2 சாமுவேல் 6; ஊசா, ஓபேத்ஏதோம் பெயர் விளக்கம்
இயேசுவின் பிரசன்னம் உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும்!
- வேதத்தில் காணப்படுகிற ஒவ்வொரு பெயருக்கும் கூட ஒரு அர்த்தம் உண்டு.
- உதாரணமாக 2 சாமுவேல் 6-ல் வரக்கூடிய பெயர்களையும், அதின் அர்த்தங்களையும், விளக்கங்களையும் இப்பகுதியில் காண்போம்.
- இந்த அதிகாரத்தில், பெலிஸ்தர்களால் கைப்பற்றப்பட்ட தேவனுடைய பெட்டியை தேவனுடைய மக்களின் மையமான எருசலேமுக்கு கொண்டு வர தாவீது ராஜா விரும்புவதைக் காண்கிறோம்.
- தாவீது முதலில் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவர முயன்றபோது, அதை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிச்செல்ல முடிவு செய்தார்.
- மாட்டு வண்டி மூலமாக பெட்டியை கொண்டு செல்வது உண்மையில் பெலிஸ்திர்களின் முறைமை (இஸ்ரவேலின் எதிரிகள்)
- எனவே, புது இரதத்தில் தேவனுடைய பெட்டியை ஏற்றிக் கொண்டு சென்றனர் (1 சாமு. 6:10-12).
- இது கர்த்தரால் நியமிக்கப்பட்ட வழி அல்ல.
- லேவியர்களின் (ஆசாரியர்களின்) தோள்களில் பெட்டி சுமக்கப்பட வேண்டும் என்பதே தேவசித்தம்.
- பெட்டியை ஏற்றிச் செல்ல தாவீது மாட்டு வண்டியைப் பயன்படுத்தியதன் விளைவாக, எருதுகள் தடுமாறின.
- தாவீதின் ஆள்களில் ஒருவனாகிய ஊசா பெட்டியை நிலைநிறுத்தத் தன் கையை நீட்டி, அடிபட்டு இறந்தான் (2 சாமு. 6:6-7).
- இந்த கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் என்னவென்றால்,
- நாம் உலகின் வழிகளைப் பின்பற்றக் கூடாது (தாவீது பெலிஸ்தியர்களின் வழிகளைப் பின்பற்றியது போல).
- நாம் உலகத்தின் வழிகளைப் பின்பற்றும் போது, அவர்களின் முடிவு தான் நமக்கும் கிடைக்கும்.
- நாம் உலகத்திற்கு ஒத்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பவில்லை.
- மாறாக, அவர் நமக்காக கொடுத்திருக்கிற வார்த்தை, முறைமைகள் மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றே விரும்புகிறார்.
- இது நமது திருமணம், குழந்தைகளை வளர்ப்பது, வேலை மற்றும் நம் வாழ்வின் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
- கர்த்தரின் வழிகள் சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாகவோ அல்லது பிரபலமற்றதாக தோன்றினாலும்,
- நாம் உலகத்தின் அறிவுரைகளைப் பின்பற்ற விரும்பினாலும்,
- அவற்றைப் பின்பற்றுவது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
- "ஊசா" என்ற பெயரின் எபிரேய மொழிபெயர்ப்பின் பொருள் "மனித வலிமை".
- நாம் நம்முடைய சொந்த பலத்தின் மீது சார்ந்திருக்காமல், கர்த்தருடைய தயவையும் அவருடைய வழிகளையும் சார்ந்திருக்க வேண்டும் என்பதையே இது நமக்குக் காட்டுகிறது.
- நாம் கர்த்தரின் வழிகளைச் சார்ந்திருக்கும்போது, அவருடைய கிருபை, வல்லமை, தயவு ஆகியவை நம்மை பின்தொடரும்!
- பவர் ஸ்டீயரிங் இல்லாமல் காரை ஓட்டிச் செல்லும் ஒருவரையும், கர்த்தரால் வழிநடத்தப்படுகிற ஒருவரையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
- நாம் நமது சொந்த பலத்தை முழுமையாகச் சார்ந்து இருந்தால், அது பவர் ஸ்டீயரிங் இல்லாமல் காரை ஓட்டுவது போன்றது.
