வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்
-வெளிப்படுத்தல் 3 : 1
- சூரிய வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடங்கள் தேவைப்படும்.
- நட்சத்திரங்களின் வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 வருடங்கள் தேவைப்படும்.
- ஏழு நட்சத்திரங்கள் என்பது சபையினுடைய மேய்ப்பர்களை குறிக்கும்.
- இயேசு கிறிஸ்துவானவர் “நீதியின் சூரியன்” என்று மல்கியா 4 வது அதிகாரத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
- அது போல மேய்ப்பரானவர்கள் நட்சத்திரங்கள்.
- இயேசு கிறிஸ்து அக்கினியை போன்றவர்.
- போதகர்கள் அக்கினியின் ஆவியை கொண்டவர்கள்.
- போதகருக்குள் அக்கினி இருக்க வேண்டும்.
- அது எல்லா இடத்திற்கும் பரவிச் செல்ல வேண்டும்.
- எனவே, இயேசு கிறிஸ்துவானவரும், சபையின் போதகரும் சேர்ந்து இந்த சர்தை சபைக்கு பேசுகின்றனர்.
- ஏசாயா 11:1 வசனம் இயேசுவை பற்றி குறிப்பிடுகிறது.
- அதற்கு அடுத்த வசனம் அவருக்குள் இருக்கிற 7 ஆவிகளை பற்றி சொல்லுகிறது.
- அந்த சபையில் இருக்கும் நல்லதை குறிப்பிடுகிறார்.
- உடல் ரீதியான மரணம் அல்ல.
- ஆவிக்குரிய மரணம் அடைந்திருக்கிறார்கள்.
- சபைக்கு வருவார்கள், ஆராதிப்பார்கள், ஜெபிப்பார்கள்.
- ஆனாலும் அனைத்தும் பொய்.
- வீட்டிலே ஜெபம் இருக்காது.
- சபையில் நன்றாக கைகளை உயர்த்தி ஜெபிப்பார்கள்.
- வீட்டிலே வேதம் வாசிக்க மாட்டார்கள்.
- சபையில் மாத்திரம் பாசாங்கு செய்வார்கள்.
- இப்படிப்பட்டவர்கள் இந்த சர்தை சபையில் இருந்தார்கள்.
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
-வெளிப்படுத்தல் 3 : 2
- ஆவிக்குரிய விஷயத்தில் விழித்திருக்கச் சொல்லுகிறார்.
- விழித்திருந்து, எஞ்சியிருக்கிறவைகளை பலப்படுத்தச் சொல்லுகிறார்.
- விழித்துக் கொண்டால் தான் நாம் எப்படியிருக்கிறோம் என்பதை உணர முடியும்.
- தூக்கத்திலேயே இருந்தால் எதுவுமே தெரியாது.
- கர்த்தருக்கு முன்பாக சில விஷயங்கள் நிறைவாக இல்லை.
- அதை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.
- சம்பூரணம் அடையாத கட்டிடம் எதுக்கும் உதவாது.
- நீங்கள் எவ்வளவு தான் அந்த கட்டிடத்திற்கு செலவழித்து இருந்தாலும், அதை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டி இருந்தாலும், அது முழுமை அடையாவிட்டால், அதை உபயோகப்படுத்த முடியாது.
- நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், எவ்வளவு தான் வேதத்தை அறிந்து வைத்திருந்தாலும், எவ்வளவு பைபிள் பட்டங்கள் பெற்றிருந்தாலும் நம்முடைய கிரியைகள் சம்பூரணம் அடையாவிட்டால் ஆண்டவரால் நம்மை எடுத்து பயன்படுத்த முடியாது.
-வெளிப்படுத்தல் 3 : 3
- கேட்ட பிரசங்கத்தை நினைவுகூறு.
- குறைந்தபட்சம் நாம் வருடத்திற்கு 52 பிரசங்கங்கள் கேட்கிறோம்.
- மறுபடியும் மறுபடியும் பிரசங்கத்தை கேட்க வேண்டும்.
