பரிசுத்த வாரம்: பெத்தானியாவுக்கு வந்ததிலிருந்து உயிர்த்தெழுதல் வரை
Passion Week (Holy Week)
April 10 2022
We get the word “passion” from the Latin noun ‘passio’ which meant “suffering” or “enduring”
ARRIVAL IN BETHANY–FRIDAY
பெத்தானியாவில் இயேசுவின் வருகை-வெள்ளிக்கிழமை
யோவான் 12:1-8
- பஸ்கா கொண்டாட்டத்திற்கு ஆறு நாட்களுக்கு முன்பு இயேசு நண்பர்களைப் பார்க்க வருவதை இங்கே காண்கிறோம்.
- பஸ்கா-Passover: எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுதலைப்பெற்ற வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடைய வசந்த விழா.
- இது தேவதூதன் எபிரயர்களின் வீடுகளை கடந்து செல்வதை குறித்ததான பண்டிகை. (It celebrated the “passing over” of the Hebrews’ houses by the destroying angel)
- ஏனென்றால் அவர்கள் வீடுகளின் கதவு நிலைகள் மற்றும் சட்டங்களில், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பூச வேண்டும் என்ற தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தனர்.
- கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது அதே பஸ்கா நாளில் தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. (on the day of “the preparation of the Passover”).
- எனவே, “தேவனின் ஆட்டுக்குட்டி" என்ற அவரது பெயர் அதிகாரப்பூர்வமானது.
- லாசரு மற்றும் மார்த்தாள் ஆகியோரின் சகோதரியான மரியாள், இயேசுவின் பாதங்களில் அபிஷேகம் செய்வதை இங்கு காண்கிறோம்.
- அவள் செய்தது சில வழிகளில் அசாதாரணமானது.
- பொதுவாக தலையில் தான் அபிஷேகம் செய்யப்படும்.
- ஆனால் இங்கே அவள் அவருடைய பாதங்களைத் தன் தலைமுடியால் துடைப்பதை பார்க்கிறோம்.
- இரண்டாவதாக, ஒரு மரியாதைக்குரிய பெண் பொது இடங்களில் தலைமுடியை தரையில் விட மாட்டாள்.
- இந்த இரண்டு செயல்களும் மரியாளின் தாழ்மையின் அடையாளமாக காணப்படுகிறது.
- இயேசுவைத் தவிர வேறு எவரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை என்பதை அவள் உணர்த்துகிறாள்!
SABBATH/DAY OF REST–SATURDAY
THE TRIUMPHAL ENTRY–PALM SUNDAY
Sabbath /ஓய்வு நாள்-சனிக்கிழமை
வெற்றிப் பிரவேசம்-குருத்தோலை ஞாயிறு
மத்தேயு 21:1-11
- ஓசன்னா: "ஓ, இ்ரட்சியுங்கள்"
- இங்கு இரட்சகரான மேசியா(promised Savior) ஒரு சமூக ஆர்வலர்(Social Activist) மற்றும் அரசியல் தலைவராக(Political Leader) இருக்கிறார்.
- அவர் இறுதியாக இஸ்ரவேலை மீட்டெடுப்பார் என்று ஒரு கூட்டம் நம்பியது.
- இயேசு "Political Salvation "காட்டிலும் "Spiritual Salvation” கொண்டு வந்து மக்களின் இதயங்களில் அவருடைய ராஜ்யத்தை நிலைநாட்ட வந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- துரதிர்ஷ்டவசமாக, சகரியா 9:9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை அவர்கள் தவறவிட்டார்கள்.
- இயேசுவின் தாழ்மையான பிரவேசம்(Humble Entry) அவருடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அல்ல என்பதற்கான அடையாளமாக இருந்தது.
- அவர் பலத்துடனும்(Force) அல்லது வன்முறையுடனும்(violence) ஆட்சி செய்ய வரவில்லை.
- ஒரு Leader அல்லது Military conqueror-Winner ஆக மறுத்தது அவரது ராஜ்யம் ஆவிக்குரிய ஒன்று (kingdom - Spiritual) என்பதை நிரூபித்தது.
