வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
 -வெளிப்படுத்தல் 4 : 1

இவைகளுக்குப்பின்பு
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு
இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்.
  • இதற்கு முன்பு யாரும் பரலோகத்தின் திறக்கப்பட்ட வாசலை காணவில்லை.
  • “நானே வாசல்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். 
  • இயேசு கிறிஸ்து சகல காரியங்களையும் செய்து முடித்து, அவர் பரலோகத்தின் வாசலை திறந்து விட்டார். 
முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: 
  • வெளி 1-3 வரை யோவானிடம் பேசிய அதே குரல், இயேசுவின் குரல். 
  • அந்த குரல் எக்காள சத்தம் போல இருந்தது. 
இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
  • இதுவரை நடந்த சம்பவங்கள் பத்மு தீவிலே - பூமியிலே யோவான் இருக்கும் போது அவருக்கு தரிசனமாக காண்பிக்கப்பட்டவை.
  • இப்போது இயேசு யோவானை இங்கே ஏறிவா என்கிறார். 
  • இனிமேல் நடக்கப் போகிறவைகளை நான் இங்கிருந்து உனக்கு காண்பிப்பேன் என்கிறார். 
  • அதே இடத்தில் இருந்து கொண்டே மீதி தரிசனத்தையும் காண்பித்து இருக்கலாம் தானே!
  • ஆனால் இயேசு அப்படி செய்யவில்லை.
  • இயேசுகிறிஸ்து யோவானுக்கு அடையாளமாக காட்டுகிறார். 
  • யோவானும் சபையில் ஒருவர் தான்.
  • இதற்கு பின்பு சபை பூமியில் இருக்கப் போவது இல்லை என்பதற்கு அடையாளமாக யோவானை ‘இங்கே ஏறி வா’ என்று அழைக்கிறார். 
  • இனி பூமியில் இருக்க போவது கிறிஸ்துவுடன் இல்லாதவர்கள் மாத்திரமே!
இரகசிய வருகை குறித்த வசனங்கள்:
  • மத் 24:31
  • கொரி 15:52
  • 1 தெச 4:16-17

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
 -வெளிப்படுத்தல் 4 : 2
  • அவர் மரிக்கவில்லை, அவரால் பரலோகம் போக முடியாது. 
  • எனவே, ஆவிக்குள்ளானார். 
  • மாளிகையையும், அதற்குள் சிங்காசனத்தையும் காணவில்லை. 
  • கதவையும், வாசலையும் காணவில்லை.
  • அவர் வானத்தில் சிங்காசனத்தை கண்டார். 
  • பரலோகத்திற்குள் சிங்காசனம் இருக்கவில்லை, பரலோகமே சிங்காசனம் தான்.
ஒருவர்
  • கிரேக்க பாஷையில் வாசிக்கும் போது இந்த ஒருவர் என்ற வார்த்தைக்குள் ஒரு பண்மை இருக்கிறது. 
  • நிறைய காரியங்கள் நிறைந்த ஒரு பண்மை. 
  • எடுத்துக்காட்டாக 20 பேர் அடங்கிய வகுப்பு (பண்மை) - வகுப்பறை (ஒருமை).
  • சிங்காசனத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற ஒருவராக அமர்ந்திருக்கிறார்.
  • வெவ்வேறு சிங்காசனம் எல்லாம் கிடையாது. 

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
 -வெளிப்படுத்தல் 4 : 3
  • யோவான் பாவம். 
  • அவருக்கு தான் கண்டதை சரியாக சொல்ல தெரியவில்லை.
  • அந்த அழகை விவரிக்க தெரியவில்லை. 
  • எனவே, உலகக்காரியத்தை ஒப்பிட்டு சொல்கிறார். 
  • யானை அளவு வீடு - அது போல. 
  • நமக்கு தெரிந்த பெரிய மிருகம் யானை தான், எனவே அதை ஒப்பிட்டு சொல்லுவோம். 
  • அதைப் போல யோவான் தனக்கு தெரிந்த பெரிய காரியங்களை ஒப்பிட்டு அந்த சிங்காசனத்தை விளக்குகிறார். 
  • அது உண்மையான கற்கள் அல்ல. 
அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
  • ஏன் யோவான் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது என்று சொல்லுகிறார்?
  • அவருடைய காலத்தில் photoshop இல்லையே!
  • பலவர்ணங்களை எப்படி விளக்குவது என அவருக்கு புரியவில்லை. 
  • அவருக்கு தெரிந்த பல வர்ணங்கள் நிறைந்த ஒன்று வானவில் தான். 
  • எனவே, அப்படி சொன்னார். 

