வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 2 விளக்கம்
- 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்களில் இயேசுவானவர் 7 சபைகளுக்கு கொடுத்திருக்கிற செய்திகளை காணலாம்.
- முதலாம் அதிகாரத்தில் 7 சபைகள் என்ன என்பதைக் கண்டோம்.
- இதை ஒரு அட்டவணையாக பிரிக்கலாம்.
- 7 சபைகளி்ல் 2 சபைகளுக்கு எந்தவித குற்றச்சாட்டும் ஆண்டவர் சொல்லவில்லை.
2) அந்தந்த சபைக்கு இயேசு கிறிஸ்து எப்படி பேசுகிறார். (ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான முறையில் பேசி இருக்கிறார்.)
3) ஆண்டவராகிய இயேசு சபையில் இருக்கிற நல்ல காரியங்களை குறித்து பேசுகிறார்.
4) ஒவ்வொரு சபையில் இருக்கிற குறைகளை எடுத்துக் காட்டுகிறார்.
5) ஆலோசனை கொடுக்கிறார்.
6) எச்சரிப்பைக் கொடுக்கிறார். (செய்யாவிட்டால் உங்களுக்கு இது தான் நடக்கும்)
7) செய்தால் நடக்கப் போகிற நன்மையான காரியங்கள் இவைகள் என சொல்லுகிறார்.
7 சபையின் காலங்கள்
1) எபேசு சபை - கி.பி 30 - கி.பி 100 வரை.
2) சிமிர்னா சபை - கி.பி 101 - கி.பி 312 வரை.
3) பெர்கமு சபை - கி.பி 313 - கி.பி 609 வரை.
4) தியத்தீரா சபை - கி.பி 610 - கி.பி 1526 வரை.
5) சர்தை சபை - கி.பி 1527 - கி.பி 1790 வரை.
6) பிலெதெல்பியா சபை - கி.பி 1791 - கி.பி 1900 வரை.
7) லவோதிக்கேயா சபை - கி.பி 1901 - சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 2 : 1
எபேசு சபையின் தூதனுக்கு
- எபேசு சபையின் தூதனுக்கு என்றால் அந்த சபையின் மேய்ப்பனுக்கு என்று அர்த்தம்.
- எபேசு நகரம் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருந்தது.
- நல்ல கல்விமான்கள் இருந்தார்கள்.
- பணமும், கல்வியும் இருந்தது, ஆனால் ஆவிக்குரிய முட்டாள்களாக இருந்தார்கள்.
- தீனாள் என்ற தேவதையை வணங்கி கொண்டிருந்தார்கள்.
- சாஸ்திரங்கள், மந்திரங்கள் போன்ற நிறைய புத்தகங்கள் அவர்களிடத்தில் இருந்தன.
- அப் 19 வது அதிகாரத்தில், பவுல் எபேசு நகரத்திற்கு பிரசங்கம் பண்ணும் போது, ஜனங்கள் இரட்சிப்புக்குள் வந்து, அதிகமான புத்தகங்களை அங்கு எரித்து சாம்பலாக்கினார்கள்.
- அவர்கள் மத்தியில் ஒரு சபை உருவானது.
- அவர்கள் பணக்காரர்கள் என்பதால், சபை பெரிய கட்டிடமாக இருந்தது.
ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர்
- இயேசுவானவர் எபேசு சபையின் மக்களுக்கு தன்னை காண்பிக்கும் விதம்.
- அவர் சபையின் மத்தியில் இருக்கிறார்.
- இயேசு சபையின் தலைவராக பேசுகிறார்.
- தலைவர் அதிகாரமுடையவராய் பேசுவார்.
- சபையின் தூதர்களாகிய pastors ஐ தன் வலது கையில் வைத்திருக்கிறார்.
- இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை வைத்து, ஒரு புறம் போதகர்களையும், ஒரு புறம் விசுவாசிகளையும் வெட்டப் போகிறார்.
- விசுவாசிகள் எப்போதும் Pastors ஐ கனம் பண்ணுங்கள்.
- அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை, கனம் பண்ணுங்கள்.
- ஏனென்றால் Pastor இயேசுவின் வலதுகரத்தில் இருக்கிறார்.
-வெளிப்படுத்தல் 2 : 2
- இயேசு கிறிஸ்து எபேசு சபையை பாராட்டுகிறார்.
கிரியைகளையும்,
- கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்ததாக இருக்கும்.
- ஆனால் இது கிரியைகள் உள்ள சபை.
உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும்,
- இவர்கள் அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யமாட்டார்கள்.
- ஒவ்வொன்றையும் திட்டமிட்டு பொறுமையாக செய்வார்கள்.
நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும்,
- பொல்லாதவைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
- ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது.
- தவறு செய்கிறவர்களை அந்த சபைக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
- இன்று அநேகர் இயேசுவின் பெயரை வைத்து விளையாடுகிறார்கள்.
- ஒரு போதகராக வேண்டும் என்றால் அழைப்பு இருக்க வேண்டும், அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
- யாராவது நான் pastor என்று சொன்னால், நாம் அவர்களை சோதித்தறிய வேண்டும்.
- சோதித்தறிகிறவர்களை இயேசு பாராட்டுகிறார்.
- நாமும் அப்படி இருக்க வேண்டும்.
-வெளிப்படுத்தல் 2 : 3
- எபேசு சபை உபத்திவங்களை சகித்துக் கொண்டு, பொறுமையாக, சோர்வடையாமல் நற்கிரியைகளை தொடர்ந்து செய்து வந்தது.
- கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அனைத்தையும் சகித்து கொண்டார்கள்.
- நாமும் அவர்களைப் போல இருக்க வேண்டும்.
-வெளிப்படுத்தல் 2 : 4
- இயேசுவானவரின் குற்றச்சாட்டு.
- அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது அவர் மீது எவ்வளவு அன்பு கொண்டார்களோ, அந்த அன்பு இப்போது அவர்களிடத்தில் இல்லை.
- செய்கிற வேலைகள் அனைத்தையும் பழக்கத்தினிமித்தம் செய்கிறார்களே அன்றி, அன்பினால் செய்யவில்லை.
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
-வெளிப்படுத்தல் 2 : 5
-வெளிப்படுத்தல் 2 : 5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து,
- ஆதி அன்பு இல்லாவிட்டால் அதுவும் வீழ்ந்து போவதற்கு சமானம். பின்வாங்குவதற்கு சமானம்.
- ஆதி அன்பு இல்லாவிட்டால் வேசித்தனத்தில் வீழ்ந்ததற்கு சமானம்.
மனந்திரும்பி
- நீ அன்பு செலுத்தவில்லை என்றால் பாவத்தில் விழுந்து இருக்கிறாய் என்று அர்த்தம்.
- அதிலிருந்து மனந்திரும்பு என்கிறார்.
ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக;
- ஆதியிலே செய்த கிரியை என்றால் என்ன?
- நீங்கள் இரட்சிப்பு அடைந்த நாளை நினைவில் கொள்ளுங்கள்.