CLEARING OF THE TEMPLE–MONDAY
ஆலயத்தை சுத்தம் செய்தல்–திங்கட்கிழமை
மத்தேயு 21:12-17
- ஆலயத்தின் வெளிப்பிரகாரம், புறஜாதியாருடைய பிரகாரம், இந்த இரண்டு இடங்களில் தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன.
- யூதர்கள் அல்லாத பிற நாட்டு மக்கள் Worship and Prayer கு கூடிவருவதற்கான ஒரே இடம் அதுதான்.
- அங்கு நடந்து கொண்டிருந்த, பிரார்த்தனை(worship) மற்றும் ஜெபம்(prayer) கிட்டத்தட்ட சாத்தியமற்றது(impossible).
- பணம் மாற்றுபவர்கள்(Money Changers) தங்கள் வெளிநாட்டு நாணயத்தை (Foreign Currencies)மாற்றிக் கொள்வதற்காக மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
- வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை நகரின் மறுபுறம் கொண்டு செல்வதற்கான குறுக்குவழியாகவும் ஆலயத்தின் பிரகாரம்(Temple courts) மாறிவிட்டன.
- இந்தக் காலத்தில் ஆலயத்தின் பகுதி முழுவதும் வணிகப் போக்குவரத்து நிறைந்த சந்தையாக மாறி விட்டது. (மாற்கு 11:16)
- மக்கள் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், ஆலயத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தவில்லை.
- பிரார்த்தனை இல்லமாக பயன்படுத்துவதை விற்பனையாளர்கள் தடுத்தனர்.
வாக்குவாதம் மற்றும் உவமைகளின் நாள்-செவ்வாய்
மத்தேயு 21:23- அதிகாரம் 24
- இயேசுவின் அதிகாரம்(Jesus’ authority) மற்றும் அவருடைய உவமைகளுக்கு எதிராக பிரதான ஆசாரியர்கள் சவால் விடுவதை இங்கே காண்கிறோம்.
- மேலும், இந்த வாரத்தில் (பஸ்காவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு) இயேசுவின் இரண்டாவது அபிஷேகம் மத்தேயு 26:6-13 மற்றும் மாற்கு 14:3-9 ஆகிய இரண்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த இரண்டாவது அபிஷேகம் மரியாள் அவரது காலில் அல்ல, அவரது தலையில் செய்தாள்.
- அவள் இயேசு அடக்கம் பண்ணப்படுவதற்காக அவரை அபிஷேகம் செய்கிறாள் என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
- ஆனால் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது.
WEDNESDAY–NOT MENTIONED IN SCRIPTURE
புதன்கிழமை - வேதத்தில் குறிப்பிடப்படவில்லை
- உவமைகளின் தொடர்ச்சி சாத்தியமா???
PASSOVER/LAST SUPPER–THURSDAY
பஸ்கா/கடைசி இரவு-வியாழன்
லூக்கா 22:7-23
John 13 Washing of the disciples’ feet and a new commandment given(v.34)- ‘பாதம் கழுவுதல்’ பொதுவாக வேலையாட்களால் செய்யப்படும் ஒன்று.
- இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி இரவில், அவர் சீஷர்களை எவ்வளவு நேசித்தார் என்பதை வெளிப்படுத்துகிறார்.
- ஆனால் அவரைப் பின்பற்றுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் பணிவாக சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையையும் சொன்னார்.
- தாங்கள் பெரியவராக இருக்க வேண்டும் என்ற ஆசை சீஷர்களை தொடர்ந்து ஆட்கொண்டது.
- (மத். 18:1“...பரலோக ராஜ்யத்தில் யார் பெரியவர்?”).
