வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம்

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 6 : 1
  • இயேசு கிறிஸ்து முதல் முத்திரையை உடைக்கிறார். 
  • நான்கு ஜீவன்களில் ஒரு ஜீவன், “நீ வந்து பார்” என்று யோவானிடம் சொன்னது. 
  • இயேசு கிறிஸ்துவின் 4 பரிமாணங்களை வெளிப்படுத்துகிறதான தேவதூதர்கள் தான் 4 ஜீவன்கள். 
  • சிங்க முகம் இருக்கிற முதலாவது ஜீவன் தான் யோவானிடம் பேசியது. 
  • சிங்க முகம் உள்ள அந்த ஜீவன் இயேசுவை ராஜாதி ராஜாவாக காண்பிக்கிறது. 
  • அதாவது இயேசு ஒரு ராஜாதி ராஜாவாக அந்த முத்திரையை உடைக்கிறார். 
  • முதலாவது முத்திரை உடைக்கப்படுகிற நேரத்திலே, இயேசு கிறிஸ்து ஒரு ராஜாதி ராஜாவாக உடைக்கிறார். 

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
 -வெளிப்படுத்தல் 6 : 2
  • ஒரு வெள்ளைக்குதிரையை நாம் காண்கிறோம். 
  • அந்த வெள்ளைக்குதிரையின் மேல் ஒருவன் அமர்ந்திருக்கிறானாம். 
  • அவனுடைய கையிலே ஒரு வில் இருக்கிறது. 
  • அவனுடைய தலையிலே ஒரு கிரீடம் இருக்கிறது. 
  • சரியாக பார்க்கப் போனால் ராஜாவாகிய இயேசுவின் தலையில் தான் கிரீடம் இருக்க வேண்டும்.  
  • அவன் தலையிலே கிரீடம் இருந்தது என்று இங்கு இல்லை. 
  • அவனுக்கு கிரீடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று இருக்கிறது. 
  • யார் அவனுக்கு அந்த கிரீடத்தைக் கொடுத்தது? இயேசு கிறிஸ்து. 
  • சரித்திரத்திலே முதல் முறையாக இந்த பூமியை சகல விதத்திலேயும் நியாயந்தீர்ப்பதற்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்படுகிறது 
  • அப்படியென்றால் அவன் யார்? 
  • இயேசுவுக்கு பதிலாக ராஜரீகம் பண்ணுகிற ஒருவன். 
Antichrist:
  • கிரேக்க மொழியிலே Anti என்று கொடுக்கப்பட்டுள்ளது. 
  • இரண்டு அர்த்தங்கள் உண்டு. 
  • ஒன்று எதிரான eg:Antibiotics 
  • இரண்டு பதிலாக 
  • Anti christos என்று சொல்லப்படுவது கிறிஸ்துவுக்கு விரோதமான
  • Anti christos என்று சொல்லப்படுவது இயேசுவுக்கு எதிரான என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. 
  • இயேசுவுக்கு பதிலான என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. 
  • அந்த வெள்ளைக்குதிரையின் மேல் அமர்ந்திருப்பவன் யார்? அந்தி கிறிஸ்து. 
  • கிறிஸ்துவுக்கு விரோதமாக மாத்திரமல்ல, கிறிஸ்துவுக்கு பதிலாகவும் இந்த பூமியை ஆட்சி செய்யப் போகிறவன். 
இப்போது - இயேசுவின் ஆட்சி:
  • இந்த பூமியை இப்போது ஆட்சி செய்து கொண்டிருப்பது இயேசு கிறிஸ்து. 
  • உலகத்திலே நடக்கிற விடயங்களை பார்த்து இது இயேசு ஆட்சி செய்வது போல தெரியவில்லையே என்று சொல்லக் கூடாது. 
  • இயேசு கிறிஸ்து ஆட்சி செய்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்திலேயே பிசாசு இவ்வளவு ஆட்டம் ஆடுகிறான் என்றால்,
  • இயேசு இந்த பூமியில் இருந்து விலகி இயேசு கிறிஸ்து தன்னுடைய அந்த அதிகாரத்தை அப்படியே அந்திக் கிறிஸ்துவுக்கு கொடுத்துவிட்டு போன பின்னர் என்ன இந்த பூமிக்கு நடக்கப் போகிறது. 
  • சபை எடுத்துக் கொள்ளப்படுகிற நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 
  • மத் 24 ல் உங்களுக்கு உபத்திரவம் வருகிறது என்று சொல்லப்படுவதனால் சபை அந்த உபத்திரத்திற்குள் போக வேண்டும் என்று தவறாக பிரசங்கிக்கிறார்கள். 
