மோசேயின் கூடாரமும், தாவீதின் கூடாரமும்

மோசேயின் கூடாரமும், தாவீதின் கூடாரமும்

முன்னுரை:
  • ஆசரிப்பு கூடாரம் in Tamil
  • Tabernacle of Moses in English.
  • மிஷ்கான் - Mishkan in Hebrew
அர்த்தம்: 
தேவன் மக்கள் மத்தியில் வாசம் செய்வது. 

அடையாளம் - Typology:
  • ஆசரிப்பு கூடாரம் இயேசுவுக்கு அடையாளம்.
  • Typology என்றால் பழைய ஏற்பாட்டில் இயேசுவை காட்டுகிற அடையாளங்கள். 
  • ஆசரிப்பு கூடாரம் என்பது அதிகமான இயேசுவின் அடையாளங்களை கொண்ட ஒரு விடயம். 
எடுத்துக்காட்டுகள்:
  • ஆபேல் இரத்தம் சிந்தினது, இயேசு இரத்தம் சிந்தினதற்கு அடையாளம்.
  • ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கூட்டி சென்றது, பிதாவாகிய தேவன் தன் குமாரனை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளம்.
  • நோவாவின் பேழை, கிறிஸ்துவானவர் நிறுவும் சபைக்கு அடையாளம். 
  • யாரெல்லாம் பேழைக்குள் போனார்களோ அவர்களெல்லாம் ஜலப்பிரளயம் என்னும் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்தார்கள். 
கிருபாதாரபலி-Propitiation:
  • Hilasmos in Greek
  • முழு வேதாகமத்திலும் கிருபாதாரபலி என்று 3 தடவை வருகிறது. 
  • 1 முறை ரோமர் புத்தகத்திலும், 2 முறை 1 யோவான் புத்தகத்திலும் காணப்படுகிறது. 
  • 1) ரோமர் 3:26   2) 1 யோவான் 2:2   3) 1யோவான் 4:10
  • இது அந்த பழைய ஏற்பாட்டு 5 பலிகளையும் குறிக்கக் கூடியது (சர்வாங்க தகனபலி, குற்ற நிவாரணபலி, பாவ நிவாரணபலி, சமாதான பலி, போஜனபலி).
ஆசரிப்பு கூடாரம் எதற்காக உருவாக்கப்பட்டது:
  • ஆசரிப்பு கூடாரம் என்பது உடன்படிக்கைப் பெட்டி வைப்பதற்காக உண்டாக்கப்பட்டது.
  • உடன்படிக்கைப் பெட்டி வேதாகமத்திற்கு அடையாளம்.
  • அதற்கு 2 உடன்படிக்கைகள் இருக்கிறது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. 
ஆசரிப்பு கூடாரம் - அமைப்பு:
  • மகா பரிசுத்த ஸ்தலம் மேற்கில் (west) இருக்கிறது.
  • ஆசரிப்பு கூடாரத்தின் வாசல் கிழக்கில் (East) இருக்கிறது.
  • மேற்கின் இடது பக்கம் தெற்கு (south)  இருக்கிறது. 
  • மேற்கின் வலது பக்கம் வடக்கு (North) இருக்கிறது. 


  • கிழக்கில் இருந்து மேற்கு வரை (நீளம்) 150 அடி.
  • வடக்கில் இருந்து தெற்கு வரை (அகலம்) 75 அடி (150 ல் பாதி).
  • ஆசரிப்பு கூடாரத்திற்கு கூரை கிடையாது. 
  • துணிகளால் அமைந்த திரைகள் தான் காணப்பட்டது. 
  • ஒரே ஒரு வாசல் தான் இருந்தது. 
  • 2 மூடிய பிரதேசம் - பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். 
மகா பரிசுத்த ஸ்தலம்:


  • மகா பரிசுத்த ஸ்தலம் சதுரமாக காணப்பட்டது. 15 அடி நீளம், 15 அடி அகலம். 
  • அதற்குள் இருந்தது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி மாத்திரமே. 
உடன்படிக்கைப் பெட்டி:


பரிசுத்த ஸ்தலம்:



  •  15 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்டது. 
  • பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் இரண்டையும் சேர்த்து 45 அடி நீளம், 15 அடி அகலம் இருக்கும். 
  • அது மூடப்பட்டிருக்கும்.
  • அந்த மூடப்பட்டப் பகுதிக்குள் ஆசாரியர்கள் மட்டுமே போக முடியும். 
  • மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதான ஆசாரியன் மாத்திரமே வர முடியும்.
  • அதுவும் வருஷத்தில் ஒரு நாள் மாத்திரம் - ஒப்புரவாக்குதலின் பண்டிகையின் போது. (Yom Kippur).
3 எபிரேயச் சொற்கள் - ஆசரிப்புக் கூடாரம்
  • DEREK - வெளிப்புறத்தில் இருக்கிற entrance திரை.
  • EMET - பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரக்கூடிய திரை.
  • CHAYIM - மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரக் கூடிய திரை. 




யோவான் 14:6 விளக்கம்:
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
 -யோவான் 14 : 6

John 14:6 Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.

In Hebrew:
Hiya, Derek, va Emet, va Chayim.


இப்போது வாழ்கிற நமக்கான அர்த்தம்:
  • நாம் Derek வழியாக இரட்சிக்கப்பட்டு வந்து, அந்த பிரதேசத்திலேயே இருந்தால் கிறிஸ்தவரல்லாத மக்கள் மூலமாய் நமக்கு distractions ஏற்படும். 
  • அது ஒரு ஆபத்தானப் பகுதி. 
  • எனவே, நாம் மூடப்பட்ட பகுதியாகிய Emet குள் வந்து விட வேண்டும். 
  • அதற்குள் வர இயேசு தான் வழி.
Derek மற்றும் Emet எதைக் குறிக்கிறது?
  • இங்கு Derek என்பது இரட்சிப்பைக் குறிக்கும்.
  • Emet என்பது சத்தியமாகிய வேதத்தைக் குறிக்கும். 
பரிசுத்த ஸ்தலத்தில் என்ன வைக்கப்பட்டிருக்கும்?
  • பரிசுத்த ஸ்தலத்தில் நுழையும் பொழுது வலப்பக்கத்தில் மேஜை இருக்கும்.
  • அதில் இரண்டு பாத்திரங்கள் இருக்கும்
  • அதில் ஆறு, ஆறாக 12 சமூகத்தப்பங்கள் வைக்கப்பட்டிருக்கும். 
  • இடப்பக்கத்தில் குத்துவிளக்கும் (Menorah) வைக்கப்பட்டிருக்கும். 
  • பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கிற வகையில் ஒரு திரை காணப்படும்.
  • அதை ஒட்டி ஒரு தூபவர்க்கப் பலிபீடம் இருக்கும்.
  • அதில் எப்பொழுதும் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டு, புகை வந்து கொண்டே இருக்கும். 
  • நறுமணம் வந்து கொண்டே இருக்கும். 
இவை எதற்கு அடையாளங்கள்:
சமூகத்தப்பங்கள்:
  • இயேசு அப்பத்தைப் பிட்டு தானும், தன்னோடு இருந்தவர்களுக்கு கொடுத்தும் சாப்பிட்டார்.
  • அதற்கு பெயர் தான் திருவிருந்து.
  • அது இயேசுவோடு நமக்கு இருந்த உறவை காட்டுகிறது. 
  • யூதர்களுடைய கலாச்சாரத்தின் படி, ஒருவரை நான் ஏற்றுக் கொண்டேன் என்பதற்கு அடையாளமாக இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள்.
  • ஏன் 2 plates? 
  • ஒன்று நாம் ஆண்டவருடன் சாப்பிடுவது.
  • இன்னொன்று நாம் மற்றவர்களுடன் சாப்பிடுவது. 
Menorah:
  • Menorah ஏன் இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • அந்த இடத்திற்கு வெளிச்சம் கொடுப்பதற்காக. 
  • அந்த விளக்கு பல விஷயங்களுக்கு அடையாளம்.
  • ஆதி 1:1 எபிரேய மொழி - 7 சொற்களை அடையாளப்படுத்துகிறது.
  • 7 பண்டிகைகளை அடையாளப்படுத்துகிறது. 
  • ஆனால் இங்கு தேவன் நமக்கு கொடுத்த வெளிச்சத்தைக் காட்டுகிறது. 
  • சங் 119:105  ன் படி இது தேவனுடைய வசனத்திற்கு அடையாளம். 
தூபவர்க்கப் பலிபீடம்:
  • அந்தப் புகை எதற்கு அடையாளம்.
  • வெளி 8:3-4 ன் படி பரிசுத்தவான்களின் ஜெபங்களுக்கு அடையாளம்.
அப் 2:42 ம் பரிசுத்த ஸ்தலமும்:
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
 -அப்போஸ்தலர் 2 : 42
  • இங்கு இரட்சிக்கப்பட்டவர்கள் Derek (ஆசரிப்புக்கூடாரத்தின் வெளிப்பிரகாரத் திரை)  வழியாக வந்தாலும்,
  • அப்போஸ்தலர்கள் அவர்களை Emet (ஆசரிப்புக்கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலத்தின் திரை) வழியாக போக வழிநடத்தினார்கள். 
அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் - தேவனுடைய வார்த்தையை கற்றுக் கொண்டார்கள். (Menorah)
அந்நியோந்நியத்திலும் - ஒரு தட்டு அப்பங்கள், தேவனுடனான உறவு. (மேஜையில் உள்ள 1 plate அப்பங்கள்)
அப்பம் பிட்குதலிலும் - ஒருவரோடு ஒருவர் ஐக்கியம்  (மேஜையில் உள்ள இன்னொரு plate அப்பங்கள்)
ஜெபம்பண்ணுதலிலும் - prayer (தூபவர்க்கம்)
  • அப் 2 ம் அதிகாரத்தில் தான் சபை தொடங்கப்படுகிறது.
  • அப்போதே ஆண்டவர் சபையை எப்படி நடத்த வேண்டும் என்று அப்போஸ்தலருக்கு சொல்லிக் கொடுக்கிறார். 
  • அதனுடைய அமைப்பு முறை ஆசரிப்பு கூடாரத்தில் இருந்து அவர்களுக்கு கிடைக்கிறது. 
மிஷ்கான்:

