்படி வெண்கல அலங்கமாக மாற முடியும்?

கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருங்கள் 

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
 -எரேமியா 15 : 16

-வேதமே உங்கள் ஆவிக்குரிய அடித்தளம். அதை தினமும் உட்கொள்ளுங்கள், அதாவது படியுங்கள். அவருடைய பிரசன்னத்தை நம்புங்கள்.

நெருப்பை தாங்குங்கள்

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
 -1 பேதுரு 1 : 7

உங்கள் சோதனைகளை(trials) வெறுக்காதீர்கள் - அவை கர்த்தர் கொடுக்கிறவைகள்.

அவரது பிரசன்னத்தை நம்புங்கள்

உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 -எரேமியா 15 : 20

நீங்கள் தனியாக நிற்கவில்லை - கர்த்தர் உங்கள் அலங்கத்திற்குள் இருக்கிறார்.

முடிவுரை 

  • அழுத்தத்தின் கீழ் மடிந்து போகும் காகிதச் அலங்கமாக நீங்கள் உருவாக்கப்படவில்லை.
  • அரிக்கக்கூடிய கல் அலங்கமாக கூட நீங்கள் உருவாக்கப்படவில்லை. 
  • ஆனால் ஒரு வெண்கல அலங்கமாக - சோதிக்கப்பட்டு, நீடித்த நாட்கள் பிரகாசிக்கும் அலங்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
கர்த்தரின் வாக்குதத்தம் என்னவென்றால் 
“அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடுவார்கள், ஆனால் அவர்கள் உங்களை வெல்ல மாட்டார்கள்."

ஜெபம்

“ஆண்டவரே, என்னை ஒரு வெண்கல அலங்கமாக்குங்கள்.

எதிர்ப்பு எழும்போது, ​​நான் உமது பலத்தில் நிற்க வேண்டும்.

சோதனைகள் கொழுந்து விட்டு எரியும் போது, ​​என்னைச் செம்மைப்படுத்துங்கள்.


என்னை அசைக்க முடியாதவனாகவும், உடைக்க முடியாதவனாகவும், உண்மையுள்ளவனாகவும் ஆக்குங்கள் —என் வலிமையால் அல்ல, உமது ஆவியினால்.”

ஆமென்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4