வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 3 விளக்கம்

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
 -வெளிப்படுத்தல் 3 : 1

ஏழு நட்சத்திரங்களையும் 
  • சூரிய வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடங்கள் தேவைப்படும்.
  • நட்சத்திரங்களின் வெளிச்சம் பூமிக்கு வருவதற்கு 8 வருடங்கள் தேவைப்படும்.
  • ஏழு நட்சத்திரங்கள் என்பது சபையினுடைய மேய்ப்பர்களை குறிக்கும்.
  • இயேசு கிறிஸ்துவானவர் “நீதியின் சூரியன்” என்று மல்கியா 4 வது அதிகாரத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
  • அது போல மேய்ப்பரானவர்கள் நட்சத்திரங்கள். 
  • இயேசு கிறிஸ்து அக்கினியை போன்றவர்.
  • போதகர்கள் அக்கினியின் ஆவியை கொண்டவர்கள்.
  • போதகருக்குள் அக்கினி இருக்க வேண்டும்.
  • அது எல்லா இடத்திற்கும் பரவிச் செல்ல வேண்டும். 
  • எனவே, இயேசு கிறிஸ்துவானவரும், சபையின் போதகரும் சேர்ந்து இந்த சர்தை சபைக்கு பேசுகின்றனர்.
தேவனுடைய ஏழு ஆவிகளையும்
  • ஏசாயா 11:1 வசனம் இயேசுவை பற்றி குறிப்பிடுகிறது.
  • அதற்கு அடுத்த வசனம் அவருக்குள் இருக்கிற 7 ஆவிகளை பற்றி சொல்லுகிறது. 
(1) ஞானத்தையும் (2) உணர்வையும் அருளும் ஆவியும், (3) ஆலோசனையையும் (4) பெலனையும் அருளும் ஆவியும், (5)அறிவையும் (6) கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் (7) ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
 -ஏசாயா 11 : 2

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், 
  • அந்த சபையில் இருக்கும் நல்லதை குறிப்பிடுகிறார்.
நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
  • உடல் ரீதியான மரணம் அல்ல.
  • ஆவிக்குரிய மரணம் அடைந்திருக்கிறார்கள். 
  • சபைக்கு வருவார்கள், ஆராதிப்பார்கள், ஜெபிப்பார்கள்.
  • ஆனாலும் அனைத்தும் பொய்.
  • வீட்டிலே ஜெபம் இருக்காது.
  • சபையில் நன்றாக கைகளை உயர்த்தி ஜெபிப்பார்கள்.
  • வீட்டிலே வேதம் வாசிக்க மாட்டார்கள்.
  • சபையில் மாத்திரம் பாசாங்கு செய்வார்கள். 
  • இப்படிப்பட்டவர்கள் இந்த சர்தை சபையில் இருந்தார்கள். 

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
 -வெளிப்படுத்தல் 3 : 2

1) விழித்திரு
2) ஸ்திரப்படுத்து
3) மனந்திரும்பு

நீ விழித்துக்கொண்டு
  • ஆவிக்குரிய விஷயத்தில் விழித்திருக்கச் சொல்லுகிறார்.
  • விழித்திருந்து, எஞ்சியிருக்கிறவைகளை பலப்படுத்தச் சொல்லுகிறார்.
  • விழித்துக் கொண்டால் தான் நாம் எப்படியிருக்கிறோம் என்பதை உணர முடியும். 
  • தூக்கத்திலேயே இருந்தால் எதுவுமே தெரியாது. 
உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
  • கர்த்தருக்கு முன்பாக சில விஷயங்கள் நிறைவாக இல்லை.
  • அதை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். 
  • சம்பூரணம் அடையாத கட்டிடம் எதுக்கும் உதவாது.
  • நீங்கள் எவ்வளவு தான் அந்த கட்டிடத்திற்கு செலவழித்து இருந்தாலும், அதை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டி இருந்தாலும், அது முழுமை அடையாவிட்டால், அதை உபயோகப்படுத்த முடியாது. 
  • நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், எவ்வளவு தான் வேதத்தை அறிந்து வைத்திருந்தாலும், எவ்வளவு பைபிள் பட்டங்கள் பெற்றிருந்தாலும் நம்முடைய கிரியைகள் சம்பூரணம் அடையாவிட்டால் ஆண்டவரால் நம்மை எடுத்து பயன்படுத்த முடியாது.

