வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம்

  • முழு வேதாகமத்திலும் இயேசுவினுடைய மகிமை அதிகமாக காட்டப்படுகிற அதிகாரம் இதுவே. 
  • பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலம் என்ற ஒன்று இருந்தது. 
  • அதற்குள்ளே உடன்படிக்ககைப் பெட்டி இருந்தது. 
  • வருஷத்திற்கு ஒருமுறை Yom kippur என்று சொல்லப்படுகிற நாளிலே பிரதான ஆசாரியன் மட்டும் பலிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போவார்.
  • அவர் அப்படி போவதற்கு முன்பதாக அவரை அவர்தாமே பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டும். 
  • நன்றாக குளித்து, புது வஸ்திரம் தரித்து, பாவ மன்னிப்பை பெற்று அவருக்காக ஒரு பலியை செலுத்தி பரிசுத்தம் ஆக்கப்பட்டவராய் உள்ளே செல்ல வேண்டும். 
  • உள்ளே போன பின்னர் அந்த பலிக்குரிய பூஜை எல்லாம் செய்கிற நேரத்திலே அவருக்குள்ளே எந்த ஒரு பாவமும், எந்த ஒரு குற்றமும் இருக்கக் கூடாது. 
  • அவரிடம் ஒரு ஆண்டவருக்கு விரோதமான காரியம் இருந்தாலும் அவர் செத்து விழுவார். 
  • வெளியில் இருப்பவர்களுக்கு அது தெரியாது. 
  • எனவே அவரின் காலில் ஒரு மணியை கயிறுடன் கட்டி உள்ளே அனுப்புவார்கள்.
  • அவர் அங்கும் இங்கும் நடமாடுகிற அந்த சத்தம் வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும். 
  • அப்போது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியும் பிரதான ஆசாரியர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று. 
  • அந்த மணி ஓசை நின்று விட்டால் அவர் செத்து விழுந்து விட்டார் என்ற அர்த்தம். 
  • பெரிய கயிறு கட்டி வைத்திருப்பார்கள் மணியுடன். 
  • அவர் செத்து விட்டால் கயிறை வெளியே இழுத்து தான் செத்தவரை வெளியே எடுப்பார்கள். 
  • இதை தான் இன்றும் இந்து மதத்தின் கோவில்களில் கடைபிடித்து வருகின்றனர்.  
  • மணி அடித்து வழிபடுகின்றார்கள். 

