தோட்டக்காரராகிய இயேசு - தனிப்பட்ட சிந்தனை
இயேசு தோட்டக்காரர் – பைபிள் அடிப்படையிலான ஒரு ஆழ்ந்த சிந்தனை
- இயேசுவைத் தோட்டக்காரராகக் காட்டும் உருவகம், வேதாகமம் முழுவதும் பின்னிப் பிணைந்துள்ள ஒரு ஆழமான ஒன்று.
- இது சிருஷ்டிப்பு(creation), சாகுபடி(cultivation), மறுசீரமைப்பு(restoration) மற்றும் உயிர்த்தெழுதல்(resurrection) இந்த நான்கிலும் அவரது பங்கைப் பற்றிப் பேசுகிறது.
- யோவான் 20:15 ஐ தவிர, பைபிள் இயேசுவை "தோட்டக்காரர்" என்று நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த உருவகம் பைபிள் முழுவதும் விரிவடைந்து, ஆழமான ஆவிக்குரிய உண்மையை வெளிப்படுத்துகிறது.
- இயேசு ஆத்துமாவை பேணி (tends soul), வளர்ச்சியை கொண்டு வருகிறார் (nurtures growth), மரணத்திலிருந்து உயிரைக் கொண்டுவருகிறார்.(brings life from death)
1. உயிர்த்தெழுத்த தோட்டம்(The Garden of Resurrection)– யோவான் 20:11–18
யோவான் 20:15 இல், மகதலேனாள் மரியாள் உயிர்த்தெழுந்த இயேசுவை தோட்டக்காரர் என்று தவறாக நினைக்கிறாள்:
"இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
-யோவான் 20 : 15”
- இந்த "தவறு" ஆழமான அடையாள அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
- முதலில் ஆவிக்குரிய மரணம் ஏற்பட்டது ஏதேன் தோட்டத்தில்;
- இப்போது உயிர்த்தெழுதல் நிகழ்வதும் ஒரு தோட்டத்தில்.
- மகதலேனா மரியாளின் அனுமானம் தீர்க்கதரிசனமானது.
- இயேசு தோட்டக்காரர் தான் - தாவரங்களுக்கு அல்ல, ஆத்துமாக்களுக்கும் மற்றும் புதிய சிருஷ்டிப்பாகிய மனிதனுக்கு தான்.
2. மெய்யான திராட்சச்செடி மற்றும் திராட்சத்தோட்டக்காரர் (The True Vine and the Vinedresser: )யோவான் 15:1–8
யோவான் 15:1 இல், இயேசு கூறுகிறார்:
"நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்”.
- இங்கே இயேசு பிதாவை திராட்சத்தோட்டக்காரர் (gardener) என்றும், தன்னை திராட்சைக் கொடி என்றும் குறிப்பிடப்படுகிறார்.
- இயேசுவே வாழ்வின் ஆதாரம்(source of life):அவரை நம்பும் விசுவாசிகள் கிளைகள்(believers are the branches).
- அவர் சுற்றுச்சூழல்(environment) மற்றும் வளர்ச்சியை நிலைநிறுத்துபவராக இருக்கிறார் (sustainer of growth):
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
-யோவான் 15 : 5
- இந்தப் பகுதி இயேசுவை ஆவிக்குரிய வளர்ச்சியின் மையமாக நிலைநிறுத்துகிறது.
- ஒரு தோட்டக்காரரைப் போல, அவர் நீதியின் கனியைத் தழைக்கச் செய்கிறார்.
3. முதல் ஆதாம் மற்றும் இரண்டாவது ஆதாம் – ஆதியாகமம் & ரோமர் (The First and Second Adam: Genesis and Romans)
- பைபிள் ஆதியாகமம் 2:8-ல் தொடங்குகிறது, அங்கு தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் "அதைப் பேணிக் காக்க" வைத்தார்.
- முதல் மனிதனாகிய ஆதாம், மனிதகுலத்தின் ஆரம்பகால தோட்டக்காரன்.