- பிரசங்கத்தை கேட்டால் மாத்திரம் போதாது.
- அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும்.
- பின்பு மனந்திரும்ப வேண்டும்.
- இந்த 3 காரியங்களை சொல்கிறார்.
- இயேசு இந்த இரகசியத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார்.
- இயேசு கிறிஸ்துவின் வருகை திருடன் வருகிற விதமாக இருக்கும்.
- சபை எடுத்துக்கொள்ளுப்படுதலைக் குறிக்கிறது.
ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
-வெளிப்படுத்தல் 3 : 4
- ஒரு சிலர் அவர்களுடைய நீதியை அவர்கள் இன்னும் கெடுத்துக் கொள்ளவில்லை.
- கர்த்தருக்கு கீழ்ப்படிந்து இருப்பவர்கள் வெண்வஸ்திரந்தரித்து அவரோடு கூட நடப்பார்கள்.
- வெண்வஸ்திரம் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், நீதியும், பரிசுத்தமும்.
- அதை புரிந்து கொள்ளாமல் சில கிறிஸ்தவர்கள் வெள்ளையையே அணிந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 5
- யார் ஜெயங்கொள்ளுகிறவர்கள்?
- விழித்திருந்து, வார்த்தையை கேட்டு, மனந்திரும்பி இருப்பவன்.
- அப்படிப்பட்டவனுக்கு இயேசு கிறிஸ்து வெண்வஸ்திரம் தரிப்பாராம்.
- அதற்கு என்ன அர்த்தம் என்றால், அவருடைய நீதியை கொடுப்பாராம்.
- ஜெயங்கொள்ளுகிறவனின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர் கிறுக்கிப்போடாமாட்டார்.
- ஜெயங்கொள்ளாதவனின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர் கிறுக்கிப்போடுவார்.
- இரட்சிப்பு அடைந்து விட்டாலே பரலோகம் போவார்கள் என்பது பொய்.
- இரட்சிப்பு பெற்றோம் என்பதனால் மாத்திரம் நாம் பரலோகம் போக மாட்டோம்.
- கடைசிபரியந்தம் பரிசுத்தமாக வாழ வேண்டும்.
- பிதாவும், தூதர்களும் இருப்பது பரலோகத்தில்.
- பரலோகத்திற்கு எடுத்துக் கொள்வேன் என்கிறார்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 3 : 6
- இந்த சபை காலங்களை சரித்திர ரீதியாக ஒப்பிடலாம்.
- இந்த சர்தை சபையின் காலம் கி.பி. 1526 to 1790 வரை.
- கி.பி. 1526 ல் தான் Marin Luther என்ற ஜெர்மன் வழக்கறிஞர், எல்லாவற்றையும் விட்டு விட்டு Father ஆக மாறினார்.
- கத்தோலிக்க சபையில் பாதிரியாராக மாறினார்.
- வேதத்தை கிரேக்க மொழியில் வாசித்து அங்கே “நீதிமான் விசுவாசத்திலே பிழைப்பான்” என்று படித்து,
- அது கத்தோலிக்க பைபிளில் இல்லை என்று சொல்லி, லத்தீன் மொழி பைபிளிலும் அது இல்லை என்று சொல்லி,
- கிரேக்க மொழியில் வாசித்து 95 சத்தியங்களை கற்றுக் கொண்டார்.
- இது வரையும் அறிந்திராத 95 சத்தியங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு பலகையில் எழுதி,
- அவருடைய சபையின் கதவில் அதை மாட்டி,
- இவைகளை விசுவாசிக்கிறவர்கள் மாத்திரம் சபைக்குள் வரவும் என்று சொன்னார்.
- அதனால் கத்தோலிக்க சபை அவரை வெளியேற்றியது.
- புரட்சியாளர்கள்- Protestants என்று அவரை சொன்னார்கள்.
- இப்படி தான் சபைகள் கத்தோலிக்க சபையில் இருந்து வெளியே வந்தது.
