யோபு - part 2
யோபு 29:
- 1-5 ஆவிக்குரிய நிலை (Spiritual)
- 6 சரீரம் (Body)
- 7-11 சமூக கௌரவம் (Social Respect)
- 12-17 சமூக சேவை (Public service)
- 18-20 எப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பு (Hope)
- 21-25 பிறர் என்ன நினைக்கிறார்கள் (Opinion of others)
1-5 ஆவிக்குரிய நிலை (Spiritual):
பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
-யோபு 29 : 1
-யோபு 29 : 1
- யோபுவே இங்கு பேசத் தொடங்குகிறார்.
சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
-யோபு 29 : 2
-யோபு 29 : 2
- இது வேத காலத்திற்கு 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
- மிகவும் மோசமான நிலையில், இந்த வார்த்தைகளை சொல்கிறார்.
அப்பொழுது அவர் தீபம் என்தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
-யோபு 29 : 3
-யோபு 29 : 3
- ஆண்டவருடைய பிரசன்னம் எனக்கு வெளிச்சமாய் இருந்தது என்கிறார்.
-சங்கீதம் 119 : 105
- இது பைபிள் இல்லாத ஒரு காலம்.
- அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை காட்டுகிறது.
- உலகத்தில் நிறைய இருள் இருந்தது.
- அதையெல்லாம் கர்த்தர் அருளின வெளிச்சத்தால் கடந்து போனேன் என்கிறார்.
- ஆனால் நமக்கு இப்போது பைபிள் இருக்கிறது, நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.
- எனவே, நாம் போகிற இடங்களிலும் வெளிச்சம் வர வேண்டும்.
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
-1 கொரி 6 : 19
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
-யோபு 29 : 4
- யார் இரகசியம் பேசுவார்கள்?
- மிக நெருக்கமாக இருப்பவர்கள் தான் இரகசியம் பேசுவார்கள்.
- அவரோடு உறவில் இருக்க வேண்டும் மற்றும் அந்த நபர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.
- தேவன் செய்யும் இரகசியச்செயல் கூட எனக்கு தெரியும் என்று அர்த்தம்.
அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
-யோபு 29 : 5
-யோபு 29 : 5
- யெகோவா சம்மா - கர்த்தர் என்னோடு இருக்கிறார்.
- இம்மானுவேல் - தேவன் நம்மோடு இருக்கிறார்
- யோபுவினுடைய காலத்தில் இது ஒரு பெரிய விஷயம்.
- யோபு வாழ்ந்த காலத்தில், சுற்றி இருந்த கானான், எகிப்து தேசத்தில் உள்ளவர்களெல்லாம் தங்கள் தெய்வத்தை தேடிப் போக வேண்டும்.
- ஆனால் யோபிவின் தேவன், யோபு தேடிப் போக வேண்டியதல்ல, யோபுவோடே இருக்கிற தேவன்.
- நாம் சரியான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தால், நம்முடைய பிள்ளைகள் நம்மை சுற்றி ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
- யோபுவின் ஆவிக்குரிய வாழ்க்கை பழுதில்லாமல் இருந்தது.
- சர்வாங்க தகன பலி செலுத்தக்கூடியவர்கள் பிரதான ஆசாரியர்கள் மாத்திரமே
- பிரதான ஆசாரியன் தவிர வேறு யாராவது சர்வாங்க தகனபலி செலுத்தினால் அதற்கு பெயர் அந்நிய அக்கினி .
- எடுத்துக்காட்டு- ஆரோனுடைய குமாரர்கள் அந்நிய அக்கினியால் மரித்தனர்.
- பிரதான ஆசாரியனின் மகனுக்கு கூட சர்வாங்க தகனபலி(Burnt offering) செலுத்த அதிகாரம் இல்லை.
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
-யோபு 29 : 6
- ஒரு மனுஷனுடைய உடம்பில் கால்கள் மிகவும் முக்கியம்.
- பிசாசு ஒரு மனுஷனை தாக்கும் போது, முதலில் காலை தான் தாக்குவான்.
- ஆதி 3:15 ல் அவருடைய குதிங்காலை நசுக்கிவாய் என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது.
- ரோமர் 10:15 ல் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று சொல்லப்பட்டுள்ளது.
- மோசேக்கு ஆண்டவர் எரியும் செடியில் இருந்து காட்சி கொடுத்த போது, இது “பரிசுத்த பூமி, உன் பாதரட்சைகளை கழற்று” என்றார்.
- மோசேயுடைய கால்கள் அந்த பரிசுத்த பூமியை தொட வேண்டும் என்பதற்காக தான்.
- உன்னுடைய கால்கள் பரிசுத்த பூமியில் படுவதற்கு தடையாக இருக்கிற பாதரட்சைகளை கழற்று என்று அர்த்தம்.
- உடம்பில் மிக முக்கியமான அங்கம் கால்கள்.
- யோபு தன்னுடைய சரீரத்தை எவ்வளவு பாதுகாத்து கொண்டார் என்று நமக்கு சொல்லவில்லை.