- இருப்பினும், அவன் தோல்வியடைந்தான், பாவம் உலகத்திற்குள் நுழைந்தது.
ரோமர் 5:12-19 மற்றும் 1 கொரிந்தியர் 15:45-ல் பவுல் ஆதாமையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திப் காண்பிக்கிறார்:
அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
-1 கொரி 15 : 45
- இரண்டாம் ஆதாமாகிய இயேசு, முதல் ஆதாம் தோல்வியடைந்த இடத்தில் வெற்றி பெறுகிறார்.
- ஆதாம் ஒரு தோட்டத்தில் (ஏதேன்) கீழ்ப்படியவில்லை என்றாலும், இயேசு ஒரு தோட்டத்தில் (கெத்சமனே) கீழ்ப்படிந்து, துன்பத்தின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
-லூக்கா 22 : 42
4. கெத்சேமனே தோட்டம் – சரணடைந்த இடம் (The Garden of Gethsemane: A Place of Surrender)
- மத்தேயு 26:36–46 கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் வேதனையைப் பதிவு செய்கிறது.
- இங்கே, இயேசு ஜெபிக்கிறார், இரத்தத்தை வியர்வையாக சிந்தி, பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.
- இந்தத் தோட்டம் நொறுக்கப்படும் இடம்—“கெத்செமனே” என்றால் “எண்ணெய் ஆலை” என்று பொருள்.
- இயேசு தனது வேதனையில், ஒரு விதையைப் போல தன்னை விதைக்கத் தயாராகிறார்:
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
-யோவான் 12 : 24
- இந்த வசனம் தோட்டக்காரன் உருவகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
- இயேசு பூமியில் புதைக்கப்பட்ட விதையாக மாறுகிறார், அதிலிருந்து உயிர்த்தெழுதலின் வாழ்க்கை பிறக்கிறது.
5. புதிய தோட்ட ராஜ்யம் (New Creation Imagery)– ஏசாயா 58:11 & வெளிப்படுத்தின விசேஷம் 22:1–2
- இயேசுவின் மறுசீரமைப்புப் பணி பெரும்பாலும் தோட்டக் காட்சிகளையே மையப்படுத்துகிறது:
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
-ஏசாயா 58 : 11
- வேதாகமத்தின் இறுதி தரிசனத்தில், புதிய எருசலேம், ஜீவ விருட்சத்தையும் ஏதேனை எதிரொலிக்கும் ஒரு நதியையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 22:1-2).
- இயேசு, சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியாக, தம்முடைய தோட்ட ராஜ்யத்தை முழுமையாகக் கொண்டு வந்து, எல்லா தேசங்களையும் குணமாக்குகிறார்.
முடிவுரை: நித்திய தோட்டக்காரர் (The Everlasting Gardener)
- இயேசு நம் இருதயங்களின் தோட்டக்காரர்.
- நம்மை கிருபையால் பராமரித்து, சத்தியத்தால் செதுக்கி, ராஜ்யத்தின் விதைகளை விதைத்து, எஞ்சியிருக்கும் கனிகளைக் கொண்டு வருகிறார்.
- கெத்செமனே தோட்டத்திலிருந்து, கல்லறை தோட்டம் வரை (யோவான் 19:41) இறுதியில் வெளிப்படுத்தலின் நித்திய தோட்டம் வரை.
- மரணம் ஒரு காலத்தில் ஆட்சி செய்த வாழ்க்கையை மீட்டெடுப்பதே அவரது பங்கு.
- மரியாளின் "தவறு" தற்செயலானது அல்ல - அது ஒரு தேவ வெளிப்பாடு.
- இயேசு புதிய படைப்பின் தோட்டக்காரர்.
- மேலும் அவர் நம்மை அவருடைய தோட்டத்திற்கு அழைக்கிறார், அங்கு நாம் தேவ சாயலில் வளர்க்கப்படுவோம்.
Comments
Post a Comment