  • I am a Dispensational pre millennial pre rapture theorist. 
அம்பு இல்லை:
  • அவன் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி, கிரீடம் போட்டுக் கொண்டு, கையில் வில்லைப் பிடித்துக் கொண்டு வருகிறான். 
  • அதாவது ஒரு சமாதானத்தின் ராஜாவாக வருகிறான். 
  • வெள்ளை என்பது சமாதானத்தைக் குறிக்கும். 
  • ஒரு காரியத்தை நீங்கள் கவனித்தீர்களா? 
  • வில் இருக்கிறது, அம்பு இல்லை. 
  • வில் இருந்து அம்பு இல்லையென்றால் என்ன பிரயோஜனம்?
  • எதில் குறி பார்த்து எய்வீர்கள்? 
  • அதிலே என்ன தெரியுமா காட்டப்படுகிறது? 
  • அந்திக்கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து சொல்லுகிறான். 
  • இனி ஒருவரை ஒருவர் சண்டையிட மாட்டோம்,
  • இனிமேல் சமாதானமாக, ஒற்றுமையாக இந்த உலகத்திலே நாம் இருப்போம் என்று சொல்லுவான். 
  • திடீரென கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். 
  • அப்போது பூமியில் மீந்திருக்கிற ஜனங்கள் பயப்படுவார்கள். 
  • வேற்றுக்கிரக வாசிகள் (Alien) வந்து இந்த பூமியில் வாழ்கிற ஜனங்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என நினைப்பார்கள். 
  • ஐயோ, நம்மையும் அவர்கள் எடுத்துக் கொண்டு போய்விடுவார்களே! எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என நினைப்பார்கள். 
  • அப்போது தான் அந்திக்கிறிஸ்து இந்த முழு உலகத்திற்கும் சமாதானம் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுவான். 
  • அது தான் அவன் செய்யப் போகிற முதல் வேலை. 
  • முழு உலகமும் அவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படப் போகிறது. 
  • அப்படி நடக்கப் போகிற காரியங்களுக்கு ஒத்த விதத்தில் சில விஷயங்கள் காட்டப்படுகிறது. 
UNPKF
  • UNPKF - United Nations Peace Keeping Forces. 
  • இந்த ஐக்கிய நாடுகளின் சங்கத்திலே இருந்து சமாதானத்தை காத்துக் கொள்வதற்கு ஒரு இராணுவம் ஏற்படுத்தப்படுகிறது. 
  • சமாதானத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய இராணுவப் படை. 
  • அவர்கள் ஆயுதங்களோடு வருவார்கள். 
  • ஆனால் அவர்களுக்கு சுடுவதற்கு தடை. 
  • இஸ்ரவேலில், ஈரான், ஈராக் லும் இருக்கிறார்கள். 
  • அநேக யுத்தம் நடக்கிற நாடுகளில் இவர்கள் இருக்கிறார்கள். 
  • இரண்டு பேர் அங்கே சண்டை பிடித்துக் கொள்கிறார்களாம். 
  • அவர்களுக்கு நடுவில் போய் நீங்கள் அடித்துக் கொள்ள வேண்டாம் என்று நிறுத்துகிற ஒரு இராணுவம். 
  • ஆனால் இவர்களும் இராணுவங்களோடு தான் போகிறார்கள். 
  • ஏன்? 
  • வில் இருக்கிறது, அம்பு இல்லை. 
  • துப்பாக்கி இருக்கிறது, ஆனால் அவர்கள் அதை பயன்படுத்த முடியாது. 
  • ஏன் சமாதானத்தை கொண்டு வருபவன் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும். 
  • அது தான் அந்திக்கிறிஸ்துவினுடைய கிரியை.
  • அது போல தான் U.N Peace keeping forces கூட.
  • வில்லை கொண்டு வருவான், ஆனால் அம்பை கொண்டு வருவதில்லை.
  • ஆனால் அவன் ஜெயித்து கொண்டே போவான் என்று சொல்லப்படுகிறது. 
  • அந்த 7 வருடம் ஆரம்பிக்கப் போகிற நேரத்திலே முதலாவது அவன் சமாதானத்தை தான் கொடுக்கப் போகிறான். 

அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 6 : 3
  • பின்னால் வருகிற ஜீவனானது காளையின் முகம் கொண்டது, அது ஊழியக்காரனைக் குறிக்கிறது. 
  • அவன் முன்னாலே கிரீடம் போட்டு கொண்டு வருகிற அந்த அந்திக்கிறிஸ்துவினுடைய வேலைக்காரன். 

அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 6 : 4
  • முன்னாலே போகிறவன் சமாதானத்தை ஏற்படுத்துகிறான்.
  • அவனுக்கு பின்னாலே வருகிறவன் சமாதானத்தை எடுத்துப் போடுகிறான். 
  • முன்னாலே போகிறவன் வெள்ளைக் குதிரையில் போகிறான். 
  • அவனுக்கு பின்னாலே வருகிறவன் சிவப்பு குதிரையிலே வருகிறான். 
  • முன்னாலே போகிறவனுடைய கையில் வில் இருக்கிறது, அம்பு இல்லை. 
  • ஆனால் பின்னால் வருகிறவனுடைய கையில் பெரிய பட்டயம் இருக்கிறது. 
  • அந்திக்கிறிஸ்துவின் அதிகாரத்துக்கு கீழாக இரத்தம் சிந்துதல் நடைபெறும். 
  • வெளிப்புறமாக ஒரு சமாதானத்தை காண்பிப்பான்.
  • பின்னாலே ஒரு பெரிய இரத்தம் சிந்துதலை நடப்பிப்பான். 
  • அந்திக்கிறிஸ்துவுக்கு தன்னுடைய வார்த்தையால் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கொலை செய்யப்படுவார்கள். 

அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
 -வெளிப்படுத்தல் 6 : 5
  • தராசு சமத்துவத்தைக் காட்டுகிறது. 
  • அந்திக்கிறிஸ்து வந்து என்ன பேசுவான் என்றால்,
  • நமக்கு வேற்றுக்கிரக வாசிகள் என்ற எதிரி இருப்பதினாலே இந்த பூமியில் இருக்கிற நம்மிடத்திலே பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற அந்த வேற்றுமை நமக்கு வேண்டாம்.
  • எல்லாருக்கும் சமத்துவமாக எல்லாம் கொடுக்கப்படும். 
  • ஜனங்கள் எல்லாருக்கும் அது ஆசை. 
  • எல்லோருக்கும் எல்லாம் சமத்துவமாக கிடைக்கப் போகிறது. 
  • அந்திக்கிறிஸ்து பொருட்களின் உடைய விலையை நிர்ணயிப்பான். 

அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 6 : 6
  • யோவான் இந்த வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதுகிற காலகட்டத்திலே, ஒரு பணம் என்றால் ஒரு நாள் கூலி. 
  • ஒருவர் சாப்பிடுவதற்கு ஒரு படி கோதுமை வேண்டும். 
  • இந்த ஒரு படி கோதுமை என்பது வயிறு நிறைய சாப்பிடுவது அல்ல. 
  • ஓரளவு திருப்திப்படக் கூடிய வகையில் சாப்பிடுவது. 
  • இந்த 3 படி வாற்கோதுமை என்பது சாப்பிட்ட பின்னர் கொஞ்சம் போதாதது போல இருந்தால் சாப்பிடுவது.
  • இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிற அளவு. 
  • அதாவது ஒருவனுடைய ஒரு நாள் சம்பளம் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். 
  • ஒரு நேரம் சாப்பிடுவதற்கு.
  • அவன் இரண்டாம்முறை அதை எடுக்க வேண்டுமென்றால் இன்னொரு நாள் சம்பளம் அவன். செலுத்த வேண்டும். 
  • சாப்பாடு இல்லையென்று இல்லை. 
  • இருக்கிறது, ஆனால் அதனுடைய விலை பயங்கரமாக அதிகரிக்க போகிறது. 
  • 3 வேளை சாப்பிட வேண்டுமென்றால் 3 நாள் சம்பளத்தை கொடுக்க வேண்டும். 
  • ஒரு நேரம் மாத்திரம் தான் சாப்பிட முடியும். 
  • மின்சாரம் கட்டணம் செலுத்த முடியாது, தண்ணீர் கட்டணம் செலுத்த முடியாது, இப்படி பல. 
  • அந்திக் கிறிஸ்துவினுடைய ஆட்சி காலத்திலே மதுபானங்கள் எல்லாம் விலை குறையும். 
  •  சமைக்கிற எண்ணெய், வாகனங்களுக்கு பெட்ரோல் எல்லாம் விலை குறைவாக, ஏன் இலவசமாக கூட கிடைக்கும்.
  • அதாவது நாம் எண்ணெய் குடிச்சா உயிர் வாழ முடியும். 
  • அந்த காலத்தில் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் உயிர் வாழ முடியும் கொஞ்ச காலத்திற்கு. 
  • ஏழைகளுடைய வயிற்றை அடிக்கப் போகிறான்.

அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 6 : 7
  • நாலாம் ஜீவனான கழுகு பேசினது. 

நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 6 : 8
  • மங்கின நிறம் என்றால் பஞ்சம், வாதையை குறிக்கும்.
  • அப்போது ஜனங்களுக்கு நோய்கள் வர ஆரம்பிக்கும். 
  • மாவு வாங்க பணம் இருக்காது, ஆனால் மதுபானம் இலவசமாக கிடைக்கும். 
  • அத்தியாவசிய தேவைகளை கொடுக்காமல், அநாவசியமான தேவைகளை இலவசமாக கொடுக்கப் போகிறான். 
  • அந்த வேதனையை இல்லாமல் ஆக்குவதற்காக குடிக்க ஆரம்பிப்பார்கள்.
  • நோய்கள் வர ஆரம்பிக்கும்.
  • அதனிமித்தம் அநேக மக்கள் செத்துப் போவார்கள். 
  • முழு ஜனத்தொகையில் 25/100 இல்லாமல் போகப் போகிறது. 
  • இதெல்லாம் நடப்பதற்கு உலகம் இப்போது இருந்தே ஆயத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. 

அவர் ஐந்தாம் முத்திரையை உடைந்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 6 : 9
  • இந்த இடத்தில் நாம் பார்ப்பது, இரத்த சாட்சிக்காரர்கள்.
  • அதாவது தேவனுக்காக மரித்தவர்கள். 
  • தேவனுக்காக மரித்தவர்கள் பழைய ஏற்பாட்டிலும் இருந்தார்கள். 
  • புதிய ஏற்பாட்டிலும் இருந்தார்கள். 
  • சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் முதல் இரத்த சாட்சியாக மரித்தவர் ஸ்தேவான். 
  • யூதாஸ் மரித்த பின்னர் இயேசுவினுடைய சீஷர்கள் 11 பேர் மிகுதியாய் இருந்தார்கள். 
  • அந்த 11 பேரும் தேவனுடைய இரத்த சாட்சியாக தான் மரித்தார்கள். 
  • அநேகர் நினைக்கிறார்கள், இந்த வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதின யோவான் அவர் இயற்கையாக மரித்து போனார் என்று. 
  • அவரை இப்படி கொன்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. 
  • ஆனால் ரோமாபுரியின் ஏடுகளில் எழுதப்பட்டு இருக்கிறது.
  • பத்மு தீவில் இருந்து அவரை மறுபடியுமாய் கொண்டு வந்து கழுத்தை வெட்டி அவரை கொன்று இருக்கிறார்கள் என்று. 
  • இப்படி அநேகர் இயேசுவுக்காக மரித்தார்கள். 
  • இன்றும் மரிக்கிறார்கள். 
  • ISIS மூலமாக எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் தெரியுமா? 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் இவைகள் நடைபெறுகிறது. 

அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 6 : 10
  • இந்த சம்பவம் பலிபீடத்திலே நடைபெறுகிறது. 
  • பரலோகத்திலே ஒரு பலிபீடம் இருக்கிறதா? 
  • எருசலேமில் தேவாலயம் கட்டப்படுகிறது தானே!
  • இப்போதைக்கு இல்லை. 
  • எருசலேமில் தேவாலயம் கட்டப்படும். 
  • யூதர்களுக்கு மறுபடியுமாய் பலிகளை செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். 
  • உடன்படிக்கை பெட்டி மீண்டும் கிடைக்கும். 
  • எருசலேமில் தேவாலயமும், தேவாலயத்துக்குள் பலிபீடமும் கட்டப்படும். 
  • அங்கே தான் இந்த பலிபீடம் இருக்கிறது. 
  • அதாவது இந்த ஆவிகள் எங்கே இருந்து கூப்பிடுகிறதாம்?
  • பலிபீடத்தில் இருந்து, அதாவது பூமியிலே இருந்து. 
  • அப்படியென்றால் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் நடக்கிற காரணத்தால், சபை காலகட்டத்தில் மரித்த தேவசாட்சிக்காரர்கள் இவர்கள் அல்லவே.
  • இந்த இடத்தில் 2 விதமான குழுக்கள் இருக்கிறது. 
  • கிறிஸ்தவர்களாக சபையிலே இருந்து கொண்டு, பைத்தியம் ஆடுகிற கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் தானே!
  • தேவனுக்குள்ளாக உண்மையில்லை, பரிசுத்த வாழ்க்கையில்லை. சும்மா சபைக்கு போகிறார்கள், சும்மா ஜெபிக்கிறார்கள். 
  • கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு எந்த கிறிஸ்தவமும் அவர்களிடத்தில் இல்லை. 
  • சபையை இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளும் போது, அந்த நேரத்தில் ஆயத்தம் இல்லாமல் இருப்பவர்களை ஆண்டவர் விட்டுவிட்டு தான் போவார். 
  • அப்படி கைவிடப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்த 666 இலக்கத்தை எடுக்கக் கூடாது என நினைப்பார்கள். 
  • ஆனால் அந்திக்கிறிஸ்து அவர்களை கொல்லுவான். 
  • தேவ வசனத்துக்காக அந்த 7 வருடங்களுக்குள்ளாக அநேகர் கொல்லப்படுவார்கள். 
  • அந்த ஆவிகள் பரலோகத்துக்கு போக முடியாது. 
  • ஏன்? பரதீஸ் இல்லை.
  • தெசலோனிக்கே புத்தகத்தில் பவுல் எழுதியிருக்கிறார், மரித்த பரிசுத்தவான்கள் முதலில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று. 
  • பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், கிறிஸ்தவர்களாக கர்த்தருக்குள் மரித்த பரிசுத்தவான்களும் பரதீஸ் - ல் இருக்கிறார்கள். 
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் அந்த நாளிலே, பரதீஸில் உள்ள எல்லா ஆவிகளும் இந்த பூமிக்கு வந்து அவர்கள் மறுபடியுமாய் உயிர்த்தெழ ஆரம்பிப்பார்கள். 
  • அதன்பின்பு பரதீஸ் என்ற ஒன்று இல்லை. 
  • எனவே, அப்படிப்பட்ட ஆத்துமாக்கள் எருசலேம் தேவாலயத்து பலிபீடத்திலே வைக்கப்பட்டு இருக்கும். 
  • அந்த பலிபீடத்தின் கீழ் அறைகள் கட்டப்படுமாம். 
  • அந்த இடத்தில் இருந்து மகா சத்தமிட்டு கூப்பிடுகிறார்கள். 
  • அதற்கு என்ன பதில் கிடைத்தது என கீழேப் பார்ப்போம். 

