வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
-வெளிப்படுத்தல் 4 : 1
-வெளிப்படுத்தல் 4 : 1
இவைகளுக்குப்பின்பு
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு
இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்.
- இதற்கு முன்பு யாரும் பரலோகத்தின் திறக்கப்பட்ட வாசலை காணவில்லை.
- “நானே வாசல்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
- இயேசு கிறிஸ்து சகல காரியங்களையும் செய்து முடித்து, அவர் பரலோகத்தின் வாசலை திறந்து விட்டார்.
முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது:
- வெளி 1-3 வரை யோவானிடம் பேசிய அதே குரல், இயேசுவின் குரல்.
- அந்த குரல் எக்காள சத்தம் போல இருந்தது.
இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
- இதுவரை நடந்த சம்பவங்கள் பத்மு தீவிலே - பூமியிலே யோவான் இருக்கும் போது அவருக்கு தரிசனமாக காண்பிக்கப்பட்டவை.
- இப்போது இயேசு யோவானை இங்கே ஏறிவா என்கிறார்.
- இனிமேல் நடக்கப் போகிறவைகளை நான் இங்கிருந்து உனக்கு காண்பிப்பேன் என்கிறார்.
- அதே இடத்தில் இருந்து கொண்டே மீதி தரிசனத்தையும் காண்பித்து இருக்கலாம் தானே!
- ஆனால் இயேசு அப்படி செய்யவில்லை.
- இயேசுகிறிஸ்து யோவானுக்கு அடையாளமாக காட்டுகிறார்.
- யோவானும் சபையில் ஒருவர் தான்.
- இதற்கு பின்பு சபை பூமியில் இருக்கப் போவது இல்லை என்பதற்கு அடையாளமாக யோவானை ‘இங்கே ஏறி வா’ என்று அழைக்கிறார்.
- இனி பூமியில் இருக்க போவது கிறிஸ்துவுடன் இல்லாதவர்கள் மாத்திரமே!
இரகசிய வருகை குறித்த வசனங்கள்:
- மத் 24:31
- 1 கொரி 15:52
- 1 தெச 4:16-17
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
-வெளிப்படுத்தல் 4 : 2
- அவர் மரிக்கவில்லை, அவரால் பரலோகம் போக முடியாது.
- எனவே, ஆவிக்குள்ளானார்.
- மாளிகையையும், அதற்குள் சிங்காசனத்தையும் காணவில்லை.
- கதவையும், வாசலையும் காணவில்லை.
- அவர் வானத்தில் சிங்காசனத்தை கண்டார்.
- பரலோகத்திற்குள் சிங்காசனம் இருக்கவில்லை, பரலோகமே சிங்காசனம் தான்.
ஒருவர்
- கிரேக்க பாஷையில் வாசிக்கும் போது இந்த ஒருவர் என்ற வார்த்தைக்குள் ஒரு பண்மை இருக்கிறது.
- நிறைய காரியங்கள் நிறைந்த ஒரு பண்மை.
- எடுத்துக்காட்டாக 20 பேர் அடங்கிய வகுப்பு (பண்மை) - வகுப்பறை (ஒருமை).
- சிங்காசனத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற ஒருவராக அமர்ந்திருக்கிறார்.
- வெவ்வேறு சிங்காசனம் எல்லாம் கிடையாது.
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
-வெளிப்படுத்தல் 4 : 3
- யோவான் பாவம்.
- அவருக்கு தான் கண்டதை சரியாக சொல்ல தெரியவில்லை.
- அந்த அழகை விவரிக்க தெரியவில்லை.
- எனவே, உலகக்காரியத்தை ஒப்பிட்டு சொல்கிறார்.
- யானை அளவு வீடு - அது போல.
- நமக்கு தெரிந்த பெரிய மிருகம் யானை தான், எனவே அதை ஒப்பிட்டு சொல்லுவோம்.
- அதைப் போல யோவான் தனக்கு தெரிந்த பெரிய காரியங்களை ஒப்பிட்டு அந்த சிங்காசனத்தை விளக்குகிறார்.
- அது உண்மையான கற்கள் அல்ல.
அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
- ஏன் யோவான் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது என்று சொல்லுகிறார்?
- அவருடைய காலத்தில் photoshop இல்லையே!
- பலவர்ணங்களை எப்படி விளக்குவது என அவருக்கு புரியவில்லை.
- அவருக்கு தெரிந்த பல வர்ணங்கள் நிறைந்த ஒன்று வானவில் தான்.
- எனவே, அப்படி சொன்னார்.
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
-வெளிப்படுத்தல் 4 : 4
இருபத்துநான்கு மூப்பர்கள்
- 24 என்பது மனிதர்களோ, அப்போஸ்தலர்களோ, 12 கோதரதிரத்தாரோ அல்ல.
