தீர்க்கத்தரிசி விளக்கம்

தீர்க்கத்தரிசி விளக்கம்

  • வேதத்தில் தீர்க்கத்தரிசி என பல இடங்களில் வாசிக்கிறோம். 
  • ஆனால் அவர்களெல்லாரும் எதிர்கால தீர்க்கத்தரிசனத்தை உரைத்தவர்கள் அல்ல. 
உதாரணமாக 1 நாளாகமம் 25:1-3 ல் கீழ்க்கண்டவாறு நாம் வாசிக்கலாம். 

1) சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற 
2) ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற 
3) கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற.

எனவே, தீர்க்கத்தரிசனம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். 

இதற்கு மூல மொழியான எபிரேய மொழியில் 4 பதங்கள் உள்ளன.

1) Roe’h
2) Hoze’h
3) Navi 
4) Esh Elohim

Roe’h:
  • Roe’h என்றால் “காண்கிறவன்” என்று அர்த்தம்.
  • ஆங்கிலத்தில் “Seer” எனக் கொடுக்கப்பட்டிருக்கும். 
  • தமிழில் “ஞானதிருஷ்டிக்காரன்” என்று கொடுக்கப்பட்டிருக்கும். 
  • இவர்களுக்கு இவர்கள் போய் வேண்டி கேட்டுக் கொள்ளாமலே, ஆண்டவர் தரிசனம் கொடுப்பார். 
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி (Prophet )என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் (Seer) என்னப்படுவான்.
 -1 சாமுவேல் 9 : 9

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும்(Roe’h), கீசின் குமாரனாகிய சவுலும்(Roe’h), நேரின் குமாரனாகிய அப்னேரும்(Roe’h), செருயாவின் குமாரனாகிய யோவாபும்(Roe’h), அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.
 -1 நாளாகமம் 26 : 28

Hoze’h:
  • Hoze’h என்றால் “பார்க்கிறவன்” என்று அர்த்தம்.
  • ஆங்கிலத்தில் “Seer” எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • தமிழில் “ஞானதிருஷ்டிக்காரன்” என்று கொடுக்கப்பட்டிருக்கும். 
  • ஆனால் இவர்கள் ஆண்டவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பி ஆண்டவரிடத்தில் போய் மன்றாடி, அவரை பார்ப்பார்கள். 
  • ஆண்டவரை இசைக் கருவிகள் மூலம் இசை வாசித்து துதிப்பவர்களும் இவர்கள் தான். 
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய (Hoze’h )காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
 -2 சாமுவேல் 24 : 11

அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே (Hoze’h), போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
 -ஆமோஸ் 7 : 12

Navi:
  • Navi என்றால் எதிர்காலத்தை குறித்து தீர்க்கத்தரிசனம் உரைப்பவர்கள். 
  • ஆங்கிலத்தில் Prophet எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • Arabian மொழியில் இது Nabi என்று அழைக்கப்படும். 
  • prophet என்ற ஆங்கில வார்த்தையானது ஒரு கூட்டு கிரேக்க வார்த்தையின் ஒலிபெயர்ப்பாகும்;
  • pro (முன்/நோக்கி) ; phesein (சொல்ல)
  • எனவேஒரு (ப்ரோப்டஸ்என்பது எப்போதாவது எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பது உட்பட,
  • தேவனிடத்திலிருந்து மனிதர்களுக்கு செய்திகளை தெரிவிப்பவர்
  • ஒரு தீர்க்கதரிசி என்பவர் தேவனுக்காக அவருடைய மக்களிடம் பேசுபவர். 
  • இந்த வார்த்தை பெரும்பாலான இடங்களில் வரும். 
அவர் தீர்க்கதரிசியாகிய (Navi - Prophet) நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.
 -2 சாமுவேல் 12 : 25

அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா (Navi - Prophet)  வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
 -1 இராஜாக்கள் 18 : 36

Esh-Elohim:
  • Esh-Elohim என்றால் தேவனுடைய மனுஷன் என்று பொருள். 
தேவனுடைய மனுஷன் (a man of God - Esh Elohim) ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,
 -1 சாமுவேல் 2 : 27

