காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில்

காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில்

நான்: எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?
கர்த்தர்: பொறுமையாக காத்திரு.
நான்: எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் அப்பா.
கர்த்தர்: பதில் இல்லை……
நான்: எனக்கு பதில் சொல்லுங்களேன் அப்பா…
கர்த்தர்: மறுபடியும் பதில் இல்லை……
நான்: உங்கள் வார்த்தைக்கு 
கீழ்ப்படிய மனதாயிருக்கிறேன்
ஆனால் மாம்சத்தின் ஏக்கம்
என்னை அலைகழிக்கிறதே!😭😭😭
கர்த்தர்: கர்த்தரைத் தேடு
மற்றதை மறந்து விடுவாய்
நான்: சரிங்க அப்பா. தேடுகிறேன்
(ஜெபித்தேன் 3 வேளையும், வேதம் வாசித்தேன் 2 வேளை)
கர்த்தர்: 🥰
நான்: சில நேரங்களில் ஜெபிக்க முடியவில்லை, வேதம் வாசிக்க முடியவில்லை. உலக வேலைகள் என்னை இழுக்கிறதே!
கர்த்தர்: அது பரவாயில்லை. இன்று மறுபடியும் என்னைத் தேடு
நான்: சரிங்க அப்பா. தேடுகிறேன்
(இது போல பலமுறை நடந்தது)
நான்: அப்பா, திருமண எதிர்ப்பார்ப்புகள் என்னை பாடாய் படுத்துகிறதே!
கர்த்தர்: இணையதளத்தில் எதையும் பார்க்காதே
அது உன் ஆசையை தூண்டும்
நான்: என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லையே (இன்றுவரை) 
கர்த்தர்: ஜெபித்துக் கொண்டே இரு. ஒரு நாள் அனைத்தும் மாறும்.
நான்: ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் என்ற ஒற்றைச் சொல் என்னை இவ்வளவு பலவீனப்படுத்துகிறதே தகப்பனே!
கர்த்தர்: அது அந்த சொல்லினால் அல்ல, மாம்சத்தினாலும், பிசாசினாலும் ஏற்படுகிற உணர்வு.
நான்: மனுஷன் தனியாக இருப்பது நல்லதல்ல-னு நீங்க சொல்லி இருக்கீங்களே அப்பா
கர்த்தர்: ஆம். உண்மை தான். நான் உனக்கு தரமாட்டேன் என்று சொல்லவேயில்லையே
நான்: சரி தான் அப்பா. ஆனால் எனக்கு காத்திருக்குதல் கஷ்டமாக இருக்கிறதே. என் வயது என்னை எப்போதும் கலங்கப் பண்ணுகிறதே
கர்த்தர்: கலங்காதே மகளே! நீ வெகுநாட்கள் காத்திருந்து விட்டாய், இனி கொஞ்ச நாட்கள் தான். தைரியமாக இரு. 
நான்: சரிங்க அப்பா, காத்திருக்கும் வலிமையை கொடுங்க தகப்பனே!
கர்த்தர்: என் கரங்களில் உன்னை தாங்குகிறேன், மகளே! பயப்படாதே!
நான்: காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில்!!! 

(இந்த உரையாடல் ஒரு நாள் நிறைவு பெறும். என் திருமணம் முடியும் நாளில்.., காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில்)

என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
 -சங்கீதம் 63 : 8

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
 -நீதிமொழிகள் 13 : 12


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4