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 4 : 4

இருபத்துநான்கு மூப்பர்கள் 
  • 24 என்பது மனிதர்களோ, அப்போஸ்தலர்களோ, 12 கோதரதிரத்தாரோ அல்ல.
  • அவர்கள் தேவ தூதர்கள். 
  • தேவ தூதர்களுக்கு சிறகுகள் எல்லாம் கிடையாது. 
  • அது அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. 
  • கேரூபீன்கள், சேராபீன்கள் என்று வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அவர்கள் பாதுகாக்கின்ற தேவதூதர்கள். 
  • அந்த தேவதூதர்களின் கையில் பட்டயம் இருப்பது போல கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆதாம், ஏவாள் காலத்தில் தோட்டத்தை காவல் காக்க ஆண்டவர் கேரூபீன்களை வைத்தார். 
  • அவர்கள் பட்டயம் வைத்திருந்தார்களாம்.
  • அது ஒரு அடையாளம், உண்மையான பட்டயம் அல்ல. 
  • சில தூதர்கள் பிரதான தூதர்கள், சில தூதர்கள் செய்தி கொடுப்பவர்கள், சில தூதர்கள் ஜனங்களை பாதுகாக்கின்றவர்கள். 
  • தேவ தூதர்களுக்கு உணவு கூட சமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 
  • எடுத்துக்காட்டாக ஆபிரகாம், மனோவா, கிதியோன்
  • தேவதூதர்கள் 24 பேர் சிங்காசனத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள். 
  • இவர்கள் மற்ற தேவதூதர்களை விட விசேஷித்தவர்கள்.
  • அதனால் தான் சிங்காசனத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள். 

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
 -வெளிப்படுத்தல் 4 : 5
  • சிங்காசனத்தில் வீற்றிருந்த ஆண்டவர் பேசத் தொடங்குகிறார். 
  • மின்னல் வெளிச்சம், இடிமுழக்கம் போன்ற சத்தத்தை அவர் கேட்டார். 
  • நம் ஆண்டவர் பேசுகிற ஆண்டவர். 
  • அவருடைய பேச்சு தான் அப்படி சத்தமாக கேட்டது. 
தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
  • 7 சம்பூரணத்தைக் குறிக்கிறது. 
  • 7 சபைகள் எல்லா சபைகளையும் குறிக்கிறது. 
  • அது போல அந்த 7 அக்கினி தீபங்களின் வெளிச்சம் சம்பூரணமான, முழுமையான வெளிச்சம். 
  • 7 ஆவிகள் அல்ல, 7 விதமான காரியங்களை உடைய ஆவி, ஏசாயா 11:2 ல் காணப்படுகிறது.
  • பரிசுத்த ஆவியானவர் தான் வெளிச்சமாக, தீபமாக காணப்படுகிறார். 

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
 -வெளிப்படுத்தல் 4 : 6

பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; 
  • பளிங்குக்கொப்பான கண்ணாடி என்று சொல்லப்படுவது 
  • அது கடலோ, சமுத்திரமோ அல்ல.
  • சாலொமோன் தேவாலயத்தைக் கட்டும் போது அங்கு கண்ணாடியினால் செய்யப்பட்ட ஒரு பகுதியை கட்டினார். 
  • அது மேல் தான் நியாயப்பிரமாணம் வைக்கப்பட வேண்டும். 
  • கண்ணாடிக்கடல் ஆண்டவருடைய வார்த்தைக்கு ஒப்பாயிருக்கிறது. 
  • ஆண்டவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை இருக்கிறது. 
  • ஆதியாகமம் புத்தகத்திற்கு முன்பேயும், வெளிப்படுத்தின விசேஷத்திற்கு பிற்பாடும் அவருடைய வார்த்தை இருக்கிறது. 
  • இது மாத்திரம் அல்ல அவருடைய வார்த்தை.
  • இதற்கு முன்பதாகவும் இருக்கிறது, பின்னதாகவும் இருக்கிறது. 
  • அவருடைய வார்த்தைக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 
  • வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தை ஒழிந்து போகாது. 
  • இதற்கு முன்பும், பின்பும் ஒரு போதும் வார்த்தை மாற்றமடையாது. 
  • கண்ணாடிக்கடல் என்று சொல்லப்படுவது சம்பூரணமான வசனம். 
  • வார்த்தை என்பவர் இயேசு. 

முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
 -வெளிப்படுத்தல் 4 : 7
  • இயேசு கிறிஸ்து மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்தும் போது இந்த உலகத்தின் நபரைப் போல வந்தார். 
  • அவர் மனிதன் அல்ல.
  • மனிதன் அல்லாத அந்த நபர் 33 வருடங்களுக்கு மனித ரூபமெடுத்தார். 
  • தன்னுடைய பரலோக தன்மையை, தன் சுயரூபத்தை அங்கேயே வைத்து விட்டு வந்தார். 
  • இங்கே வரும் போது தன்னை 4 விதமாக வெளிப்படுத்துகிறார். 
  • ஒன்று ராஜாவாக, இரண்டாவது ஊழியக்காரனாக, மூன்றாவது ஒரு மனிதனாக, நான்காவது தேவகுமாரனாக. 
  • இது தான் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகத்தில் காட்டப்படுகிறது. 
  • இப்பொழுது இந்த ஜீவன்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி காட்டுகிறார். 
சிங்கம்:
  • சிங்கம் - ராஜாவுக்கு அடையாளம். 
  • காட்டின் ராஜா சிங்கம். 
  • சிங்கத்தைப் போல ஒரு ஜீவன் காட்டப்படுவது இயேசு கிறிஸ்துவின் ராஜரீகத்தை காட்டுகிறது. 
  • இரண்டாம் ஜீவன் காளைக்கு ஒப்பாக இருக்கிறது. 
காளை:
  • காளை என்றால் சேவை செய்வது, ஊழியம் செய்வது. 
  • மாட்டை வயலில் உழுவதற்கு, பாரம் சுமப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
  • அது போல இயேசு ஊழியம் செய்ய வந்தார். 
  • அதற்கான அடையாளம் தான் அது. 
மனிதன்:
  • மூன்றாம் ஜீவன் மனுஷமுகத்தை போல இருந்ததாம்.
  • அது இயேசு கிறிஸ்துவின் மனித தன்மையைக் காட்டுகிறது. 
கழுகு:
  • நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாக இருந்தது. 
  • கழுகு தான் மிக மிக உயரத்தில் பறக்கக் கூடிய ஒரு பறவை.
  • அதுமாத்திரமல்ல, கழுகு வந்து மரங்களில் தனக்கு கூட்டை கட்டாது. 
  • கற்பாறைகளில், உயர்ந்த இடத்தில் தான் தனக்கு வீட்டைக் கட்டிக் கொள்ளும். 
  • உலகத்திலே உயர்ந்த இடம். 
விளக்கம்:
  • இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து தேவ குமாரனாக கிரியை செய்தார். 
  • 4 சுவிசேஷ புத்தகங்களிலும் முறை இருக்கிறது. 
  • இயேசு ராஜாதி ராஜாவாக மத்தேயு புத்தகத்தில் காணப்படுகிறார். 
  • இயேசு ஊழியக்காரராக மாற்கு புத்தகத்தில் காணப்படுகிறார். 
  • இயேசு மனிதனாக லூக்கா புத்தகத்தில் காணப்படுகிறார். 
  • இயேசு தேவனாக யோவான் புத்தகத்தில் காணப்படுகிறார். 
  • அந்தக் கண்ணாடிக்கடலின் வார்த்தையானவர் 4 விதமாக வருகிறார். 

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
 -வெளிப்படுத்தல் 4 : 8
  • ஏன் சிறகுகள் ஆறு?
  • அடையாளம் என்னவென்றால், 6 மனிதனுடைய இலக்கம். 
  • மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை காட்டுகிறார்கள். 
  • முதலாவது சிங்கம், 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு ராஜாதி ராஜா. 
  • இரண்டாவது காளை, 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு ஊழியக்காரர்.
  • மூன்றாவது மனிதன், 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு மனிதன்.
  • நான்காவது கழுகு, 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு தேவன். 
  • இயேசுவுக்கு மறைவான எந்த பொருளும் கிடையாது. 
  • பரலோகத்தில் இரவு, பகல் என்பது கிடையாது. 
  • எந்நேரமும் என்பது தான் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஏன் 3 முறை பரிசுத்தர் என சொல்லுகிறார்கள்? 
  • Kadosh in Hebrew. 
  • சிருஷ்டிக்கப்பட்ட நாளில் இருந்து தேவதூதர்கள் பரலோகத்தில் தான் இருக்கிறார்கள். 
  • ஆனாலும் அந்த பரிசுத்தம் அவர்களை வியக்க வைத்தது. 
  • Kadosh, kadosh, Kadosh என்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை பார்த்து சொல்லுகிறார்கள். 
  • நாமும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரையும் ஒரே நேரத்தில் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக போகிறோம். 

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
 -வெளிப்படுத்தல் 4 : 9
  • அந்த 4 ஜீவன்களும் தேவனுக்கு கனத்தையும், ஸ்தோத்திரத்தையும் செலுத்துகின்றன. 

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
 -வெளிப்படுத்தல் 4 : 10
  • அந்த 24 special தூதர்களும், தங்கள் கிரீடங்களை தேவனுக்கு முன்பாக கழற்றி வைத்து மரியாதை செய்தார்கள்.

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.  
 -வெளிப்படுத்தல் 4 : 11
  • எதுவும் தானாக உருவாகவில்லை. 
  • அனைத்தையும் சிருஷ்டித்தவர் தேவனே! 
  • அவரையல்லாமல் எதுவும் உருவாகவில்லை. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4