சங்கீதம் 23:1 ; யோவான் 10:9 விளக்கம்
உங்களுக்குப் பதிலாக இயேசுவைச் சார்ந்திருத்தல்
சங்கீதம் 23:1
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்”.
-சங்கீதம் 23 : 1
“The LORD is my shepherd;
I shall not want (“ḥāsēr” – lack).”
—Psalm 23:1 NKJV
"தாழ்ச்சியடையேன்" - இந்த வார்த்தை பற்றாக்குறையை(Lack) குறிக்கிறது. கர்த்தர் நம்முடைய மேய்ப்பராக இருக்கும் பொழுது, நம் வாழ்வின் எந்தப் பகுதியிலும் நாம் குறைவாக இருக்க மாட்டோம். இந்த வார்த்தையின் எபிரேய மொழிபெயர்ப்பானது "ḥāsēr," என உச்சரிக்கப்படுகிறது: חָסֵר. நாம் இந்த வார்த்தையை உடைத்துபார்க்கும் போது, Haser வலமிருந்து இடமாக வாசிக்கப்படும் மூன்று எழுத்துக்களால் ஆனது என்பதைக்காண்கிறோம்.
அந்த 3 எழுத்துக்கள் மற்றும் அதின் அர்த்தம்:
1. “חָ (heth),” என்றால் “வாழ்க்கை” (life).
2. “סֵ (samekh),” என்றால் “ஆதரவு அல்லது கொடுப்பது” (support” or “supply).
3. “ר (resh),” என்றால் “தலை” (Head).
எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தால் பற்றாக்குறை உள்ள ஒருவருக்கு தனது தலையால் (God), வழங்கப்படும் வாழ்க்கை.
இது ஒருவரின்
-சொந்த புரிதல்(own understanding)
-தர்க்கம்(logic)
-பகுத்தறிவைச்(Reasoning)
இவைகளை சார்ந்து நமக்காக நாமே முடிவெடுக்கும் தருணம். நம்முடைய சொந்த முயற்சிகளை நம்புவதற்குப் பதிலாக, நாம் அவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
-யோவான் 10 : 9
“I am the door. If anyone enters by Me, he will be saved, and will go in and out and find pasture.”
—John 10:9 NKJV
மிகவும் ஒத்ததாக இருக்கும் மற்றொரு எபிரேய வார்த்தையைப் பார்ப்போம்: חֶסֶד ("hesed") அதாவது "கிருபை".
அந்த 3 எழுத்துக்கள் மற்றும் அதின் அர்த்தம்:
1. “חָ (heth),” என்றால் “வாழ்க்கை” (life).
2. “סֵ (samekh),” என்றால் “ஆதரவு அல்லது கொடுப்பது” (support” or “supply).
3. “ד (dalet),” என்றால் “கதவு” (Door)
இந்த இரண்டு வார்த்தைகளின் எழுத்துகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு கடைசி எழுத்தில் உள்ளது. "இல்லாமை" மற்றும் “கிருபை" (Lack vs Grace)
חֶסֶד (“hesed”) இல், கடைசி எழுத்து “ד (dalet),”
அதாவது “வாசல்”.
இந்த “கதவு” ஒரு பொருள் அல்ல, ஆனால் ஒரு நபர்!
“நானே வாசல்” — “חֶסֶד (hesed)” இல் உள்ள வாசல் இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறது! நமது சொந்த புரிதல் மூலம் நம்முடைய முயற்சிகளை நம்புவதற்கு பதிலாக, நாம் இயேசுவையும் அவருடைய கிருபையையும் நம்பலாம்!
“மேய்ச்சலை கண்டடைவான்" - ஆடுகளுக்கு மேய்ச்சல் உணவு. யோவான் 10:9 இன் சூழலில், நம்முடைய கர்த்தராகிய இயேசு தம் ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பன் என்று குறிப்பிடுகிறார். கர்த்தர் நம்முடைய மேய்ப்பராக இருக்கும் பொழுது, அவர் நமக்கு அனைத்தையும் தருவார்.
வாழ்வில் நமக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் பெறுகின்ற கதவு இயேசுவே.
கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் இன்று உலகில் நடப்பதைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. உலகம் என்ன செய்கிறதோ அதை நோக்கி நாம் திரும்ப வேண்டும் என்று பயப்படுவதற்கு அல்லது உணருவதற்குப் பதிலாக, நம்முடைய வாழ்க்கையும் இந்த வாழ்க்கைக்குத் தேவையான ஏற்பாடுகளும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வந்தவை என்பதை அறிந்து நாம் ஓய்வெடுக்கலாம்! அவரிடமிருந்து நாம் கிருபையைப் பெறலாம் (ரோமர் 5:17)!
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
-ரோமர் 5 : 17
Comments
Post a Comment