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
 -வெளிப்படுத்தல் 3 : 3

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து,
  • கேட்ட பிரசங்கத்தை நினைவுகூறு. 
  • குறைந்தபட்சம் நாம் வருடத்திற்கு 52 பிரசங்கங்கள் கேட்கிறோம்.
  • மறுபடியும் மறுபடியும் பிரசங்கத்தை கேட்க வேண்டும்.
அதைக் கைக்கொண்டு
  • பிரசங்கத்தை கேட்டால் மாத்திரம் போதாது.
  • அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். 
மனந்திரும்பு
  • பின்பு மனந்திரும்ப வேண்டும்.
  • இந்த 3 காரியங்களை சொல்கிறார். 
  • இயேசு இந்த இரகசியத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார். 
நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
  • இயேசு கிறிஸ்துவின் வருகை திருடன் வருகிற விதமாக இருக்கும். 
  • சபை எடுத்துக்கொள்ளுப்படுதலைக் குறிக்கிறது. 

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
 -வெளிப்படுத்தல் 3 : 4
  • ஒரு சிலர் அவர்களுடைய நீதியை அவர்கள் இன்னும் கெடுத்துக் கொள்ளவில்லை. 
  • கர்த்தருக்கு கீழ்ப்படிந்து இருப்பவர்கள் வெண்வஸ்திரந்தரித்து அவரோடு கூட நடப்பார்கள்.
  • வெண்வஸ்திரம் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், நீதியும், பரிசுத்தமும். 
  • அதை புரிந்து கொள்ளாமல் சில கிறிஸ்தவர்கள் வெள்ளையையே அணிந்துக் கொண்டு இருக்கிறார்கள். 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 5

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ
  • யார் ஜெயங்கொள்ளுகிறவர்கள்?
  • விழித்திருந்து, வார்த்தையை கேட்டு, மனந்திரும்பி இருப்பவன்.
அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; 
  • அப்படிப்பட்டவனுக்கு இயேசு கிறிஸ்து வெண்வஸ்திரம் தரிப்பாராம்.
  • அதற்கு என்ன அர்த்தம் என்றால், அவருடைய நீதியை கொடுப்பாராம். 
ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், 
  • ஜெயங்கொள்ளுகிறவனின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர் கிறுக்கிப்போடாமாட்டார்.  
  • ஜெயங்கொள்ளாதவனின் நாமத்தை ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர் கிறுக்கிப்போடுவார்.
  • இரட்சிப்பு அடைந்து விட்டாலே பரலோகம் போவார்கள் என்பது பொய். 
  • இரட்சிப்பு பெற்றோம் என்பதனால் மாத்திரம் நாம் பரலோகம் போக மாட்டோம். 
  • கடைசிபரியந்தம் பரிசுத்தமாக வாழ வேண்டும். 
என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
  • பிதாவும், தூதர்களும் இருப்பது பரலோகத்தில். 
  • பரலோகத்திற்கு எடுத்துக் கொள்வேன் என்கிறார். 

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 3 : 6
  • இந்த சபை காலங்களை சரித்திர ரீதியாக ஒப்பிடலாம். 
  • இந்த சர்தை சபையின் காலம் கி.பி. 1526 to 1790 வரை.
  • கி.பி. 1526 ல் தான் Marin Luther என்ற ஜெர்மன் வழக்கறிஞர், எல்லாவற்றையும் விட்டு விட்டு Father ஆக மாறினார். 
  • கத்தோலிக்க சபையில் பாதிரியாராக மாறினார். 
  • வேதத்தை கிரேக்க மொழியில் வாசித்து அங்கே “நீதிமான் விசுவாசத்திலே பிழைப்பான்” என்று படித்து, 
  • அது கத்தோலிக்க பைபிளில் இல்லை என்று சொல்லி, லத்தீன் மொழி பைபிளிலும் அது இல்லை என்று சொல்லி, 
  • கிரேக்க மொழியில் வாசித்து 95 சத்தியங்களை கற்றுக் கொண்டார். 
  • இது வரையும் அறிந்திராத 95 சத்தியங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு பலகையில் எழுதி,
  • அவருடைய சபையின் கதவில் அதை மாட்டி,
  • இவைகளை விசுவாசிக்கிறவர்கள் மாத்திரம் சபைக்குள் வரவும் என்று சொன்னார். 
  • அதனால் கத்தோலிக்க சபை அவரை வெளியேற்றியது. 
  • புரட்சியாளர்கள்- Protestants என்று அவரை சொன்னார்கள். 
  • இப்படி தான் சபைகள் கத்தோலிக்க சபையில் இருந்து வெளியே வந்தது. 
  • Germany ல் Martin Luther , Switzerland ல் Zwingly, England ல் John Calvin, Scotland ல் John Knox, இவர்கள் எல்லோரும் ஐரோப்பாவில் புரட்சியை உண்டுபண்ணி இது வரையில் நித்திரை கொண்டிருந்த சபைகளை விழிக்க வைத்தார்கள். 
  • ஆனால் விழித்திருந்தாலும் கூட, தெரிந்து கொண்ட 95 ல் நிறுத்தி விட்டார்கள்.
  • அதற்கு அடுத்து வேதத்தை ஆராய போகவில்லை.
  • 1790 வரையும் அந்த 95 காரியங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
  • அவர்களை தான் இயேசு சொல்கிறார் “விழித்திருங்கள்” என்று. 
  • இப்படிப்பட்ட சபைகள் தான் இந்த Anglican சபை, Methodist சபை, Baptist சபை, Presbyterian சபை, Lutheran சபை இவைகள் எல்லாம். 
  • இந்த சபையை சேர்ந்த யாராவது இந்த பிரசங்கத்தை கேட்டு கொண்டிருப்பீர்களானால் விழித்திருக்கிறீர்கள்.
  • ஆனால் பாதி நித்திரையிலே. 
  • வார்த்தையை இன்னும் அறிந்து கொள்ள வேண்டும். 
  • அநேக பெந்தெகொஸ்தே சபைகளில் விழித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தூங்கி கொண்டு இருக்கிறார்கள். 
  • கடைசி வரை இரட்சிப்பை காத்து கொள்ள வேண்டும். 