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
 -யோவான் 1 : 14
  • வாசம் பண்ணினார் என்ற சொல்லின் எபிரேய பதம் தான் மிஷ்கான். 
  • ஆசரிப்பு கூடாரம் என்கிற தீர்க்கத்தரிசனம் நிறைவேறினது இந்த வசனத்தில் தான். 
  • Immanuel, yahweh shamma - தேவன் நம்மோடு இருக்கிறார். 
  • இவையெல்லாம் இந்த தீர்க்கத்தரிசன நிறைவேற்றத்தின் நாமங்கள். 
  • தேவன் முதன்முதலில் மக்கள் மத்தியில் வாசம் பண்ணத் தொடங்கின இடம் ஆசரிப்பு கூடாரம் (மிஷ்கான்).
CHAYIM:
  • மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலின் திரை.
  • நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடம். 
  • ஆண்டவர் மக்களோடு பண்ணின உடன்படிக்கைக்கு அடையாளமாக உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது .
  • 1) இயேசு சிலுவையில் மரிக்கும் போது பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே உள்ள திரை (CHAYIM) கிழிந்தது. 
  • 2) CHAYIM - ஜீவன், இயேசு சிலுவையில் தன் ஜீவனை விடுகிறார். அவர் ஜீவன், இல்லாமல் போகிறது என்பதால் தான் அந்த திரை கிழிந்தது. 
  • அது தான் அங்கு அடையாள ரீதியாக காண்பிக்கப்படுகிறது. 
  • இனி யாவரும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகலாம். 
1 சாமுவேல் 4:

பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.
 -1 சாமுவேல் 4 : 2
  • பெலிஸ்தர்கள் ஜெயிப்பது போல இருக்கிறது. 
  • இஸ்ரவேலர்கள் தோற்பது போல இருக்கிறது. 
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
 -1 சாமுவேல் 4 : 3
  • கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி, சீலோவில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தில் 369 வருடங்கள் இருந்தது. 
  • யோசுவாவின் காலத்தில் இருந்து 369 வருடங்கள்.
  • அப்போது சீலோ தான் இஸ்ரவேலின் தலைநகரமாக அந்த 369 ஆண்டுகளும் இருந்தது. 
  • கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை பாளையத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள். 
  • Yom Kippur என்ற ஒப்புரவாக்குதலின் பண்டிகையின் போது தான் வருடத்திற்கு ஒரு முறை தான் பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியும்.
  • அப்புறம் எப்படி இவர்கள் உள்ளே சென்று சாகாமல் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார்கள்? 
  • ஆண்டவர் ஆசரிப்புக் கூடாரத்தையே இப்போது இல்லாமல் ஆக்கப் போகிறார். 
  • அவ்வளவு கோபத்தில் இருக்கிறார். 
  • அதனால் அந்த சமயம் அமைதியாக இருக்கிறார். 
  • போங்க, போனப் பிறகு உங்களை அடிக்கிறேன் என்று. 
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
 -1 சாமுவேல் 4 : 21

தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.  
 -1 சாமுவேல் 4 : 22
  • தேவனுடைய பெட்டியை பெலிஸ்தர் பிடித்துக் கொண்டு போனார்கள்.
  • பொதுவாக இஸ்ரவேல் ஜனங்களே, தேவனுடைய பெட்டியை தொட முடியாது. 
  • ஆனால் புறஜாதியார் வந்து பிடித்துக் கொண்டு போகிறார்கள். 
  • இந்த தடவை பெலிஸ்தியரை ஆண்டவர் அனுமதிக்கிறார். ஏன்?
  • இஸ்ரவேல் கர்த்தருடைய பெட்டியை அவமதிச்சபடியினால் இஸ்ரவேலுக்கு புறம்பா அந்தப் பெட்டி போய், அவர்கள் மகிமை இல்லாமல் இருப்பதை உணர வேண்டும் என்பதற்காக இதை அனுமதிக்கிறார். 
  • ஆண்டவர் பழைய ஏற்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் அப்படி செய்து இருக்கிறார். 
  • அடிக்க வேண்டியவர்களை அடிக்காமல் விட்டு இருக்கிறார் பாடங்களை படிச்சு கொடுக்க. 
1 சாமு 6:
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
 -1 சாமுவேல் 5 : 1

கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.
 -1 சாமுவேல் 6 : 1
  • இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணுகிறார்கள். 
  • ஆனால் அவர்கள் தோற்கிற மாதிரியான சூழ்நிலை. 
  • ஆண்டவரின் கை நம் மீது இல்லை என்று அறிந்து இவர்கள் ஏலியின் மகன்மார் ஒப்னே, பினெகாஸ் என்பவர்களின் உதவியுடன் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்து எடுத்து யுத்தம் நடக்கிற இடத்திற்கு கொண்டு போகிறார்கள். 
  • அவர்களுடைய நினைப்பு என்னவென்றால் கர்த்தருடைய பெட்டி வந்தால் வெற்றி வரும் என்று. 
  • அதேப் போல தான் இன்றும் பல பேர் பைபிளை தலைமேட்டில் வைத்து தூங்குகிறார்கள். 
  • ஆனால் பெலிஸ்தர் இஸ்ரவேலை தோற்கடித்து, ஒப்னே, பினெகாஸையும் கொன்று, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் பிடித்துக் கொண்டு போய் விட்டான். 
  • அப்போது ஆண்டவர் பெலிஸ்தரை கொலை செய்யவில்லை. 
  • ஆனால் கொப்புளங்கள் வர வைத்தார். 
  • பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வந்து தங்களுடைய தாகோன் என்ற பிரமாண்ட சிலை கொண்ட கோயிலில் வைத்தார்கள். 
  • மறுநாள் வந்து பார்த்தால் அவ்வளவு பெரிய தாகோன் சிலை அப்படியே குப்புற விழுந்து கிடந்தது பெட்டிக்கு முன்னால். 
  • மறுபடியும் கஷ்டப்பட்டு அதை நிமித்தி வைத்து விட்டார்கள். 
  • மறுநாள் வந்து பார்த்தால் அந்த தாகோன் சிலை கை, கால் எல்லாம் வேறு வேறாக உடைந்து கிடக்கிறது. 
  • அதற்கு பிறகு பெட்டியை எடுத்துக் கொண்டு வேறப்பக்கம் வைத்து விட்டு, வாசலை மாற்றி விட்டார்கள். 
  • அந்த சிலை விழுந்து கிடந்த இடத்தில் மிதிக்கக் கூடாது என்பதாற்காக. 


  • அப்போது மறுபடியும் அந்தப் பெட்டி இருந்த இடத்தில் அனைவருக்கும் கொப்புளங்கள் வந்தது.
  • மறுபடியும் அந்தப் பெட்டி வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
  • அங்கும் அனைவருக்கும் கொப்புளங்கள் வந்தது.
  • மொத்தம் 5 இடத்திற்கு கொண்டு போனார்கள் 7 மாதத்திற்குள்ளாக. 
  • அந்தப் பெட்டி பெலிஸ்தியருக்கு ஒரு சித்ரவதையாக இருந்தது. 
  • கடைசியில் இனி இந்தப் பெட்டியை நாம் வைத்திருப்பது நல்லதல்ல. 
  • எனவே, ஒரு புது இரதத்தைச் செய்து அந்த 5 இடங்களின் சார்பாக, 5 சுண்டெலி தங்கத்தில் செஞ்சு, அந்த கொப்புளங்கள் மாதிரியும் செஞ்சு அந்த வண்டியில் வைத்து பரிகாரம் பண்ணி அந்த வண்டியில் கறவை மாடுகளை கட்டி அனுப்பினார்கள்
  • அனுப்பிவிட்டு பெலிஸ்தியருடைய தலைவர்கள் பின்னாலயே சென்று பார்க்கிறார்கள். 
  • இப்போது அந்த வண்டி இஸ்ரவேலுக்குள் நுழைந்து பெத்சிமேஷ் என்ற இடத்தில், ஒருவனின் தோட்டத்தில் வந்து அந்த வண்டி நின்று விட்டது. 
  • பெத்சிமேஷ் மனிதர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு, ஆண்டவர் நம்மை மன்னித்து விட்டார் என்று சொல்லி அந்த வண்டியையே எடுத்து, அங்கு இருந்த மரத்தை வெட்டி, அதுலயே விறகு செய்து அந்த மாடுகளையே வெட்டி ஆண்டவருக்கு பலி கொடுத்தார்கள். 
  • நன்றி செலுத்தினார்கள்.
  • எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆண்டவர் நம் தேசத்தை மன்னித்து விட்டார் என்று. 
  • ஆனால் இப்போது சீலோவுக்கு கொண்டு போக முடியாது. ஏன்?
  • பெட்டியை பிடித்தவுடன் பெலிஸ்தியர் சீலோவுக்கு வந்து ஆசரிப்பு கூடாரத்தை எரித்து விட்டார்கள். 
  • இதெல்லாம் 1 சாமு 5, 6 ல் கொடுக்கப்பட்டுள்ளது. 
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.
 -1 சாமுவேல் 6 : 12

பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
 -1 சாமுவேல் 6 : 13

அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
 -1 சாமுவேல் 6 : 14

லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
 -1 சாமுவேல் 6 : 15

ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
 -1 சாமுவேல் 6 : 19
  • உள்ள என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று நினைக்கிறார்கள். Over Excited
  • அந்த நேரம் 3-4 லட்சம் மக்கள் அங்கு கூடினார்கள். 
  • ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்.
  • இஸ்ரவேலர்கள் கர்த்தர் நம்மை மன்னித்து விட்டார் என்று நினைக்கும் வேளையில் இது நடக்கிறது. 
  • சீலோவில் ஆசரிப்பு கூடாரம் இல்லாததினால் அங்கும் கொண்டு செல்ல முடியாது. 
  • பெத்சிமேஷ்-கும், எருசலேமிற்கும் நடுவில் லேவியர்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பட்டணம் இருக்கிறது. 
  • அது தான் கிரியாத்யாரீம். 
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
 -1 சாமுவேல் 6 : 20

கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.  

 -1 சாமுவேல் 6 : 21

  • அந்த லேலியர்களிடம் பெட்டியை எடுத்துக் கொண்டு போகும்படி சொல்லுகிறார்கள். 

அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
 -1 சாமுவேல் 7 : 1
  • கீரியாத்யாரீமில் இருக்கிற அபினதாப் யார்?
  • அவர் ஒரு ஆசாரியன். 
  • அவருக்கு 2 மகன்மார் இருந்தார்கள்.
  • அதில் மூத்த மகனுடைய பெயர் எலெயாசார். 
  • அந்த பெட்டியை அபினதாபின் வீட்டில் கொண்டு வந்து வைத்து, அதை காப்பதற்கு எலெயாசாரை பரிசுத்தப்படுத்துகிறார்கள். 
  • 20 வருடங்கள் அந்தப் பெட்டி அபினதாபின் வீட்டில் இருந்தது. 
  • ஆனால் அந்த 20 வருடமும் எந்த பிரச்சனையும் இல்லை. 
  • எல்லோரும் பயந்து நடந்து கொண்டார்கள்.
3 விஷயங்கள்:
  • ஆசரிப்பு கூடாரம் இப்போது இல்லை.
  • உடன்படிக்கைப் பெட்டி அபினதாபின் வீட்டில் இருக்கிறது.
  • எலெயாசார் பெட்டியை காக்க நியமிக்கப்பட்டிருக்கிறான். 
பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
 -2 சாமுவேல் 6 : 1

கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,
 -2 சாமுவேல் 6 : 2
  • இங்கு பாலை யூதா என்று சொல்லப்படுவது கீரியாத்யாரீம். 
  • தாவீதும், அவனோடு கூட 30,000 பேரும் போகிறார்கள். 
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
 -2 சாமுவேல் 6 : 3
  • தாவீது தேவனுடைய இருதயத்திற்கு அடுத்தவன் (so close) என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • ஆபிரகாம் - friend of God. 
  • மோசே - முழு இஸ்ரவேலிலும் மோசேயைப் போல எனக்கு உண்மையுள்ளவன் இல்லை. (எண் 11)
  • எலியா - பரிசுத்தவான்
  • ஏனோக்கு, நோவா, ஏசாயா இவர்கள் அனைவரையும் விட தாவீது ஆண்டவரோடு நெருக்கம்.
காரணம் - why he is so close to God? 
  • தாவீதுக்கு ஆண்டவர் ஒரு தீர்க்கத்தரிசியை அனுப்பி இந்த தப்பை செய்து விட்டாய் என்று சொன்னால், reasons சொல்லாம, உடனே மனந்திரும்புவார். 
  • பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள். காரணம் சொல்லுவார்கள், situation அப்படி னு சொல்லுவாங்க.
  • தாவீதை ஆண்டவர் ராஜாவாக அபிஷேகம் பண்ணின பிறகும், அவர் எந்த மேட்டிமை, பெருமையும் இல்லாமல் normal ஆக இருந்தார். மனத் தாழ்மை. 
தாவீது செய்த தவறு:
  • தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்தது சரி. 
  • ஆனால் கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறை தவறு. 
  • புது இரதத்தில் ஏற்ற கொண்டு வருவது சரியான முறை அல்ல. 
  • அது பெலிஸ்தயர் செய்த முறைமை. 
  • அதை follow பண்ணுறாங்க. 
  • அது தவறு. 
  • ஏனென்றால் அவர்கள் சாமிக்கு அப்படி தான் அவங்க செய்வாங்க.
  • அவர்களை நம் ஆண்டவர் ஒன்றும் சொல்லவில்லை.
  • ஏனென்றால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. 
  • சுலபம், கவர்ச்சி, modern.
  • லேவியராகமத்தின்படி கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர்கள் தான் தூக்கி கொண்டு போக வேண்டும். 
  • அப்படி தான் இப்போதும் மக்கள் கிறிஸ்தவரல்லாதவர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிக்கின்றனர். 
Hallelujah கோஷம் எப்படி வந்தது?
  • பிரபு பதா என்பவர் 1963 ல் Hare Krishna movement னு ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்.
  • 1965 ல் Beatles என்ற English Music group (4 members), அவர்கள் இந்தியாவிற்கு போன போது இந்த பக்தி வேதாந்த சுவாமி பிரபு பதா (A. C. Bhaktivedanta Swami Prabhupada), The founder of Hare ram, Hare krishna movement in India, அவரின் teachings னால கவரப்பட்டு அவர்கள் Hallelujah Hare krishna என்று ஒரு song release செய்தார்கள். 
  • அது trend ஆக போனது Hippie culture 1970 ல் தொடங்குகிற வரைக்கும்.
  • அந்த Beatles மூலமாக England கும், America கும் பரவினது. 
  • அந்த system  தான் அமெரிக்க missionaries மூலமாக ஆசியாவிற்கு வந்தது. 
  • Hallelujah என்பது ஒரு புனிதமான வார்த்தை. அதை உச்சரிக்கும் போது பயத்துடன் சொல்ல வேண்டும். 
2 சாமுவேல் 6:
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
 -2 சாமுவேல் 6 : 4

தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.
 -2 சாமுவேல் 6 : 5

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
 -2 சாமுவேல் 6 : 6
  • யார் இந்த ஊசா?
  • யாருடைய வீட்டில் பெட்டி இவ்வளவு நாள் இருந்ததோ, அவருடைய மகன்.
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
 -2 சாமுவேல் 6 : 7

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
 -2 சாமுவேல் 6 : 12
  • ஊசாவை கர்த்தர் அடித்தவுடன், தாவீது பயந்து பெட்டியை இன்னொரு ஆசாரியனுடைய வீட்டில் வைத்தான். 
  • அந்த ஆசாரியனின் பெயர் ஓபேத்ஏதோம். 
  • 3 மாதம் கழித்து தாவீதின் நகரமான சீயோனுக்கு கொண்டு வந்தார்கள் .
தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.
 -2 சாமுவேல் 6 : 14

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.  
 -2 சாமுவேல் 6 : 23
  • தாவீது நடனமாடும் போது அவனுடைய ஏபோத் தான் கீழே விழுந்தது.
  • அதைப் பார்த்து அவன் மனைவி மீகாள் அவனை அவமதிக்கிறாள். 
  • அவள் அவனை தேவனுடைய தீர்க்கத்தரிசி என்று பார்க்காமல் தன்னுடைய புருஷனாக பார்த்தாள்.
  • அது தான் பிரச்சனை. 
ஊசாவை ஏன் ஆண்டவர் அடித்தார்:

அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
 -1 சாமுவேல் 7 : 1
  • 20 வருஷம் அபினதாபின் வீட்டில் இருக்கும் போது அந்தப் பெட்டி காக்க நியமிக்கப்பட்டிருந்தவன் அபினதாபின் மூத்த மகன் எலெயாசார். 
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
 -2 சாமுவேல் 6 : 3
  • ஊசா இளைய குமாரன். எலியேசரின் தம்பி
  • ஏன் எலியேசரை பற்றி இங்கு பேசவே இல்லை. 
  • அகியோ என்றால் அவனுடைய அண்ணனும் என்று அர்த்தம். 
  • ஊசா தன் அண்ணனை விட பிரபலம், active ஆ, எல்லாத்துலயும் தலையிட்டு கொண்டு, முந்திரிக்கொட்டை மாதிரி, திமிரா இருப்பான்.
  • எனவே அவன் பெயரை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. 
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
 -2 சாமுவேல் 6 : 4
  • எலெயாசார் பெட்டிக்கு முன்னால் நடக்கிறான். 
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.
 -1 நாளாகமம் 15 : 13
  • நாம் தவறு செய்து விட்டோம் என்று தாவீது சொல்கிறார். 
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
 -2 சாமுவேல் 6 : 6
  • ஊசா பெட்டிக்கு பக்கத்தில் நடந்து போகிறான்.
  • நியாயமாக பார்த்தால் எலேயாசார்  தான் பக்கத்தில் நடக்க வேண்டும். 
  • தன் திமிர்னால பெட்டிக்கு பக்கத்தில் நடக்கிறான்.
  • தொட்டா சாவோம் என்று தெரிந்து ஏன் தொடுகிறான்.
  • துணிவு. அது எப்படி வந்தது?
  • பெலிஸ்தியர்கிட்டயே பெட்டி போய்ட்டு வந்து விட்டது என்ற துணிவு. 
  • அந்த 50,000 பேர் செத்தது கூட 20 வருடங்களுக்கு முன்பு.
  • போலியான வறட்டு தைரியம் எதினால் வருகிறது பரிட்சயம் (over familiarity).
  • நாமும் கிறிஸ்தவத்துல உள்ள வரும் போது எப்படி இருந்தோமோ, அதே மாதிரியே கடைசி வரை இருக்க மாட்டோம். 

ஆரோனின் புத்திரரையும்,

 -1 நாளாகமம் 15 : 4


லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,

 -1 நாளாகமம் 15 : 5

  • ஆரோன் வம்சம்கோகாத் வம்சம்
  • ஆரோன் வம்சத்தில் வந்தவர்கள் தான் ஆசாரியர்கள்.
  • கோகாத் வம்சத்தில் வந்தவர்கள் உடன்படிக்கைப்பெட்டியை தூக்கி கொண்டு போகிறவர்கள். 
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
 -எண்ணாகமம் 4 : 15
  • மூடித் தீர்ந்தபின்பு - packing  -ஆரோன் புத்திரர்
  • எல்லாவற்றையும் தொடுகிற உரிமை இவர்களுக்கு உண்டு.
  • Transport பண்றது கோகாத் புத்திரர்.
  • தூக்கி கொண்டு போவது மட்டும் தான் இவர்களுடைய வேலை. 
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.  
 -1 நாளாகமம் 14 : 17
  • தாவீது தன் செயல்களில் தீர்க்கத்தரிசனம் உரைத்தார்.
  • சாலொமோனின் காலத்தில் யுத்தமே இல்லை, ஏன்?
  • அவனுடைய அப்பாவினிடத்தில் மற்றவர்கள் கொண்ட பயம். 

தாவீதின் கூடாரம்:

அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

 -1 நாளாகமம் 15 : 1

  • தாவீதின் கூடாரம் என்று ஒன்று உருவாக்கப்பட்டதே யாருக்கும் தெரியாது. 
  • மிக முக்கியமான ஒன்று. 
  • அந்தக் கூடாரத்தைப் பற்றி யூதர்களின் Midrash புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ளது. 

அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.

 -2 சாமுவேல் 6 : 8

  • விசனப்பட்டு - கோபம்அதிருப்தி, displeased, Not happy.

அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

 -2 சாமுவேல் 6 : 10

  • மனதில்லாமல், upset 
  • வேண்டாம், அதை கொண்டு வர வேண்டாம்
  • பாவம் அந்த பையன் செத்துட்டான்.
  • தாவீது மனமுடைந்து எருசலேமிற்கு வந்தார். 
  • ஆனால் அவருடைய தீர்க்கத்தரிசிகள் அவருக்கு பெட்டியை லேவியர்கள் தான் தூக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள்.
  • அதை அவர் உடனே கேட்டு கொண்டார். 
  • இப்போது சரியான முறையில் பெட்டியை கொண்டு வருவோம் என்று முடிவு செய்தான்.

பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

 -1 நாளாகமம் 15 : 2

  • மக்களுக்கு இவர் சொல்லிக் கொடுக்கிறார். 

அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

 -1 நாளாகமம் 15 : 3

  • இஸ்ரவேலையெல்லாம் - எல்லாரும்
  • தாண் முதல் பெயர்செபா வரை உள்ள அனைத்து இஸ்ரவேலர்களும் எருசலேமிற்கு வந்தார்கள். 

அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

 -1 நாளாகமம் 15 : 12

  • யூதா கோத்திரத்து தாவீது லேவியர்களுக்கே advice பண்றாரு. 

பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்த பிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.

 -1 நாளாகமம் 15 : 15

  • important 
  • மனந்திரும்புதல்
  • திருத்திசரியாக செய்ய

தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

 -1 நாளாகமம் 15 : 16

  • music choir introduce பண்ணுறாரு. 
  • முன்பு ஆடல், பாடல் இருந்தது.
  • ஆனால் அந்த ஆடல் பாடலை ஆராதனைக்குள் கொண்டு வந்தது தாவீது தான். 

தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.

 -1 நாளாகமம் 15 : 27

  • சணல் நூல் ஏபோத்
  • பிரதான ஆசாரியன் மட்டுமே அணிகிற உடை.
  • ஆரோன் and ஆரோன் வம்சம் மட்டுமே அணியக்கூடிய உடை. 
  • இவர் எப்படி அணிந்தார். 

இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

 -1 சாமுவேல் 23 : 1

  • கேகிலா - இஸ்ரவேலிய நகரம்
  • சவுல் ராஜா பொறுப்பு அந்த நகரத்தை காப்பது. 
  • ஆனால் தாவீது ஆண்டவரிடம் கேட்கிறார். 
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.
 -1 சாமுவேல் 23 : 2

அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
 -1 சாமுவேல் 23 : 4
  • தாவீது ஆண்டவரிடம் 2 முறை நேரடியாக கேட்கிறார்
  • Friendship 

அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

 -1 சாமுவேல் 23 : 6

  • அகிமெலேக்கு - ஆரோன் வம்சத்தில் வந்த பிரதான ஆசாரியன்.
  • அவருடைய மகன் தான் அபியத்தார்

தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

 -1 சாமுவேல் 23 : 9

  • ஏபோத்தை கொண்டு வா
  • கர்த்தரை துதிக்கிற நேரம் மாத்திரமே உடுத்தக் கூடிய ஒரு உடை. 
  • தேவனிடம் ஏதாவது கேட்டு தெரிஞ்சுக்க பிரதான ஆசாரியன் ஆண்டவரோடு பேச போகும் போது மட்டும் உடுத்துவார்கள்.
  • பிரதான ஆசாரியனின் தம்பி கூட ஏபோத்தை தொட முடியாது. 
  • Sacred thing. 
  • அப்படிப்பட்ட விஷயத்தை ஆண்டவர் சொல்லாம தாவீது தனக்கு உரிமை இல்லாத விஷயத்தை அபியத்தாரிடம் கேட்டு இருப்பாரா?
  • It’s not in Bible. 
  • இப்போது தாவீதி ராஜாவே கிடையாது.
  • ராஜாவால் தேடப்பட்டு வரும், தப்பியோடிக் கொண்டு இருக்கும் ஒரு ஆள் (fugitive)
  • அதேப் போல அபியத்தாரும் ஆண்டவர் சொல்லாம அவர் கொடுத்திருப்பாரா?

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

 -1 சாமுவேல் 23 : 10


கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

 -1 சாமுவேல் 23 : 11

  • பிரதான ஆசாரியன் ஆண்டவரிடம் பேசுகிற விதம்
  • ஆண்டவர் பதில் சொல்லுகிறார்.
  • இவர் செய்தது தவறாக இருந்தால் ஆண்டவர் எப்படி பதில் சொல்லி இருப்பார்
  • யூதா கோத்திரத்தை சேர்ந்த தாவீது பிரதான ஆசாரியனாக நிற்கிறார்.
  • யூதா கோத்திரத்தை சேர்ந்த இன்னொருவர் பிரதான ஆசாரியனாக செயல்படுகிறார். அது யார்?
  • இயேசு கிறிஸ்து.
  • தாவீது தன்னுடைய செயலில் தீர்க்கத்தரிசனமாக உரைக்கிறார், அவருடைய குமாரன் ஒருவர் வருவார். அவர் இதேப் போல யூதா கோத்திரத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பிரதான ஆசாரியராக காணப்படுவார். (Prophet in action, not a prophet in words)
  • யூதா கோத்திரத்தையும் சேராத, லேவி கோத்திரத்தையும் சேராத ஒரு பிரதான ஆசாரியன் இருந்தார். 
  • அவர் தான் மெல்கிசெதேக்கு.
  • அவர் ஒரு இஸ்ரவேலனே கிடையாது.
  • மெல்கிசெதேக்கு இயேசுவுக்கு அடையாளம் (எபிரேயர் 6-8)
  • அவர் ஒரு நீதியின் ராஜா, பிரதான ஆசாரியன். 

