கல்யாணம்
கல்யாணம்
எப்போது நடக்கும்?
எப்படி நடக்கும்?
யாரோடு நடக்கும்?
இப்படி ஓராயிரம் கேள்விகள்
என் மனதில்
விடை தெரியாமல் தவிக்கிறேன்.
இன்று, நேற்று அல்ல
நான் இரட்சிக்கப்பட்ட
நாள் முதற்கொண்டு
ஒரு வாழ்க்கைக்காக ஏங்குகிறேன்
ஆனால் கர்த்தரோ
ஏனோ காத்திரு, காத்திரு
என்றே பதில் உரைக்கிறார்
காத்திருக்கவும் முடியாமல்
ஆசைகளை அடக்கவும் முடியாமல்
யாரிடமும் சொல்லவும் முடியாமல்
கேள்விகளுக்கு பதிலும் தெரியாமல்
இன்னும் கல்யாணம் ஆகலயா
என்று ஒருவர் வினவும் போது
என் மனசு தவிக்கிற தவிப்பையும்
என் மனசு சுக்குநூறாக உடைந்து தவிக்கிறதையும்
என் தேவன் தவிர ஒருவரும் அறியார்.
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
-யோபு 23 : 10
Comments
Post a Comment