யெஷூரன்

யெஷூரன் என்றால் என்ன?

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
 -ஏசாயா 44 : 2

இந்த வசனத்தில் குறிப்படப்படும் யெஷூரன் என்றால் என்ன? 
  • இது ஒரு எபிரேய மொழிச் சொல்.(“Yeshoorun” is a Hebrew word)
  • அர்த்தம்: நேர்மையானவள். (Upright one)
  • இது இஸ்ரவேலின் ஒரு குறியீட்டு பெயர். (A symbolic name for Israel)
  • இஸ்ரவேலுடைய சிறந்த தன்மையை விவரிக்கிறது. (Describing her ideal character)
  • இது கவிதை நடையில் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை(a poetical)
  • இது ஒரு மென்மையான மற்றும் அன்பான தொனியில் தன் மக்களை அழைக்கும் ஒரு வார்த்தை (a tender and loving appellation of the people of Israel)
  • முக்கியமாக இந்த appellation என்ற வார்த்தை, புனைப்பெயர் (nickname) என்ற அர்த்தத்தை கொண்டது. 
ஆண்டவர் இஸ்ரேல் மக்களை ஒரு கவிதை நடையில், அன்பாக, மென்மையாக அழைக்கிறார். ஆண்டவரும் தம் பிள்ளைகளை நாம் அன்பாக புனைப்பெயர் வைத்து அழைப்பது போல அழைக்கிறாரோ! என்னே அன்பு!!!

யாசேரின் புத்தகம்:
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.
 -யோசுவா 10 : 13 
  • யாசேர் புத்தகம் என்று பைபிளில் வாசிக்கிறோமே!
  • அந்த புத்தகம் இந்த யெஷூரன் என்ற வார்த்தையோடு மிகவும் தொடர்புடையது. 
  • யாசேர் புத்தகம் என்பதற்கு நேர்மையானவரின் புத்தகம் அல்லது நீதிமானின் புத்தகம் என்று அர்த்தம். (The Book of Jasher which means the Book of the Upright or the Book of the Just Man)
  • முக்கியமாக இந்த புத்தகத்தை இஸ்ரவேலின் ஹீரோக்களின் புத்தகமாகக் கருதுகின்றனர்.(The book of Jashar was a collection of stories about the exploits of Israel's heroes, including Joshua)
  • நாமும் பைபிளில் யோசுவா 10:13 ல் ஆண்டவர் யோசுவா மூலம் செய்த அற்புதத்தையும், அதன் கீழ் இதெல்லாம் யாசேர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்கிறோம். 
  • அதேப் போல 2 சாமுவேல் 1:18 லும் கூட  தாவீது பாடின புலம்பலைக் குறித்து யாசேர் புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று வாசிக்கிறோம்.
  • 2 தீமோத்தேயு 3:8 ல் “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல” என்று வாசிக்கிறோம். இந்த இரண்டு பேரும் யாசேரின் புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறார்கள் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யெஷூரன் என்ற சொல், முழு வேதாதகமத்திலும் கீழ்க்கண்ட 3 வசனங்களில் காணப்படுகிறது.  

யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.
 -உபாகமம் 32 : 15

ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
 -உபாகமம் 33 : 5

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
 -உபாகமம் 33 : 26

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?