- Germany ல் Martin Luther , Switzerland ல் Zwingly, England ல் John Calvin, Scotland ல் John Knox, இவர்கள் எல்லோரும் ஐரோப்பாவில் புரட்சியை உண்டுபண்ணி இது வரையில் நித்திரை கொண்டிருந்த சபைகளை விழிக்க வைத்தார்கள்.
- ஆனால் விழித்திருந்தாலும் கூட, தெரிந்து கொண்ட 95 ல் நிறுத்தி விட்டார்கள்.
- அதற்கு அடுத்து வேதத்தை ஆராய போகவில்லை.
- 1790 வரையும் அந்த 95 காரியங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
- அவர்களை தான் இயேசு சொல்கிறார் “விழித்திருங்கள்” என்று.
- இப்படிப்பட்ட சபைகள் தான் இந்த Anglican சபை, Methodist சபை, Baptist சபை, Presbyterian சபை, Lutheran சபை இவைகள் எல்லாம்.
- இந்த சபையை சேர்ந்த யாராவது இந்த பிரசங்கத்தை கேட்டு கொண்டிருப்பீர்களானால் விழித்திருக்கிறீர்கள்.
- ஆனால் பாதி நித்திரையிலே.
- வார்த்தையை இன்னும் அறிந்து கொள்ள வேண்டும்.
- அநேக பெந்தெகொஸ்தே சபைகளில் விழித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.
- கடைசி வரை இரட்சிப்பை காத்து கொள்ள வேண்டும்.
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 3 : 7
- முதலாவது இயேசு கிறிஸ்து அந்த சபையை அறிமுகப்படுத்துகிறார்.
- சிமிர்னா சபையை போல இந்த சபையிலும் ஆண்டவர் எந்த குறையும் சொல்லவில்லை.
- 10 நகரங்களின் தலைநகரம் என்பதனை தான் தெக்கப்போலி என்று சொல்லப்பட்டுள்ளது.
- இன்று யோர்தானின் தலைநகரம் அம்மான் என்று சொல்லப்படுகிறது.
- அந்த பிரதலிப்பு அல்ல இங்கு இருப்பது.
- இது இருக்கிறது துருக்கியிலே.
- எபேசு, சிமிர்னா அருகாமையிலே.
- பிலெதெல்பியாவின் அர்த்தம் - சகோதர அன்பு.
- கிரேக்க பாஷையில் Phileos என்றால் அன்பு என்று அர்த்தம்.
- Adelphos என்றால் சகோதரன் என்று அர்த்தம்.
- அங்கு வாழ்ந்த ஜனங்கள் நல்லவர்கள்.
- கிறிஸ்தவ விசுவாசம் வரும் முன்பதாகவே அவர்களிடம் அன்பு இருந்தது.
- தன்னிடம் இல்லாத போதும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.
- அனைவரும் அன்பாய் இருந்தார்கள்.
- சாதாரணமாகவே இப்படி என்றால், அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டப் பிறகு, எப்படி இருந்து இருப்பார்கள்.
- சுவிசேஷம் பிலெதெல்பியாவுக்கு மாத்திரம் அல்ல, சுற்றி இருக்கிற கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.
- அப்படித்தான் அவர்களுடைய சகோதர அன்பை வெளிக்காட்டினார்கள்.
- வெளிநாடுகளுக்கு அவர்கள் போக முடியாத காரணத்தினால் பணம் கொடுத்து அந்த சபைகளுக்கு உதவினார்கள்.
- இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவர்.
- பரிசுத்தம் - தமிழ்
- Kadosh in Hebrew
- Hagios in Greek.
- வேறு பிரிக்கப்பட்டவர் என்று அர்த்தம்.
- நித்தியமானவர்.
- அவருக்கு கடந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை.
- பைபிள்-ல் இருக்கிறவர்களை பற்றி நல்லதும் எழுதப்பட்டு இருக்கிறது, கெட்டதும் எழுதப்பட்டு இருக்கிறது.
- தாவீது ராஜாவான பிறகு அமலேக்கியர், பெலிஸ்தர், மோவாப், அம்மோன், கானானியர், எபூசியர், எமோரியர், தீரு, எகிப்து எல்லோரையும் அடித்தார்.