- வண்டியை வலதுபுறம் திருப்புவதற்கு நாம் மிகவும் சிரமப்பட வேண்டும்.
- ஆனால் பவர் ஸ்டீயரிங் இருந்தால், நாம் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு முழு பலத்தையும் அது தந்துவிடும்.
- அது போல தான் பரிசுத்த ஆவியோடு நாம் பயணம் செய்வதும்!
- பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறதை கேட்டு நாம் நடக்கும் போது, அவருடைய முழு வல்லமை நமக்கு வருகிறது.
2 சாமுவேல் 6: 9-12:
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,
-2 சாமுவேல் 6 : 9
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
-2 சாமுவேல் 6 : 10
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
-2 சாமுவேல் 6 : 11
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
-2 சாமுவேல் 6 : 12
ஆசீர்வாதம் - ஓபேத்ஏதோம்:
- கர்த்தருடைய பெட்டியின் நிமித்தம் கர்த்தர் ஓபேத்-ஏதோமின் வீட்டையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.
- ஜோசிஃபஸ்(Josephus) என்ற பைபிள் அறிஞர், ஓபேத்-ஏதோமும் அவருடைய குடும்பமும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக பதிவு செய்கிறார்.
- அவரது பயிர்கள் ஏராளமாக இருந்தன.
- அவரது மனைவியுடன் அவரது திருமணம் இனிமையாக இருந்தது.
- அவருடைய குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
- ஓபேத்-ஏதோம் ஆரம்பத்தில் ஏழையாக இருந்தான்.
- ஆனால் அவனுடைய வீட்டில் தேவனுடைய பெட்டி இருந்ததால் (நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தின் நிழல்) அவன் ஐசுவரியவான் ஆனான்.
- அதுபோலவே, இயேசுவின் பிரசன்னம் நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நம்மை செழிக்க வைக்கும்.
ஓபேத்ஏதோம் - பொருள்:
- பெட்டி ஓபேத்-ஏதோமுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்ததைக் கண்ட தாவீது அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
- ஓபேத்-ஏதோமின் பெயரின் மூலம் இயேசுவின் இரத்தத்தின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் கர்த்தர் தாவீதுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம்.
- ஓபேத்-ஏதோம் என்ற பெயரின் எபிரேய மொழிபெயர்ப்பு "இரத்தத்தின் ஊழியக்காரன்".
- இது நம் கர்த்தராகிய இயேசுவின் படம்!
எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டது:
- அப்படியே தாவீது போய் ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து தேவனுடைய பெட்டியை மகிழ்ச்சியோடு தாவீதின் நகரத்துக்குக் கொண்டு வந்தான்.
-2 சாமுவேல் 6 : 13
பலிகள்:
- இரண்டாவது முறையாக பெட்டியை எருசலேமுக்கு சரியான வழியில் கொண்டு செல்ல தாவீது எடுத்த முடிவும்,
- ஒவ்வொரு ஆறு அடிக்கும் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துவதும்,
- உடன்படிக்கை ஆசீர்வாதங்களுக்காக இரத்தம் சிந்துவதன் முக்கியத்துவத்தையும் தாவீது புரிந்துகொண்டார் என்பதைக் காட்டுகிறது.
- நம்முடைய பாவமன்னிப்புக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தின நிழலாட்டம் இது.
முடிவுரை:
- நாம் வேதத்தில் உள்ள பெயர்களைப் பற்றி படிக்க நேரம் ஒதுக்கும்போது, வல்லமை நிறைந்த ஆழமான சத்தியங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
- நாம் பைபிளைப் படிக்கும் பொழுது, பெயர்களில் அடங்கியிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் கேட்கலாம்.
- இன்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் முடிக்கப்பட்ட வேலையின் மூலம்,
- நாம் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் “கிறிஸ்தவர்கள்” என அழைக்கப்படுகிறோம்
Comments
Post a Comment