மெல்கிசெசேக்கு - தாவீது = 1000 years

தாவீது - இயேசு = 1000 years

  • சரியாக நடுவில் தாவீது இருக்கிறார். 
  • பிரமாண்டமான தீர்க்கத்தரிசி.
  • அதனால் தான் இயேசுவுக்கு தாவீதின் குமாரன் என்று பெயர்.  
  • ஏன் ஏபோத்து உடுத்தினார். 
  • தீர்க்கத்தரிசனமாக காட்டுவதற்கு. 

அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

 -1 நாளாகமம் 15 : 3


அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

 -1 நாளாகமம் 16 : 1


தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,

 -1 நாளாகமம் 16 : 2

  • ஜனத்தை ஆசீர்வதிக்க வேண்டியவர்கள் லேவியர்கள்.
  • ஆனால் இவர் ஆசீர்வதிக்கிறார். 

புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

 -1 நாளாகமம் 16 : 3

  • அப்பம்திராட்சைரசம் எல்லோருக்கும்(everyone) கொடுக்கப்பட்டது.
  • தீர்க்கத்தரிசனம். 
  • மெல்கிசெதேக்கும் ஆபிரகாமை சந்திக்கும் போது அப்பம், திராட்சைரசம் கொடுக்கிறார். 
  • இயேசுகிறிஸ்துவும் எல்லொருக்கும் அப்பமும், திராட்சைரசமும் கொடுக்கிறார். 
  • தாவீதும் அப்பம், திராட்சைரசம் கொடுக்கிறார். 
  • தாவீதின் கூடாரத்தில் தீர்க்கத்தரிசனம் காட்டப்படுகிறது.
  • சபையிலும் இது நடக்கிறது. 
சீயோன், மோரியா:


  • எருசலேம் என்பது பெரிய மலை.
  • அந்த மலையின் ஒரு பக்கம் சீயோன், இன்னொரு பக்கம் மோரியா.
  • ஒரே மரையினுடைய பாதி பாதி பகுதிகள்.
  • சீயோன் கும், மோரியாவுக்கும் எருசலேம் என்று சொல்லலாம்.
  • ஆனால் சீயோன் கு மோரியா என்றும், மோரியாவுக்கு சீயோன் என்றும் சொல்ல முடியாது. 
  • மோரியாவுக்கு தான் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கொண்டு வருகிறார். 
  • மோரியாவில் தான் ஓர்னானின் களம் இருக்கிறது.
  • மெல்கிசெதேக்கு ஆண்டவருக்கு பலி கொடுத்த இடமும் இதுவே.
  • தாவீது நன்றாக தெரியும் ஆண்டவருடைய கூடாரம் இருக்க வேண்டிய இடம் மோரியா என்று.
  • ஆனால் தெரிந்தும் அவர் சீயோனை தேர்வு செய்கிறார்.
  • ஏன்? ஆண்டவர் தான் சொல்லி இருப்பார். 
தாவீது உண்டாக்கின கூடாரம்:


  • தாவீது தீர்க்கத்தரிசனமாக வாழ்ந்தவர்.
  • அவர் செய்கிற ஆசரிப்பு கூடாரம் வெளிப் பிரகாரம் இல்லாத ஆசரிப்பு கூடாரம். 
  • Derek ஏ இல்லை.
  • அது தீர்க்கத்தரிசனம்.
தாவீதின் கூடாரத்தின் முதல் தீர்க்கத்தரிசனம்: 
  • பழைய ஏற்பாட்டில் தேவன் மோசே மூலம் உண்டாக்கின ஆசரிப்பு கூடாரத்தில் அப்படி இல்லை.
  • அது 150 அடி நீளம், 75 அடி அகலம்.
  • தாவீது உண்டாக்கினது பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலம் மாத்திரமே
  • அது 45 அடி நீளம், 15 அடி அகலம். 
  • புறஜாதியார் கூட உள்ளே வரலாம். 

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

 -யோவான் 3 : 16

  • இப்போது  இஸ்ரவேலன் மாத்திரமல்ல, எவன் வேண்டுமானாலும் வரலாம்.  
  • இஸ்ரவேலன் மட்டும் தான் வரலாம் என்று நிர்ணயிக்கிற Derek இப்போது இல்லை. 
  • இப்போது யார் வேண்டுமானாலும் பரிசுத்த ஸ்தலத்தின் வாசல் வரைக்கும் வரலாம். 
  • வெளியில் இருந்தே உடன்படிக்கைப் பெட்டியை பார்க்கலாம். 
  • chayim என்ற திரை கிடையாது. 
  • ஆனால் இப்படிப்பட்ட ஒன்று பழைய ஏற்பாட்டில் நடப்பது என்பது ஆச்சர்யம், பயங்கரம்.
  • அது புதிய ஏற்பாட்டில் அந்த தீர்ககத்தரிசனம் இயேசுவின் மூலம் நிறைவேறிடுச்சு. 
  • தாவீது ஆராதனை முறையையே மாற்றுகிறார். 
  • முன்பு ஆசாரிப்பு கூடாரத்திற்குள் பயமும், திகிலும், நடுக்கமும் தான் இருக்கும். 
  • ஆனால் தாவீது இப்போது சந்தோஷத்தை கொண்டு வருகிறார்.
  • சந்தோஷத்தின் நிமித்தம் பாட்டு ஆராதனை எல்லாம் தாவீது மூலமாக வந்தது. 
  • அந்த ஆராதனையோடு பெட்டியை கொண்டு வந்து கூடாரத்தின் நடுவில் வைக்கிறார்கள். 
  • சபையிலும் அப்படி தான். 
தாவீதின் கூடாரத்தின் 2வது தீர்க்கத்தரிசனம்: 
  • இப்போது நாம் உடன்படிக்கைப் பெட்டி இருக்கிற இடத்துக்கே வந்து விட்டோம். 
  • புறஜாதியராகிய நாம் ஆசாரியர்களாகி ஆசாரியர்கள் வரக் கூடிய இடத்திற்கு வந்து விட்டோம். 
  • கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தை விட்டு ஆசாரியர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு வந்தது. 
  • தேவ பிரசன்னம் அங்கு இருந்து நடுவில் வந்தது. 
  • நாம் வெளியில் இருந்து உள்ளே வந்தோம். 
  • தேவனும், நாமும் இப்போது சந்தித்து இருக்கிறோம். 
  • தேவனும், நாமும் சந்திக்கிற இடத்திற்கு பெயர் தான் தாவீதின் கூடாரம்
  • தாவீதின் கூடாரம் தான் சபை.
ஆசாரிய ஊழியம் செய்தவர்கள்:

ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

 -எண்ணாகமம் 3 : 2

  • ஆரோன் பிரதான ஆசாரியர்.
  • ஆரோன் செத்த பிறகு நாதாப் தான் பிரதான ஆசாரியனாக வந்து இருக்க வேண்டும். 

ஆசாரிய ஊழியம் செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.

 -எண்ணாகமம் 3 : 3


நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;

 -எண்ணாகமம் 3 : 4

  • நாதாப் அபியூவ் மரித்து போயினர்.
  • இப்போது ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டியவர்கள் எலெயாசார், இத்தாமார் மட்டுமே. 
எண்ணாகமம் 25 : 1-6 - இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம்.

அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்கையிலே பிடித்து,

 -எண்ணாகமம் 25 : 7



ஆண்டவருக்கு பயங்கர சந்தோஷம்:


Read எண்ணாகமம் 25: 8-12


அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

 -எண்ணாகமம் 25 : 13


பினெகாஸ் வம்சம் - பிரதான ஆசாரியன்:

  • இப்போது எலெயாசாரின் மகன் பினெகாஸ் வம்சத்திற்கு நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கையை கொடுப்பேன் என்று ஆண்டவர் சொன்றபடியினால். 
  • அந்த வம்சத்தில் வந்தவர்களே தொடர்ந்து பிரதான ஆசாரியர்களாக இருந்தனர். 
ஏலி - இத்தாமார்:
  • ஆனால் அந்த வம்சத்தில் ஒரு முறை ஆண்பிள்ளை இல்லாமல் போனது. 
  • எனவே இத்தாமார் வம்சத்தில் வந்த ஏலிக்கு பிரதான ஆசாரியப் பட்டம் கிடைத்தது. 
  • இந்த ஏலிக்கு 2 மகன்மார்கள், ஒப்னே, பினெகாஸ், 2 பேருமே கெட்டவர்கள். 
  • 2 பேருமே செத்து விட்டார்கள். 
சாமுவேல் - கோகாத்தியர்:
  • இப்போது ஆண்டவருக்கு தேவைப்படுகிறது ஒரு பிரதான ஆசாரியன். 
  • சாமுவேலை தேர்வு செய்கிறார்.
  • சாமுவேலின் பெற்றோர் பெயர் எல்க்கானா, அன்னாள்.
  • அவர்கள் கோகாத்தியர். 
  • கோகாத்தியர் - பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறவர்கள். 
  • ஆண்டவர் கோகாத்தியனான சாமுவேலை பிரதான ஆசாரியனாக நியமிக்கிறார். 
  • இந்த ஒரே ஒரு தடவை தான் கோகாத்திய வம்சத்தில் பிரதான ஆசாரியன் வந்தது. 
ஆசரிப்புக் கூடாரம் இல்லை:
  • துரதிஷ்டவசமாக அந்த சாமுவேலுக்கு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகிற பாக்கியமே கிடைக்கவில்லை. 
  • ஏன்? ஆசரிப்பு கூடாரமே இப்போது இல்லை. 
  • பெலிஸ்தியர்கள் அதை எரித்து விட்டனர். 
  • ஆனால் பிரதான ஆசாரியன் செய்கிற மற்ற வேலையெல்லாம் செய்யலாம். 
  • ராஜாவை ஏற்படுத்துவது போன்றவைகள். 
தாவீதின் கூடாரம்:
  • இப்போது முதல் தடவையா ஆசரிப்பு கூடாரம் வேறு விதத்தில் உருவாக்கப்படுகிறது. 
  • தாவீதின் கூடாரம். 
2 பேர் பிரதான ஆசாரியன்:
  • தாவீது 2 பேரை பிரதான ஆசாரியனாக நியமிக்கிறார்.
  • சாதோக், அபியத்தார்.
அபியத்தார் ஏபோத்து வைத்திருந்தார்:
  • அபியத்தாருக்கு எங்கு இருந்து ஏபோத்து கிடைத்தது.
  • கடைசியாக ஏபோத்தை வைத்திருந்தவர் ஏலி.
  • எனவே, எப்படியோ அந்த அபியத்தார் இத்தாமார், ஏலியின் வம்சமாக தான் இருக்க வேண்டும். 
தாவீது ஏபோத்தை வாங்கினார்:
  • தாவீது அதை அபியத்தாரிடம் இருந்து வாங்கி கொண்டார். 
சாதோக் - எலெயாசார் வம்சம்:
  • பிறகு தாவீது ஒரு ஆளை பிரதான ஆசாரியனாக ஏற்படுத்துகிறார். 
  • அவர் பெயர் தான் சாதோக். 
  • அவர் எலெயாசார் வம்சத்தை சேர்ந்தவர். 
  • 2 பிரதான ஆசாரியர்கள் இருந்தாலும், சாதோக்கிடம் தான் தாவீது கொடுத்தார்.
  • யாரிடம் இருக்க வேண்டுமோ, அவரிடம் ஏபோத்து சென்றது.
சாலொமோனை அபிஷேகம் பண்ணிது யார்?
  • தாவீது சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ணுவதற்கு யாரை தேர்ந்தெடுத்தார். 
  • சாதோக்.
  • ஆனால் அதோனியா என்ற இன்னொரு ராஜாவின் மகன் கள்ளத்தனமாய் போய் தன்னை ராஜாவாக பிரகடப்படுத்தினான். 
அதோனியாவை அபிஷேகம் பண்ணிது யார்?
  • அதோனியாவை ராஜாவாக அபிஷேகம் பண்ணப் போனது யார்? 
  • அபியத்தார். 
சாதோக் அபியத்தார் எந்த வம்சம்:

நாதாப் 

அபியூவ்

எலெயாசார் - பினெகாஸ் - சாதோக்

இத்தாமார் - ஏலி - அபியத்தார்


சாதோக் - 1 நாளாகமம் 6:1-8

யாக்கோபு

லேவி

கோகாத்

அம்ராம்

ஆரோன்

எலெயாசார்

பினெகாஸ்

அபிசுவா

புக்கி

ஊசி

செராகியா

மெராயோத்

அமரியா

அகிதூப்

சாதோக்


அபியத்தார் 


இத்தாமார்

ஏலி

பினெகாஸ்

அகிதூப்

அகிமெலேக்கு

அபியத்தார்

அகிமெலேக்கு



ஆதார வசனங்கள்:

சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.

 -1 சாமுவேல் 14 : 3


அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

 -2 சாமுவேல் 8 : 17


தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.

 -1 நாளாகமம் 24 : 3


லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

 -1 நாளாகமம் 24 : 6


யெசுவா - பிரதான ஆசாரியன்:

  • பாபி்லோனுக்கு அடிமைகளாக போய்விட்டு வந்தபின், கி.மு 516 ல் செருபாபேல் தேவாலயத்தை திருப்பி எடுத்து கட்ட வருகிறார். 
  • அவருடன் துணைக்கு வந்த பிரதான ஆசாரியர் யார்? யெசுவா. 
  • அவரும் பினெகாஸ் வம்சத்தை சேர்ந்தவர் தான்.
எருசலேமை கைப்பற்றினவனை முறியடித்த கதை:
  • கி.மு 167 ல் Antiochus Ephiphanus என்கிற கிரேக்க மன்னன் எருசலேமிற்கு வந்து, 
  • எருசலேமின் தேவாலயத்தை பிடித்து அதை அசுசி படித்தி 
  • Zeus என்கிற கிரேக்க பிசாசினுடைய சிலையை கொண்டு வந்து 
  • பன்றியையெல்லாம் கொண்டு வந்து பலியிட்டு எருசலேமை நாசமாக்கினார்கள். 
  • அந்த நேரத்தில் பிரதான ஆசாரியனாக இருந்த mathathias தப்பியோடி, 
  • பிறகு 2 வருஷத்திற்கு பிறகு அவர்கள் வந்து அந்த Antiochus Ephiphanus என்பவனை அடிச்சு நொறுக்கி,
  • மறுபடியும் எருசலேமை கைப்பற்றி பரிசுத்தப்படுத்தி, மறுபடியும் தேவாலய வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். 
ஹஸ்மோனியன் வம்சம்:
  • இதற்கு பிறகு அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்கள் இருக்கிறார்களே, அவர்களே இஸ்ரவேலை ஆளத் தொடங்கி விட்டார்கள்.
  • அவர்களுக்கு பெயர் தான் Hasmonian dynasty.
  • Dynasty என்றால் வம்சம். 
ராஜாக்கள் அல்ல:
  • இவர்கள் ராஜாக்கள் அல்ல. 
  • ஆனால் உள்ளுக்குள் மக்களை நடத்தினார்கள்.
  • இவர்கள் ஆசாரிய வம்சம்.
எந்த ஆசாரிய வம்சம்?
  • எல்லா ஆசாரிய வம்சமும் சேர்ந்த கலவை (mix).
  • ஆனால் ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர. 
  • சாதோக்கின் வம்சத்தைத் தவிர. 
  • ஏன் அவர்களை மாத்திரம் இவர்கள் சேர்க்கவில்லை.
  • ஏனென்றால் அவர்கள் சேரவில்லை. 
சாதோக் வம்சம்:
  • ஏனென்றால் சாதோக்கின் வம்சத்தில் வந்த ஆசாரியர்கள் மாத்திரம் பரசுத்தத்தை காக்க நினைத்தார்கள். 
  • மற்ற மனிதர்கள் ஆசாரியத்துவத்தை அரசியல் மாதிரி ஆக்கிவிட்டார்கள் என்ற upset. 
  • எனவே சாதோக்கின் வம்சத்தார் மட்டும் பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தார்கள். 
வெளிச்சத்தின் பிள்ளைகள் - Essenes:
  • அவர்கள் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டார்கள். 
  • வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று. 
  • அது தான் எசனோய். 
  • Essenes in English. 
எங்கு வாழ்ந்தார்கள்:
  • இவர்கள் சவக்கடல் பக்கத்தில் இருக்கிற பிரதேசத்தில் போய் குடியிருப்புகளை உண்டாக்கி, பேரீச்சம் பனைகளை உண்டாக்கி, ஆடு மாடுகளை வளர்த்து இவர்கள் மக்களோடு சேராமல் தனித்துவமாக வாழ ஆரம்பித்தார்கள். 
நியாயப்பிரமாணத்தை எழுதினார்கள்:
  • இவர்கள் நினைத்தார்கள், நிறைய அக்கிரமங்கள் இஸ்ரவேலில் நடப்பதால் என்றாவது ஒரு நாள் ஆண்டவர் இஸ்ரவேலை அடித்து நொறுக்குவார்.
  • எல்லோரும் அகதிகளாக ஓடித் திரிவார்கள். 
  • அப்படித் திரிகிறவர்களை ஆண்டவர் கூட்டி சேர்த்தால் அவர்கள் வாசிக்க அவர்களுக்கு ஒரு பைபிள் இருக்க வேண்டும் என்று சொல்லி இந்த Essenes தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கைகளால் பிரதியாக்கம் செய்ய ஆரம்பித்தார்கள். 
  • அவர்களின் முழு ஊழியமும் வேதத்தை எழுதுகிற ஊழியங்கள். 
சீயோனில் ஒரு பகுதியை வாங்குகிறார்கள்:
  • இவர்கள் ஒருநாள் கேள்விப்படுகிறார்கள் தாவீதின் நகரம் விலைக்கு வருகிறது என்று. 
  • இவர்கள் தாவீதின் நகரத்தை வாங்குகிறார்கள்.
  • சீயோனில் ஒரு முக்கியமான பகுதியை காசுக்கு வாங்குகிறார்கள். 
தாவீதின் கூடாரம் இருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள்:
  • அந்த இடத்தில் அவர்கள் தோண்டி கண்டுபிடிக்கிறார்கள். 
  • தங்கள் ஏடுகளின் மூலம் எங்கு தாவீதின் கூடாரம் இருந்தது என்று. 
  • அப்படியே பக்கத்தில் உள்ள கெதரோன் பள்ளத்தாக்குக்கு போகிறார்கள். 
புது கட்டிடம்:
  • அங்குதான் தாவீதினுடைய கல்லறை இருக்கிறது.
  • அந்த கல்லறையை தோண்டி தாவீதினுடைய எலும்புகளை எடுக்கிறார்கள். 
  • எடுத்து தாவீதின் எலும்புகளை ஒரு பெரிய பெட்டியில் வைத்து அதை தாவீதின் கூடாரம் இருந்த இடத்தில் வைக்கிறார்கள். 
  • வைத்து அதை சுற்றிக் கட்டுகிறார்கள். 
  • கட்டிஅதுக்கு மேலயும் ஒரு அறையை கட்டுகிறார்கள்.