- முதலாவதாக அல்லது உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற ஆசை கிறிஸ்துவைப் போன்ற மனப்பான்மைக்கு (Christlike attitude) நேர்மாறானது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
GARDEN OF GETHSEMANE–THURSDAY EVENING
கெத்செமனே தோட்டம்-வியாழன் மாலை
- கடைசி இரவு உணவிற்குப் பிறகு, அவரும் அவருடைய சீஷர்களும் கெத்செமனே தோட்டத்திற்கு வந்தபோது கிறிஸ்துவின் துன்பம் தொடங்கியது.
- அவருடைய வியர்வை - இரத்தத்தின் பெரிய துளிகளாக தரையில் விழுந்தது (and his sweat was as it were great drops of blood falling down to the ground.)
- ஹெமாடிட்ரோசிஸ் எனப்படும் “இரத்தம் தோய்ந்த வியர்வை” ஏற்படுவதாக மருத்துவ இலக்கியங்கள் ஆவணப்படுத்துகின்றன.(Medical literature documents that bloody sweat, known as hematidrosis, does occur)
- இந்த நிலை தீவிர மன அழுத்தத்தின் மூலமாக ஏற்படக்கூடிய அரிதான நிகழ்வு. (This condition is seen in rare instances of extreme emotional stress)
- இதன் விளைவாக ஏற்படும் இரத்த இழப்பு அதிகமாக இருக்காது.
- ஆனால் இது சருமத்தை மிகவும் மென்மையாக்குகிறது.
- எனவே, அதிக வேதனையடையச் செய்கிறது.
- ஜெபத்தில் தேவனிடம் திரும்புங்கள்(v32)
- நண்பர்களின் ஆதரவை நாடுங்கள்(v33-34)
- தேவனை அன்பான தகப்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் உங்களை கவனித்துக்கொள்கிறார் மற்றும் உங்களுக்கு சிறந்ததைச் செய்கிறார் என்பதை உறுதிசெய்யுங்கள் (v36)
- தேவனை நம்புங்கள் மற்றும் அவருடைய திட்டம் மற்றும் நோக்கத்திற்கு(purpose) கீழ்ப்படியுங்கள்.(v36)
BETRAYAL AND ARREST
துரோகம் மற்றும் கைது
மாற்கு 14:32-50
- தோட்டத்தில் Emotional Distress ஆன, சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயேசு நெருங்கிய நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- அவர் பிரதான ஆசாரியரான காய்பாவிடம் கொண்டு வரப்பட்டார்.
- அவர் முகத்தில் எச்சில் துப்பப்பட்டார், கேலி செய்யப்பட்டார், அடிக்கப்பட்டார், தவறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
- இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார்.
- மற்ற எல்லா நண்பர்களாலும் அவர் கைவிடப்பட்டார்.(v50)
CRUCIFIXION–GOOD FRIDAY
சிலுவை மரணம்-புனித வெள்ளி
யோவான் 19:1-24; மத்தேயு 27
- அவரது மரண தண்டனைக்கு முன், பிலாத்து, இயேசுவை வாரினால் அடித்து [flogged(torturous beating)] யூதர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
- கசையடி(Scourging) என்பது குறிப்பாக ஒரு கொடூரமான தண்டனை.
- பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை களைந்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ஒரு கம்பத்தில் கட்டுவார்கள்.
- பின்னர் ஒன்று அல்லது இரண்டு போர்ச்சேவகர்கள் பாதிக்கப்பட்டவரை ஒரு வாரினால் (whip) பலமுறை அடிப்பார்கள்.
- Whip, usually made of several leather strips with jagged pieces of iron or sheep bone tied onto them.
- அவருக்கு தோள்கள், முதுகு மற்றும் buttocks முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக அடிபட்டது.
- ஆரம்ப அடிகளே அவரது மென்மையான தோலை காயங்களால் கிழித்தன.
- அதைத் தொடர்ந்து வந்தவை நமது இரட்சகரின்
- திசுக்களில்(Savior’s Tissues) ஆழமாக பாய்ந்து,
- தசைகளை(Muscles)
- நரம்புகள் வெளிப்படும் சாத்தியமுள்ள இரத்த நாளங்கள் (Blood vessels with possible exposure of veins)
- தமனிகள்(Arteries)
- உள் உறுப்புகள் (Inner organs)
- தொடர்ந்து ஏற்பட்ட இரத்த இழப்பு அவரை மேலும் பலவீனப்படுத்தியது.