- புதிதாக இரட்சிப்பு அடைந்த நாட்களில் கர்த்தருக்காக ஏதாவது செய்தே தீர வேண்டும் என்ற வைராக்கியம், குதூகலம் நம்மிடத்தில் இருக்கும்.
- ஆனால் போக போக கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் குறைந்து விடும்.
- அதைத் தான் இங்கு குறிப்பிடுகிறார்.
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
-வெளிப்படுத்தல் 2 : 6
-வெளிப்படுத்தல் 2 : 6
நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்,
- இவர்கள் பிழையாக கற்றுக் கொடுப்பவர்கள்.
- விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிக்கலாம்;
- வேசித்தனம் செய்தால் பரவாயில்லை,
- ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்க வேண்டும்.
- என்றெல்லாம் கற்றுக் கொடுப்பார்கள்.
- அதை ஆரம்பித்தவர் நிக்கொலா.
- யார் அவர்?
- அப் 6 வது அதிகாரத்தில் சபையில் பந்திவிசாரிப்பில்
- 7 சாட்சி பெற்ற நபர்களில் ஒருவன் தான் நிக்கோலா.
- விசுவாசமும், பரிசுத்த ஆவியும் நிறைந்து காணப்பட்ட அந்த நிக்கொலா பின்வாங்கி பிழையானதை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.
- அவன் தான் தவறான உபதேசங்களில் வீழ்ந்து போனவன்.
- அவனுடைய போதனைகள் எபேசு சபைக்கு வந்தது.
- எபேசு சபை அதை தங்களிடத்தில் இருந்து அகற்றினார்கள்.
- அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், தவறான உபதேசங்களில் வீழ்ந்து விடாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 7
-வெளிப்படுத்தல் 2 : 7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;
- இயேசுவானவர் எபேசு சபைக்கு சொன்னதை, பரிசுத்த ஆவியானவர் எடுத்து சபைகளுக்கு கொடுக்கிறார்.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ
அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
- அவ்வாறு ஜெயிப்பவர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, தங்கள் விசுவாசத்தில் அசையாதவர்களாக இருக்கிறார்கள்.
- அப்படிப்பட்டவர்களுக்கு ஜீவ விருட்சத்தை கொடுப்பேன் என்கிறார்.
- ஒவ்வொரு சபைக்கும், ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு இதைக் கொடுப்பேன் என்று ஒவ்வொரு வாக்குத்தத்தத்தைக் (Promise) கொடுக்கிறார்.
சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 2 : 8
முந்தினவரும் பிந்தினவரும்,
- எதுவுமே தொடங்குவதற்கு முன்னிருந்து நான் இருக்கிறேன் என்கிறார்.
- அதே போல எல்லாம் அழிந்த பின்னரும் நான் இருப்பேன் என்கிறார்.
- மற்ற எந்த வித மதங்களிலும் இப்படி கிடையாது.
- இயேசுவானவர் தன்னை தேவகுமாரன் என்று அழகாக வெளிப்படுத்துகிறார்.
மரித்திருந்து பிழைத்தவருமானவர்
- மரித்து உயிர்த்தெழுந்தது மனுஷனாக வந்த இயேசு கிறிஸ்து.
- இயேசுவானவர் தன்னை மனுஷகுமாரன் என்று வெளிப்படுத்துகிறார்.
- நானும் உங்களை போல உபத்திரவப்பட்டு இருக்கிறேன், அதனால் எனக்கு உங்கள் கஷ்டம் புரிகிறது என்கிறார்.
- இந்த சபைக்கு எந்த வித குற்றச்சாட்டும் ஆண்டவர் சொல்லவில்லை.
- அதற்கு காரணம் அந்த சபையில் இருக்கிறவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதானால் அல்ல.
- அவர்களுடைய சின்ன சின்ன தவறுகளை சொல்வதற்கு இயேசுவுக்கு மனம் வரவில்லை.
- அவர்கள் உபத்திரவங்களுக்குள் போனதால் excuse கொடுத்தார்.
- அந்த குறைகளை அவர் கணக்கெடுக்கவில்லை.
- ஆனால் மற்ற நேரங்களில் அப்படி முடியாது.
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
-வெளிப்படுத்தல் 2 : 9
-வெளிப்படுத்தல் 2 : 9
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,
- உபத்திரவமும், ஏழ்மையும் பிரச்சனையாக இருந்தது.
சிமிர்னா - பெயர்க்காரணம்:
- Mer என்பது அந்த காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வாசனை திரவியம்.
- அந்த வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது அந்த சிமிர்னா என்ற நகரத்தில்.
- ஒவ்வொரு பிரதேசத்தில் இருக்கிற கற்கள் போல இந்த பிரதேசத்தில் உள்ள கற்கள் அது.
- அந்த கற்களை நன்றாக உடைத்து தூளாக்குவார்கள்.
- அதே போல எல்லா வீடுகளிலும் அந்த மரங்கள் இருந்தது.
- அந்த மரங்களில் இருந்து அந்த தோல்பட்டையை அப்படியே உரித்து எடுக்கலாம்.
- அதை இடித்து அதில் இருந்து வருகிற சாற்றை எடுத்து அதை காய வைப்பார்கள்.
- பின்பு அது சாம்பிராணி போல மாறி விடும்.
- அது நல்ல வாசனை.
- அதை அப்படியே உபயோகப்படுத்த முடியாது.
- அதை எடுத்து தண்ணீரோடு கலந்து தான் அதை உபயோகப்படுத்த முடியும்.
- அதை எடுத்து நெருப்பில் போடும் போது அந்த புகை எல்லாம் வாசனையாக வரும்.
- Mer என்ற வாசனை திரவியத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.
- அதனால் தான் அந்த இடத்திற்கு பெயர் சிமிர்னா.
- Sha-Mer-Nah
அந்நிய தெய்வங்களின் சுகந்த வாசனை:
- அதை ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஊதுபத்தி பயன்படுத்துவது போல பயன்படுத்துவார்கள்.
- இந்த சிமிர்னாவுக்கு கிறிஸ்தவர்கள் வந்த பின்னர், இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு இந்த உற்பத்தியை திரும்பவும் செய்ய முடியாது.
- காரணம் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
- அந்நிய தெய்வங்களை நமஸ்கரிக்கவும் வேண்டாம், நமஸ்கரிக்கிறவர்களை சேவிக்கவும் வேண்டாம் என்று.
- அதை உச்சரிக்கவும் கூடாது.
நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,
தொழிலை நிறுத்தி விட்டார்கள்:
- தேவன் அருவருக்கிற காரியத்தை செய்ய முடியாததால், அந்த உற்பத்தியையே நிறுத்தி விட்டர்கள்.
- அதனால் ஜனங்கள் இவர்களோடு கோபித்து கொண்டார்கள்.
- ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்து இருந்தவற்றை எல்லாம் ஓர் இடத்தில் போட்டு எரித்து விட்டார்கள்.
- இது தங்கள் தொழில் தான் என்று நினைத்து அவர்கள் செய்யவில்லை.
- சிமிர்னாவில் இருந்தவர்களுக்கு இந்த தொழில் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது.