இயேசுவின் பஸ்கா:
  • இயேசுவானவர் தன்னுடைய சீஷர்களுக்கு சொல்கிறார், 
  • நான்இராப்போஜனம் அருந்துவதற்கு ஒரு இடத்தை நான் select பண்ணி இருக்கிறேன். 
  • அதை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்றால் நீங்கள் போகும் போது தண்ணீர் குடம் தூக்கி கொண்டு போகிற ஒரு ஆணை காண்பீர்கள் என்றார்.
  • யூதர்களுடைய கலாச்சாரத்தில் ஆண்கள் தண்ணீர் குடத்தை தூக்க மாட்டார்கள். 
  • தண்ணீர் குடம் தூக்கின ஆண்கள் Essenes மாத்திரம் தான். 
  • அந்த தண்ணீர் குடம் தூக்கி கொண்டு வருகிறவனின் பின்னாலயே போ. 
  • அவன் ஒரு building குள்ள போவான். 
  • அங்குஇருக்கிற பெரியவரை சந்தித்து எங்களுடைய ஆண்டவர் இராப்போஜனம் அதாவது பஸ்காவை சாப்பிட இந்த இடத்தை கேட்கிறார் என்று. 
அந்த எசனோய் சம்மதித்தார்:
  • அந்த தண்ணீர் குடத்தை தூக்கி கொண்டு வந்தவனை சீஷர்கள் கண்டுவிட்டு பின்னாலயே போய் இந்த எசனோய் leader கடன் எங்களுடைய ஆண்டவர் பஸ்காவை இங்கு சாப்பிடலாமானு கேட்குறாரு என்று (மாற்கு, லூக்கா). 
  • உடனே அவர் சரி ok என்கிறார். ஏன்? 
  • அவருக்கு தெரியும் இதை கேட்கிறவர் தாவீதின் குமாரன் என்று. 
தாவீதின் குமாரன், தாவீதின் கூடாரம் இருந்த இடத்தில், தாவீதின் கல்லறைக்கு மேல உள்ள அந்த அறையில் பஸ்காவை கொடுக்க விரும்புகிறார். 

பிரதான ஆசாரியன்:

  • சாதோக் வம்சத்தில் வந்த அந்நேர பிரதான ஆசாரியன் யார்?
  • அன்னாள், காய்பா என்பவர்கள் இத்தாமார் வம்சம், 
  • எனவே ஆண்டவர் அவர்களைக் கணக்கெடுக்கவில்லை. 
  • உண்மையாக யார் பிரதான ஆசாரியனாக இருந்திருக்க வேண்டும். 
  • சீயோனில் இயேசுவுக்கு இராப்போஜனம் கொடுக்க அனுமதி கொடுத்தாரே அவர் தான் உண்மையாய் சாதோக்கின் வம்சத்தில் வந்த பிரதான ஆசாரியன்.
ஒரே இடம்:
  • தாவீது இஸ்ரவேல் மக்களுக்கு அப்பமும், திராட்சைரசமும் கொடுத்த இடமும் இதுவே. 
  • இயேசு தன் சீஷர்களுக்கு அப்பமும், திராட்சைரசமும் கொடுத்த இடமும் இதுவே. 
சபை உருவான இடம்:
  • இயேசு பரம் ஏறும் போது சொல்கிறார், 
  • எருசலேமை விட்டு போகாதீர்கள், 
  • நீங்கள் எல்லோரும் போய் காத்திருங்கள் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வருகிற வரைக்கும் என்கிறார். 
  • இப்போது அவர்கள் எங்கு இருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் அப் 2 ல் வருகிறார். 
  • அதே மேல்வீட்டில். 
  • கீழே தாவீதின் கல்லறை. 
  • தாவீதின் கூடாரம் இருந்த இடம். 
  • மேலே சீஷர்கள். 
  • அப்படியே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இறங்குகிறது. 
  • சபை ஆரம்பமாகிறது. 
அந்த 3000 பேர் யார்?
  • அந்த சபை ஆரம்பமாகிற போது இவர்கள் கத்துகிறதை கேட்டு எல்லோருமே குழம்பினார்கள்.
  • அப்போது பேதுரு வந்த நின்று அவர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிறார்கள். 
  • பிரசங்கத்தைக் கேட்ட 3000 பேர் இரட்சிக்கப்படுகிறார்கள். 
  • அந்த 3000 பேரும் சாதோக்கின் வம்சத்தைச் சேர்ந்த ஆசாரிய யூதர்கள். 
  • பல நாடுகளில் இருந்து வந்தவர்கள். 
  • ஏனென்றால் அவர்கள் மாத்திரம் அந்த அந்த இடத்திற்கு வருவார்கள்.
  • முதன்முதலில் சபை ஆரம்பமான இடம் சீயோன்.
மோரியா யூதர்கள் - சீயோன் புறஜாதியார்:
  • இப்போது புரிகிறதா ஏன் ஆண்டவர் மோரியா மலையில் தாவீதின் கூடாரத்தை வைக்க சொல்லவில்லை என்று. 
  • அது யூதர்களுக்கு. 
  • இது புறஜாதியாருக்கு. 
  • உலகத்தில் முதன்முதலில் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்த 3000 பேரும் சாதோக்கின் வம்சத்தை சேர்ந்த ஆசாரியக் கூட்டம். 
  • அவர்களை வைத்து தான் ஆண்டவர் சுவிசேஷத்தை உலகமெங்கும் அனுப்புகிறார். 
ஏன் பேதுரு சொல்கிறார்?
  • அவர்கள் எல்லோருமே ராஜரீக ஆசாரியர்கள். 
  • நீங்கள் எல்லோரும் ராஜரீக ஆசாரியர்கள் என்று சொல்வது பேதுரு தான், பேதுரு புத்தகத்தில்.
  • பவுல் இல்லை. 
  • ஏனென்றால் பேதுரு மூலமாகத் தான் சாதோக்கின் வம்சத்தார் கிறிஸ்தவர்களாக்கப்பட்டார்கள். 
  • எண் 25 ல் ஆண்டவர் பினெகாஸ்-கு சொன்ன தீர்க்கத்தரிசனத்தை அப் 2 ல் நிறைவேற்றுகிறார். 
தாவீது தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கப் போகிறான்:

பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.  
 -1 நாளாகமம் 16 : 43
  • ஆனால் சாமுவேல் புத்தகத்தில் தாவீது தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கப் போகையில் தான் மீகாள் அவனை கிண்டல் செய்கிறாள்.
உடன்படிக்கைப்பெட்டி - திரைகளின்கீழ்: 

தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

 -1 நாளாகமம் 17 : 1

  • கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது 
  • தாவீது சீயோனை தாவீதின் நகரமாக ஆக்கிக் கொண்டார். 
  • தாவீதின் அரண்மனைக்கும் மோரியாவின் மலைக்கும் கூட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது. 

ஆதியாகமம் 49:10 - சமாதானக் கர்த்தர்:

  • Shalom - சமாதானம்
  • Shiloh - சமாதானர்

கர்த்தரின் திட்டம்:

  • பெட்டியை கொண்டு வந்தது தாவீதினுடைய plan.
  • ஆனால் தாவீதின் கூடாரம் அவருடைய plan இல்லை.
  • ஆண்டவர் சொல்லி தான் அதை செய்து இருப்பார்.
  • ஏனென்றால் அது மோசேயின் கூடாரம் போன்று இல்லை. 
  • இயேசுவானவருக்கு அது தீர்க்கத்தரிசனமாக இருக்கிறது என்பது தாவீதிற்கே தெரிய வாய்ப்ப்பில்லையே. 

ஆலயத்தைக் கட்டவேண்டாம்:


நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.

 -1 நாளாகமம் 17 : 4


ஏன்?

  • தாவீதின் கையில் இரத்தக்கரை இருக்கின்றது என சொல்லி அவனை ஆலயத்தை கட்ட வேண்டாம் என்கிறார்.