- முதுகில் கிழிக்கப்பட்ட நரம்புகள் விவரிக்க முடியாத வலியை அவருக்கு ஏற்படுத்தியது.
- இந்த கொடூரமான கசையடி (Brutal Scourging) என்பது துன்பத்தின் ஆரம்பம் மட்டுமே.
- இரத்தக்கறை படிந்த கசையடியில் இருந்து அவிழ்க்கப்பட்ட பிறகு, போர்ச்சேவகர்கள் அவருக்கு ஒரு அங்கியை அணிவித்தனர்.
- ஒவ்வொரு சுவாசமும், அவரது உடலின் ஒவ்வொரு அசைவும், அவருடைய கிழிந்த சதையில் அந்த அங்கியை உரசச் செய்திருக்கும்.
- பின்னர் அவரது தலையில் முள்கிரீடம் (Crown of Thorns) அணிவிக்கப்பட்டது.
- பயிற்சி பெற்ற ரோமானிய போர்ச்சேவகர்கள் அவரை அடித்தபோது, அந்த முட்கள் அவரது தலையில் ஆழமாக பாய்ந்து, அதிக இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தியது.
- பின்னர், அவரது முதுகில் இருந்து மேலங்கி கிழிந்து, ஆழமான காயங்களை மீண்டும் காயமாக்கினது.
- இயேசு மிகவும் கடுமையாக தாக்கப்பட்டார்.
- அவர் ஒரு மனிதனைப் போலவே இல்லை.
THE PLACE OF THE SKULL–CALVARY(FRIDAY)
மண்டை ஓட்டின் இடம்-கல்வாரி (வெள்ளிக்கிழமை)
- பின்னர் இயேசு கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- அவரது அந்த வார இறுதி உடல் நிலையில், அவர் மீது கட்டாயப்படுத்தப்பட்ட சிலுவை மரத்தை (cross beam) அவரால் சுமக்க முடியவில்லை.
- எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் அதைச் செய்ய நியமிக்கப்பட்டார்.
- சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு (Crucifixion Site) வந்தவுடன் ரோம போர்ச்சேவகர்கள், அந்த சிலுவை மரத்தில் (Crossbeam) இயேசுவின் முதுகு பகுதியை அதில் கிடத்தினார்கள்.
- அவரது கிழிந்த சதை மற்றும் திறந்த காயங்களை கரடுமுரடான மரத்தில் வைத்து ஆணியடித்தார்கள்.
- சந்தேகத்திற்கு இடமின்றி அவரது வலி இன்னும் அதிகமானது.
- அடுத்து, அவரது கைகள் நீட்டப்பட்டு ஆணியடிக்கப்பட்டது.
- பின்னர் அவரது முழங்கால்களை வளைத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு ஆணியடிக்கப்பட்டது.
- பொதுவாக சிலுவையில் அறையப்படுபவர்களின் ஒரு காலில் ஆணி அடிக்கப்பட்டு, அது இன்னொரு காலில் பாய்ந்து, பின்னர் அந்த சிலுவை மரத்தில் அந்த ஆணி பதியும்.
- இந்த நேரத்தில் இயேசுவின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு உடல் வலியைக் தந்திருக்கும்.
- அவரது முழு உடலின் எடையும், நீட்டின கைகளில் இழுத்திருக்கும்.
- கைகள் மற்றும் தோள்களில் மிகுந்த வலி ஏற்பட்டிருக்கும்
- அவரது முழு உடலின் எடையும், ஆணியடிக்கப்பட்ட கால்களில் இழுத்திருக்கும்.
- இவை அனைத்தும் வேதனையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கும்.
- இந்த கடுமையான வலியுடன் கூட, சிலுவையில் அறையப்படுபவர்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை அனுபவிப்பார்கள்.
