Temptation- சோதனை
சோதனை(Temptation)
- Temptation என்பது தவறு என்று நமக்கே தெரியும்.
- ஆனாலும் எதையாவது நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம் .
- இது அனைவருக்குமே நடக்கும்.
- அதனால் உங்களிடம் தவறு எதுவும் இல்லை என்று அர்த்தம் இல்லை.
- ஒவ்வொருவருக்கும் சில சமயங்களில் மாம்ச இச்சைகள் இருக்கும்.
- நம் எதிரி(சாத்தான்) நம் வாழ்க்கையை அழிக்கவும்,
- தேவன் நமக்காக வைத்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மைத் தடுக்கவும் அந்த எண்ணங்களை நம்மில் தூண்டுவான்.
தாவீது ராஜாவின் தவறுகள்:
- தாவீது ராஜாவும் சோதனையில் சிக்கினார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
- அது தேவன் அவரது வாழ்க்கையில் வைத்திருந்த சிறந்த திட்டங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டது.
- தாவீதின் மிகப்பெரிய தவறு, அவர் சோதனைக்கு ஆளானார் என்பது அல்ல.
- ஆனால் அவர் அதிலிருந்து விலகி உடனடியாக மனந்திரும்புதலை நாடவில்லை என்பது தான்.
- முக்கிய வார்த்தை: உடனடியாக - ஏனெனில் நீங்கள் நேரம் கொடுத்தால், சோதனை உங்கள் இதயத்தில் வேரூன்றிவிடும்.
- சோதனை நீங்கும் வரை அதைப் பற்றி ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள்!
1)தாவீதின் வாழ்க்கை:
- தாவீது தனது வீட்டில் இருப்பதற்குப் பதிலாக, தனது படைகளை வழிநடத்த சென்றிருக்க வேண்டும்.
- வேறொருவரின் மனைவியை, அவளது அனுமதியின்றி அழைத்துச் சென்றார் (ஆனால் அவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள், மீகாள், அகினோவாம், அபிகாயில்) இருந்தனர்.
- யுத்தத்தைப்பற்றிய செய்தியில் ஆர்வம் காட்டுவது போல் நடித்து உரியாவை வீட்டிற்கு வரும்படி அவர் அழைத்தார்.
- பின்னர் பத்சேபாள் உரியாவுக்காக காத்து கொண்டிருக்கிறாள் என சொல்லி உரியாவை வீட்டிற்கு அனுப்ப முயல்கிறார்.
- ஆனால் உரியா ஒரு நேர்மையான மனிதராக இருந்ததால், வீட்டிற்கு செல்ல மறுக்கிறார்.
- எனவே தாவீது, மறுநாள் இரவு மீண்டும் அதே வார்த்தைகளை சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க முயல்கிறார்.
- உரியாவை குடித்து வெறிக்க வைத்தால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவார் என்று தாவீது நம்பினார்.
- ஆனாலும் உரியா வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார்.
- அதனால் தாவீது அவரை யுத்த மண்டலத்திற்கு திருப்பி அனுப்புகிறார்,
- உண்மையில் உரியா தன் சொந்த மரண தண்டனையை கையில் ஏந்தியபடி, இராணுவத்தலைவனிடம் செல்கிறார்.
- தாவீதின் விபச்சாரப் பாவங்கள், இதயமற்ற கொலை மற்றும் அவரது செயல்களை மறைக்க அவர் செய்த வஞ்சகம் ஆகியவை கர்த்தரின் பார்வையில் மிகவும் தவறாக காணப்பட்டது.
- தீர்க்த்தரிசியான நாத்தானை கொண்டு கர்த்தர் தாவீதிடம் பேசினார்.
- கர்த்தருடைய கட்டளையை தாவீது வெறுத்ததாக சுட்டிக்காட்டுகிறார்.
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
-2 சாமுவேல் 12 : 9
இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
-2 சாமுவேல் 12 : 10
- “Despise-வெறுப்பு" என்பதற்கான எபிரேய வார்த்தை Bazah.
- அதின் அர்த்தம் அவமானமாக நடத்துவது, கடுமையாகப் பேசுவது, ஒருவரை முக்கியமில்லாதது போல் பார்ப்பது.
- எனவே தாவீது "கர்த்தருடைய கட்டளையை வெறுக்கவில்லை"
- உண்மையில் அவர் தேவனையே வெறுத்தார்.
- தாவீது தன் பாவங்களுக்காக மனந்திரும்பி கர்த்தரின் மன்னிப்பைப் பெற்றாலும், தேவன் அவனது பாவங்களின் விளைவுகளை நீக்கவில்லை.
- தாவீது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நியாயத்தீர்ப்பு சொல்லப்பட்டது.
- அவரது வாழ்நாள் முழுவதும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகள், வன்முறை, வேற்றுமை மற்றும் கொலை ஆகியவை தாவீதின் ராஜ்யத்தையும் குடும்பத்தையும் பாதித்தது. .