- ஆனால் தன்னுடைய பாதத்தை எவ்வளவு பாதுகாத்து கொண்டார் என்பதை சொல்வதன் மூலம், அவருடைய சரீரம் எப்படி maintain ஆனது என்பதை காண்பிக்கிறார்.
- தன்னுடைய பாதத்தை நெய்யினால் கழுவி, தன்னுடைய சரீர ஆரோக்கியத்தை வெகுவாக காத்துக் கொண்டார்.
Some people demand respect while others command respect
- Demand respect - தன்னுடைய பதவியை காட்டி கௌரவத்தைப் பெற்றுக் கொள்வது.
- Command respect - எதுவும் சொல்லாமலேயே மக்கள் மனதில் மதிப்பு வரும்.
நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
-யோபு 29 : 7
- யோபு எப்படிப்பட்ட மதிப்பை மக்களிடம் இருந்து பெற்றிருந்தார்?
- அந்த காலத்தில் ராஜாவே தான் நீதிபதியாகவும் இருந்தார்.
- மன்னர்கள் நியாயம் விசாரித்து நீதி வழங்குவது அரண்மனையில் நிகழும்.
- ஆனால் யோபு பட்டணத்து வீதியின் வாசலில் போய் உட்காருவார் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
- அங்கு போய் உட்காருபவர்கள் பட்டணத்து மூப்பர்கள்.
- இதிலிருந்து தெரிகிறது இவர் ஒரு தாழ்மையுள்ள ராஜா என்று.
- மக்கள் நீதி கேட்டு என்னிடம் வரத் தேவையில்லை.
- நான் போய் அவர்களுக்கு நீதி கொடுப்பேன் என்று சொல்லி அங்கு சென்று அமர்ந்தார்.
- இயேசுவானவர் பரலோகத்தை விட்டு நம்மை நீதிமான்களாக்க பூமிக்கு வந்தார்.
- அதுபோல யோபு மக்கள் இருக்கிற இடத்திற்கே சென்றார்.
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
-யோபு 29 : 8
- ஏன் ஒளிந்து கொள்வார்கள். அவ்வளவு கனம்.
- முதியவர்களும் அந்த அளவு யோபுவை மதிப்பார்கள். (Command respect)
பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
-யோபு 29 : 9
- பெரிய பெரிய ஆட்கள் கூட பேசுவதை நிறுத்தி விடுவார்கள் மரியாதையின் நிமித்தம் என்கிறார்.
பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
-யோபு 29 : 10
- பெரியோர்கள் யோபுக்கு கொடுக்கிற கனம்.
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
-யோபு 29 : 11
- என்னுடைய ஜனங்கள் நான் பேசுகிறதை கேட்க ஆசைப்படுகிறார்கள் என்கிறார்.
- மக்கள் யோபுவை பார்ப்பதை பாக்கியம் என்று எண்ணினார்கள்.
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
-யோபு 29 : 12
- இவருடைய ராஜ்யத்தில் இவர் கிட்ட ஏழை வந்து முறையிடலாம்.
- அந்த தேசத்தில் யார் வேண்டுமானாலும் வந்து ராஜாவிடம் முறையிடலாம்.
- எல்லோரையும் அவர் காப்பாற்றினார்.
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
-யோபு 29 : 13
- கெட்டுப்போகிறவனை ஆசீர்வதித்து அவன் வாழ்க்கையை நான் மாற்றினேன் என்கிறார்.
- விதவைக்கும் கூட நான் உதவி செய்தேன் என்கிறார்.
நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
-யோபு 29 : 14
- நீதியின் வஸ்திரம் என்னிடம் இருந்தது என்கிறார்.
- எல்லோரையும் நான் நீதியாய் நியாயம் தீர்த்தேன் என்கிறார்.
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
-யோபு 29 : 15
- நான் இவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும், ஒரு குருடனை கண்டால் , அவனுக்கு நான் உதவி செய்வேன் என்கிறார்.
- சப்பாணிக்கும் உதவி செய்வேன் என்கிறார்.
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
-யோபு 29 : 16
- எளியவர்களுக்கு கூட தகப்பனாக இருந்தேன்.
- யார் வேண்டுமானாலும் என்னை தகப்பனாய் பார்க்க முடியும்.
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
-யோபு 29 : 17
- ஆனால் அநியாயக்காரனைப் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
- அவர்கள் பற்களை உடைத்து விடுவேன் என்கிறார்.
என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
-யோபு 29 : 18
- நான் இப்படியே கடைசி வரைக்கும் இருந்து ஆண்டவர்கிட்ட போய் விடுவேன் என்கிறார்
என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுவதும் தங்கியிருந்தது.
-யோபு 29 : 19
- எனக்கு ஒரு வேர் இருக்கிறது.
- அதன் மூலம் கிடைக்கிற செழிப்பு எனக்கு போதும் என்கிறார்.
என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
-யோபு 29 : 20
- அவருடைய திருப்தியான தன்மையை காட்டுகிறது.
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
-யோபு 29 : 21
- மக்கள் எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள் என்கிறார்.
- அவர்கள் மவுனமாயிருந்தார்கள்.