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
 -வெளிப்படுத்தல் 3 : 7
  • முதலாவது இயேசு கிறிஸ்து அந்த சபையை அறிமுகப்படுத்துகிறார். 
  • சிமிர்னா சபையை போல இந்த சபையிலும் ஆண்டவர் எந்த குறையும் சொல்லவில்லை. 
  • 10 நகரங்களின் தலைநகரம் என்பதனை தான் தெக்கப்போலி என்று சொல்லப்பட்டுள்ளது. 
  • இன்று யோர்தானின் தலைநகரம் அம்மான் என்று சொல்லப்படுகிறது. 
  • அந்த பிரதலிப்பு அல்ல இங்கு இருப்பது. 
  • இது இருக்கிறது துருக்கியிலே. 
  • எபேசு, சிமிர்னா அருகாமையிலே.
பிலெதெல்பியா - அர்த்தம்:
  • பிலெதெல்பியாவின் அர்த்தம் - சகோதர அன்பு.
  • கிரேக்க பாஷையில் Phileos என்றால் அன்பு என்று அர்த்தம். 
  • Adelphos என்றால் சகோதரன் என்று அர்த்தம். 
ஏன் அந்த நகரத்திற்கு அந்த பெயர் சூட்டப்பட்டது?
  • அங்கு வாழ்ந்த ஜனங்கள் நல்லவர்கள். 
  • கிறிஸ்தவ விசுவாசம் வரும் முன்பதாகவே அவர்களிடம் அன்பு இருந்தது. 
  • தன்னிடம் இல்லாத போதும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.
  • அனைவரும் அன்பாய் இருந்தார்கள். 
  • சாதாரணமாகவே இப்படி என்றால், அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டப் பிறகு, எப்படி இருந்து இருப்பார்கள்.
  • சுவிசேஷம் பிலெதெல்பியாவுக்கு மாத்திரம் அல்ல, சுற்றி இருக்கிற கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். 
  • அப்படித்தான் அவர்களுடைய சகோதர அன்பை வெளிக்காட்டினார்கள்.
  • வெளிநாடுகளுக்கு அவர்கள் போக முடியாத காரணத்தினால் பணம் கொடுத்து அந்த சபைகளுக்கு உதவினார்கள்.
பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், 
  • இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவர். 
  • பரிசுத்தம் - தமிழ்
  • Kadosh in Hebrew
  • Hagios in Greek.
  • வேறு பிரிக்கப்பட்டவர் என்று அர்த்தம்.
  • நித்தியமானவர்.
  • அவருக்கு கடந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை. 
  • பைபிள்-ல்  இருக்கிறவர்களை பற்றி நல்லதும் எழுதப்பட்டு இருக்கிறது, கெட்டதும் எழுதப்பட்டு இருக்கிறது. 
தாவீதின் திறவுகோலை உடையவரும், 
  • தாவீது ராஜாவான பிறகு அமலேக்கியர், பெலிஸ்தர், மோவாப், அம்மோன், கானானியர், எபூசியர், எமோரியர், தீரு, எகிப்து எல்லோரையும் அடித்தார்.
  • அந்நாட்களில் யுத்தத்தில் தோல்வியடைந்த நாட்டிடம் கொள்ளையிடுவார்கள். 
  • தாவீது அதை செய்யவில்லை. 
  • ஆனால் தாவீது வெற்றியடைந்த பிறகு கொள்ளையடிக்கவில்லை.
  • மக்கள் அவரை மிகுந்த கனத்துடன் பார்த்தார்கள். 
  • கதவை திறப்பவர் இயேசு மாத்திரமே. 
ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
  • இயேசு கிறிஸ்துவுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர் நம்மை உயர்த்துவேன் என்று முடிவு செய்தால் அதை மூட ஒருவராலும் முடியாது. 
  • அவர் முடியாது என்று சொன்னால் திறக்கவும் யாராலும் முடியாது. 
  • இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவருடைய வல்லமையினாலே அவருக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் கதவுகளை திறப்பார். 