அரசாங்கம் மற்றும் பொதுமக்களால் பிரச்சனை:
- அவர்கள் அத்தனையும் விட்டுவிட்டதால், அங்கு இருந்த கிணறுகளில் தண்ணீர் எடுக்க கூட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
- பொதுமக்கள் இவர்கள் மீது கற்கள் எல்லாம் எறிந்தார்கள்.
- ரோம அதிபதிகள் ஒவ்வொரு தெருவிலும் இராயனுடைய சுரூபத்தை வைத்தார்கள்.
- பொது மக்கள் அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் அதை வணங்க வேண்டும் என்று சொன்னார்கள்.
- கிறிஸ்தவர்கள் அதை செய்யவில்லை.
வரி கட்ட முடியவில்லை:
- முன்பு தொழில் செய்த போது அவர்கள் அரசாங்கத்துக்கு வரி கட்டினார்கள்.
- இப்போது தொழிலை நிறுத்தி விட்டதால், வரி கட்ட முடியவில்லை.
- எனவே, அரசாங்கத்தால் இவர்களுக்கு பிரச்சனை வந்தது.
- எங்கள் உயிரேப் போனாலும் நாங்கள் இந்த உற்பத்தியை செய்யப் போவதி்ல்லை என்று கிறிஸ்தவர்கள் சொன்னார்கள்.
தேவனுக்காக நின்றார்கள்:
- அதனால் எல்லா புறத்திலும் இருந்து அவர்களுக்கு உபத்திரவம் வந்தது.
- எத்தனை பிரச்சனை இருந்தாலும், நாம் தேவனுக்காக நின்றால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
- இயேசு துக்கப்படுவார் என்ற அவர்கள் அதை செய்யவில்லை.
- ஐசுவரியவானாக இருந்தவர்கள் தரித்திரர்கள் ஆனார்கள்.
தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
- தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, கிறிஸ்தவத்தின்படி வாழாமல் சாத்தானுடைய கூட்டமாய் வாழ்கிறவர்கள் அநேகர்.
- ஆனால் அப்படி ஊழியம் செய்கிறவர்கள் பிரசித்தமாய் வாழ்கிறார்கள்.
- உலகத்தில் இருக்கிறவர்களை திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு, தேவனை திருப்திப்படுத்துங்கள்.
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
-வெளிப்படுத்தல் 2 : 10
-வெளிப்படுத்தல் 2 : 10
- இயேசு கொடுக்கிற ஆலோசனை.
பத்துநாள்
- கொஞ்சம் நாள் என்பதை தான் யூத முறைமையில் 10 நாள் என்று சொல்லப்பட்டுள்ளது.
உபத்திரவப்படுவீர்கள்
- இயேசுவானவர் உபத்திரவங்களை எல்லாம் நீக்கப் போகிறேன் என்று சொல்லவில்லை.
- இந்த உலகத்தில் இருக்கும் வரைக்கும் நோய்கள், உபத்திரவங்கள் இருக்கும் என்று இயேசு சொல்லுகிறார்.
- ஏதாவது நோய் வந்து விட்டால், நாம் பாவம் செய்து விட்டோம் என்று அர்த்தமில்லை.
- நீங்கள் பிசாசுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்றும் அர்த்தமில்லை.
- மரிக்கும் பரியந்தம் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் உண்டு.
- சாட்சி என்றால் என்ன?
- எனக்கு பணம் இல்லை, அவர் பணம் கொடுத்தார்.
- எனக்கு சுகம் இல்லை, அவர் எனக்கு சுகம் கொடுத்தார்.
- இதெல்லாம் சாட்சியே அல்ல.
- பாவத்தில் இருந்து மனந்திரும்புவது தான் உண்மையான சாட்சி.
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
- உபத்திவங்கள் இருந்தாலும் மரணம் வரை நாம் தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும்.
- அப்போது அவர் நமக்கு ஜீவகிரீடத்தை தருவேன் என்கிறார்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 11
-வெளிப்படுத்தல் 2 : 11
- கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்ன தெரியுமா?
- நமக்கு இரண்டாம் மரணம் இல்லை.
- இரண்டாம் மரணம் என்றால் என்ன?
- நரகத்துக்கு கொடுக்கப்படுகிற இன்னொரு பெயர்.
- இந்த வெளிப்படுத்தல் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.
- நரகத்தில் இருக்கிற அக்கினிக்கு பெயர் தான் இரண்டாம் மரணம்.
- ஆனால் நாம் சதாகாலமும் உயிரோடு இருப்போம்.
- உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை தேவன் நமக்கு சந்திப்பார்.
- இந்த சிமிர்னா சபையின் செய்தி மூலம் தேவன் நம்மோடு பேசுவது என்னவென்றால் “நான் உங்களோடு இருக்கிறேன்” என்கிறார்.
- அவரைத் தவிர வேறு என்ன நமக்கு வேண்டும்.
- எனவே திருப்தியோடு, சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.
- இருக்கிறது போதும் என்ற மனதோடு வாழுங்கள்.
- உபத்திரவம், ஏழ்மை கிறிஸ்தவர்களுக்கு உண்டு.
- இல்லை என்று சொல்லுகிறவர்கள் பொய்யை பிரசங்கிக்கிறார்கள்.
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 2 : 12
-வெளிப்படுத்தல் 2 : 12
- பெர்கமு சபையின் மேய்ப்பனுக்கு எழுதப்படுகிறது.
- ஆண்டவருடைய வார்த்தை தான் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.
- Pastors இயேசுவின் வலது கரத்தில் இருப்பதால், அவர்களை குறித்து யாராவது தவறாக பேசினால் ஆண்டவர் அவர்களை அடிப்பார்.
- தேவனுடைய வார்த்தை பலவிதமாக சொல்லப்படும்.
- இந்த இடத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என சொல்லப்படுகிறது.
வேத வார்த்தை - மன்னா:
- சில இடத்தில் மன்னா என்று சொல்லப்படும்.
- வேத வசனங்களை உட்கொள்ள வேண்டும்.
- இந்த மன்னா என்ற ஆகாரம் நமக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியை, ஆரோக்கியத்தை கொடுக்கும்.
வேத வார்த்தை - ஜலம்:
- சில இடங்களில் தேவ வார்த்தை ஜலத்திற்கு ஒப்பிடப்பட்டு இருக்கும்.
- ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவ இராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டான் என்று இயேசு சொல்கிறார்.
- ஜலம் என்ற ஞானஸ்நானம், பரிசுத்த ஆவி என்றால் அந்நிய பாஷை என்று எல்லோரும் தவறாக நினைத்து கொள்ளுகிறார்கள்.
- ஆனால் இயேசுகிறிஸ்து அதைக் குறிப்பிடவில்லை.
- ஜலத்திலே பிறக்க வேண்டும் என்று சொல்வது வார்த்தையிலே பிறக்க வேண்டும் என்கிறார்.
- ஆவியிலே பிறக்க வேண்டும் என்று சொல்வது பரிசுத்த ஆவியினால் பிறக்க வேண்டும் என்கிறார்.