- அந்நாட்களில் யுத்தத்தில் தோல்வியடைந்த நாட்டிடம் கொள்ளையிடுவார்கள்.
- தாவீது அதை செய்யவில்லை.
- ஆனால் தாவீது வெற்றியடைந்த பிறகு கொள்ளையடிக்கவில்லை.
- மக்கள் அவரை மிகுந்த கனத்துடன் பார்த்தார்கள்.
- கதவை திறப்பவர் இயேசு மாத்திரமே.
- இயேசு கிறிஸ்துவுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர் நம்மை உயர்த்துவேன் என்று முடிவு செய்தால் அதை மூட ஒருவராலும் முடியாது.
- அவர் முடியாது என்று சொன்னால் திறக்கவும் யாராலும் முடியாது.
- இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவருடைய வல்லமையினாலே அவருக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் கதவுகளை திறப்பார்.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
-வெளிப்படுத்தல் 3 : 8
- இயேசு சொல்லுகிறார், கொஞ்சம் பெலனை வைத்து கொண்டு எனக்கு கீழ்ப்படிகிறவனுக்கு திறந்தவாசலை வைத்திருக்கிறேன் என்று.
- நம்மிடம் இருக்கும் பெலத்தைக் கொண்டு, அவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்.
- இந்த பிலெதெல்பியா சபையின் காலம் கி.பி. 1790 ல் இருந்து 1900 வரையும்.
- 1790 ல் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
- North Hampton என்கிற இடத்திலே William Carey என்கிற வாலிபர் ஒருவர் இருந்தார்.
- திருமணம் முடித்தவர், பிள்ளைகள் இல்லை.
- ஆனால் படிப்பறிவு இல்லை.
- அவருடைய வேலை என்னவென்றால், சாலையோரத்தில் அறுந்த செருப்புகளை தைப்பது.
- British East Indian Company ல் இருந்து ஒருவர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
- அவர் தான் இலங்கையை ஆக்கிரமித்து கொண்டது.
- ஒரு நாள் William Carey செருப்பு தைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார்.
- தன் செருப்பை தைக்க சொன்னார்.
- William Carey தைத்துக் கொண்டே அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார்.
- அவர் நான் British East Indian Company ல் Director ஆக இருக்கிறேன் என்றார்.
- அவர் ஆசியாவில் உள்ள இந்தியாவில் இருப்பதாக தெரிவித்தார்.
- அங்கு இருப்பவர்களுக்கு இயேசுவை தெரியாது என்றும் சொல்லி இருந்தார்.
- அது William Carey கு ரொம்ப வருத்தம்.
- எப்படியாவது அங்கு சென்று ஆண்டவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.
- கப்பலில் 2 மாதம் பிரயாண தூரம். எப்படி செல்வது?
- அவர் தன்னிடம் இருக்கும் கடை வீடு அனைத்தையும் விற்று one way ticket ஐ பெற்றுக் கொண்டார்.
- North Hampton ல் இருந்தார்.
- South Hampton ல் இருந்து கொல்கத்தாவிற்கு போக வேண்டும்.
- தன் மனைவியை கூட்டிச் செல்ல பணமில்லை.
- எனவே அவர் மட்டும் சென்றார்.
- அங்கு இருந்த ஆங்கிலேயர்கள் எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்கள்.
- அவர் பணம் இல்லை என்றார்.
- அவர் கப்பல் மாலுமியிடம் கெஞ்சி வேறு எங்காவது என்னைக் கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னார்.
- French Colony கு கொண்டு போய் விட்டார்.
- இரண்டு பேரும் ஒரே மொழியான French பேசினதினாலே அவரை உள்ளே அனுமதித்தனர்.
- அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை கற்று கொடுத்து, அவர்களுடைய மொழியை இவர் கற்றுக் கொண்டார்.
- Serampur university in Kolkata - அங்கு தான் இந்த William Carey அமர்ந்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த இடம்.