1) பத்சேபாளுடன் தாவீதின் முதல் குழந்தை பிறந்து ஏழு நாட்களுக்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்தது (2சாமு. 12:14)
2) அம்னோன் தன் ஒன்றுவிட்ட சகோதரியான தாமாரைத் தீட்டுப்படுத்தினான்.
3) அப்சலோம் தன் தங்கையை தீட்டுப்படுத்தியதற்காக அம்னோனை கொலை செய்தான்.
4) அப்சலோம் தன் தந்தைக்கு எதிராக திரும்பியபோது கொல்லப்பட்டான்.
5) அதோனியா சாலொமோனால் கொல்லப்பட்டான்.
பாவம் எப்போதும் விளைவுகளை ஏற்படுத்துகிறது…
2) இயேசுவின் வாழ்க்கை:
- இயேசுவின் வாழ்க்கை பற்றியும், அவருடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளைப் பற்றியும் ஆன உதாரணம்.
- தாவீதைப் போலல்லாமல், இயேசு சோதனையிலிருந்து விலகி, அதை எதிர்த்தார்.
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
-எபிரேயர் 4 : 15
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
-எபிரேயர் 4 : 16
- இயேசு எல்லா வகையிலும் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும், பாவம் செய்யாமல் இருந்தார்.
- நாம் இரக்கத்தைப் பெறுவதற்கும், தேவைப்படும் நேரத்தில் உதவிசெய்யும் கிருபையைப் பெறுவதற்கும், நம்பிக்கையுடன் (தைரியத்துடன்) கிருபையின் சிங்காசனத்தை நெருங்குவோம்.
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
-கலாத்தியர் 5 : 16
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
-கலாத்தியர் 5 : 17
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
-மத்தேயு 26 : 41
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
-யாக்கோபு 4 : 7
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
-யாக்கோபு 4 : 8
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
-1 கொரி 10 : 13
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
-எபிரேயர் 2 : 18
6 Things to remember about Temptation:
1. WHO:
- சோதனை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
- ‘நான் சோதனையில் அகப்படவில்லை’ என்று மட்டும் ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள்.
- நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எவ்வளவு திடமாக இருந்தாலும், நீங்கள் சோதனையில் விழலாம்.
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
-நீதிமொழிகள் 16 : 18
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
-கலாத்தியர் 6 : 1
2.WHAT:
- நீங்கள் எதினாலும் சோதிக்கப்படலாம்.
- நீங்கள் மாம்ச இச்சையினால் சோதிக்கப்படலாம்.
- சில நேரத்தில் அது பாவம் போன்ற தோற்றத்திலேயே இருக்காது
- உதாரணமாக, எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும், நம்மை பாராட்ட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது கூட பாவம் தான்.
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
-யாக்கோபு 1 : 14
- நம்மை சுலபமாக பாதிக்கப்படக்கூடிய விதத்தில் நம்முடைய எதிரி (சாத்தான்) நம்மை சோதிப்பான்.
- ஏதாவது பொல்லாத உணர்வு உங்களைத் தூண்டும் போதெல்லாம், அதை எதிர்க்கும் சக்தியை உங்களுக்குத் தரும்படி தேவனிடம் கேளுங்கள்.
- உங்களை பாதிக்கக்கூடிய சோதனைகளுக்காக ஜெபம் செய்யுங்கள்.
3. WHEN:
- சோதனையானது எந்த நேரத்திலும் நிகழும்.
- நீங்கள் எதிர்பார்த்திராத நேரத்திலும் நிகழும்.
- அது நிகழும்போது, நீங்கள் அதை தனியாக சமாளிக்க முடியும் என்று நினைக்க வேண்டாம்.
- அதை உடனடியாக அறிக்கையிட்டு ஜெபம் செய்வது நலம்.
- ‘சலனம் தான் கடந்து போகும்’ என்று மாத்திரம் நினைக்க வேண்டாம்.
- அது மிகவும் ஆபத்து.
- நீங்கள் எப்போது சோதிக்கப்பட்டாலும் அதை ஒரு தீவிர அச்சுறுத்தலாகக் கருதி ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள்.
துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
-ரோமர் 13 : 14
4. WHERE:
- சலனம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்.
- தேவாலயத்தில்... பள்ளியில்... வீட்டில்... வேலையில்..., நீங்கள் எதிர்பார்த்திராத இடத்திலும் சோதனைகள் நிகழலாம்.
- உடனடியாக அதிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
- ‘நீங்கள் செய்யக்கூடாது’ என்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் செய்யவதற்கு ஒரு நபர் உங்களைத் தூண்டினால், அவரைச் சுற்றி நீங்கள் இருக்க வேண்டாம்.
- நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், தனியாக இருக்க வேண்டாம்.
- அந்த இச்சையைக் கொல்லும்படி தேவனிடம் ஜெபியுங்கள்.
- அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவ செய்வார்!
5. WHY:
- பல காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
- ஆனால் நீங்கள் தேவனின் பிள்ளையாக இருப்பதே முக்கிய காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- இரண்டாவதாக, சாத்தான் மிகவும் தந்திரமானவன்.