வேத வார்த்தை - எண்ணெய்:
- சில நேரம் வேத வார்த்தை எண்ணெய் கு ஒப்பிடப்பட்டிருக்கும்.
- வார்த்தையிலே இருக்கிற அபிஷேகத்தை பற்றி பேசுகிறது.
வேத வார்த்தை - இருபுறமும் கருக்குள்ள பட்டயம்:
- இந்த இடத்தில் பேசப்படுவது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.
- பட்டயத்தை எதற்கு பயன்படுத்துவார்கள்? வெட்டுவதற்கு.
- வார்த்தையை பிரசிங்கப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் வெட்டு.
- ஆண்டவருடைய வார்த்தை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை பண்ணுகிற கத்தியை போன்றது.
- அதே போல வார்த்தை நம் காயத்தை பெரிதாக்கி, அதை சுகமாக்கவும் செய்கிறது.
- இந்த இடத்தில் இயேசுவானவர் தன்னை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் என்று அறிமுகப்படுத்துகிறார்.
- எனவே, இந்த பெர்கமு சபையில் இருக்கிறவர்கள் வார்த்தைக்கு புறம்பாக ஏதோ செய்திருக்கிறார்கள் என்று தெளிவாக விளங்குகிறது.
- இப்போது இயேசுவுக்கு கடுங்கோபம் வந்திருக்கிறது.
உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
-வெளிப்படுத்தல் 2 : 13
-வெளிப்படுத்தல் 2 : 13
- இந்த சபையை குறித்து என்ன நன்மையை சொல்லுகிறார் என்பதைப் பார்ப்போம்.
ஏன் சாத்தானுடைய சிங்காசனம் என்று இந்த இடத்தில் மாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.
- வேதத்தில் இந்த இடத்தில் மாத்திரம் தான் சாத்தானுடைய சிங்காசனம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
- பிசாசு உலகத்தின் தலைநகரமாக தெரிந்து கொண்டிருப்பது பாபிலோன்.
- அது தான் தற்போதைய ஈராக் என்ற நாடு.
- அந்த இடத்தில் கூட சாத்தானுடைய சிங்காசனம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.
- ஏன் இந்த இடத்தில் சொல்லி இருக்கிறார்.
- பெர்கமு என்ற இடம் நல்ல கல்விமான்கள் இருக்கிற இடம்.
- உலகத்தில் முதன் முதலாக புத்தக சாலை எங்கே ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா?
உலகத்தின் முதல் பெரிய நூலகம்:
- கல்தேயர் என்னப்பட்ட ஊர் என்கிற இடத்தில்.
- அங்கு இருந்து தான் ஆபிரகாம் வந்தார்.
- அக்காடியன் பாஷையில் கல்வெட்டுகளாக அனைத்தும் அங்கு உள்ளன.
- புத்தக சுருளிலே எழுத்துக்களை வடிவமைக்க தொடங்கினார்கள்.
எகிப்தியர்கள்:
- அதை எகிப்தியர்கள் தான் தொடங்கினார்கள்.
- எகிப்தின் பழைய பெயர் மிஷ்ரா.
- அவர்கள் Papyrus என்ற எழுதுகிற தாள்களை தெரிந்துக் கொண்டார்கள்.
- எகிப்து நல்ல மூளைக்காரர்கள் இருந்த இடம்.
- Pyramid கட்டினது அவர்கள் தான்.
- மரிக்கிறவர்களின் உடல் அழுகிப் போகாமல் இருக்க திரவியங்களை கண்டுபிடித்து வைத்திருந்த நாடு அது.
- உலகத்தில் முதன்முதலில் surgery சிகிச்சையை கொண்டு வந்தது இவர்கள் தான்.
- அதேப்போல, கல்வெட்டுகளில் எழுதும் அந்த நாட்களிலே, ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதும் அந்த எகிப்து நாட்டில் தான்.
உலகத்தின் 2வது பெரிய நூலகம்:
- இரண்டாவது பெரிய புத்தக சாலை இருந்தது Alexandria என்ற இடத்திலே.
உலகத்தின் 3வது பெரிய நூலகம்:
- மூன்றாவது பெரிய புத்தக சாலை இருந்த இடம் இந்த பெர்கமு என்ற இடத்தில் தான்.
Papyrus - parchment:
- இந்தியாவில் இருந்த ராஜாக்கள், எகிப்தில் இருந்து இதை இறக்குமதி செய்து கொண்டார்கள்.
- அந்த காலத்தில் எகிப்துக்கு ஒருவித பெருமிதம் இருந்தது.
- பெர்கமு என்ற இடத்தில் இருக்கிற papyrus என்ற தாள்களை வைத்து நிறைய நூலகங்களை தெரிந்து கொண்டார்களாம்.
- எனவே, பெர்கமுவில் இருப்பவர்கள் papyrus ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்தார்கள்.
- பெர்கமுவில் இருப்பவர்கள் புதிதாக எழுதுகிற முறையை கண்டுபிடித்தார்கள்.
- அது தான் parchment.
- அங்கே ஆரம்பித்தது தான் கடிதம்.
Antony and cleopatra:
- கி.மு 41 ம் ஆண்டிலே நடைபெற்ற சம்பவம் என்ன தெரியுமா?
- Alexandria விலே அழகான ராணி இருந்தாள்.
- அவள் பெயர் cleopatra.
- Julius Caesar இந்த பெண்ணின் மீது ஈர்க்கப்பட்டு இவளின் மீது காதல் கொண்டார்.
- ஆனால் அவர் ஒரு கிழவன்.
- ஆனால் Cleopatra, Julius Caesar ன் இராணுவ அதிகாரியான Mark Antony ஐ காதலித்தாள்.
- இதை அறிந்த Julius Caesar, Alexandria வில் உள்ள நூலகத்தை அப்படியே எரித்து சாம்பலாக்கி விட்டார்.
- அதன் பிறகு Brutus என்று இன்னொரு நபர் வந்து தந்திரம் செய்து Julius Caesar ஐ கொலை செய்தான்.
Gift by Mark Antony:
- Mark Antony என்பவர் Cleopatra வின் நூலகம் எரிந்து சாம்பலானதற்கு ஆறுதல் சொல்லும் வகையில், பெர்கமு என்ற இடத்தில் இருக்கும் நூலகத்தை அப்படியே எடுத்து அவளுக்கு பரிசாக கொடுத்தார்.
- அந்த பெர்கமுவில் இருந்த புத்தகசாலை அப்படியே இல்லாமல் போய்விட்டது.
சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்,
- இந்த பெர்கமுவில் கிரேக்க தெய்வங்களுக்கு அநேக கோயில்கள் இருந்தன.
- Zeus என்ற கிரேக்க தெய்வத்துக்கு ஒரு கோயில் இருந்தது.
- அந்த கடவுள் தான் சுபிட்சத்தை கொடுக்கிற தெய்வம் என அவர்கள் நம்பினார்கள்.