- இந்திய மொழிக்கு Bible ல மொழிப்பெயர்த்தது அந்த William Carey தான்.
- இலங்கைக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தது இந்த William Carey தான்.
- இங்கிலாந்தில் இருக்கிற ராஜா இவருக்கு Sir William Carey என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
- அவர் தான் மிஷனரிகளின் தகப்பனாக மாறினார்.
- ஆண்டவர் திறந்த கதவை மூடுவதற்கு யாராலும் முடியாமல் போனது.
- கண்டிராத யாரோ மேல் வந்த அன்பின் நிமித்தம் அவர் சென்றார். (Philadelphia)
இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
-வெளிப்படுத்தல் 3 : 9
- வெளி 2:9 விளக்கத்தை பார்க்கவும்.
- தாங்கள் யூதர்கள் அல்ல, ஆனால் யூதர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.
- அப்படிப்பட்டவர்கள் சாத்தானின் ஜெப ஆலயத்திற்கு உள்ளானவர்கள்.
- The synagogue of Satan = சாத்தானின் ஜெப ஆலயம்
- இது ஒரு ஆலயத்தை குறிப்பிடவில்லை, சமூகத்தை குறிப்பிடுகிறது.
- தேவன் பிலெதெல்பியா சபையை நேசித்தார் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தார் என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜெயங்கொள்பவர்கள் சிங்காசனங்களில் அமர்ந்து நியாயந்தீர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படுவார்கள் என்று வெளிப்படுத்தல் போதிக்கிறது.
என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
-வெளிப்படுத்தல் 3 : 10
- அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சி வரப்போகிறது தானே.
- அதாவது 7 வருட உபத்திரவ காலம்.
- அந்த உபத்திரவக் காலத்திற்கு உன்னை அனுப்ப மாட்டேன் என்று இயேசு சொல்லுகிறார்.
- அந்திக்கிறிஸ்து வரும் முன்பதாக சபை எடுத்துக் கொள்ளப்படும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
-வெளிப்படுத்தல் 3 : 11
- கர்த்தர் சீக்கிரமாக வரப் போகிறார்.
- வெளி 2:10 லும் சிமிர்னா சபைக்கு ஜீவகிரீடத்தை தருவேன் என்கிறார்.
- இந்த சபைக்கும் கிரீடத்தை பற்றி பேசுகிறார்.
- நமக்கு என்ன இருக்கிறதோ, அதை பற்றிக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும்.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 12
- யார் ஜெயங்கொள்ளுகிறவன்?
- இங்கு தேவனுடைய ஆலயம் என்று குறிப்பிடப்படுவது தேவனுடைய பிரசன்னத்தையே குறிக்கிறது.
- எனவே, ஜெயங்கொள்ளுகிறவர்கள் அவருடைய பிரசன்னத்தில் வாசம் பண்ணுவார்கள்.
- வெளி 21 ல் இவற்றைக் குறித்து நாம் வாசிக்க முடியும்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 3 : 13
- இயேசுவானவர் பிலெதெல்பியா சபைக்கு சொன்னதை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு கொடுக்கிறார்.
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 3 : 14
- சபை எடுத்துக்கொள்ளப்பட்டபின் சபை சரித்திரம் முடிவடைகிறது.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின் பூமியில் இருக்கும்
- 7 வருடங்கள் தான் அந்திகிறிஸ்துவின் காலகட்டம்.
- அந்த நாட்களில் தான் 666 கொடுக்கப்படப் போகிறது.
- வெளி 4-22 வரை நடக்கப் போகிற எல்லா சம்பவங்களும் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின் நடக்கப் போகிற காலங்கள்.
- இந்த லவோதிக்கேயா சபைக்கு சொல்லியிருக்கிற காரியங்கள் இன்று நடந்து கொண்டிருப்பவைகள்.
- சபை ஆரம்பித்த புதிய ஏற்பாட்டுக் காலத்திலே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்தது.
- அப் 2 வது அதகாரத்தில் அந்நிய பாஷை பேசினார்கள்.