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 5 : 1
  • சிங்காசனத்திலே வீற்றிருக்கிற தேவன் தன் வலது கரத்திலே அந்த புஸ்தகத்தை வைத்திருக்கிறார். 
  • அந்த தேவன் திரித்துவ தேவன். 
  • பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இந்த 3 நபரும் ஒருவராக அந்த சிங்காசனத்தில் வீற்றிருந்தார். 
  • அது நாம் நினைக்கிற புஸ்தகம் அல்ல, புஸ்தக சுருள்.
  • ஒரு சுருளை சுருட்டி முத்திரையிட்டு இருக்கிறார்கள். 
  • அதன் பிறகு இன்னொரு சுருளை சுற்றி முத்திரையிட்டு இருக்கிறார்கள். 
  • அப்படி 7 சுருள்கள் முத்திரை போடப்பட்டு கையில் வைத்திருக்கிறார். 
  • அப்படி ஒரு முத்திரை உடைத்து ஒரு சுருளை கையிலே எடுத்தால் அதிலே உட்புறமும் எழுதப்பட்டு இருக்கிறது, வெளிப்புறமும் எழுதப்பட்டு இருக்கிறது.
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் இந்த உலகத்திற்கு இன்னும் 7 வருடங்கள் மாத்திரமே மிகுதியாய் உள்ளது. 
  • அந்த 7 வருடங்களுக்கு பின்னர், இயேசு கிறிஸ்து பிரசித்தமாக வந்து 1000 வருஷத்திற்கு ஒரு அரசாட்சியை நிறுவப் போகிறார். 
  • அப்படி இயேசு பிரசித்தமாக வந்த பின்னர் அந்த சாத்தானைப் பிடித்து பாதாளத்தில் போட்டு 1000 வருஷத்திற்கு அவனை சங்கிலியினாலே கட்டிப் போடுவார். 
  • அதனாலே, அந்த 1000 வருஷம் தொடங்குவதற்கு முன்னர் 7 வருடங்கள் மாத்திரமே இந்த உலகத்திற்கு மிகுதியாய் உள்ளது. 
  • அந்த நேரத்திலே இந்த சபை பூமியிலே இருக்க மாட்டாது. 
  • ஏனென்றால் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் நடக்கப் போகிற காரியங்களை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
  • சபை எடுத்துக் கொள்ளப்படும்.
  • நாம் 7 வருடங்கள் பரலோகத்திலே வாழுவோம். 
  • அந்த 7 வருடங்களுக்குள்ளே இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்துவினுடைய  நியாயத்தீர்ப்பு வரப் போகிறது. 
  • அந்த நியாயத்தீர்ப்பு 7 வருடங்களுக்கு நீடிக்கும். 
  • அந்த நயாயத்தீர்ப்பு தான் இந்த 7 சுருள்களிலே எழுதப்பட்டு உள்ளது. 
  • முதல் முத்திரை உடைக்கப்பட்டு அந்த முதல் சுருளை விரிக்கிற நேரம் அந்த முதல் நியாயத்தீர்ப்பு அந்த 2 புறத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது. 
  • அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்று நாம் பின்னர் பார்ப்போம். 
  • அந்த ஒவ்வொரு முத்திரைகளும் உடைக்கப்படும் போது என்னென்ன நடக்கும் என்பதையும் பின்னர் பார்ப்போம். 
  • முதல் நியாயத்தீர்ப்பு முடிந்த பின்னர் இரண்டாவது முத்திரை உடைக்கப்பட்டு இரண்டாவது சுருள் திறக்கப்படுகிறது. 
  • இப்படி ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு 7 சுருள்களும் திறக்கப்பட வேண்டும். 
  • யார் அதை திறப்பதற்கு தகுதியானவர். 
  • இந்த பூமியை நியாயந்தீர்க்க அதிகாரம் உள்ளவருக்கு தான் இதை திறக்க முடியும். 

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 5 : 2
  • அங்கு கோடிக்கணக்கான தூதர்கள் இருக்கிறார்கள்.
  • அந்த 24 மூப்பர்களும் கூட தூதர்கள் என நாம் பார்த்தோம். 
  • 4 ஜீவன்கள், அவர்களும் தூதர்கள் என நாம் பார்த்தோம். 
  • காபிரியேல், மீகாவேல், அதேப் போல மற்ற தூதர்களும் இருக்கிறார்கள். 
  • தேவ தூதன் என்று சொன்னால் அவர் வல்லமை உள்ளவர். 
  • தேவ தூதன் என்றால் தேவனுக்கு வேலை செய்கிற வேலைக்காரர்கள். 
  • ஒரு வேலைக்காரனைப் பார்த்தால் அவனுடைய எஜமான் எப்படி என்பதனை புரிந்து கொள்ளலாம். 
  • சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் வேலைக்காரர்கள். 
  • இந்த எல்லா தூதர்களையும் விட பலம் வாய்ந்த ஒரு தேவ தூதன் வருகிறார். 
  • ஒரு வல்லமை உள்ள தேவதூதன் அந்த இடத்தில் வந்து, மிகுந்த சத்தமிட்டு பேசுகிறார். 