தேவனுடைய மனுஷனைத் (a man of God - Esh Elohim) தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
 -1 இராஜாக்கள் 13 : 14

Roe’h மற்றும் Hoze’h வேறுபாடுகள் அட்டவணை:

Roe’h

Hoze’h

Look (காண்பவர்கள்)

See (பார்ப்பவர்கள்)

"look" என்பது உங்கள் கண்களை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தி காண்பதாகும்

“see" என்பது உங்கள் கண்களைப் பயன்படுத்தி யாரையாவது அல்லது எதையாவது கவனிப்பது

தரிசனம் காண்கிறவர்கள்

தரிசனம் பார்க்கிறவர்கள்

ஞானதிருஷ்டிக்காரன்

ஞானதிருஷ்டிக்காரன்

ஆண்டவரே இவர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

ஆண்டவரின் தரிசனத்தை பார்க்க ஆசைப்பட்டு, துதிப்பார்கள்.


பழைய ஏற்பாட்டில் Roe’h, Hoze’h மற்றும் Navi யாவர் என்பதற்கான அட்டவணை:

Ro’eh 

Hoze’h

Navi

சாதோக் - ஆசாரியன் (2 சாமு 15:27)

காத் (2 சாமு 24:11, 1 நாளா 29:30)

நாத்தான் (1 நாளா 29:30, 2 நாளா 9:29)

சாமுவேல் (1 நாளா 9:22,  (1 நாளா 26:28, 1 நாளா 29:30)

ஏமானின் புத்திரர்கள் (1 நாளா 25:4)


சவுல் (1 நாளா 26:28)

இத்தோ (2 நாளா 9:29)


அப்னேர் (1 நாளா 26:28)

யெகூ (2 நாளா 19:2)


யோவாப் (1 நாளா 26:28)

ஆசாப் (2 நாளா 29:30)


அனானி (2 நாளா 16:7)

எதுத்தூன் (2 நாளா 35:15)



மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
 -1 நாளாகமம் 25 : 1
  • இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசாப், ஏமான், எதுத்தூன்  என்ற மூவருமே Hoze’h என்று மேலே உள்ள அட்டவணையில் நாம் காண்கிறோம். 
  • எனவே, இவர்கள் ஆண்டவரைத் துதித்து பாடி, அவரை பார்க்க விரும்புகிறார்கள். 
  • இவர்கள் தீர்க்கத்தரிசிகள் அல்ல. 
  • இவர்களின் பாடல்கள் தேவனின் ஆவியால் தூண்டப்பட்டது அல்லது வழிநடத்தப்பட்டது. 
  • நன்றி, துதி என்பதை தான் குறிக்கிறது.  
  • இவர்கள் மூவரின் பாடல்களும் சங்கீதம் புத்தகத்திலும் இடம் பெறுகின்றன. 

ஆசாப்

எதுத்தூன்

ஏமான்

சங் 50,73-83

சங் 88

சங் 39,62,77


Roe’h, Hoze’h and Navi என்ற மூன்றும் ஒரே வசனத்தில் காணப்படுகிறது. 

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் (Ro’eh) பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் (Navi) பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் (Hoze’h) பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.    
 -1 நாளாகமம் 29 : 30

1 சாமுவேல் 19:
  • சாமுவேல் 19 இல்சவுல் 3 சேவகர்களை அனுப்பியதாகவும்தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் வந்துஅவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும் வாசிக்கிறோம்
  • கடைசியாக சவுல் சென்றார்அவரும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • இங்கேஇது தீர்க்கத்தரிசனத்தைக் குறிக்கவில்லைஅவர்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள். 
  • அவர்களில் நிரம்பியிருக்கும் மகிமையின் காரணமாகஅவர்கள் தங்கள் சுயநினைவின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்
  • அது தான் தீர்க்கத்தரிசனம் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சவுல் ஒரு Roe’h என்று மேலே உள்ள அட்டவணையில் வாசிக்கிறோம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4