அப் 9:5 தாற்றுக்கோல் விளக்கம்
அப் 9:5 தாற்றுக்கோல் விளக்கம்
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
-அப்போஸ்தலர் 9 : 5
- “முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம்” (அப் 9:5) ஆண்டவர் சொன்ன இந்த முள் எது?
- ஆண்டவர் கூறுகின்ற இந்த முள் ஒருவேளை கருவேல முள்ளா? நிச்சயம் இல்லை.
- ஒரு மனிதன் தெரிந்தே முள்ளில் உதைப்பானா?
முள்- Goad:
- இந்த வசனத்தில் வருகின்ற “முள்” என்ற வார்த்தை எபிரெய மொழியில் “Dorbon” என்று கொடுக்கப்பட்டுள்ளது
- ஆங்கிலத்தில் “GOAD” என்று கொடுக்கப்பட்டுள்ளது.
- அதற்கு அர்த்தம் என்னவென்றால் “தாற்றுகோலிலுள்ள முள்” ஆகும்.
- இதை “தாற்றுகோல் முள்” என்று படிக்க வேண்டும்.
அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால்(goad) முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.
-நியாயாதிபதிகள் 3 : 31
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும்(goads) கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
-1 சாமுவேல் 13 : 21
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்(goads) போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
-பிரசங்கி 12 : 11
-நியாயாதிபதிகள் 3 : 31
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும்(goads) கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
-1 சாமுவேல் 13 : 21
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்(goads) போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
-பிரசங்கி 12 : 11
ஆகிய வசனங்களில் "தாற்றுக் கோல்" என்ற வார்த்தை இடம் பெறுகிறது.
இந்த முள் எப்படி இருக்கும்:
- இந்த தாற்றுக்கோல் 10 அடி நீளமுள்ள மரத்தால் ஆன கூர்மையான நீண்ட கோல் ஆகும்.
- அதன் முனைபகுதியில் ஆணி அடித்திருப்பார்கள்.
- அது “முள்" போன்று கூர்மையாக இருக்கும்.
அதனுடைய நோக்கம்:
- பாலஸ்தீனாவில் மாடுகளை விவசாய நிலத்தில் சுறுசுறுப்பாக ஒட்டுவதற்கு பயன்படுத்தினார்கள்.
- வயல்வெளிகளில் ஏர் உழும் போது கலப்பையிலுள்ள கொழுவில் ஒட்டியிருக்கும் “சேற்றை” அந்த ஆணிக்கொண்டு நீக்குவதற்கு பயன்படுத்தினார்கள்.
- அது இன்னும் ஆழமாய் உழுவதற்கு ஏதுவாகும்.
வசனத்தின் பிண்ணனி:
- இப்படிப்பட்ட சமயங்களில் சில நேரங்களில் மாடுகள், காளைகள் கிடைக்கவில்லையென்றால் கழுதை வைத்து உழுவார்கள்.
- ஆகவே காளைகளோ அல்லது கழுதைகளோ பொறுமையாக செல்லும் போது வேகமாக செல்லுவதற்கு தாற்றுகோலால் கால் பகுதியில் குத்துவார்கள்.
- அந்த சமயத்தில் கழுதையோ அல்லது மாடுகளோ அந்த தாற்றுகோலை எட்டி உதைக்கும்.
- அப்படி உதைக்கும் சில நேரங்களில் கழுதையின் கால் தாற்றுக்கோலின் முனைபகுதியின் கூர்மையான முள்ளில் பட்டு (சேற்றை எடுக்கும் ஆணியில்) வலியையை ஏற்படுத்தும்.
- அப்பொழுது அதற்கு கடினமாக இருக்கும்.
- இதைதான் ஆண்டவர் பவுலிடம் “முள்ளில் உதைப்பது உனக்கு கடினம்” என்று கூறுகின்றார்.
கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன?
- தாற்றுக்கோலின் ஆணி போன்ற கூர்மையான “முள்“ என்பது “சபையாகும்“ என்று இயேசு கூறுகின்றார்.
- “முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம்” (அப் 9:5).
- எப்படி கலப்பையில் உள்ள "சேறுகள்" அந்த ஆணியின் மூலம் நீக்கபடுகின்றதோ அதே போல் ஒரு மனிதனின் பாவ சேற்றை வசனத்தின் மூலம் நீக்க தேவன் சபையை பயன்படுத்துகின்றார்.
- அப்படிபட்ட சபையை நீ துன்புறுத்தினால் உனக்குதான் கடினம் "சவுலே" என்று கூறுகின்றார்.
- அதாவது இந்த உலகத்திலேயே உ்ன்னை பரிசுத்தமாக்குகின்ற சபையையே நீ எட்டி உதைத்தால் உன் பாவம் கழுவப்படுவது கடினம் என்று பவுலிடம் கூறுகின்றார்.
- ஆகவே சபையை புறகணித்தால் புறகணிக்கின்றவா்களுக்கு அது கடினமாகும் என்று ஆவியானவர் கூறுகின்றார்.
Comments
Post a Comment