உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம் சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. -உன்னதப்பாட்டு 1 : 1 விளக்கம் : சாலொமோன் பாடின இந்த புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசனம் கலந்த கவிதைப் பாடல் என்றே சொல்லலாம். ————————————————————————- வசனம் 2-7: சாலொமோனை (மணவாளனாகிய இயேசுவை) பார்த்து, சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) பாடுகிறாள். ————————————————————————- அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. -உன்னதப்பாட்டு 1 : 2 விளக்கம் : அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக சபை சொல்கிறது, மணவாளரே! இயேசுவே! உங்களால் எனக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் முத்தம், அதாவது உங்கள் வார்த்தை. கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் தேவனுடைய வார்த்தை தான். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. - யோவான் 1 : 1 அந்த வார்த்தை மாம்சமாகி , கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய ...
உன்னதப்பாட்டு -அதிகாரம் 2 -விளக்கம் நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். -உன்னதப்பாட்டு 2 : 1 விளக்கம் : மணவாளன் தன்னைப் பற்றி பேசுகிறார். நான் அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (Haya) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். - யாத்திராகமம் 3 : 14 மோசேக்கு தன்னை வெளிப்படுத்தின தேவனைக் குறிக்கும். அதே சொல்லை இயேசுவானவர் புதிய ஏற்பாட்டில் பலமுறை உபயோகித்து, தான் தான் ஆபிரகாமிற்கு முன்னேயே இருந்த அந்த தேவன்( Haya) என்பதனை காட்டியிருக்கின்றார். எனவே, இயேசுவானவர் தேவனாய் நம்மிடம் பேசுகிறார். சாரோனின் ரோஜாவும் அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள். - 1 நாளாகமம் 5 : 16 சாரோன் அமைந்திருக்கின்ற இடம்: Tel-Aviv மற்றும் Haifa இந்த இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்த இடம் தான் சாரோன். சாரோனின் ரோஜா: சாரோனின்...
ஆரோகண சங்கீதம் என்றால் என்ன? ஆரோகண சங்கீதம் இது ஆங்கிலத்தில் Songs of Ascent என்று அழைக்கப்படும் இது சங்கீதம் 120 முதல் 134 வரை உள்ள 15 சங்கீதங்களை குறிப்பிடுகிறது. இந்த சங்கீதங்கள் எபிரேய மொழியில் "Shir HaMa'alot" (שִׁיר הַמַּעֲלוֹת) என அழைக்கப்படுகின்றன, அதன் அர்த்தம் "ஏறும் பாடல்கள்" அல்லது "படிகட்டுகளில் ஏறிச் செல்லும் பாடல்கள்" என்பதாகும். ஆரோகண சங்கீதம் – நோக்கம்: இந்த சங்கீதங்களை மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்ரவேலர்கள் எருசலேம் ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் போதும், குறிப்பாக மூன்று பெரிய விழாக்களில் (பஸ்கா, பெந்தகொஸ்தே, குதிரைவிழா) பாடினர் என்று நம்பப்படுகிறது. இந்த பயணங்கள் நிறைய சவால்கள் நிறைந்தவைகளாக இருந்தன. அந்தப் பயணத்தின்போது தேவனை நினைத்து பாடப்படும் ஆராதனையான இவை, ஆவிக்குரிய எழுச்சியையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள்: பயணத்திற்குரிய துணிவு, நம்பிக்கை, பாதுகாப்பு, சிரமங்களில் உள்ள ஆவிக்குரிய நிலை ஆகியவை இதில் அடங்கியுள்ளன. தேவனை நோக்கிச் செல்லும் ஒரு "ஆரோகணப் பயணத...
Comments
Post a Comment