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
 -வெளிப்படுத்தல் 3 : 8
  • இயேசு சொல்லுகிறார், கொஞ்சம் பெலனை வைத்து கொண்டு எனக்கு கீழ்ப்படிகிறவனுக்கு திறந்தவாசலை வைத்திருக்கிறேன் என்று. 
  • நம்மிடம் இருக்கும் பெலத்தைக் கொண்டு, அவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். 
  • இந்த பிலெதெல்பியா சபையின் காலம் கி.பி. 1790 ல் இருந்து 1900 வரையும். 
  • 1790 ல் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. 
  • North Hampton என்கிற இடத்திலே William Carey என்கிற வாலிபர் ஒருவர் இருந்தார். 
  • திருமணம் முடித்தவர், பிள்ளைகள் இல்லை. 
  • ஆனால் படிப்பறிவு இல்லை.
  • அவருடைய வேலை என்னவென்றால், சாலையோரத்தில் அறுந்த செருப்புகளை தைப்பது.
  • British East Indian Company ல் இருந்து ஒருவர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
  • அவர் தான் இலங்கையை ஆக்கிரமித்து கொண்டது.
  • ஒரு நாள் William Carey  செருப்பு தைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார். 
  • தன் செருப்பை தைக்க சொன்னார். 
  • William Carey தைத்துக் கொண்டே அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். 
  • அவர் நான் British East Indian Company ல் Director ஆக இருக்கிறேன் என்றார்.
  • அவர் ஆசியாவில் உள்ள இந்தியாவில் இருப்பதாக தெரிவித்தார். 
  • அங்கு இருப்பவர்களுக்கு இயேசுவை தெரியாது என்றும் சொல்லி இருந்தார்.
  • அது William Carey கு ரொம்ப வருத்தம். 
  • எப்படியாவது அங்கு சென்று ஆண்டவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.
  • கப்பலில் 2 மாதம் பிரயாண தூரம். எப்படி செல்வது?
  • அவர் தன்னிடம் இருக்கும் கடை வீடு அனைத்தையும் விற்று one way ticket ஐ பெற்றுக் கொண்டார். 
  • North Hampton ல் இருந்தார்.
  • South Hampton ல் இருந்து கொல்கத்தாவிற்கு போக வேண்டும். 
  • தன் மனைவியை கூட்டிச் செல்ல பணமில்லை. 
  • எனவே அவர் மட்டும் சென்றார். 
  • அங்கு இருந்த ஆங்கிலேயர்கள் எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்கள்.
  • அவர் பணம் இல்லை என்றார். 
  • அவர் கப்பல் மாலுமியிடம் கெஞ்சி வேறு எங்காவது என்னைக் கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னார்.
  • French Colony கு கொண்டு போய் விட்டார். 
  • இரண்டு பேரும் ஒரே மொழியான French பேசினதினாலே அவரை உள்ளே அனுமதித்தனர். 
  • அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை கற்று கொடுத்து, அவர்களுடைய மொழியை இவர் கற்றுக் கொண்டார். 
  • Serampur university in Kolkata - அங்கு தான் இந்த William Carey அமர்ந்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த இடம். 
  • இந்திய மொழிக்கு Bible ல மொழிப்பெயர்த்தது அந்த William Carey தான்.
  • இலங்கைக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தது இந்த William Carey தான்.
  • இங்கிலாந்தில் இருக்கிற ராஜா இவருக்கு Sir William Carey என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
  • அவர் தான் மிஷனரிகளின் தகப்பனாக மாறினார்.
  • ஆண்டவர் திறந்த கதவை மூடுவதற்கு யாராலும் முடியாமல் போனது.
  • கண்டிராத யாரோ மேல் வந்த அன்பின் நிமித்தம் அவர் சென்றார். (Philadelphia)

இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 9

இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்;
  • வெளி 2:9 விளக்கத்தை பார்க்கவும்.
  • தாங்கள் யூதர்கள் அல்ல, ஆனால் யூதர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.
  • அப்படிப்பட்டவர்கள் சாத்தானின் ஜெப ஆலயத்திற்கு உள்ளானவர்கள்.
  • The synagogue of Satan = சாத்தானின் ஜெப ஆலயம்
  • இது ஒரு ஆலயத்தை குறிப்பிடவில்லை, சமூகத்தை குறிப்பிடுகிறது.
இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
  • தேவன் பிலெதெல்பியா சபையை நேசித்தார் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தார் என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. 
  • ஜெயங்கொள்பவர்கள் சிங்காசனங்களில் அமர்ந்து நியாயந்தீர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படுவார்கள் என்று வெளிப்படுத்தல் போதிக்கிறது.

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 10
  • அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சி வரப்போகிறது தானே.
  • அதாவது 7 வருட உபத்திரவ காலம்.
  • அந்த உபத்திரவக் காலத்திற்கு உன்னை அனுப்ப மாட்டேன் என்று இயேசு சொல்லுகிறார். 
  • அந்திக்கிறிஸ்து வரும் முன்பதாக சபை எடுத்துக் கொள்ளப்படும். 

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
 -வெளிப்படுத்தல் 3 : 11
  • கர்த்தர் சீக்கிரமாக வரப் போகிறார்.
  • வெளி 2:10 லும் சிமிர்னா சபைக்கு ஜீவகிரீடத்தை தருவேன் என்கிறார்.
  • இந்த சபைக்கும் கிரீடத்தை பற்றி பேசுகிறார். 
  • நமக்கு என்ன இருக்கிறதோ, அதை பற்றிக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 12

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ
  • யார் ஜெயங்கொள்ளுகிறவன்?
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
 -1 யோவான் 5 : 4

அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், 
  • இங்கு தேவனுடைய ஆலயம் என்று குறிப்பிடப்படுவது தேவனுடைய பிரசன்னத்தையே குறிக்கிறது. 
  • எனவே, ஜெயங்கொள்ளுகிறவர்கள் அவருடைய பிரசன்னத்தில் வாசம் பண்ணுவார்கள்.
என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்,

சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.    
 -எசேக்கியேல் 48 : 35

என் புதிய நாமத்தையும்

அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
 -வெளிப்படுத்தல் 19 : 12
  • வெளி 21 ல் இவற்றைக் குறித்து நாம் வாசிக்க முடியும். 

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 3 : 13
  • இயேசுவானவர் பிலெதெல்பியா சபைக்கு சொன்னதை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு கொடுக்கிறார். 

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
 -வெளிப்படுத்தல் 3 : 14
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்டபின் சபை சரித்திரம் முடிவடைகிறது. 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின் பூமியில் இருக்கும்
  • 7 வருடங்கள் தான் அந்திகிறிஸ்துவின் காலகட்டம்.
  • அந்த நாட்களில் தான் 666 கொடுக்கப்படப் போகிறது. 
  • வெளி 4-22 வரை நடக்கப் போகிற எல்லா சம்பவங்களும் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின் நடக்கப் போகிற காலங்கள். 
  • இந்த லவோதிக்கேயா சபைக்கு சொல்லியிருக்கிற காரியங்கள் இன்று நடந்து கொண்டிருப்பவைகள்.
  • சபை ஆரம்பித்த புதிய ஏற்பாட்டுக் காலத்திலே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்தது. 
  • அப் 2 வது அதகாரத்தில் அந்நிய பாஷை பேசினார்கள். 
  • தீர்க்கத்தரிசனம் சொன்னார்கள். 
  • அற்புதங்கள் நடைபெற்றன. 
  • கி.பி 312 கு பிறகு அவையெல்லாம் குறைந்து இல்லாமலே போய்விட்டது. 
  • Constantine என்பவரால் தான் அது நடைபெற்றது.
  • கிறிஸ்துவ விசுவாசம் ரோமர் சமயமாக மாறியது.
  • கிறிஸ்துவம் என்பது ஒரு விசுவாசம். 
  • இயேசுவோடு மனிதனுக்கு இருக்கிற சம்மந்தம்.
  • Constantine காலத்தில் அவர் அதை ஒரு சமயமாக மாற்றி விட்டார். 
  • அதன் பிற்பாடு அந்நிய பாஷையும் இல்லை, தீர்க்கத்தரிசனமும் இல்லை. 
  • 1901 ல் Dec 30 ம் தேதியில் ஒரு வேதாகம கல்லூரியிலே, 40 பேர் இரவு முழுதும் ஜெபித்து ஒரு புதிய வரத்தை பெற்றுக் கொள்ளுவோம் என்று நினைத்து ஜெபித்தார்கள்.
  • Tapioca , Kansas City, America அங்கு தான் இது நடைபெற்றது. 
  • Agnes என்பவர் அந்த 40 பேரில் ஒருவராக இருந்தார்.
  • அவர் தான் முதன்முதலாக அந்நிய பாஷை பேசத் தொடங்கினார். 
  • ஆவியானவர் நிரம்பினார். 
  • அதன் பின்பு ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேச தொடங்கினார்கள். 
  • அந்த இடத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு மாணவர் இருந்தார். 
  • Los Angeles ல் இருந்து வந்திருந்தார். 
  • மறுபடியும் Los Angeles கு போய் Azusa street ல் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து ஒரு சபையை ஆரம்பித்தார். 
  • 1906 ல் Azusa street revival உருவானது. 
  • ஆவிக்குரிய எழுப்புதல் வந்தது. 
  • அந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவர்கள் சபைகளை ஆரம்பித்தார்கள். 
  • அப்படி ஆரம்பித்த சபைகள் தான் Church of God, Assembly of God. 
  • அதன் பிறகு இந்த உலகத்திலே பெந்தெகொஸ்தே விசுவாசம் வந்தது. 
ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
  • இயேசு கிறிஸ்து தன்னை ஆமென் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 
  • ஆமென் என்றால் இப்பொழுது சொல்லப்பட்ட காரியம் அப்படியே ஆகக்கடவது, இதற்கு நாங்கள் ஒத்துழைக்கின்றோம் என்று அர்த்தம். 
  • ஆமென் என்பது இயேசுவின் ஒரு நாமம்.