கேள்வி:

  • அப்படியென்றால் அவர் தாவீதின் கூடாரத்தை உண்டாக்கின போது, 
  • ஏபோத்தை உடுத்தின போது, 
  • இஸ்ரவேல் மக்களுக்கெல்லாம் திராட்சைரசம் கொடுக்கும் போது, 
  • உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வந்து தாவீதின் கூடாரத்தில் வைக்கும் போது 
  • அவர் கையில் இரத்தக் கரை இல்லையா?

பதில்:

  • தேவாலயம் என்பது பழைய உடன்படிக்கை.
  • தாவீதின் கூடாரம் என்பது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நடந்தாலும் அது புதிய உடன்படிக்கையை காட்டுகிறது. 
  • தாவீதுக்கு பழைய ஏற்பாட்டு ஆலயம் கட்ட தகுதியில்லை. 
  • அது இயேசுவின் இரத்தத்தினால் ஆன புதிய உடன்படிக்கை. 
  • Pastors லாம் தவறு செய்யாமலா இருக்கிறார்கள்.
  • அவர்களை ஆண்டவர் மன்னிக்கிறார். 
  • தாவீதுக்கு தெரியாது தான் கட்டின தாவீதின் கூடாரம்  புதிய ஏற்பாட்டு ஆலயம் (சபை) என்று. 
  • பழைய ஏற்பாட்டில் 1000 வருடத்திற்கு முன்பே தாவீது தீர்ககத்தரிசனமாக ஒரு சபையை கட்டுகிறார். 
நடுவில் வாசம் பண்ணுவேன்:
  • எங்கே 2-3 பேர் என் நாமத்தில் கூடுகிறார்களோ அவர்கள் நடுவில் நான் வாசம் பண்ணுவேன் என்று சொன்னார். 
  • தாவீதின் கூடாரத்தின் நடுவில் தான் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டது . 
  • அது தீர்க்கத்தரிசனம்.  
  • தாவீது இருக்கிற வரைக்கும், தாவீதின் கூடாரமும் இருக்கும். 

40 வருடங்கள்: 

  • தாவீது இறந்த பிறகு, சாலொமோன், தான் ராஜாவான பிறகும் 7 வருடங்கள் ஆலயத்தைக் கட்டவில்லை.
  • அரண்மனைகளெல்லாம் முதலில் கட்டினார் 
  • ஆண்டவருக்கு 40 என்பது ஒரு முக்கியமான இலக்கம். 
  • அதனால் தான் மோசே, எலியா மற்றும் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருக்கிறார்கள். 
  • அதனால் தான் இஸ்ரவேல் ஜனங்கள் 40 வருடங்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணுகிறார்கள். 
  • அது ஒரு அடையாளம். 
  • அடிமைத்தனத்தில் இருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நுழைவதற்கான அடையாளம். 
  • இரட்சிக்கப்பட்ட நாளிலிருந்து நாம் பரலோக கானானுக்கு போகிற வரைக்கும், 
  • சபை அப் 2 ம் அதிகாரத்தில் தொடங்கி, சபை பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுடன் சபை முடிவடையும். 
  • அந்த இடைப்பட்ட காலத்திற்கு அடையாளரீதியான காலம், வனாந்தர பிரயாணத்தின் காலம். 
  • 40 வருடங்கள் அடையாளரீதியாக சபை இருக்கிறது. 
  • தாவீது கட்டின அந்த கூடாரம் சபையின் அடையாளமாக இருந்தால் அந்த கூடாரம் எத்தனை வருஷம் இருக்கணும். 
  • 40 வருடங்கள். 
  • அப்போ தாவீது தான் ராஜ்யபாரம் பண்ணி 7 வருடங்களுக்கு பிறகு அதை கட்டினார் என்றால்
  • அதில் இருந்து தாவீது 33 வருடம் அரசாளுகிறார்.
  • அப்போ சாலொமோன் ராஜாவான உடனே ஆலயத்தை கட்டி இருந்தால் 33 வருஷம் தான் ஆகி இருக்கும். 
  • ஆனால் சாலொமோன் 7 வருஷம் சென்று கட்டுகிறதினால் தாவீதின் கூடாரம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து முடிவடையும் நாள் வரையிலான அந்த காலம் 40 வருடங்கள். 
  • உண்மையான சபையின் அடையாளம் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு 40 வருஷம் தாவீதின் கூடாரத்தை வைத்து இருக்கிறார். 
  • தாவீது, சாலொமோன் கு இதெல்லாம் தெரியாது.
  • தெரியாமலேயே ஆண்டவருக்கு கீழ்ப்படியும் போது ஆண்டவருடைய பெரிய திட்டத்திற்கு கீழ்ப்படிந்து கொண்டு வருகிறார்கள். 

3 வது ஆலயம் முக்கியத்துவம்:

  • பிறகு அனைவருக்கும் தேவனுடைய ஆலயம் மீது கண் போனது. 
  • துரிதமாக கட்டி முடித்து சீயோனில் இருந்த உடன்படிக்கைப் பெட்டியை அங்கு கொண்டு போனார்கள். 
  • தேவனுடைய மகிமை வந்தது. 
  • அப்போது முற்றிலும் அனைவரும் தாவீதின் கூடாரத்தை மறந்து விட்டனர். 
  • இதுவும் ஒரு தீர்க்கத்தரிசனம் தான். 
  • கடைசி காலத்தில் சபை எடுத்துக்கொள்ளப்பட்டவுடன் எருசலேமில் தேவாலயம் திறக்கப்படும். 
  • 3 வது ஆலயம். எருசலேம் தேவாலயம் கட்டி முடித்தவுடன் எல்லோருடைய ஆர்வமும் அங்கு போய்விடும். 
  • சபையை எல்லோரும் மறந்து விடுவார்கள். 
ஏசாயா மற்றும் ஆமோஸ் தீர்க்கத்தரிசனம்:
  • தாவீதின் கூடாரம் மறக்கப்பட்டு போய் 300 வருடத்திற்கு பிறகு ஏசாயா வருகிறார். 

கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.

 -ஏசாயா 16 : 5

  • கிருபையின் காலம் - புதிய ஏற்பாட்டு காலம்
  • ஒருவர் - இயேசு 

ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,

 -ஆமோஸ் 9 : 11 


அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

 -ஆமோஸ் 9 : 12

  • அந்நாளிலே - கடைசி காலத்தில்

2 ராஜ்யங்களுக்கும் தீ்ர்க்கத்தரிசனம்:

  • யூதா ராஜ்யத்திற்கு தீர்க்கத்தரினம் உரைத்த ஏசாயா மூலமாயும், 
  • அதே காலத்தில் யூதாவை சேர்ந்தவராக இருந்தாலும் வடக்கு ராஜ்யத்திற்கு தீர்க்கத்தரிசனம் உரைத்த ஆமோஸ் மூலமாகவும் 
  • தாவீதின் கூடாரத்தை ஆண்டவர் ஸ்தாபிப்பார் என்று தீர்க்கத்தரிசனம் சொல்லப்படுகிறது. 
அப்போஸ்தலர் 15:

அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

 -அப்போஸ்தலர் 15 : 2

  • தலைமை சபைக்கு போகிறார்கள். 

மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.

 -அப்போஸ்தலர் 15 : 7


அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.

 -அப்போஸ்தலர் 15 : 13

  • இப்போது யாக்கோபு பேசத் தொடங்குகிறார். 

தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குச் கடாட்சித்தருளினவிதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.

 -அப்போஸ்தலர் 15 : 14

  • சிமியோன் என்பது சீமோன் அதாவது பேதுரு.

தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்:


எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,

 -அப்போஸ்தலர் 15 : 16


நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

 -அப்போஸ்தலர் 15 : 17


ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,

 -ஆமோஸ் 9 : 11 


அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

 -ஆமோஸ் 9 : 12


ஒரே period:

  • ஆமோஸ் புத்தகத்தில் வாசிக்கப்பட்ட தீர்க்கத்தரிசனம் அப்போஸ்தலர் புத்தகத்தில் நிறைவேறுகிறது. 
  • ஆமோஸ் கி.மு 700 ல் வருகிறார். 
  • ஏசாயா மற்றும் ஆமோஸ் ஒரே காலகட்டத்தில் தான் வருகிறார்கள்.  
prophecy:
  • 300 வருஷத்திற்கு முன் உண்டாக்கப்பட்ட தாவீதின் கூடாரம் இன்னும் 700 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் உண்டாக்கப்படும். 

ஆலயத்தின் மீது கவனம்:

  • இப்போது சபை உருவாகிவிட்டது.
  • முன்பு புறஜாதியார் DEREK வழியாக வர முடியாது. Emet கிட்டயும் வர முடியாது. 
  • ஆனால் தாவீதின் கூடாரத்தில் புறஜாதியார் அந்த இடம் வரை வரலாம். 
  • சீயோன் மலையில் இருந்த தாவீதின் கூடரத்தை எல்லாரும் மறந்து விடுவார்கள். 
  • இப்போது அனைவரின் கண்ணும் மோரியா மலையின் மீது இருக்கும். Al Axa, Al Amara பள்ளிவாசல்களுக்கு நடுவில் கட்டப்பட்டிருக்கிற ஆலயத்தின் மீது அவர்கள் கவனம் இருக்கும். 

மத்தேயு 1:1 விளக்கம்:


ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

 -மத்தேயு 1 : 1











Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4