Posts

Showing posts from July, 2023

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம் ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.  -வெளிப்படுத்தல் 6 : 1 இயேசு கிறிஸ்து முதல் முத்திரையை உடைக்கிறார்.  நான்கு ஜீவன்களில் ஒரு ஜீவன், “நீ வந்து பார்” என்று யோவானிடம் சொன்னது.  இயேசு கிறிஸ்துவின் 4 பரிமாணங்களை வெளிப்படுத்துகிறதான தேவதூதர்கள் தான் 4 ஜீவன்கள்.  சிங்க முகம் இருக்கிற முதலாவது ஜீவன் தான் யோவானிடம் பேசியது.  சிங்க முகம் உள்ள அந்த ஜீவன் இயேசுவை ராஜாதி ராஜாவாக காண்பிக்கிறது.  அதாவது இயேசு ஒரு ராஜாதி ராஜாவாக அந்த முத்திரையை உடைக்கிறார்.  முதலாவது முத்திரை உடைக்கப்படுகிற நேரத்திலே, இயேசு கிறிஸ்து ஒரு ராஜாதி ராஜாவாக உடைக்கிறார். 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 5 விளக்கம் முழு வேதாகமத்திலும் இயேசுவினுடைய மகிமை அதிகமாக காட்டப்படுகிற அதிகாரம் இதுவே.  பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலம் என்ற ஒன்று இருந்தது.  அதற்குள்ளே உடன்படிக்ககைப் பெட்டி இருந்தது.  வருஷத்திற்கு ஒருமுறை Yom kippur என்று சொல்லப்படுகிற நாளிலே பிரதான ஆசாரியன் மட்டும் பலிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போவார். அவர் அப்படி போவதற்கு முன்பதாக அவரை அவர்தாமே பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  நன்றாக குளித்து, புது வஸ்திரம் தரித்து, பாவ மன்னிப்பை பெற்று அவருக்காக ஒரு பலியை செலுத்தி பரிசுத்தம் ஆக்கப்பட்டவராய் உள்ளே செல்ல வேண்டும்.  உள்ளே போன பின்னர் அந்த பலிக்குரிய பூஜை எல்லாம் செய்கிற நேரத்திலே அவருக்குள்ளே எந்த ஒரு பாவமும், எந்த ஒரு குற்றமும் இருக்கக் கூடாது.  அவரிடம் ஒரு ஆண்டவருக்கு விரோதமான காரியம் இருந்தாலும் அவர் செத்து விழுவார்.  வெளியில் இருப்பவர்களுக்கு அது தெரியாது.  எனவே அவரின் காலில் ஒரு மணியை கயிறுடன் கட்டி உள்ளே அனுப்புவார்கள். அவர் அங்கும் இங்கும் நடமாடுகிற அந்த சத்தம் வெளியில...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 4 விளக்கம் இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.  -வெளிப்படுத்தல் 4 : 1 இவைகளுக்குப்பின்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். இதற்கு முன்பு யாரும் பரலோகத்தின் திறக்கப்பட்ட வாசலை காணவில்லை. “நானே வாசல்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.  இயேசு கிறிஸ்து சகல காரியங்களையும் செய்து முடித்து, அவர் பரலோகத்தின் வாசலை திறந்து விட்டார்.  முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது:  வெளி 1-3 வரை யோவானிடம் பேசிய அதே குரல், இயேசுவின் குரல்.  அந்த குரல் எக்காள சத்தம் போல இருந்தது.  இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. இதுவரை நடந்த சம்பவங்கள் பத்மு தீவிலே - பூமியிலே யோவான் இருக்கும் போது அவருக்கு தரிசனமாக காண்பிக்கப்பட...