- தேவன் பெரிய விஷயங்களை உங்கள் வாழ்க்கைக்காக வைத்திருப்பதை அவன் அறிவான்.
- மூன்றாவதாக, அவன் உங்களை வீழ்த்தினால், மற்றவர்களும் உங்கள் தோல்வியினால் பாதிக்கப்படுவார்கள்.
- உங்கள் பாவத்தால் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.
- பாவம் எப்போதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- நீங்கள் அவன் உங்களைப் பிடிக்கும் பொறியை அடையாளம் காணும்போது, ‘என் வாழ்க்கையை அழிக்க அவனை அனுமதிக்க மாட்டேன்!’ என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
-2 கொரி 2 : 11
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
-லூக்கா 22 : 31
6. HOW:
- நீங்கள் எப்படி சோதிக்கப்பட்டாலும், அது ‘உங்களை வீழ்த்தும் நோக்கத்தில் சாத்தான் செய்கிற செயல்பாடு’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- அவன் உங்கள் மிகப்பெரிய பலவீனம், தேவை அல்லது பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டறிந்து அதை வைத்து சோதிப்பான்.
- நீங்கள் மிகவும் எளிதில் ஈர்ப்படைய கூடியவற்றின் மூலம் உங்களை ஈர்க்க முயற்சிப்பான்.
- ஜெபம் - இதுவே உங்கள் பாதுகாப்பின்மையிலிருந்து விடுபடவும், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நீங்கள் முழுமையடைவதற்கும் ஒரு சிறந்த வழி.
- உங்கள் வாழ்க்கையில் சாத்தான் அணுகும் வழிகளை இது நீக்குகிறது.
- எடுத்துக்காட்டாக, நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுவதற்கு அல்லது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏதேனும் தவறு செய்ய நினைக்கலாம்.
- ஆனால் நீங்கள் “தேவனில் யார்” என்பதை அறிந்திருந்தால், நீங்கள் வீழ்ச்சியடைய மாட்டீர்கள்.
- ஆண்டவரே, எதிரியின் எந்த வலையிலும் நான் சிக்கிக்கொள்ளாதபடி என்னை வலிமையாக்கும்.
- என்னை சோதனைக்கு உட்பட பண்ணாதேயுங்கள்.
- ஆனால் அந்த தீயவனிடமிருந்தும், என்னை வீழ்த்துவதற்கான அவனுடைய முயற்சிகளிலிருந்தும் என்னை விடுவியுங்கள்.
- என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக்காக ஜெபிக்கிறேன்.
- சோதனையின் அனைத்து பாதைகளிலும், வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் உங்கள் பாதுகாப்பு எனக்கு வேண்டும் என்று இயேசுவின் நாமத்தை கொண்டு ஜெபிக்கிறேன்!
- என்னுடைய வாழ்க்கைக்காக தேவன் வைத்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும் என்னை பிரிக்கும் எதையும் எதிர்க்க எனக்கு கற்றுக்கொடுங்கள்.
- எனக்கு எந்த இரகசிய எண்ணங்களும் வராமல் இருப்பதற்கும், தேவபயமற்ற ஆசைகள் எனக்கு வராமல் இருப்பதற்கும் அல்லது என் உதடுகளிலிருந்து தகாத பேச்சுகள் வராதப்படிக்கும் என்னை காத்து கொள்ளுங்கள்.
- மற்றவர்களுக்குத் தெரிந்தால் அல்லது மற்றவர்கள் பார்க்க முடிந்தால் நான் வெட்கத்திற்கு ஆளாகும் கேவலமான விஷயங்களைச் செய்யும் இரகசிய வாழ்க்கை எனக்கு இருக்கக் கூடாது என்று நான் உங்களிடம் வேண்டி கொள்கிறேன்.
- ஆண்டவரே, நீர் என்னை பரிசுத்தத்திற்கு அழைத்தீர் என்பதை நான் அறிவேன்.
-ரோமர் 12 : 9
- எனக்கு பொருந்தாத எல்லாவற்றிலிருந்தும் என்னைப் பிரித்துக்கொள்ளவும், நல்லது கெட்டது எது என்பதில் குழப்பமடையாமல் இருக்கவும் எனக்கு உதவுங்கள்.
- என் வாழ்வில் உங்களுடையல்லாத எதையும் அடையாளம் காணும் பகுத்தறிவை எனக்குத் தாருங்கள்.
- எனவே அதிலிருந்து என்னால் விடுபட முடியும்.
- உங்களிடமிருந்தும், என் வாழ்க்கைக்காக நீங்கள் திட்டமிட்டுள்ள எல்லாவற்றிலிருந்தும் என்னை விலக்கி வைக்கும் எந்த பலவீனத்திலிருந்தும் என்னை விடுவித்து விடுங்கள்.
- நன்றி!
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
-2 பேதுரு 2 : 9
Comments
Post a Comment