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
 -வெளிப்படுத்தல் 5 : 3
  • பரலோகத்தில் இருப்பது தூதர்கள். 
  • இப்போது யாராவது தூதர்கள் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். 
  • எல்லா தூதர்களும் பேசாமல் இருக்கிறார்கள். 
  • வானத்தில் அதாவது பரலோகத்தில் யாருமே அதை எடுக்க அருகதை அற்றவர்களாய் இருந்தார்கள். 
  • வல்லமை கொண்ட அந்த தூதர்களுக்கே அதை திறக்க முடியவில்லை. 
  • பூமியிலே யாருக்காவது முடியுமா இந்த நியாயத்தீர்ப்பின் புத்தகத்தை திறப்பதற்கு? முடியாது.
  • இங்கு பூமியின் கீழ் என்று சொல்லப்படுவது ஒரு அடையாளம். 
  • அதாவது மரித்தவர்களை குறித்து சொல்லப்படுகிறது. 
  • பூமியில் இருந்தவர்களும் இல்லை,
  • அந்த புத்தகம் திறக்கப்படாவிட்டால் 7 வருடங்களுக்கான நியாயத்தீர்ப்பை இந்த பூமிக்கு கொடுக்க முடியாது.  

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
 -வெளிப்படுத்தல் 5 : 4
  • ஐயோ, இந்த பூமிக்கு நியாயத்தீர்ப்பு இல்லையா?
  • சாத்தானுக்கு எந்த ஒரு நியாயத்தீர்ப்பும் இல்லையா? 
  • இவர் பரலோகத்தில் இருந்து அழ ஆரம்பித்தார்.  

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
 -வெளிப்படுத்தல் 5 : 5
  • தூதர்களில் ஒருவன் யோவானை நோக்கி நீ அழ வேண்டாம் என்கிறார். 
  • நீ நினைக்கிறாய் இதை திறக்க யாரும் இல்லையென்று. 
  • ஆனால் மனிதர்களிலும் இல்லை, தேவ தூதர்களிலும் இல்லை, முன்பு வாழ்ந்த மனிதர்களிலும் ஒருவரும் இல்லை.   
  • நீ பார்க்கிற சிங்காசனத்தில் தான் அவர் இருக்கிறார். 
  • எப்படி முடியும்?
  • சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவர் தானே தன் வலது கரத்தில் அந்த சுருளை வைத்திருக்கிறார். 
  • அவருடைய கையில் இருந்து புத்தகத்தை எடுத்து தானே வாசிக்க வேண்டும். 
  • யார் அந்த யூதா கோத்திரத்து சிங்கம்? இயேசு. 
  • யார் தாவீதின் வேரானவர்? இயேசு. 
  • இந்த பூமியை நியாயந்தீர்ப்பதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரம் தான் அதிகாரம் உண்டு. 
  • நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த பூமி உருண்டை என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டாலும் இந்த பூமி உருண்டையாக தான் இருக்கிறது. 
  • உங்களுடைய விசுவாசத்தின் அடிப்படையிலும், உங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையிலும் உங்கள் விசுவாசம் சரி என்று நினைக்க வேண்டாம். 
  • சத்தியம் எது தெரியுமா? இயேசு கிறிஸ்து மாத்திரமே நியாயந்தீர்க்கிறவர்.  