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 6 : 11
  • வெள்ளை நிறம் 2 விதமான அர்த்தங்களைக் கொடுக்கும். 
  • பரிசுத்தமும், நீதியும். 
  • அங்கி என்றால் நீதிமான்களாக்கப்படுதல். 
  • அவர்களை ஆண்டவர் நீதிமான்களாக மாற்றினார். 
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் போது நாம் போகவில்லை என்றால், பின்பு ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் உண்டு போவதற்கு. 
  • அந்திக்கிறிஸ்துவினுடைய முத்திரையை எடுக்காமல் இருக்க வேண்டும். 
  • சபை, வசனம், பரிசுத்த ஆவி, இயேசு இவை அனைத்தையும் வைத்துக் கொண்டே நம்மால் ஒழுங்காக வாழ முடியவில்லை. 
  • பின்பு எதுவும் இல்லாமல் எப்படி பரிசுத்தமாக வாழ்வது? மிக கடினம். 
  • பலிபீடத்தின் மேல் இருந்து கூப்பிடும் ஆத்துமாக்களுக்கு கர்த்தர் பதிலளிக்கிறார். 
  • இன்னும் கொஞ்ச பேர் கொல்லப்படப் போகிறார்கள் இந்த 7 வருடத்திலே. 
  • அவர்களும் வரும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள் என்று சொல்லுகிறார். 

அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.
 -வெளிப்படுத்தல் 6 : 12
  • இப்போது பூமியில் நூற்றுக்கு இருப்பத்தைந்து சதவீதம் அழிக்கப்பட்டு விட்டது. 
  • அந்திக்கிறிஸ்துவின் காலத்திலே இந்த பூமியில் நடக்கப் போகிற சில இயற்கையான விடயங்களை குறித்து இங்கு சொல்லப்படுகிறது. 
  • ஒரு பெரிய பூமி அதிர்ச்சி உண்டாகிறது. 
  • பூமி அதிர்ச்சி அடிக்கடி உலகத்தில் வருகிறது. 
  • இந்த பூமி அதிர்ச்சி இதுவரை இந்த உலகம் காணாத மிகப் பெரிய பூமி அதிர்ச்சியாக இருக்கும். 
  • சூரிய கிரகணம் வரும் போது சூரியன் கருப்பு நிறமாக மாறும். 
  • ஆனால் இது ஒரு பெரிய பூமி அதிர்ச்சியுடன் சூரியன் காணாமல் போய்விடும். 
  • சந்திரன் இரத்தம் போல் ஆகப் போகிறதாம். 

அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
 -வெளிப்படுத்தல் 6 : 13
  • நட்சத்திரங்கள் பூமியிலே விழுந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. 
  • அதாவது எரி நட்சத்திரங்கள்.
  • இப்போதும் கூட எரி கற்கள் விழுகிறது.
  • அவை கீழே விழும் போது oxygen ஓடு சேர்ந்து எரிய ஆரம்பிக்கிறது. 
  • அதற்கு பேர் தான் Shooting star - வால் நட்சத்திரம் என்று சொல்லுவோம். 
  • அது அப்படியே அந்த oxygen ஓடு கலந்து எரிந்து கீழே விழுகிறது. 
  • அந்த கற்கள் ஒரு பெரிய கல்லாக இருந்தால் அவை எரிந்து முடிவடையும் முன்னரே பூமியில் விழும். 
  • அது விழும் இடத்தில் ஒரு பெரிய குழி உண்டாகி விடும். 
  • அப்படி விழுந்து தான் இந்த Dinosaur லாம் இல்லாமல் போனது. 
  • அப்படி தான் சோதோம் கொமோரா இல்லாமல் போனது. 
  • இப்போ இந்த முறை என்ன நடக்கப் போகிறதென்றால் அத்தி மரத்தில் இருந்து அத்திப் பழங்கள் விழுவது போல எரிகற்கள் வந்து இந்த பூமியிலே விழுமாம். 
  • 1991 Jan 26 ம் தேதி, China, Bangkok இந்த இடத்தில் இருந்து எல்லாம் கண்டார்கள் என சொன்னார்கள் தானே!
  • ஒரு பயங்கர வெப்பம் இந்த பூமிக்கு வரப் போகிறது. 

வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
 -வெளிப்படுத்தல் 6 : 14
  • இந்த பூமிக்கு மேலாக Ozone Layer இருக்கிறது. 
  • Oxygen னாலே நிறைக்கப்பட்ட ஒரு படலம். 
  • இந்த பூமியை நோக்கி சூரியக்கதிர்கள் வருகிற நேரம் நடுவில் அந்த ozone  படலத்தை தாண்டி தான் அது பூமிக்கு வரும். 
  • அந்த படலம் இருப்பதினால் சூரிய வெப்பம் நமக்கு குறைவாக தான் வருகிறது. 
  • ஆனால் இப்பொழுது carbon di oxide  என்ற இந்த பூமியிலே உருவாகிற வாயுவினாலே, அநேக இராசயன திரவியங்களாலே அந்த ozone படலத்திலேயே அநேக இடங்களிலே துவாரங்கள் வர ஆரம்பித்து விட்டது. 
  • அந்த துவாரங்கள் வழியாக வெப்பக்கதிர்கள் வருகிற நேரம் கொஞ்சம் பயங்கரமாக அந்த சூடு இருக்கும். 
  • இப்போது முந்தி இருந்ததை விட பூமி அதிக வெப்ப நிலைக்கு மாறிவிட்டது. - Global Warming 
  • அதனால் தான் ஐஸ் மலைகள் எல்லாம் உருக ஆரம்பித்து விட்டது. 
  • இப்படி ஒரு ஐஸ் மலை கரைந்து வந்து தான் 
  • April 14 1912 ம் ஆண்டு Titanic கப்பல் அதில் மோதி அந்த கப்பல் விபத்துக்குள்ளானது அதனால் தான். 
  • இப்போது அந்த ozone படலம் அப்படியே இல்லாமல் போக போகிறது. 
  • எனவே Arctic, Antarctic போன்ற அனைத்து பனிகளும் உருகப் போகிறது. 
  • இந்த கடல் மட்டம் அப்படியே அதிகரிக்கப் போகிறது. 
  • தீவுகள் எல்லாம் அப்படியே மூடப் போகிறது. 
  • முழு உலகமும் இந்த பூமியின் வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும். 
  • மேலே இருந்து விழுகிற எரிகற்கள் காரணமாக மின்சாரம் இல்லாமல் போய்விடும். 

பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
 -வெளிப்படுத்தல் 6 : 15
  • பணக்காரர்கள் அனைவருக்கும் இப்போது தெரிய வரும், ஐயோ இந்த கிறிஸ்தவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை தானே என்று. 
  • இதை எங்களால் தாங்க முடியவி்ல்லை என்று புலம்புவார்கள். 
  • அப்போது அந்த மலைகளுக்குள் ஏறி, குகைகளுக்குள் செல்வார்கள். 
  • அங்கேயும் இருக்க முடியாது. அதிக வெப்பம். 

பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
 -வெளிப்படுத்தல் 6 : 16
  • நாங்கள் சாக வேண்டும் என நினைப்பார்கள். 
  • அவர்கள் சாவைத் தேடுவார்கள், ஆனால் அவர்களுக்கு சாவு கிடைக்காது. 

அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.  
 -வெளிப்படுத்தல் 6 : 17
  • அப்படி ஒரு காலம் அந்த 7 வருடங்களுக்குள் வரும். 
  • ஆண்டவர் எச்சரிக்கை கொடுக்கிறார், வாய்ப்பு கொடுக்கிறார்.
  • எனவே, ஆண்டவருக்குள்ளாக நாம் சரியாக இருந்து நாம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4