ஆமென் = உண்மையான என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தை. இது ஏசாயா 65:16 இல் பிதாவாகிய தேவனின் தலைப்பு.


அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.

 -ஏசாயா 65 : 16


That he who blesseth himself in the earth shall bless himself in the God of truth; and he that sweareth in the earth shall swear by the God of truth; because the former troubles are forgotten, and because they are hid from mine eyes.

Isaiah 65:16


Truth - Amen in Greek. 


உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
  • தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியும் அந்தமும் தான் தான் என்று அறிமுகப்படுத்துகிறார். 
  • சபை இயேசுவுக்கு துரோகம் செய்தது, ஆனால் இயேசு ஒருபோதும் சபைக்கு துரோகம் செய்யவில்லை. 
  • வாழ்க்கையிலும் அப்படி தான். 
  • இயேசு தான் இன்றும் உலகத்தை ஆளுகை செய்கிறார். 
  • ஆனால் அப்படி தெரியவில்லையே என்று நாம் சொல்லக் கூடாது.
  • எல்லா இடத்திலேயும் கிறிஸ்தவர்களுக்கு தான் பிரச்சனை. 
  • உலகத்தில் நடைபெறுகிற காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் அனுமதியோடு தான் நடைபெறுகிறது. 
  • மனிதன் பாவத்தில் விழுந்தபடியினாலே, பாவம் ஆளுகை செய்ய இயேசு இடம் அளித்தார். 
  • இந்த லவோதிக்கேயா சபைக்கு ஒரு காரியம் நடைபெறாது. 
  • இந்த சபையின் நன்மையான குணநலன்களை குறித்து வர்ணிக்க மாட்டார். 
  • 6 சபைகளுக்கும் ஏதோ ஒரு நன்மை சொல்வதற்கு இருந்தது. 
  • இந்த சபைக்கு எந்த ஒரு நன்மையும் சொல்வதற்கு இல்லை. 
  • நல்லதை வைத்து கொண்டு கெட்டதை செய்கிறசபை இது.

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
 -வெளிப்படுத்தல் 3 : 15
  • இது தான் பெந்தெகொஸ்தே சபை.
  • ஆவிக்குரிய அக்கினியை பெற்றுக் கொண்டவர்கள் தான். 
  • ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் நன்றாக ஆராதிப்பார்கள். மற்ற நாட்கள் அவரை மறந்து விடுவார்கள். 
  • இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வளவு வெறுப்பாய் இருந்தால் இப்படி சொல்லி இருப்பார். 
  • நாம் ஒன்று அவருக்குள் அனலாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் குளிராக இருந்து அழிந்து போய் விட வேண்டும்.  