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
 -வெளிப்படுத்தல் 5 : 6
  • இந்த வசனம் மிக பயங்கரமான ஒரு வசனம். 
  • அமர்ந்துக் கொண்டு இதை வாசிக்க வேண்டாம். 
  • இவ்வளவு நேரம் இந்த ஆட்டுக்குட்டியானவரை யோவான் காணவில்லை. 
  • ஏன் காணவில்லை, அவர் இல்லை என்பதனால் அல்ல. 
  • அவர் இருந்தார், சிங்காசனத்திலே திரித்துவத்திலே இரண்டாவது நபராக அவர் இருந்தார். 
  • தேவனாக சிங்காசனத்திலே அவர் அமர்ந்திருந்ததினாலே அவருடைய மனுஷத்துவம், அவருடைய தேவத்துவத்திற்கு மறைந்து இருந்தது. 
  • தூதன் யோவானுக்கு இந்த விஷயத்தை சொன்ன பின்னர், இவ்வளவு நேரமாய் சிங்காசனத்திலே 2 வது நபராக அமர்ந்திருந்த அந்த இயேசு கிறிஸ்து  அவருடைய தேவத்துவத்தை அந்த சிங்காசனத்திலேயே விட்டு அவருடைய அந்த மனுஷத்துவத்தை வெளியே எடுத்துக் கொண்டு அவர் சிங்காசனத்தில் இருந்து இறங்கி வருகிறார். 
  • தேவனாகிய இயேசு சிங்காசனத்திலே இருக்கிறார். 
  • மனுஷனாகிய இயேசு அந்த சிங்காசனத்திலே இருந்து இறங்கி வந்து சிங்காசனத்திற்கு முன்பு நிற்கிறார். 
  • யோவான் முதல்முறையாக கண்டார்.
  • ஒரே சந்தர்ப்பத்திலே இது நடந்தது. 
  • யாருமே, எந்த சந்தர்ப்பத்திலேயும் காணாத, காணமுடியாத ஒரு தரிசனம். 
  • இயேசு கிறிஸ்துவை மனிதனாக கண்டிருக்கிறார்கள்.
  • இயேசு கிறிஸ்துவை தேவனாக கண்டிருக்கிறார்கள்.
  • ஆனால் ஒரே நேரத்திலே தேவனாக அமர்ந்திருக்கிற இயேசு கிறிஸ்துவில் இருந்து மனிதனாகிய இயேசு கிறிஸ்து எழுந்து வந்து நிற்கிறதை யோவான் கண்டார். 
  • யோவான் மாத்திரமல்ல, தூதர்களும் அந்த இடத்தில் இருக்கிற யாவரும் முதன்மறையாக இதைக் காணுகிறார்கள். 

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.
 -வெளிப்படுத்தல் 5 : 7
  • இது நமக்கு புரியாது.
  • இயேசு கிறிஸ்துவே, இயேசு கிறிஸ்துவினுடைய கையில் இருந்து அந்த புத்தகத்தை வாங்குகிறார். 
  • தேவகுமாரனிடம் இருந்து மனுஷகுமாரன் வாங்குகிறார்.
  • எப்படி? நமக்கு புரியாது.
  • இந்த இடத்தில் இருக்கிற மகிமை என்ன தெரியுமா? 
  • நமக்கும் இயேசுவை தேவனாகவும் தெரியும், மனுஷனாகவும் தெரியும். 
  • ஆனால் பரலோகத்திலே இயேசு கிறிஸ்து தேவனாக அமர்ந்திருக்கிற அதே சந்தர்ப்பத்திலே அவர் மனிதனாகிய இயேசுவாக அந்த இடத்தில் நின்றார். 
  • எப்படி அவர் செய்தார்?
  • நம்மால் புரிந்து கொள்ள முடியாது. 
  • இந்த சம்பவம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நடக்கப்போகிறது.  

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
 -வெளிப்படுத்தல் 5 : 8
  • இயேசு கிறிஸ்துவை வணங்க வேண்டாமென்று யெகோவா சாட்சிக்காரர்கள் என்று சொல்லப்படுகிற அந்த பொல்லாத சாத்தானுடைய கூட்டத்தார் பிரசிங்கித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
  • New World Translation Bible ஐ நம்பாதீர்கள். 
  • தேவ தூதர்கள், மூப்பர்கள் இயேசுவை வணங்குகிறார்கள், நமஸ்கரிக்கிறார்கள். 
  • பரலோகம் இயேசுவை நமஸ்கரிக்கிறது.
  • நம்முடைய இயேசு கிறிஸ்து தேவன். 
  • இந்த பூமியை நியாயந்தீர்க்கப் போவது மனுஷனாக வந்த இயேசு கிறிஸ்து. 
  • ஏன் ஆட்டுக்குட்டியானவர் என இந்த இடத்தில் சொல்லப்படுகிறது?
  • அவர் ஒரு ஆட்டுக்குட்டியை போல இந்த உலகத்திற்கு வந்து இரத்தம் சிந்தி மரித்தார். 
  • அந்த மரணத்தின் நிமித்தமாக நமக்கு ஜீவனை ஆண்டவர் பெற்றுக் கொடுத்தார். 
  • அந்த தேவதூதர்கள் பாடுகிற பாட்டு எப்படி சத்தியத்திற்கு ஒத்த வண்ணமாக இருக்கிறது என்று பார்ப்போம். 

