ஆழமான விசுவாசம்
ஆழமான விசுவாசம்
- நம் அன்றாட வாழ்வில் நாம் ஆண்டவர் மேல் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறோம்?
- கர்த்தர் நம்முடைய குணாதிசயத்தை மாற்ற மிகவும் ஒரு வித்தியாசமான செயல்முறையைப் பயன்படுத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- அதை நாம் விசுவாசத்தின் ஆறு கட்டங்கள் என்று அழைக்கலாம்.
- கர்த்தரின் செயல்முறையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், பிரச்சனைகள் வரும் போது நீங்கள் மிகவும் சோர்ந்து போவீர்கள்.
- "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?" என்று நினைப்பீர்கள்.
- ஆனால் கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால், உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் நம்பிக்கையிலும், நீங்கள் பெரும் பலத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
6 D's or phases of Faith (விசுவாசம்)
1) Dream - கர்த்தர் கொடுக்கும் தரிசனம்
1) Dream - கர்த்தர் கொடுக்கும் தரிசனம்
2) Decision - முடிவெடுத்தல்
3) Delay - தாமதம்
4) Difficulty - கடினமாக, சிரமமாக
5) Dead End - ஒரு பக்கமும் வழியில்லாதது போல தோன்றும்
6) Deliverance - விடுதலை
Dream - தரிசனம்:
- கர்த்தர் உங்களுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார்.
- தரிசனம் என்றால் அது ஒரு யோசனையாக, ஒரு குறிக்கோளாக அல்லது லட்சியமாக இருக்கலாம்.
- வேதத்தில் ஒவ்வொரு அற்புதத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டால், அது முதலில் ஒருவரின் மனதில் கர்த்தர் கொடுத்த கனவாக இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்:
- கர்த்தர் நோவாவுக்கு ஒரு பேழையைக் கட்டும் தரிசனத்தை கொடுத்தார்.
- கர்த்தர் ஆபிரகாமுக்கு ஒரு பெரிய தேசத்தின் தந்தையாக வேண்டும் என்ற தரிசனத்தைக் கொடுத்தார்.
- கர்த்தர் யோசேப்புக்கு தம் மக்களைக் காப்பாற்றும் ஒரு தலைவராக வேண்டும் என்ற தரிசனத்தைக் கொடுத்தார்.
- கர்த்தர் நெகேமியாவுக்கு எருசலேமைச் சுற்றி சுவர் கட்டும் தரிசனத்தைக் கொடுத்தார்.
- கர்த்தர் தாவீதுக்கு ஆலயம் கட்டும் தரிசனத்தைக் கொடுத்தார்.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்(dream of) மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
-எபேசியர் 3 : 20
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
-எபேசியர் 3 : 21
Decision - முடிவெடுத்தல்
- நீங்கள் அந்த தரிசனத்தைக் குறித்து ஏதாவது செய்ய முடிவு செய்யும் வரை அந்த தரிசனம் பயனற்றதாக இருக்கும்.
- 10 பேர் தரிசனத்தை கண்டாலும், அதை முடிவெடுத்து செயல்படுத்துபவர் ஒருவராக தான் இருக்கும்.
- உங்கள் நேரம்(time), பணம்(money), ஆற்றல்(energy) மற்றும் நற்பெயரை(reputation) செலவிட அல்லது விட்டுக கொடுக்க எப்போது துணிந்து முடிவெடுக்கிறீர்களோ அப்போது தான் உங்களால் முடிவு எடுக்க முடியும்.
- உதாரணமாக, நீங்கள் தண்ணீரில் நடக்க விரும்பினால், நீங்கள் படகில் இருந்து வெளியேறி தான் ஆக வேண்டும்!
- நம்பிக்கை என்பது ஒரு வினைச்சொல், அது நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன்(unstable) காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
-யாக்கோபு 1 : 6
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
-யாக்கோபு 1 : 7
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
-யாக்கோபு 1 : 8
Delay - தாமதம்:
- நீங்கள் கண்ட தரிசனம் நடப்பதற்கு ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கும்.
- கர்த்தர் இந்த காத்திருப்பு காலத்தை பயன்படுத்தி, அவரை நம்புவதற்கு உங்களுக்கு கற்பிக்கிறார்.
- நினைவில் கொள்ளுங்கள்: தாமதம் என்பது மறுப்பு அல்ல.
- "நடக்காது" என்பதற்கும் "இன்னும் நடக்கவில்லை" என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
கர்த்தர் 3 காரணங்களுக்காக தாமதிக்கிறார்
1) உங்கள் மாம்ச எண்ணங்களை அழிக்க
2) உங்கள் பழக்க வழக்கங்களை மாற்ற
3) நீங்கள் அவரை மட்டுமே சார்ந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
-ஆபகூக் 2 : 3
Difficulty - கடினமாக, சிரமமாக:
- இப்போது தான் பிரச்சனைகள் வரத் தொடங்கும்.
- இரண்டு விதமான பிரச்சனைகள் வரும்; ஒன்று விமர்சனங்கள் அல்லது குறை சொல்லுபவர்கள்; மற்றொன்று சூழ்நிலைகள்.
- கவலைப்படாதீர்கள்! இது எல்லாம் கர்த்தரின் திட்டத்தின் ஒரு பகுதி.
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
-1 பேதுரு 1 : 6
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
-1 பேதுரு 1 : 7
Dead End - ஒரு பக்கமும் வழியில்லாதது போலத் தோன்றும்:
- உங்கள் நிலைமை கடினமானதிலிருந்து சாத்தியமற்றதாக மோசமடையும்!
- நீங்கள் ஒரு மூலையில் பின்தங்கியிருப்பதைக் காண்பீர்கள்.
- நீங்கள் உங்கள் கயிற்றின் முடிவை அடைந்து விட்டது போலத் தோன்றும்.
- உங்கள் சூழ்நிலை அல்லது நிலைமை நம்பிக்கையற்றதாகத் தெரியும்.
- வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அற்புதத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள்.
- கர்த்தரை நம்புங்கள்.
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
-2 கொரி 1 : 8
நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
-2 கொரி 1 : 9
Deliverance - விடுதலை:
- கர்த்தர் அதிசயமாக உங்களை நடத்துவார்.
- எல்லாவற்றில் இருந்தும் விடுதலையை பெறுவீர்கள்.
- சிலுவையில் அறையப்பட்ட சூழ்நிலையை உயிர்த்தெழுதலின் சூழ்நிலையாக கர்த்தர் மாற்றுவார்.
- அதனால் அவருடைய மகத்துவத்தை நீங்கள் காணலாம்.
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
-2 கொரி 1 : 10
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
-சங்கீதம் 27 : 13
Comments
Post a Comment