- பெர்கமுவுக்கு போய், அந்த Zeus என்ற கடவுளுக்கு பூஜை செய்தால் அந்த குடும்பம் சுபிட்சமாக மாறும்; வியாபாரம் சுபிட்சமாக மாறும்; அவர்களுடைய நாடு சுபிட்சமாக மாறும் என்று அவர்கள் நம்பினார்கள்
- பெர்கமுவில் இருந்தவர்கள் அந்த Zeus தெய்வத்துக்காக மனிதர்களை நரபலி கொடுத்தர்கள்.
- பெரிய கோயில், பெரிய பலிபீடம் இருந்தது.
- அங்கு மனிதனின் தலையை வெட்டின பிறகு அந்த இரத்தம் ஓடுவதற்கு ஒரு பாதை இருந்தது.
- ஒரு பெரிய பாதாளம் போன்ற குழியில் அது போய் விழும்.
- குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 300 மனிதர்களை நரபலி இடுவார்கள்.
- சில புருஷர்கள் தங்கள் மனைவியை ஒப்புக்கொடுப்கார்கள்.
- சில தம்பதிகள் தங்கள் பிள்ளைகளை ஒப்புக் கொடுப்பார்கள்.
- அந்த இடத்தில் பலி செலுத்துவதற்கென்றே அடிமைகளை பணம் கொடுத்து வாங்குவார்கள்.
- வெளியில் இருந்து யாராவது அந்த இடத்திற்கு பலி கொடுக்க எதையும் கொண்டு வராமல் வந்தால், அந்த கோயிலுக்கு வெளியே ஒரு பெரிய கூண்டு இருக்கும்.
- அங்கிருந்து மிருகங்களை பணங்கொடுத்து வாங்குவது போல மனிதர்களை பணங்கொடுத்து வாங்கலாம்.
- ஆயிரக்கணக்கில் அடிமைகளை அந்த கூட்டில் அடைத்து வைத்திருந்தார்கள்.
- அவ்வளவு பயங்கரமான, அருவருக்கத்தக்க காரியங்களை செய்கிற நகரம்.
- இதனால் தான் இந்த இடம் சாத்தானுடைய சிங்காசனம் என்று சொல்லப்படுகிறது.
- அப்படிப்பட்ட கோயில் இருக்கிற நகரத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் எவ்வளவு பயத்துடன் ஜீவித்திருப்பார்கள்.
- எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் ஊழியம் செய்திருப்பார்கள்.
- இயேசு ஒரு காரியத்தை இங்கு சொல்கிறார்.
- ரோமர்கள் வந்து அங்கு இருந்த கிறிஸ்தவர்களிடம் நீங்கள் எங்கள் சமயத்துக்கு வர வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
- முடியாது என்று ஒருவர் முன்னாடி வந்து சொன்னார்.
- அவர் தான் அந்திப்பஸ்.
- அந்திபஸ் ஐ கொண்டு வந்து கிறிஸ்தவர்களுக்கு தெரிவதற்கு முன்பாக அந்த கோயிலில் அவனை பலி செலுத்தினார்கள்.
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
-வெளிப்படுத்தல் 2 : 14
-வெளிப்படுத்தல் 2 : 14
பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொ
- இப்போது குறைபாடுகளை சொல்லுகிறார்.
- எண் 22-23 பாலாம், பாலாக் என்பவர்களை பற்றி அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
- மோவாபிய ராஜா பாலாக் என்பவன், இஸ்ரவேல் தேசத்திற்கு சாபம் கொண்டு வருவதற்காக பிலேயாம் என்கிற தீர்க்கத்தரிசியை விலைக்கு வாங்கினான்.
- அவன் வாயை திறக்கும் போது ஆசீர்வாதம் வந்தது.
- ஆண்டவருடைய ஜனங்களை அவனால் சபிக்க முடியாமல் போய் விட்டது.
- ஐந்து தடவை முயற்சி செய்தார். முடியவில்லை.
- பிலேயாம் ஒரு ஆலோசனை கொடுக்கிறான்.
- இஸ்ரவேல் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாக ஏதாவது செய்தால், என்னால் அவர்களை சபிக்க முடியும் என்று சொன்னான்.
- அப்பொழுது ராஜா அவனிடம் எப்படி இதை செய்வது என கேட்கிறான்.
- பிலேயாம் சொன்னான், அந்த ஆண்டவருக்கு விருப்பமில்லாத 2 காரியங்கள் இருக்கிறது. வேசித்தனம் மற்றும் விக்கிரக ஆராதனை,
- எனவே இளம்பெண்களை கவர்ச்சிகரமாக உடுவித்து அந்த ஜனங்கள் மத்தியில் அனுப்புவோம் என்றான்,
- அப்போது அவர்களிடம் நீங்கள் எங்களுடைய தெய்வங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுவோம்.
- வேசித்தனத்திலும் விழுந்து விடுவார்கள். விக்கிரக ஆராதனையிலும் விழுந்து விடுவார்கள்.
- அந்த கெட்ட ராஜாவுக்கே இப்படி ஒரு ஆலோசனை வரவில்லை.
- ஆனால் ஆண்டவரின் தீர்க்கத்தரிசிக்கு வந்தது.
- அதே மாதிரி இஸ்ரவேல் ஜனங்கள் பாவத்தில் விழுந்தனர்.
- ஆண்டவரும் நிறைய மக்களை அழித்தார்.
- இப்போது இயேசுவானவர் இந்த பெர்கமு சபைக்கு சொல்கிறார், அன்று அந்த விஷ தன்மையான ஆலோசனையை கொடுத்த பிலேயாமை மாதிரி ஆட்களும் உன்னுடைய சபையில் இருக்கிறார்கள் என்கிறார்.
- நாமும் இதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- இன்றும் அநேக சபைகளில் வேசித்தனம் இருக்கிறது.
- வேசித்தனம் என்பது பலவீனம் அல்ல. ஒரு பாவம்.
- நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
-வெளிப்படுத்தல் 2 : 15
-வெளிப்படுத்தல் 2 : 15
- யார் அந்த நிக்கோலா?
- இயேசுவானவர் எபேசு சபைக்கு சொல்லும் போது, நான் வெறுக்கிற நிக்கோலாய் மதஸ்தரை நீயும் வெறுக்கிறாய் என்றார்.
- அப் 6 வது அதிகாரத்தில் 7 நற்சாட்சி பெற்றவர்களில் ஒருவர் தான் இவர்.
- அதில் ஒருவர் தான் ஸ்தேவான். முதன்முதலில் இரத்த சாட்சியாக மரித்தவர்.
- அதில் ஒருவர் தான் பிலிப்பு. சமாரியாவில் சுவிசேஷத்தை பிரசிங்கித்தவர்.
- இதன் பிறகு பிசாசு இந்த நிக்கோலாய் மீது இறங்கியது.
- ஒரு புதிய படிப்பினையை கொண்டு வந்தான்.
- சாதாரண விசுவாசிகளை விட தேவ ஊழியர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொடுத்தான்.
- அது ஆண்டவருக்கு பிடிக்காத காரியம்.
- அனைவருமே ஊழியக்காரர்கள் தான்.