- தீர்க்கத்தரிசனம் சொன்னார்கள்.
- அற்புதங்கள் நடைபெற்றன.
- கி.பி 312 கு பிறகு அவையெல்லாம் குறைந்து இல்லாமலே போய்விட்டது.
- Constantine என்பவரால் தான் அது நடைபெற்றது.
- கிறிஸ்துவ விசுவாசம் ரோமர் சமயமாக மாறியது.
- கிறிஸ்துவம் என்பது ஒரு விசுவாசம்.
- இயேசுவோடு மனிதனுக்கு இருக்கிற சம்மந்தம்.
- Constantine காலத்தில் அவர் அதை ஒரு சமயமாக மாற்றி விட்டார்.
- அதன் பிற்பாடு அந்நிய பாஷையும் இல்லை, தீர்க்கத்தரிசனமும் இல்லை.
- 1901 ல் Dec 30 ம் தேதியில் ஒரு வேதாகம கல்லூரியிலே, 40 பேர் இரவு முழுதும் ஜெபித்து ஒரு புதிய வரத்தை பெற்றுக் கொள்ளுவோம் என்று நினைத்து ஜெபித்தார்கள்.
- Tapioca , Kansas City, America அங்கு தான் இது நடைபெற்றது.
- Agnes என்பவர் அந்த 40 பேரில் ஒருவராக இருந்தார்.
- அவர் தான் முதன்முதலாக அந்நிய பாஷை பேசத் தொடங்கினார்.
- ஆவியானவர் நிரம்பினார்.
- அதன் பின்பு ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேச தொடங்கினார்கள்.
- அந்த இடத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு மாணவர் இருந்தார்.
- Los Angeles ல் இருந்து வந்திருந்தார்.
- மறுபடியும் Los Angeles கு போய் Azusa street ல் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து ஒரு சபையை ஆரம்பித்தார்.
- 1906 ல் Azusa street revival உருவானது.
- ஆவிக்குரிய எழுப்புதல் வந்தது.
- அந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவர்கள் சபைகளை ஆரம்பித்தார்கள்.
- அப்படி ஆரம்பித்த சபைகள் தான் Church of God, Assembly of God.
- அதன் பிறகு இந்த உலகத்திலே பெந்தெகொஸ்தே விசுவாசம் வந்தது.
- இயேசு கிறிஸ்து தன்னை ஆமென் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
- ஆமென் என்றால் இப்பொழுது சொல்லப்பட்ட காரியம் அப்படியே ஆகக்கடவது, இதற்கு நாங்கள் ஒத்துழைக்கின்றோம் என்று அர்த்தம்.
- ஆமென் என்பது இயேசுவின் ஒரு நாமம்.
ஆமென் = உண்மையான என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தை. இது ஏசாயா 65:16 இல் பிதாவாகிய தேவனின் தலைப்பு.
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.
-ஏசாயா 65 : 16
That he who blesseth himself in the earth shall bless himself in the God of truth; and he that sweareth in the earth shall swear by the God of truth; because the former troubles are forgotten, and because they are hid from mine eyes.
Isaiah 65:16
Truth - Amen in Greek.
- தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியும் அந்தமும் தான் தான் என்று அறிமுகப்படுத்துகிறார்.
- சபை இயேசுவுக்கு துரோகம் செய்தது, ஆனால் இயேசு ஒருபோதும் சபைக்கு துரோகம் செய்யவில்லை.
- வாழ்க்கையிலும் அப்படி தான்.
- இயேசு தான் இன்றும் உலகத்தை ஆளுகை செய்கிறார்.
- ஆனால் அப்படி தெரியவில்லையே என்று நாம் சொல்லக் கூடாது.
- எல்லா இடத்திலேயும் கிறிஸ்தவர்களுக்கு தான் பிரச்சனை.
- உலகத்தில் நடைபெறுகிற காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் அனுமதியோடு தான் நடைபெறுகிறது.
- மனிதன் பாவத்தில் விழுந்தபடியினாலே, பாவம் ஆளுகை செய்ய இயேசு இடம் அளித்தார்.