- என்னோடு வாதாட மாட்டார்கள்.
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
-யோபு 29 : 22
- நான் துளித் துளியாய் சொல்லி அவர்களுக்கு விளக்கப்படுத்தினேன் என்கிறார்.
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
-யோபு 29 : 23
- மழைக்கு காத்திருந்தது போல என்னுடைய வார்த்தைக்கு காத்திருந்தார்கள்.
நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
-யோபு 29 : 24
- எனக்கு கோபம் வரும்படி யாரும் என்னிடம் பேசவில்லை என்கிறார்.
அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
-யோபு 29 : 25
- அவர் மற்றவர்கள் மத்தியில் எப்படி வாழ்ந்தார் என்பதைக் காட்டுகிறது.
யோபு 1:1 விளக்கம்:
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
-யோபு 1 : 1
இந்த வசனத்தில் வருகிற 4 எபிரேய வார்த்தைகள்:
- யோபுவை குறித்து ஆண்டவர் குறிப்பிட வார்த்தைகள்.
1) யாசர் (Yashar) - உத்தமன்
2) டாஓம் (Taom) - சன்மார்க்கன்
3) யா-ரே (Yaw-Ray) - தேவனுக்கு பயந்து
4) சூர்-ரா-ஏ (Soor-Ra-Eh) - பொல்லாப்புக்கு விலகுகிறவன்
யாசர் (Yashar):
- நேர்மையான, நீதியான. இனிமையான, செழிப்பான என்று அர்த்தம்.
டாஓம் (Taom):
- நன்நடத்தை உள்ளவர், சரியான, முழுமையான
- தன்னுடைய பக்தியை மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தின் பக்தியையும் பேணுகிறவர்.
- தீமையை களைபவர், உடல் ஆரோக்கியம், சமூக ஒழுக்கம்.
அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.
-யோபு 1 : 2
- அவருடைய பிள்ளைகள்.
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
-யோபு 1 : 3
- 7000 ஆடுகள்
- 3000 ஒட்டகங்கள்
- 500 ஏர்மாடுகள் - 1000 மாடுகள்
- 500 கழுதைகள்
- அந்த காலத்தில் வாழ்ந்த கானானியர்கள், எகிப்தியர்கள் எல்லோரையும் விட இவர் பெரியவனாக இருந்தார்.
அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
-யோபு 1 : 4
- அடிக்கடி இதுப் போல விருந்து நடக்கும்.
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
-யோபு 1 : 5
- யோபுவினுடைய ஆவிக்குரிய கவனத்தை காண்பிக்கிறது.
- நான் பரிசுத்தமாக இருந்தால் போதாது.
- என் பிள்ளைகளும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
- யோபு ஒரு பிரதான ஆசாரியனாக இருந்தாலும், அவர் ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்தார்.
- உபாகமம் 6 வது அதிகாரத்தில் ஆண்டவர் பிள்ளைகளுடைய ஆவிக்குரியப் பொறுப்பை தாயிடம் கொடுக்கவில்லை. தகப்பனிடம் கொடுத்திருக்கிறார்.
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
-யோபு 1 : 6
- தேவ புத்திரர் என்றால் யார்?
- ஆண்டவர் ஒரு நாளும் தேவ தூதர்களை தன்னுடைய புத்திரர் என்று சொன்னதில்லை.
- ஏனென்றால், அவர்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்படவில்லை.
- மனிதர்கள் தான் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள்.
- இந்த சம்பவம் உலகத்தில் நடக்கிறது.
- யோபுவின் காலத்தில் பரிசுத்தவான்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
- எனவே, யோபு, மெல்கிசெதேக்கு இவர்கள் வம்சத்தில் வந்த தேவ புத்திரர்கள் இருந்திருக்கிறார்கள்.
- பரிசுத்தவான்கள்(sons of God) , கர்த்தருடைய சந்நிதிக்கு(before God) வருகிறார்கள்.
ஆதியாகமம் 6 - தேவ புத்திரர்கள்:
- தேவ புத்திரர் - சேத் சந்ததி
- மனுஷ குமாரத்திகள் - காயீன் சந்ததி
- இராட்சதர்கள் - Nephilim(Hebrew word)
- அர்த்தம் - இரண்டு தேசத்திலும் அதிகாரம்/பலம் கூடுதல்
- தேவ தூதர்கள்- Asexual beings- அவர்கள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல.
கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
-யோபு 1 : 8
- கர்த்தருடைய தாசன் என்பது மிக உயர்ந்த பதவி.
யோபு 1:9-12
- உங்கள் வாழ்க்கையில் சில நேரம் காரணமில்லாத சில போராட்டங்கள் வந்து இருக்கலாம்.
- உங்கள் பக்கம் எந்த தவறும் இல்லாமல், பிரச்சனை வந்தால், அது ஆண்டவர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கை.
- ஆண்டவர் உங்களை வைத்து சாத்தான்-கு சவால் விட்டு இருக்காரு-னு அர்த்தம்.
- ஆண்டவரை வெற்றியடையச் செய்யுங்கள்.
Comments
Post a Comment