மத்தேயு சுவிசேஷம் - சுவாரஸ்யமான தகவல்கள்

மத்தேயு புத்தகத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை அறிவோம். 

  • நான்கு சுவிசேஷ புத்தகங்களில், மத்தேயு புத்தகத்தில் மட்டுமே “பரலோக ராஜ்யம்” என்ற வார்த்தையும், “சபை” என்ற வார்த்தையும் காணப்படுகிறது.
  • மத்தேயு புத்தகத்தில் “5 முறை” தேவனுடைய ராஜ்யம் என்ற வார்த்தை இடம் பெறுகிறது. இது மற்ற புத்தகங்களிலும் காணப்படுகிறது. 
இந்த  “பரலோக ராஜ்யம்” என்ற வார்த்தை 33 முறை, 32 வசனங்களில் காணப்படுகிறது.

எண்

பரலோக இராஜ்யம்

1

மத் 3:2

2

4:17

3

5:3

4

5:10

5

5:19 (2)

6

5:20

7

7:21

8

8:11

9

10:7

10

11:11

11

11:12

12

13:11

13

13:24

14

13:31

15

13:33

16

13:44

17

13:45

18

13:47

19

13:52

20

16:19

21

18:1

22

18:3

23

18:4

24

18:23

25

19:12

26

19:14

27

19:23

28

20:1

29

22:2

30

23:13

31

25:1

32

25:14


ஆதாம் முதல் தாவீது வரையிலான சந்ததியை பார்த்தோமானால் தாவீது 33 வது நபராக பிறந்திருக்கிறார். 
  • ஆதாம் தேவனால் உண்டானவன்.

1

சேத்

2

ஏனோஸ்

3

கேனான்

4

மகலாலெயேல்

5

யாரேத்

6

ஏனோக்கு

7

மெத்தூசலா

8

லாமேக்கு

9

நோவா

10

சேம்

11

அர்ப்பக்சாத்

12

காயினான்

13

சாலா

14

ஏபேர்

15

பேலேக்

16

ரெகூ

17

சேரூக்

18

நாகோர்

19

தேரா

20

ஆபிரகாம்

21

ஈசாக்கு

22

யாக்கோபு

23

யூதா

24

பாரேஸ்

25

எஸ்ரோம்

26

ஆராம்

27

அம்மினதாப்

28

நகசோன்

29

சல்மோன்

30

போவாஸ்

31

ஓபேத்

32

ஈசாய்

33

தாவீது



“சபை” என்ற வார்த்தை 3 முறை, 2 வசனங்களில் காணப்படுகிறது.

எண்

சபை

1

மத் 16:18

2

மத் 18:17 (2)


மத்தேயு புத்தகத்தில் “ராஜ்யம்” என்ற வார்த்தை 55 முறை காணப்படுகிறது. 
  • அனைத்து வசனங்களையும் குறிப்பிட முடியவில்லை. 
இப்போது நாம் இந்த எண்களை ஆராய்வோமானால், 

எண் 3:
  • மூன்று என்றவுடன் நம் நினைவில் வருவது இயேசுவின் உயிர்த்தெழுதல். 
  • ஆம். இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். 
மத்தேயு புத்தகத்திற்கும், இயேசுவுக்கும், சபைக்கும், உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்பந்தம்?
  • மத்தேயு புத்தகம் இயேசுவை யூதர்களுக்கு ராஜாவாக காட்டுகிற புத்தகம். (2:2, 5:35, 21:4, 27:11, 27:29, 27:37)
  • மூன்று நாளில் உயிர்த்தெழுந்த இயேசுவினால் தான் சபை உருவானது.
  • சபைகளில் இருக்கிற நம்மை ராஜாக்களாக மாற்றியுள்ளார். 
யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
 -வெளிப்படுத்தல் 1 : 4 
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
 -வெளிப்படுத்தல் 1 : 6
  • இயேசு ராஜாதி ராஜா. 
  • அவருடைய பிள்ளைகளாகிய சபையாகிய நாமும் ராஜாக்கள். 
  • இதனாலேயே இந்த வார்த்தை மத்தேயு புத்தகத்தில் மட்டும் இடம்பெறுகிறது. 
எண் 55:
  • இந்த எண் முழு வேதாகமத்திலும், 2  வசனங்களில் காணப்படுகிறது. 
1) 2 இராஜா 21:1 - மனாசே எருசேலமில் அரசாண்ட வருஷங்கள்
2) 2 நாளா 33:1 - மனாசே எருசேலமில் அரசாண்ட வருஷங்கள்
  • வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் இரண்டிலும் அதிக நாட்கள் ஆட்சி செய்தது இந்த மனாசே தான். 
  • எனவே, அதிக நாட்கள் ஆட்சி செய்வதைக் குறித்து பேசுகிறது. 
எண் 33:
  • இந்த எண் முழு வேதாகமத்திலும், 6 வசனங்களில் காணப்படுகிறது. 
1) ஆதி 46:15 - லேயாளின் சந்ததியார்
2) லேவி 12:4 - உதிர சுத்திகரிப்பு நாட்கள்
3) 2 சாமு 5:5 - தாவீது எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
4) 1 இராஜா 2:11 - தாவீதின் அரசாட்சி
5) 1 நாளா 3:4 - தாவீதின் அரசாட்சி
6) 1 நாளா 29:27 - தாவீதின் அரசாட்சி
  • எனவே, 6 வசனங்களில் 4 வசனங்கள் தாவீதின் அரசாட்சியைப் பற்றி பேசுகின்றன. 
  • எனவே, இது இயேசுவின் ராஜ்யத்தைக் குறிக்கிறது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?