- இந்த லவோதிக்கேயா சபைக்கு ஒரு காரியம் நடைபெறாது.
- இந்த சபையின் நன்மையான குணநலன்களை குறித்து வர்ணிக்க மாட்டார்.
- 6 சபைகளுக்கும் ஏதோ ஒரு நன்மை சொல்வதற்கு இருந்தது.
- இந்த சபைக்கு எந்த ஒரு நன்மையும் சொல்வதற்கு இல்லை.
- நல்லதை வைத்து கொண்டு கெட்டதை செய்கிறசபை இது.
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
-வெளிப்படுத்தல் 3 : 15
- இது தான் பெந்தெகொஸ்தே சபை.
- ஆவிக்குரிய அக்கினியை பெற்றுக் கொண்டவர்கள் தான்.
- ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் நன்றாக ஆராதிப்பார்கள். மற்ற நாட்கள் அவரை மறந்து விடுவார்கள்.
- இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வளவு வெறுப்பாய் இருந்தால் இப்படி சொல்லி இருப்பார்.
- நாம் ஒன்று அவருக்குள் அனலாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் குளிராக இருந்து அழிந்து போய் விட வேண்டும்.
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 16
- உன்னை பார்க்கும் போது எனக்கு வாந்தி வருது னு இயேசு சொல்கிறார்.
- இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வளவு கோபம், வெறுப்பு வந்திருக்க வேண்டும்.
- எவ்வளவு அருவருப்பாய் இருந்தால் வாந்தி வரும்.
- அது தான் இயேசுவுக்கு வந்தது.
- அவருக்கு சபையை பார்க்கும் போது அருவருப்பாய் இருந்நது.
- Lukewarm (மந்தமான) = லவோதிக்கேயா சபையின் நடத்தையை கர்த்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.
- முற்றிலும் நிராகரிப்பதை குறிக்கிறது.
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
-வெளிப்படுத்தல் 3 : 17
- நம் சபையை குறித்து கர்த்தர் சொல்லுகிறார்,
- உலக ஐசுவரியத்தைக் கொண்டு தன்னை ஐசுவரியவான் என்று சொல்லிக் கொள்பவர்கள்.
- உலகப் பொருளை சம்பாதித்து வைத்திருப்பவர்கள்
- உலகத்தில் வாழ ஒரு குறையும் இல்லை என்று நினைப்பவர்கள்.
- சபைக்கு தேவையான கட்டிடம், வாகனம் எல்லாம் இருக்கிறது.
- அதனால் நாம் ஐசுவரியவான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
- வல்லமையுள்ள சபை என்பது அவர்களின் ஐசுவரியத்தில் அல்ல.
- ஆண்டவர் நம்மை குறித்து சந்தோஷம் அடைந்தால் அது தான் ஐசுவரியம்.
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
-வெளிப்படுத்தல் 3 : 18
- இயேசு கிறிஸ்து நமக்கு எச்சரிப்பை கொடுக்கிறார்.
- 3 காரியங்கள்
- நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும் - பரிசுத்தம்
- வார்த்தையிலே, சிந்தையிலே செய்த பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும்.
- நாம் மனந்திரும்ப ஆயத்தமாக இருந்தால் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நம்மை சுத்தமாக்கும்.
- பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றால் நம்மை அந்நிய பாஷையில் பேச வைப்பது மாத்திரம் அல்ல. நம்மை பரிசுத்தமாக்குவதும் தான்.
- என்னிடமிருந்து நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட பொன்னை வாங்குவது = தூய தங்கம்.
- இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
- லவோதிக்கேயர்கள் ஏழைகள் என்று கர்த்தர் குறிப்பிடுகிறார்.
- ஆனால் அவர்களிடம் "தங்கத்தை வாங்குங்கள்" என்று கர்த்தர் அறிவுறுத்துவது இந்த பரிமாற்றத்தின் உருவகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது.
- தங்கம் வாங்க முடிந்தால், அப்படிப்பட்டவர் ஏற்கனவே பணக்காரராக இருக்க மாட்டார்களா?