- அவர்கள் தேவ தூதர்கள்.
- தேவ தூதர்களுக்கு சிறகுகள் எல்லாம் கிடையாது.
- அது அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
- கேரூபீன்கள், சேராபீன்கள் என்று வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் பாதுகாக்கின்ற தேவதூதர்கள்.
- அந்த தேவதூதர்களின் கையில் பட்டயம் இருப்பது போல கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆதாம், ஏவாள் காலத்தில் தோட்டத்தை காவல் காக்க ஆண்டவர் கேரூபீன்களை வைத்தார்.
- அவர்கள் பட்டயம் வைத்திருந்தார்களாம்.
- அது ஒரு அடையாளம், உண்மையான பட்டயம் அல்ல.
- சில தூதர்கள் பிரதான தூதர்கள், சில தூதர்கள் செய்தி கொடுப்பவர்கள், சில தூதர்கள் ஜனங்களை பாதுகாக்கின்றவர்கள்.
- தேவ தூதர்களுக்கு உணவு கூட சமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
- எடுத்துக்காட்டாக ஆபிரகாம், மனோவா, கிதியோன்
- தேவதூதர்கள் 24 பேர் சிங்காசனத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.
- இவர்கள் மற்ற தேவதூதர்களை விட விசேஷித்தவர்கள்.
- அதனால் தான் சிங்காசனத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
-வெளிப்படுத்தல் 4 : 5
- சிங்காசனத்தில் வீற்றிருந்த ஆண்டவர் பேசத் தொடங்குகிறார்.
- மின்னல் வெளிச்சம், இடிமுழக்கம் போன்ற சத்தத்தை அவர் கேட்டார்.
- நம் ஆண்டவர் பேசுகிற ஆண்டவர்.
- அவருடைய பேச்சு தான் அப்படி சத்தமாக கேட்டது.
தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
- 7 சம்பூரணத்தைக் குறிக்கிறது.
- 7 சபைகள் எல்லா சபைகளையும் குறிக்கிறது.
- அது போல அந்த 7 அக்கினி தீபங்களின் வெளிச்சம் சம்பூரணமான, முழுமையான வெளிச்சம்.
- 7 ஆவிகள் அல்ல, 7 விதமான காரியங்களை உடைய ஆவி, ஏசாயா 11:2 ல் காணப்படுகிறது.
- பரிசுத்த ஆவியானவர் தான் வெளிச்சமாக, தீபமாக காணப்படுகிறார்.
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
-வெளிப்படுத்தல் 4 : 6
பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது;
- பளிங்குக்கொப்பான கண்ணாடி என்று சொல்லப்படுவது
- அது கடலோ, சமுத்திரமோ அல்ல.
- சாலொமோன் தேவாலயத்தைக் கட்டும் போது அங்கு கண்ணாடியினால் செய்யப்பட்ட ஒரு பகுதியை கட்டினார்.
- அது மேல் தான் நியாயப்பிரமாணம் வைக்கப்பட வேண்டும்.
- கண்ணாடிக்கடல் ஆண்டவருடைய வார்த்தைக்கு ஒப்பாயிருக்கிறது.
- ஆண்டவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை இருக்கிறது.
- ஆதியாகமம் புத்தகத்திற்கு முன்பேயும், வெளிப்படுத்தின விசேஷத்திற்கு பிற்பாடும் அவருடைய வார்த்தை இருக்கிறது.
- இது மாத்திரம் அல்ல அவருடைய வார்த்தை.
- இதற்கு முன்பதாகவும் இருக்கிறது, பின்னதாகவும் இருக்கிறது.
- அவருடைய வார்த்தைக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை.
- வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தை ஒழிந்து போகாது.
- இதற்கு முன்பும், பின்பும் ஒரு போதும் வார்த்தை மாற்றமடையாது.
- கண்ணாடிக்கடல் என்று சொல்லப்படுவது சம்பூரணமான வசனம்.
- வார்த்தை என்பவர் இயேசு.
முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
-வெளிப்படுத்தல் 4 : 7
- இயேசு கிறிஸ்து மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்தும் போது இந்த உலகத்தின் நபரைப் போல வந்தார்.
- அவர் மனிதன் அல்ல.
- மனிதன் அல்லாத அந்த நபர் 33 வருடங்களுக்கு மனித ரூபமெடுத்தார்.
- தன்னுடைய பரலோக தன்மையை, தன் சுயரூபத்தை அங்கேயே வைத்து விட்டு வந்தார்.
- இங்கே வரும் போது தன்னை 4 விதமாக வெளிப்படுத்துகிறார்.