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 16
  • உன்னை பார்க்கும் போது எனக்கு வாந்தி வருது னு இயேசு சொல்கிறார். 
  • இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வளவு கோபம், வெறுப்பு வந்திருக்க வேண்டும். 
  • எவ்வளவு அருவருப்பாய் இருந்தால் வாந்தி வரும். 
  • அது தான் இயேசுவுக்கு வந்தது. 
  • அவருக்கு சபையை பார்க்கும் போது அருவருப்பாய் இருந்நது. 
வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால்
  • Lukewarm (மந்தமான) = லவோதிக்கேயா சபையின் நடத்தையை கர்த்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.
என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
  • முற்றிலும் நிராகரிப்பதை குறிக்கிறது. 

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
 -வெளிப்படுத்தல் 3 : 17
  • நம் சபையை குறித்து கர்த்தர் சொல்லுகிறார்,
5 Adjectives லவோதிக்கேயா சபையின் அவலத்தைக் குறிக்கிறது. 

1) நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும் (wretched),
அவலமான, இழிவான சூழ்நிலை

2) பரிதபிக்கப்படத்தக்கவனும்(miserable)
துக்கிக்கிறவர்களாக இருக்கிறோம். 

3) தரித்திரனும் (Poor),
ஏழ்மையானவர்களாக இருக்கிறோம்

4) குருடனும் (blind),
சத்திய வார்த்தையை அறியாத குருடன்

5) நிர்வாணியுமாயிருக்கிறதை (naked),
எதுவுமற்றவர்களாக இருக்கிறோம்

3 Adjectives - லவோதிக்கேயா சபையில் இருப்பவர்கள் நினைத்து கொள்வது

1) நான் ஐசுவரியவானென்றும் (Rich)
  • உலக ஐசுவரியத்தைக் கொண்டு தன்னை ஐசுவரியவான் என்று சொல்லிக் கொள்பவர்கள். 
2) திரவியசம்பன்னனென்றும் (increased with goods)
  • உலகப் பொருளை சம்பாதித்து வைத்திருப்பவர்கள்
3) எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;(and have need of nothing)
  • உலகத்தில் வாழ ஒரு குறையும் இல்லை என்று நினைப்பவர்கள். 
ஐசுவரியம் என்றால் என்ன?
  • சபைக்கு தேவையான கட்டிடம், வாகனம் எல்லாம் இருக்கிறது. 
  • அதனால் நாம் ஐசுவரியவான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். 
  • வல்லமையுள்ள சபை என்பது அவர்களின் ஐசுவரியத்தில் அல்ல. 
  • ஆண்டவர் நம்மை குறித்து சந்தோஷம் அடைந்தால் அது தான் ஐசுவரியம். 

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 18
  • இயேசு கிறிஸ்து நமக்கு எச்சரிப்பை கொடுக்கிறார். 
  • 3 காரியங்கள்
  • நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும் - பரிசுத்தம்
  • வார்த்தையிலே, சிந்தையிலே செய்த பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும். 
  • நாம் மனந்திரும்ப ஆயத்தமாக இருந்தால் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நம்மை சுத்தமாக்கும். 
  • பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றால் நம்மை அந்நிய பாஷையில் பேச வைப்பது மாத்திரம் அல்ல. நம்மை பரிசுத்தமாக்குவதும் தான். 
லவோதிக்கேயர்களுக்கு இருக்கும் 3 பிரச்சனைகள்:
கிறிஸ்தவ சபைக்கு தேவையான 3 காரியங்கள்:

1) நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், 
பிரச்சனை : தேவனின் தயவு இல்லாமை
தீர்வு: பொன் என்னும் விசுவாசத்தைக் கொண்டு தேவ தயவைப் பெறுவது

  • என்னிடமிருந்து நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட பொன்னை வாங்குவது = தூய தங்கம்.
  • இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். 
  • லவோதிக்கேயர்கள் ஏழைகள் என்று கர்த்தர் குறிப்பிடுகிறார்.
  • ஆனால் அவர்களிடம் "தங்கத்தை வாங்குங்கள்" என்று கர்த்தர் அறிவுறுத்துவது இந்த பரிமாற்றத்தின் உருவகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது. 
  • தங்கம் வாங்க முடிந்தால், அப்படிப்பட்டவர் ஏற்கனவே பணக்காரராக இருக்க மாட்டார்களா? 
  • தங்கத்தை விட விலை உயர்ந்தது எது? 
  • தங்கத்தை விட விசுவாசம் மேலானது! 
  • உண்மையுள்ள சேவையால், லவோதிக்கேயர்கள் கர்த்தரிடமிருந்து "தங்கத்தை வாங்க" முடியும்.

2) உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும்,
பிரச்சனை : பரிசுத்தம் இல்லாமை
தீர்வு: வெண்வஸ்திரம் என்னும் பரிசுத்தத்தை ஆண்டவரிடம் இருந்து பெற்றுக்கொள்வது
  • வெண்வஸ்திரம் பரிசுத்தத்தைக் குறிக்கும். 
  • பரிசுத்தம் இல்லாமல், ஆண்டவரோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பது தான் நிர்வாணம். 
  • நீதி என்றால் ஆண்டவரோடு சரியான உறவுமுறை.
  • ஆண்டவரோடு சரியான உறவை வைத்து கொள்ளப் ஒரு வாய்ப்பு தருகிறார். 
  • நல்ல ஒரு ஜெப வாழ்க்கை மற்றும் வேத வாசிப்பு தான் நம்மை மறுபடியும் ஆண்டவரிடம் கூட்டிச் செல்லும். 
3) நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று (ஆவிக்குரிய உணர்வு இல்லாமை)

பிரச்சனை : ஆவிக்குரிய உணர்வு இல்லாமை
தீர்வு: கலிக்கம் என்னும் ஆவிக்குரிய உணர்வை பெற்றுக்கொள்வது
  • ஆவிக்குரிய உணர்வோடு வார்த்தையை சரியாக கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.

தங்கம், ஆடைகள் மற்றும் மருந்துகள் நம் பிரச்சினைகளை தீர்க்கும். நம்முடைய பிரச்சனை நமக்கு தெரியும். கர்த்தர் நமக்கு தீர்வையும் கொடுக்கிறார். கேள்வி: நாம் அவருடைய ஆலோசனையை கேட்டு நடப்போமா?


நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
 -வெளிப்படுத்தல் 3 : 19

யாரை (1) நான் நேசிக்கிறேன், (2) நான் கண்டிக்கிறேன் மற்றும் சிட்சிக்கிறேன்; ஆகையால் (3) வைராக்கியமாக இருங்கள் மற்றும் மனந்திரும்புங்கள்.

  • நான் நேசிக்கிறேன் = கர்த்தரின் ஒழுங்குமுறைகளின் நோக்கம்
  • கண்டித்தல் மற்றும் ஒழுக்கம் = ஒருவனை பாவத்திலிருந்து விலக்கும் பொருட்டு ஒழுக்கம்.
  • வைராக்கியமாக(ஜாக்கிரதையாக) இரு = ஏதோவொன்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருத்தல் - கர்த்தரில்


இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
 -வெளிப்படுத்தல் 3 : 20

இதோ, நான் (1) வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; (2) ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனிடத்தில் வந்து (3) அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.


இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்

  • உண்மையிலே. லவோதிக்கேயா சபையின் கதவை தட்டுகிறார். 
  • ஏனென்றால் அநேக சபைகள் இயேசுவை வெளியே தள்ளிவிட்டார்கள். 
  • இயேசு சபையின் உள் இல்லாவிட்டால், உள்ளே இருப்பது பிசாசு. 
ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
  • யூத கலாச்சாரத்தில் போஜனபந்தியில் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால், என்னை அனைத்திலும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம். 
  • அதை தான் இயேசு இங்கு குறிப்பிடுகிறார். 
  • நம்மை அனைத்திலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். 
  • நாம் நம் சபையின் கதவை, இருதயத்தின் கதவை திறப்போமா?
  • இயேசுவை உள்ளே பிரவேசிக்க அனுமதிப்போமா?

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 21

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, 

  • இயேசுவானவர் சாத்தனை சிலுவையில் ஜெயங்கொண்டு தன் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தது போல,

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

  • நாமும் இயேசுவோடு ஒரே சிங்காசனத்தில் உட்காருவோம். அப்படியென்றால், ஆளுகை செய்யக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.


ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.  
 -வெளிப்படுத்தல் 3 : 22
  • இயேசுவானவர் லவோதிக்கேயா சபைக்கு சொன்னதை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு கொடுக்கிறார். 
சபையும், வாக்குத்தத்தமும்:

சபை (Church)

வாக்குத்தத்தம் (Promise)

எபேசு

ஜீவ விருட்சம் (2:7)

சிமிர்னா

இரண்டாம் மரணம் இல்லை (2:11)

பெர்கமு

மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். (2:17)

தியத்தீரா

ஜாதிகள் மேல் அதிகாரம், விடிவெள்ளி நட்சத்திரம் (2:26-28)

சர்தை

வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன் (3:5).

பிலெதெல்பியா

என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.(3:12)

லவோதிக்கேயா

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.(3:21)


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4