வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 6 விளக்கம் ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். -வெளிப்படுத்தல் 6 : 1 இயேசு கிறிஸ்து முதல் முத்திரையை உடைக்கிறார். நான்கு ஜீவன்களில் ஒரு ஜீவன், “நீ வந்து பார்” என்று யோவானிடம் சொன்னது. இயேசு கிறிஸ்துவின் 4 பரிமாணங்களை வெளிப்படுத்துகிறதான தேவதூதர்கள் தான் 4 ஜீவன்கள். சிங்க முகம் இருக்கிற முதலாவது ஜீவன் தான் யோவானிடம் பேசியது. சிங்க முகம் உள்ள அந்த ஜீவன் இயேசுவை ராஜாதி ராஜாவாக காண்பிக்கிறது. அதாவது இயேசு ஒரு ராஜாதி ராஜாவாக அந்த முத்திரையை உடைக்கிறார். முதலாவது முத்திரை உடைக்கப்படுகிற நேரத்திலே, இயேசு கிறிஸ்து ஒரு ராஜாதி ராஜாவாக உடைக்கிறார்.