- ஒன்று ராஜாவாக, இரண்டாவது ஊழியக்காரனாக, மூன்றாவது ஒரு மனிதனாக, நான்காவது தேவகுமாரனாக.
- இது தான் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகத்தில் காட்டப்படுகிறது.
- இப்பொழுது இந்த ஜீவன்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி காட்டுகிறார்.
சிங்கம்:
- சிங்கம் - ராஜாவுக்கு அடையாளம்.
- காட்டின் ராஜா சிங்கம்.
- சிங்கத்தைப் போல ஒரு ஜீவன் காட்டப்படுவது இயேசு கிறிஸ்துவின் ராஜரீகத்தை காட்டுகிறது.
- இரண்டாம் ஜீவன் காளைக்கு ஒப்பாக இருக்கிறது.
காளை:
- காளை என்றால் சேவை செய்வது, ஊழியம் செய்வது.
- மாட்டை வயலில் உழுவதற்கு, பாரம் சுமப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
- அது போல இயேசு ஊழியம் செய்ய வந்தார்.
- அதற்கான அடையாளம் தான் அது.
மனிதன்:
- மூன்றாம் ஜீவன் மனுஷமுகத்தை போல இருந்ததாம்.
- அது இயேசு கிறிஸ்துவின் மனித தன்மையைக் காட்டுகிறது.
கழுகு:
- நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாக இருந்தது.
- கழுகு தான் மிக மிக உயரத்தில் பறக்கக் கூடிய ஒரு பறவை.
- அதுமாத்திரமல்ல, கழுகு வந்து மரங்களில் தனக்கு கூட்டை கட்டாது.
- கற்பாறைகளில், உயர்ந்த இடத்தில் தான் தனக்கு வீட்டைக் கட்டிக் கொள்ளும்.
- உலகத்திலே உயர்ந்த இடம்.
விளக்கம்:
- இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து தேவ குமாரனாக கிரியை செய்தார்.
- 4 சுவிசேஷ புத்தகங்களிலும் முறை இருக்கிறது.
- இயேசு ராஜாதி ராஜாவாக மத்தேயு புத்தகத்தில் காணப்படுகிறார்.
- இயேசு ஊழியக்காரராக மாற்கு புத்தகத்தில் காணப்படுகிறார்.
- இயேசு மனிதனாக லூக்கா புத்தகத்தில் காணப்படுகிறார்.
- இயேசு தேவனாக யோவான் புத்தகத்தில் காணப்படுகிறார்.
- அந்தக் கண்ணாடிக்கடலின் வார்த்தையானவர் 4 விதமாக வருகிறார்.
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
-வெளிப்படுத்தல் 4 : 8
- ஏன் சிறகுகள் ஆறு?
- அடையாளம் என்னவென்றால், 6 மனிதனுடைய இலக்கம்.
- மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை காட்டுகிறார்கள்.
- முதலாவது சிங்கம், 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு ராஜாதி ராஜா.
- இரண்டாவது காளை, 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு ஊழியக்காரர்.
- மூன்றாவது மனிதன், 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு மனிதன்.
- நான்காவது கழுகு, 6 செட்டைகள், ஆனால் மனுஷன், ஆனால் ஆண்டவர், இயேசு தேவன்.
- இயேசுவுக்கு மறைவான எந்த பொருளும் கிடையாது.
- பரலோகத்தில் இரவு, பகல் என்பது கிடையாது.
- எந்நேரமும் என்பது தான் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏன் 3 முறை பரிசுத்தர் என சொல்லுகிறார்கள்?
- Kadosh in Hebrew.
- சிருஷ்டிக்கப்பட்ட நாளில் இருந்து தேவதூதர்கள் பரலோகத்தில் தான் இருக்கிறார்கள்.
- ஆனாலும் அந்த பரிசுத்தம் அவர்களை வியக்க வைத்தது.
- Kadosh, kadosh, Kadosh என்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை பார்த்து சொல்லுகிறார்கள்.
- நாமும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரையும் ஒரே நேரத்தில் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக போகிறோம்.
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
-வெளிப்படுத்தல் 4 : 9
- அந்த 4 ஜீவன்களும் தேவனுக்கு கனத்தையும், ஸ்தோத்திரத்தையும் செலுத்துகின்றன.
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
-வெளிப்படுத்தல் 4 : 10
- அந்த 24 special தூதர்களும், தங்கள் கிரீடங்களை தேவனுக்கு முன்பாக கழற்றி வைத்து மரியாதை செய்தார்கள்.
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
-வெளிப்படுத்தல் 4 : 11
- எதுவும் தானாக உருவாகவில்லை.
- அனைத்தையும் சிருஷ்டித்தவர் தேவனே!
- அவரையல்லாமல் எதுவும் உருவாகவில்லை.
Comments
Post a Comment