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
-வெளிப்படுத்தல் 2 : 16
-வெளிப்படுத்தல் 2 : 16
நீ மனந்திரும்பு,
- ஆண்டவர் பெர்கமு சபைக்கு மனந்திரும்ப வாய்ப்பளிக்கிறார்.
- விசுவாசிகளாகிய நம்மிடமும் வேசித்தனம், விக்கிரக ஆராதனை, தராதர பிரச்சனை போன்றவைகள் இருந்தால் நாம் மனந்திரும்புவோம்.
இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
- வார்த்தை அவருடைய வாயில் இருந்து வருகிறது.
- அந்தப் பட்டயத்தின் மூலம் நம்மிடத்தி்ல் யுத்தம் பண்ணுவார்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 17
-வெளிப்படுத்தல் 2 : 17
- மறைவான மன்னா என்றால் வேத வசனங்கள்.
- வேதத்திலே மறைந்திருக்கிற ஆகாரம் தான் மன்னா.
- நாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து இருந்தோமானால் ஆண்டவர் நமக்கு வேதத்திலுள்ள இரகசியங்களை (மறைவான மன்னாவை) காண்பிப்பார்.
அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும்,
- இந்த சொல் புரிய வேண்டுமென்றால் யூத கலாச்சாரம் தெரிய வேண்டும்.
எடுத்துக்காட்டு:
- ஒருவர் இன்னொருவரின் மாட்டை திருடி விட்டார் என்று வைத்து கொள்வோம்.
- மாட்டின் சொந்தக்காரர் போய் மூப்பரிடம் பிராது கொடுக்கிறார்.
- அப்போது திருடினவரும் தான் செய்த தவறை ஒப்புக் கொள்கிறார்.
- மூப்பர்களும் அவனுக்கு தண்டனையை ஒரு நாளில் நிறைவேற்ற முடிவு செய்கின்றனர்.
- அப்போது மாட்டின் சொந்தக்காரர் ஒரு வெள்ளைக்கல்லை எடுத்து கொண்டு வருகிறார்.
- அதை கொண்டு வந்து நடுவில் வைக்கிறார்.
- அதற்கு என்ன அர்த்தமென்றால்,
- நான் இவனுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்பை கொடுத்து விட்டேன்.
- திருடினவருக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார்.
- இனி அவர் தண்டனையை நிறைவேற்ற தேவையில்லை.
- அப்போது மூப்பர்கள் அந்த வெள்ளைக் கல்லை கையில் எடுத்து பிராது கொடுத்தவர், திருடினவனுக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார் என்று அறிவிக்க வேண்டும்.
- அப்போது அந்த கல்லில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
- மன்னிப்பு கொடுப்பவருக்கு அந்த நபரின் பெயரை மாற்றியமைக்க உரிமை உண்டு. (மாட்டுத்திருடன்)
- அப்போது மூப்பர்கள் அந்தப் பெயரை மக்களுக்கு அறிவிப்பார்கள்.
அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
- இப்போது ஆண்டவர் சொல்லுகிறார் நான் மன்னிப்பு கேட்கிறவனுக்கு புதிய நாமத்தை கொடுப்பேன் என்று.
- வேறொருவனும் அறியாத பெயர் என்றால் என்ன?
- ஒரு கணவன், மனைவி இருந்தால் அவர்கள் இருவரும் மாத்திரமே பாவிக்கிற பெயர்கள் உண்டு.
- அது போல இயேசுவுக்கு மாத்திரமே முடியும் அந்த பெயரில் நம்மை (மணவாட்டியை)அழைக்க.
உலக சரித்திரத்தில் ஒரு சம்பவம்:
- Zeus தேவாலயத்துக்கு என்ன நடைபெற்றது தெரியுமா?
- ஆக்கிரமிக்கவர்கள் வந்து பெர்கமுவை அப்படியே அழித்து விட்டார்கள்.
- அதன்பிறகு ஜனங்களை பலியிடுதல் என்பதெல்லாம் அங்கு இல்லவே இல்லை.
- சமீபத்திலே, 1879 ல் ஜெர்மன் நாட்டில் இருந்து வந்த ஒரு பொறியியலாளர் துருக்கியில் ஒரு புகைகிற வீதியை செய்து கொண்டிருந்தார்.
- அதை செய்ய கற்கள் தேவை.
- அந்த கற்கள் போதாமல் போய்விட்டது.
- Kaal Humaan என்பவர் தான் engineer.
- Isthanbul ல இருந்து புகைகிற பூமியை போட்டு கொண்டு போகும் போது கற்கள் போதாமல் போய் விட்டது.
- உள்ள உள்ள போய் கற்கள் கிடைக்கிறதா எனத் தேடுகின்றனர்.
- ஒரு வித்தியாசமான கற்கள் இருந்தன.
- அழகாக செதுக்கப்பட்டு இருந்தது அந்த கற்கள்.
- இது திடீரென்று வந்த சாதாரண கற்கள் அல்ல, இதற்கு பின்பு ஏதோ இருக்கிறது என்று அந்த பொறியியலாளர் நினைத்தார்.
- அவர் தன் நண்பரான Hoffman என்ற தொன்பொருள் ஆராய்ச்சியாளரை அணுகுகிறார்.
- அவர் தன்னுடைய ராஜாவுடைய அனுமதி வாங்கி கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
- மணல்களை ஒதுக்கி பார்க்கும் போது வந்தது Zeus தேவாலயம்.
- அப்படியே இருந்தது. எதுவுமே உடைக்கப்பட்டு இருக்கவில்லை.
- ஒவ்வொரு கற்களாக எடுத்து வைத்து அதற்கு ஒரு அடையாளத்தைப் போட்டு வைத்தார்கள்.
- அதையெல்லாம் isthanbul ல் இருக்கிற கப்பற்துறைமுகத்திற்கு கொண்டு வந்து, கப்பல்களின் மூலமாக Hamburg என்ற இடத்திற்கு கொண்டு வந்து,
- அங்கு இருந்து Berlin கு கொண்டு வந்து சரியாக அடையாளம் போட்டிருந்த கற்களை பொருத்தி வைத்தார்கள்.
- எனவே Zeus தேவாலயம் அப்படியே Berlin கு வந்தது.
- பின்பு 1904 ம் ஆண்டிலே பெர்கமு museum என்று
- திறந்து வைத்து அதில் அதை வைத்தார்கள்.
- அந்த வருடம், எத்தனையோ வருடங்களாக பூமிக்குள் இருந்த பிசாசு மறுபடியும் வெளியே வந்து விட்டது.
- ஒரு நாளைக்கு 1000 உடல்களை எடுத்த அந்த பிசாசுக்கு எப்படி ஒரு இரத்தவெறி இருந்திருக்கும்.
- அந்த ஆண்டு தொடங்கப்பட்ட அந்த museum, Germany ல் பிரதான புரட்சி ஏற்பட்டு keiser ராஜாவை அழித்து அங்கே ஒரு ஜனநாயகம் உருவாகியது.
- சரியாக 10 வருடங்கள்.
