மத்தேயு 6:30-33 விளக்கம்
மத்தேயு 6:30-33 விளக்கம்
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
-மத்தேயு 6 : 30
-மத்தேயு 6 : 30
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
-மத்தேயு 6 : 31
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
-மத்தேயு 6 : 32
- இயேசு இங்கு உணவு, உடுப்பு, இடம் தேடுபவர்களை மூடன் என்கிறார்.
- ஏன்?
- அதை புரிந்து கொள்ள மொழி மிக அவசியம்.
- இந்த வசனம் இயேசு அராமிய மொழியில் பேசுகிறார்.
- கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது.
அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்
- இங்கு தேடுகிறார்கள் என்று வருவது “நாய்-கு சாப்பாடு கொண்டு போகும் பொழுது, கொடுக்கும் முன்பதாக அந்த நாய் அவசரப்பட்டு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு வரும்”.
- அந்த சொல்லை தான் இங்கு இயேசு பயன்படுத்துகிறார்.
- அது போல நாக்கை தொங்கப் போட்டு கொண்டு உணவு, உடை, வீடு என்று போகாதிருங்கள்.
- அப்படி போகின்றவன் அஞ்ஞானி என்கிறார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
-மத்தேயு 6 : 33
-மத்தேயு 6 : 33
- ‘தேவனுடைய ராஜ்யத்தை மட்டும் தேடுங்கள்’ என்று இங்கு சொல்லப்படவில்லை.
- முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்று வருகிறது.
- அப்படியென்றால், இரண்டாவது என்று ஒன்று இருக்க வேண்டும்.
- இரண்டாவது உணவு, உடை, வீடு இவைகளை தேடுங்கள் என்று அர்த்தம்.
- அதற்காக வேலை செய்யுங்கள்.
தேடுங்கள்
- இங்கு தேடுங்கள் என்று வருவது “மத் 6:32 ல் வருகிற அதே அராமிய சொல்”
- அந்த சொல்லை தான் இங்கு இயேசு பயன்படுத்துகிறார்.
- அது போல நாம் தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் நாயைப் போல வெறித்தனமாக தேட வேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்றால் 5 காரியங்களை நாம் தேட வேண்டும்.
- ராஜாவை தேடுகிற ஒரு நல்ல பிரஜையாக இருப்பது. (ஏசாயா 55:6)
- நல்ல பிரஜையாக இருப்பவன் தன்னை தாழ்த்தி, மற்றவர்களை உயர்த்தி ஜெபம் செய்து அவன் வாழ்வான். (2 நாளாகமம் 7:14)
- ஞாயிறு ஆராதனைக்கு ஒழுங்காக கலந்து கொள்வான். (எபிரேயர் 10:25)
- ஒழுங்காய் தசம பாகம் செலுத்துவான்.(மல்கியா 3:8-10)
- தேவனுடைய நாமம், சபையின் நாமம், விசுவாசிகளின் நாமம் கெட்டுப் போகாதபடி பாதுகாப்பான். சுவிஷேசம் அறிவிப்பான். (நெகேமியா 4:6; மத் 28:19)
இந்த 5 காரியங்களை நாம் செய்தால், கர்த்தர் நமக்கு எல்லாவற்றையும் கூட கொடுப்பார்.
Comments
Post a Comment