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
 -வெளிப்படுத்தல் 5 : 9
  • இது தேவ தூதர்களின் பாட்டு.
  • எங்களை என்று குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அவர்களை என்று வர வேண்டும். 
  • ஏனென்றால் தேவதூதர்களை ஆண்டவர் மீட்டுக்கொள்ளவில்லை.
  • மனிதர்களை தான் மீட்டுக் கொண்டார். 
  • முன்பு அவர்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை துதித்தார்கள். 
  • இப்பொழுது அவர்கள் மனிதனாகிய இயேசுவை துதிக்கிறார்கள். 

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
 -வெளிப்படுத்தல் 5 : 10
  • இந்த இடத்தில் புதிய பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஏன் புதிய பாடல்?
  • முதன்முறையாக அவர்கள் மனிதனாகிய இயேசுவை  பார்க்கிறார்கள். 
  • அந்த புதிய பாடல் என்ன? 
  • மனிதனாகிய இயேசுவை  பற்றி பாடுகிறார்கள். 
  • நீர் மரித்தீர், மரித்து அவர்களை எல்லா ஜாதிகள், கோத்திரத்திலும் இருந்து ஜனங்களை மீட்டெடுத்து தேவனுக்கு முன்பாக வேலைக்காரர்களாக அல்ல, ராஜாக்காளாக, ஆசாரியர்களாக அவர்களை மாற்றினீர். 
  • கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த மகா வரப்பிரசாதத்தைப் பற்றி இங்கு சொல்லப்பட்டு உள்ளது. 

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
 -வெளிப்படுத்தல் 5 : 11
  • இந்த இடத்தில் தேவனுக்கு கொடுக்கக்கூடிய எல்லா கனத்தையும் இயேசு கிறிஸ்வுக்கும் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 
  • பதினாயிரம் பதினாயிரமாகவும் என்று சொல்லப்பட்டுள்ளதை எல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். 
  • அங்கு கோடிக்கணக்கான தூதர்கள் இருந்ததால், எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டு இருப்பதை தான் இந்த இடத்தில் சொல்லப்பட்டு உள்ளது. 
  • எல்லா இடத்திலேயும் நிரம்பி இருக்கிறார்கள். 

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
 -வெளிப்படுத்தல் 5 : 12
  • அனைத்து கனத்தையும் பெற்றுக் கொள்ள அவர் பாத்திரராயிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 
  • இயேசு கிறிஸ்துவின் மகிமை இந்த இடத்தில் இருப்பது போல வேறு எங்கும் சொல்லப்பட்டு இருக்கவில்லை. 

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 5 : 13
  • 12 வது வசனம் வரை இருப்பது மனுஷனாக வந்த இயேசு கிறிஸ்துவை நமஸ்கரிப்பது.
  • 13 வது வசனம் சிங்காசனத்திலே வீற்றிருக்கிற இயேசு கிறிஸ்து.
  • அதாவது  சிங்காசனத்திலே வீற்றிருக்கிற அந்த திரித்துவ தேவனுக்கும், அதற்கு முன்பதாக நின்று கொண்டிருக்கிற அந்த மனுஷனாக வந்த இயேசு கிறிஸ்துவாகிய ஆட்டுக்குட்டியானவருக்கும் ஒரே சமமான நமஸ்காரத்தை கொடுக்கிறார்கள். 
  • அதை நான் கண்டேன் என்று யோவான் சொல்லுகிறார். 

அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.  
 -வெளிப்படுத்தல் 5 : 14
  • அந்த 4 ஜீவன்களும் ஆமென் என்று சொல்லுகிறார்கள். 
  • அந்த 24 தூதர்களும் விழுந்து அவரை தொழுது கொண்டார்கள். 
  • இது தான் இயேசு கிறிஸ்து. 
  • ஆட்டுக்குட்டியானவர் என்று சொன்னால் இயேசு கிறிஸ்துவானவரின் மனுஷன் என்கிற பகுதி. 
  • இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு மனிதனாக வந்து 33 வருடம் வாழ்ந்தார். 
  • 33 வது வயதிலே அவர் மரித்து, அவர் உயிர்த்தெழுந்த பின்னர் அவர் மனுஷனாக இருக்கவில்லை. 
  • இப்பொழுது அவர் மனுஷன் அல்ல, தேவன். 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சிங்காசனத்திலே அந்த தரிசனத்தை கண்ட பின்னர், நாம் மறுபடியும் ஆட்டுக்குட்டியானவராக வெளிப்படப் போகிற இயேசுவை காணப் போகிறோம்.
  • அவர் வெள்ளைக் குதிரையில் ஏறி பூமிக்கு வரும் வரை, அவர் ஆட்டுக்குட்டியானவராக தான் பரலோகத்தில் இருப்பார். 
  • அவர் மனுஷனாக காணப்பட வேண்டுமென்றால் மனுஷனுடைய காலத்திலே அவர் உட்பிரவேசிப்பார்.
  • பரலோகத்தில் காலங்கள் கிடையாது. 
  • அங்கே நேரம் கிடையாது.
  • இந்த பூமியிலே தான் காலங்கள், நேரங்கள் என்று அந்த எல்லைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
  • ஆனால் பரலோகத்தில் இருக்கிற தேவன் ஆட்டுக்குட்டியானவராக மாறின அந்த சந்தர்ப்பத்தின் முதல் அந்த பரலோக சரித்திரத்திலும் முதன்முறையாக காலம் என்கிற ஒரு குறிப்பிடப்பட்ட எல்லா வருகிறது. 
  • இப்போது திடீரென வருடங்கள், மாதங்கள் என்று காலங்கள் வருகிறது.
  • அந்தக் காலத்திலே இருந்து அந்த வெள்ளைக்குதிரையின் மேல் ஏறி பூமியை நோக்கி அந்த ஆட்டுக்குட்டியானவர் வரும் வரை அந்த இடைப்பட்ட காலம் 7 வருடம் என்று வேதம் சொல்லுகிறது.
  • அந்த 7 வருடங்களுக்குள்ளே் அந்த இயேசுவுக்கு மறுபடியுமாய் வயது ஆரம்பிக்கிறது. 
  • இந்த பூமியிலே இருக்கிற நேரம் அவருக்கு வயது இருந்தது. 
  • 33 வயதிலே அவர் மரித்தார். 
  • அத்தோடு அவர் வயது நிறுத்தப்பட்டது.  
  • அந்த சந்தர்ப்பத்திலே இருந்து 7 வருஷங்களுக்கு மனுஷனாக தான் இயேசு இருக்கப் போகிறார். 
  • அதற்கு பின்னர் அவருடைய வயது 40 ஆக மாறும். 
  • 40 வது வயதில் தான் யூத ஆண்கள் திருமணம் முடிப்பார்கள். 
  • யூத ராஜ சிங்கமாகிய இயேசு கிறிஸ்து, தாவீதின் வேரான இயேசு கிறிஸ்து 40 வயது அவர் கொண்டாடுகிற நேரம், எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த சபையோடு திருமணத்தில் இணைவார். 
  • நாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவை தேவனாகவும் பார்க்க போகிறோம், மனுஷனாகவும் பார்க்க போகிறோம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4