- 1914 ம் ஆண்டு, ஆகஸ்ட் முதலாம் தேதி முதலாவது உலக யுத்தம் நடைபெற்றது.
- முதன் முறையாக 32 நாடுகள் சம்பந்தப்பட்டு யுத்தம் நடந்தது.
- Feb 1918 வரைக்கும் அந்த யுத்தம் தொடர்ந்தது.
- 20 million ஜனங்கள் மரித்தார்கள்.
- அந்த யுத்தத்தில் எவ்வளவு இரத்தம் சிந்துதல் நடைபெற்று இருக்கும்.
- பிசாசு அந்த இடத்தில் இரத்தபலியை எடுத்தான்.
- German அங்கே தோல்வி அடைந்தது.
- அந்த German இராணுவத்தில் ஒரு கூட்டம் இருந்தது.
- Prusia என்ற இராணுவம்.
- அங்கு இருந்த ஒருவர் அவருக்கு படிப்பு வரவில்லை.
- சித்திரங்கள் வரைய மாத்திரம் அவரால் முடியும்.
- ஒன்றுக்கும் உதவாதவராக இருந்தார்.
- அவர் இராணுவத்தில் சேர்ந்தார்.
- அவர் தான் Adolf Hitler.
- அந்த Adolf Hitler உள்ளத்தில் பிசாசு போனான்.
- ஒன்றுக்கும் உதவாத அவனை Germany யின் தலைவனாக மாற்றினான் பிசாசு.
- 1936 ம் ஆண்டிலே knox என்ற பகுதியிலே அவன் தலைவனாக வந்தான்.
- பழைய ஏற்பாடு வேண்டாம் என்று பிரதான புரட்சியை செய்து அங்கே பழைய ஏற்பாட்டை எரித்து சாம்பலாக்கி விட்டான்.
- யூதர்களை கொலை செய்ய வேண்டும் என்று சொன்னான்.
- 1939 ம் வருடம், august 3 ம் தேதி Poland நாட்டுக்கு விரோதமாக யுத்தம் செய்தான்.
- இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பமானது.
- 1945ல் தான் முடிவடைந்தது.
- அப்போது முதலாவது யுத்தத்தில் மரித்தவர்களை விட, 4 மடங்கு மேலானவர்கள் யுத்தத்தில் மரித்தார்கள்.
- ஏன். பெர்கமு பிசாசினால்.
- Adolf Hitler கு Zeus ல் உள்ள பலிபீடத்தைப் போலவே ஒரு பிரசங்கபீடம் இருந்தது.
- அங்கு இருந்து தான் அவன் பிரசங்கம் பண்ணினான்.
- யூதர்களை கொலை செய்ய வேண்டும் என்று.
- 60 லட்சம் யூதர்களை கொலை செய்தான்.
- நாடோடிகள் என்ற gypsies அவர்களில் 5 லட்சம் பேரை கொலை செய்தான்.
- அந்த german நாட்டு பிள்ளைகளான கைகால் இல்லாத முடவர்களை கூட கொலை செய்தான்.
- பிசாசு நரபலி எடுத்து கொண்டான்.
- 1945 ம் ஆண்டு, அந்த யுத்தம் முடிந்தாலும் உலகத்தாருக்கு தெரியாத இன்னொரு யுத்தமான பனிப்போர் நடைபெற்றது.
- America கும், Russia கும் நடந்த அந்த போர் 1990 ல் தான் நிறுத்தப்பட்டது.
- இன்றும் கூட பயங்கரவாத அமைப்புகள் மக்களை கொலை செய்கிறார்கள்.
- அது அந்த Zeus ன் தாக்குதல்.
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
-வெளிப்படுத்தல் 2 : 18
-வெளிப்படுத்தல் 2 : 18
- இயேசு கிறிஸ்துவானவர் ஒரு சபைக்கு செய்தி கொடுக்கும் போது எப்படி காட்சியளிக்கிறார் என்பதை இவ்வசனம் காட்டுகிறது.
- இந்த இடத்தில் 3 விதமாக தன்னை காட்டுகிறார்.
- முதலாவது தன்னை தேவகுமாரனாக காட்டுகிறார்.
- ஏன் தன்னை தேவகுமாரனாக அறிமுகப்படுத்துகிறார்.
- உங்களை மீட்டுக் கொண்டு வந்த இயேசுவாக பேசுகிறேன் என்கிறார்.
- அவர் உக்கிர கோபத்தில் இருக்கிறார்.
- அதனால் தான் அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையாக இருந்தது.
- உலகத்தை பார்க்கும் போது அவருக்கு கோபம் கிடையாது. கவலை தான் இருக்கிறது.
- ஆனால் சபையை நோக்கி பார்க்கும் போது அவருக்கு உக்கிர கோபம் வந்தது.
- பலிபீடங்கள் எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது.
- அது நியாயத்தீர்ப்பை காட்டுகிறது.
- ஆண்டவர் சபைக்கு நியாயத்தீர்ப்பை கொடுக்க போகிறார்.
- இது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு அல்ல.
- சபை எடுத்துக்கொள்ளப்படும் போது சபைக்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.
- ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து இருப்பவர்களை மாத்திரமே அவர் எடுத்துக் கொள்ளுவார்.
- கைவிடப்பட்டு போகிறவர்கள் தான் அந்த நியாயத்தீர்ப்பு.
உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
-வெளிப்படுத்தல் 2 : 19
-வெளிப்படுத்தல் 2 : 19
உன் கிரியைகளையும்
- உங்கள் கிரியைகள் நன்றாக இருக்கிறது என்கிறார்கள்.
- சுவிசேஷம், சபை ஒழுங்கு எல்லாம் இருக்கிறது.
- இந்த சபையின் கிரியைகள் நான்கு விதமான பெயர்ச்சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
1) உன் அன்பையும்,
- இது Agape என்று கிரேக்க மொழியில் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும்.
- தன்னலமற்ற அன்பை கொண்டு இருக்கிறீர்கள் என்கிறார்.
- ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கிறீர்கள் என்கிறார்.
2) உன் ஊழியத்தையும்,
- ஜெப ஊழியம், சுவிசேஷ ஊழியம், சபை ஊழியம் அனைத்தையும் நன்றாக செய்கிறீர்கள்.
3) உன் விசுவாசத்தையும்,
- சபையில் எல்லோருக்கும் நல்ல விசுவாசம் உண்டு.
- கர்த்தரை சார்ந்து இருக்கும் அந்த விசுவாசம் அனைவரிடமும் உள்ளது.
4) உன் பொறுமையையும்,
- இந்த சபையில் பொறுமை இருக்கிறது.
- சண்டை இல்லாமல் பொறுமையாக இருக்கிறார்கள்.
- அனைத்திற்கும் கர்த்தரை நம்பி பொறுமையாக காத்திருக்கிறார்கள்.
நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
- எபேசு சபைக்கு சொன்னவைகளுக்கு எதிர்மறையான ஒன்றை இந்த சபைக்கு சொல்கிறார்.
- இந்த சபையில் உள்ளவர்கள் முன்பு இருந்ததை விட அதிமாக கிரியை செய்கிறார்கள்.
