தோட்டக்காரராகிய இயேசு

தோட்டக்காரராகிய இயேசு

  • இயேசு தோட்டக்காரர் என்ற இந்த கருத்து, யோவான் 20:15ல் வரும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் வருகிறது.
இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
 -யோவான் 20 : 15
  • இங்கே மகதலேனா மரியாள் இயேசுவை தோட்டக்காரர் என்று நினைத்தாள். ஏன்? 
  • அவளுக்கு மனிதனாக வந்த இயேசுவின் உருவைத் தெரியும். 
  • அவளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்பதால், இயேசு வேறு ஒரு உருவத்தில் வந்திருக்க வேண்டும்.
  • ஏன் அவர் தோட்டக்காரர் உருவில் அவளுக்கு காட்சியளிக்க வேண்டும். 
முதலில் பைபிளில் காணப்படுகிற தோட்டங்களின் தொகுப்பை பார்ப்போம்

(1) ஏதேன் தோட்டம்
  • தோட்டம் என்பது ஆண்டவருக்கு பிடித்தமான ஒன்று. 
  • ஆதியிலே கர்த்தர் ஆதாம் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தை உருவாக்கி கொடுத்தார். (அங்கு அனைத்து வகை மரங்களும் இருந்தன
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனைஅதிலே வைத்தார்.
 -ஆதியாகமம் 2 : 8

  • இங்கு கொடுக்கப்பட்டுள்ள உண்டாக்கி என்பதன் எபிரேய வார்த்தை nawtah என்பதாகும். 
  • ஆங்கிலத்தில் “planted” என்று கொடுக்கப்பட்டு இருக்கும். 
  • அதன் அர்த்தம் பயிரிட்டு, நட்டு என்பதாகும். 
  • யார் தோட்டத்தில் பயிரிடுவார்கள்? தோட்டக்காரர்கள்.
  • தேவன் தான் ஏதேன் தோட்டத்தை பயிரிட்டார். 
அதே nawtah என்கிற வார்த்தை இடம் பெறும் வசனங்கள்:

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
 -ஆதியாகமம் 9 : 20

ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
 -ஆதியாகமம் 21 : 33

(2) கெத்சமனே தோட்டம்
  • பின்பு அவர் பூமியில் வாழ்ந்த பொழுது கெத்சமனே என்ற தோட்டத்தில் தன்னுடைய பெரும்பாலான ஜெபங்களை செய்தார். (ஒலிவ மர தோப்பு)
(3) கொல்கொதா தோட்டம்
  • கடைசியில் கொல்கொதாவில் சிலுவையில் அறையப்பட்டார். 
  • இந்த கொல்கொதா அமைந்திருந்த இடமும் ஒரு தோட்டம் தான். (திராட்சை தோப்பு
  • கொல்கொதா என்பதே தோட்டம் தான். 
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
 -யோவான் 19 : 41

ஏன் இயேசு கொல்கொதா என்னும் தோட்டத்தில் உள்ள சிலுவையிலே அறையப்பட்டார்?
  • இஸ்ரவேலில் எத்தனையோ சிலுவைகள் இருக்கிறது.
  •  ஆனால் ஏன் பெயர்செபாவில் இருக்கும் சிலுவையில் இயேசு அறையப்படாமல் அவர் எருசலேம்-யோப்பா சந்தியில் காணப்படுகிற கொல்கொதாவிலே சிலுவையில் அறையப்பட்டார். 
  • ஏனென்றால் அது தேவனுடைய திட்டம். 
  • அங்கு தான் தோட்டம் இருக்கிறது. 
  • தோட்டம் இருக்கிற இடத்தில் தான் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பது தான் தேவ திட்டம்.
அடைக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தின் கதவு, கொல்கொதாவில் உள்ள தோட்டத்தின் சிலுவையின் மூலம் திறக்கப்பட்டது
  • ஆதி 3:24 ன் படி ஏதேன் தோட்டத்தின் கிழக்கு வாசலை மூடி கேரூபீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் ஆண்டவர் வைத்தார். 
  • அந்த ஏதேன் தோட்டத்தின் காவலின் அடையாளமாக சுடரொளி பட்டயம், கேரூபீன்கள் இவை இரண்டும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையில் விசித்திர வேலையாக (Embroidery) பண்ணப்பட்ட இருந்தது.
  • ஏதேன் தோட்டம் என்பது தேவன் வந்து உலாவின இடம்,  தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்
  • அதே போல மகா பரிசுத்த ஸ்தலமும் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்.
  • அன்று தேவனால் மூடப்பட்ட ஏதேன் தோட்டத்தின் வாசலின் கதவு, சிலுவையில் இயேசு மரித்ததன் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரை கிழிந்ததன் (சுடரொளி பட்டயம் திரையை மேலிருந்து கீழாக சரியாக நடுவில் வெட்டிக் கொண்டு வந்தது) மூலம் திறக்கப்பட்டது.
  • அதன் முலம் கேரூபீன்களும் இரண்டாக தகர்க்கப்பட்டது.
  • மறுபடியும் தோட்டத்திற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 
தோட்டத்தில் நுழையும் சந்தர்ப்பம்:
  • அன்று வாழ்ந்த ஆதாம், ஏவாள் ஏக்கத்தோடு ஏதேன் தோட்ட வாசலை பார்த்திருப்பார்கள். 
  • அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
  • பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஆசாரியர்களும் அந்த மகா பரிசுத்த ஸதலத்தின் திரையை ஏக்கத்தோடு பார்த்திருப்பார்கள். 
  • அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
  • ஆனால் இயேசுவானவர் சபையாகிய நமக்கு அந்த தோட்டத்திற்குள் நுழைவதற்கான அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார்.
  • நாம் எவ்வளவு பாக்கியவான்கள். 
முடிவுரை:
  • பரலோகத்தை கர்த்தர் தோட்டத்தோடு ஒப்பிடுகிறார். எனவே தான் பிதாவை திராட்ச தோட்டக்காரர் என்றும் தன்னை திராட்சச்செடி என்றும் இயேசு குறிப்பிடுகிறார். (யோவான் 15:1)
  • அதனால் தான் அவர் கொல்கொதா என்னும் தோட்டத்தில் மரித்து, தோட்டக்காரராக உயிர்த்தெழுந்து, தோட்டக்காரராகவே மகதலேனா மரியாளுக்கு காட்சியளித்தார். 
  • பின்பு ஆதாம், ஏவாளுக்கு அடைக்கப்பட்ட தோட்டத்தின் கதவு நமக்கு திறக்கப்பட்டது.
  • நமக்கு அந்த தோட்டத்தில் (மகா பரிசுத்த ஸ்தலத்தில்/பரலோகத்தில்) நுழையும் வாய்ப்பை அருளினார். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?