- தங்கத்தை விட விலை உயர்ந்தது எது?
- தங்கத்தை விட விசுவாசம் மேலானது!
- உண்மையுள்ள சேவையால், லவோதிக்கேயர்கள் கர்த்தரிடமிருந்து "தங்கத்தை வாங்க" முடியும்.
- வெண்வஸ்திரம் பரிசுத்தத்தைக் குறிக்கும்.
- பரிசுத்தம் இல்லாமல், ஆண்டவரோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பது தான் நிர்வாணம்.
- நீதி என்றால் ஆண்டவரோடு சரியான உறவுமுறை.
- ஆண்டவரோடு சரியான உறவை வைத்து கொள்ளப் ஒரு வாய்ப்பு தருகிறார்.
- நல்ல ஒரு ஜெப வாழ்க்கை மற்றும் வேத வாசிப்பு தான் நம்மை மறுபடியும் ஆண்டவரிடம் கூட்டிச் செல்லும்.
- ஆவிக்குரிய உணர்வோடு வார்த்தையை சரியாக கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
தங்கம், ஆடைகள் மற்றும் மருந்துகள் நம் பிரச்சினைகளை தீர்க்கும். நம்முடைய பிரச்சனை நமக்கு தெரியும். கர்த்தர் நமக்கு தீர்வையும் கொடுக்கிறார். கேள்வி: நாம் அவருடைய ஆலோசனையை கேட்டு நடப்போமா?
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
-வெளிப்படுத்தல் 3 : 19
- நான் நேசிக்கிறேன் = கர்த்தரின் ஒழுங்குமுறைகளின் நோக்கம்
- கண்டித்தல் மற்றும் ஒழுக்கம் = ஒருவனை பாவத்திலிருந்து விலக்கும் பொருட்டு ஒழுக்கம்.
- வைராக்கியமாக(ஜாக்கிரதையாக) இரு = ஏதோவொன்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருத்தல் - கர்த்தரில்
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
-வெளிப்படுத்தல் 3 : 20
இதோ, நான் (1) வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; (2) ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனிடத்தில் வந்து (3) அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்
- உண்மையிலே. லவோதிக்கேயா சபையின் கதவை தட்டுகிறார்.
- ஏனென்றால் அநேக சபைகள் இயேசுவை வெளியே தள்ளிவிட்டார்கள்.
- இயேசு சபையின் உள் இல்லாவிட்டால், உள்ளே இருப்பது பிசாசு.
- யூத கலாச்சாரத்தில் போஜனபந்தியில் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால், என்னை அனைத்திலும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
- அதை தான் இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.
- நம்மை அனைத்திலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.
- நாம் நம் சபையின் கதவை, இருதயத்தின் கதவை திறப்போமா?
- இயேசுவை உள்ளே பிரவேசிக்க அனுமதிப்போமா?
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
-வெளிப்படுத்தல் 3 : 21
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல,
- இயேசுவானவர் சாத்தனை சிலுவையில் ஜெயங்கொண்டு தன் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தது போல,
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
- நாமும் இயேசுவோடு ஒரே சிங்காசனத்தில் உட்காருவோம். அப்படியென்றால், ஆளுகை செய்யக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
-வெளிப்படுத்தல் 3 : 22
- இயேசுவானவர் லவோதிக்கேயா சபைக்கு சொன்னதை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு கொடுக்கிறார்.
சபை (Church) |
வாக்குத்தத்தம் (Promise) |
எபேசு |
ஜீவ விருட்சம் (2:7) |
சிமிர்னா |
இரண்டாம் மரணம் இல்லை (2:11) |
பெர்கமு |
மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். (2:17) |
தியத்தீரா |
ஜாதிகள் மேல் அதிகாரம், விடிவெள்ளி நட்சத்திரம் (2:26-28) |
சர்தை |
வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன் (3:5). |
பிலெதெல்பியா |
என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.(3:12) |
லவோதிக்கேயா |
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.(3:21) |
Comments
Post a Comment