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
-வெளிப்படுத்தல் 2 : 20
-வெளிப்படுத்தல் 2 : 20
ஆகிலும்
- இது ஒரு பயங்கரமான வார்த்தை.
என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்
- யாராவது தன்னையே தானே போதகராக நியமித்து கொண்டிருப்பாரானால் அவர் யேசபேலின் ஆவியை கொண்டவர்.
- அவர் ஓரு போதகருக்கு கீழாக அடங்கி இருந்து பயிற்சி எடுத்து இருக்க வேண்டும்.
- விசுவாசிக்கு என்ன தான் திறமை இருந்தாலும், என்ன தான் நல்ல மனிதனாக இருந்தாலும், ஒரு தலைவனுக்கு கீழாக இல்லாத ஒரு நபர், மூப்பர் சங்கத்தில் இருந்து நியமிக்கப்படாத ஒரு ஆள் pastor ஆக வந்திருப்பாரானால் அது யேசபேலின் ஆவி.
- Self appointed ministry - தன்னை தானே நியமித்து கொள்ளுகிற ஊழியம்.
- சில பேர் சுவிசேஷம் சொல்லி, நிறைய ஆத்துமாக்களை ஆதாயம் செய்வார்கள்.
- அந்த மக்கள் எல்லாம் இவரை போதகராக இருக்க சொல்லி வற்புறுத்தினார்கள் என்று இவர்கள் போதகராக மாறி விடுவார்கள்.
- இது யேசபேலின் ஆவி.
- போதகர்களை ஜனங்கள் நியமிக்கிறார்கள்.
- ஜனங்கள் நியமிப்பதற்கு இது ஜனநாயகம் அல்ல.
- யேசபேலை பற்றி நாம் வாசிப்போமானால், அங்கு சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தீர்க்கத்தரசிகளை கொலை செய்தாள்.
- 1 இராஜாக்கள் 17-18 சொல்கிறது.
- யேசபேலின் ஆவி ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்ய வைக்கிறது.
- வேதத்திற்கு சொந்தமில்லாத காரியங்களை செய்வது தான் ஆவிக்குரிய வேசித்தனம்.
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
-வெளிப்படுத்தல் 2 : 21
-வெளிப்படுத்தல் 2 : 21
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்;
- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய கிருபையினால் மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
- ஒருவரும் கெட்டுப்போகாமல் மனந்திரும்ப வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.
தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
- யேசபேலுக்கு அவளுடைய அக்கிரமத்தை உணர்ந்து மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
- ஆனால் அவள் மனந்திரும்பவில்லை.
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
-வெளிப்படுத்தல் 2 : 22
-வெளிப்படுத்தல் 2 : 22
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள்
- அதாவது யேசபேலின் போதனைகளை கைகொள்ளுகிறவர்கள்.
- விபசாரம் என்று குறிப்பிடப்படுவது விக்கிரக ஆராதனையை.
தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
- விக்கிரக ஆராதனை செய்பவர்களும், யேசபேலின் போதனைகளை கைகொள்ளுகிறவர்களும் மனந்திரும்பவில்லை என்றால் அவர்களை உபத்திரவத்திலே தள்ளி விடுவேன் என்கிறார்.
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
-வெளிப்படுத்தல் 2 : 23
-வெளிப்படுத்தல் 2 : 23
- அவருடைய நியாயத்தீர்ப்பை காட்டுகிறது.
- கர்த்தர் ஆகாப் மற்றும் யேசபேலை, யெகூ என்ற ஒருவரை எழுப்பி எப்படி அழித்தாரோ அதே போல அவள் கிரியைகளை கைகொள்ளுகிறவர்களையும் அழிப்பார்.
- அப்பொழுது சபைகளில் இருப்பவர்கள் கர்த்தர் யார் என்பதை அறிந்து கொள்வார்கள்.
தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
-வெளிப்படுத்தல் 2 : 24
-வெளிப்படுத்தல் 2 : 24
- அப்படிப்பட்ட யேசபேலின் போதகத்தை பற்றிக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு, கர்த்தர் வேறு எந்த பாரத்தையும் உங்கள் மேல் சுமத்த மாட்டேன் என்கிறார்.
சாத்தானுடைய ஆழங்கள்
- சிமிர்னாவில் உள்ள சபை "சாத்தானின் ஜெபஆலயத்தை" எதிர்கொண்டது,
- பெர்கமுவில் உள்ள சபை "சாத்தானின் சிங்காசனம் இருக்கும் இடத்தில்" வாழ்ந்தது,
- மேலும் தியத்தீராவில் உள்ள சபை "சாத்தானின் ஆழமான காரியங்களுக்கு" எதிராக போராடியது.
- தேவாலயத்தில் சாத்தானின் ஈடுபாட்டின் அளவைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
-வெளிப்படுத்தல் 2 : 25
- இயேசு வந்து நம்மை எடுத்துக் கொள்ளும் வரையும் நாம் அவரையும், அவரது கட்டளைகளையும் பற்றிக் கொள்ள வேண்டும்.
- 40 நாட்கள் உபவாசம் இருங்கள் என்று சொல்லவில்லை.
- இருக்கிற வேதத்தை பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்.
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
-வெளிப்படுத்தல் 2 : 26
-வெளிப்படுத்தல் 2 : 26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ
- முடிவுபரியந்தம் என்றால் நாம் மரணிக்கும் வரையும் அல்லது இரகசிய வருகையில் நாம் எடுத்துக்கொள்ளப்படும் வரையும்.
- இயேசுவானவரின் கிரியைகளை கைகொள்ளுகிறவனுக்கு
அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
- கர்த்தருடைய கிரியைகளைக் காக்கிறவர்களுக்குக் கொடுக்கப்படும் முதல் வெகுமதி.
- அதிகாரம் - Power, Exousia in Greek.
- Power of authority- அதிகாரப் பூர்வமானது.
- ஜெயிப்பவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் அவரோடு கூட அரசாளுவார்கள்.
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
-வெளிப்படுத்தல் 2 : 27
-வெளிப்படுத்தல் 2 : 27
- பிசாசின் காரியங்களை இருப்புக்கோலால் அடிப்பார்.
- வேதம் தான் அந்த இருப்புக்கோல்.
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
-வெளிப்படுத்தல் 2 : 28
- அதிகாலையிலே காணப்படுகிற நட்சத்திரம்.
- ஒரே ஒரு விடியற்காலை நட்சத்திரம் மட்டுமே உள்ளது,
- ஆனால் எல்லா ஜெயங்கொள்பவர்களுக்கும் அதுவாக்குறுதியளிக்கப்பட்டதால், இது பேச்சின் உருவகம் என்பதை நாம் அறிவோம்.
- இங்கே கர்த்தரின் கருத்து இது தான்.
- அவர் பெரிய மகிமையை கொடுப்பார்.
- அந்த அதிகாலை மகிமையை கொடுப்பார்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 29
-வெளிப்படுத்தல் 2 : 29
- வெளி 2:7 விளக்கத்தைக் காண்க.
Comments
Post a Comment