- பொதுவாக நீங்கள் சுவாசிக்கும்போது, விலா எலும்புகள் உயர்ந்து, பின்னர் கீழ்நோக்கி பின்வாங்குகின்றன. (Passively recoil downward as you breathe out)
- ஆனால் உங்கள் கைகள் நீட்டப்பட்டு, உங்கள் உடலின் முழு எடையும் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் போது, விலா எலும்புகள் எல்லா நேரங்களிலும் உயர்த்தப்படும். (the ribs would be elevated at all times)
- The natural recoil (விலா எலும்பு கீழே பின்னட்டு வருவது) is difficult to achieve on the cross.
- இதன் விளைவாக, மூச்சை உள்ளிழுக்கவும் மற்றும் வெளியேற்றுவதற்கும் மிகவும் கடினமாக இருக்கும்.
- சிலுவையில் அறையப்பட்டவர்களின் மரணத்தை துரிதப்படுத்த, போர்ச்சேவகர்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்களின் கால்களை உடைப்பார்கள்.
- இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
- தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக, போர்ச்சேவகர்கள் இயேசுவின் கால்களை உடைக்கவில்லை.
- ஏனென்றால் அவர் சிலுவையில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இறந்துவிட்டார்.
- பொதுவாக ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு 2 முதல் 5 நாட்கள் ஆகும்.
- ஆனால் இயேசு சில மணிநேரங்களிலேயே இறந்தார்.
- மனமுவந்து தன் உயிரைக் கொடுத்தார்.
- அவர் எந்த நேரத்திலும் நிறுத்தியிருக்கலாம்; தேவனின் திட்டத்தைப் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம்.
- ஆனால் அவர் செய்யவில்லை.
RESURRECTION DAY– EASTER SUNDAY!
உயிர்த்தெழுதல் நாள்- ஈஸ்டர் ஞாயிறு!
1 கொரிந்தியர் 15
- The story not ends here.
- இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
- சதா காலமும் உயிரோடு இருக்கிறார்.
- உயிர்த்தெழுந்த இயேசு மகதலேனா மரியாளுக்கும் மற்ற சீஷர்களுக்கும் காட்சி கொடுத்தார்.
- சிறிது நேரம் கழித்து, சீஷர்கள் பரிசுத்த ஆவியாலும், உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பற்றிய அறிவாலும் நிரப்பப்பட்டனர்.
- சீஷர்கள் முழு நம்பிக்கையுடன் புறப்பட்டு, நற்செய்தியை அறிவிக்க சென்றனர்.
- அதன் மூலம் உலகத்தைத் தலைகீழாக மாற்றினர்.
- மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதைப் போல, ஈஸ்டர் பண்டிகையை பிரமாண்டமாக கொண்டாடுவதில்லை.
- பெரும்பாலும் ‘ஈஸ்டர் ஞாயிறு’ அன்று மட்டுமே ஈஸ்டர் குறித்த பிரசங்கம் இடம்பெறுகிறது.
- சிலர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை பற்றி அதிகம் பேசுவார்கள்.
- ஆனால் உயிர்த்தெழுதலை பற்றி அதிகம் பேச மாட்டார்கள்.
- சிலுவையைப் பற்றி பேசுவது தவறில்லை.
- ஆனால் உயிர்த்தெழுதல் அந்த நாணயத்தின் மறுபக்கமாகும்.
- உயிர்த்தெழுதல் இல்லாமல், கிறிஸ்துவின் மரணம் இல்லை.
- நிச்சயமாக, சிலுவையில் அறையப்படாமல், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்க முடியாது.
- பாவ மன்னிப்புக்கு இரண்டும் அவசியம் (எபேசியர் 1:7; 1 கொரிந்தியர் 15:17).
- உண்மையில், பவுல் கொரிந்தியர்களிடம் அவர் பிரசங்கித்த சுவிசேஷம், “கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்,
- மேலும் அவர் அவர் அடக்கம் செய்யப்பட்டார்,
- மேலும் அவர் வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்,
- மேலும் அவர் ஏராளமான மக்களால் காணப்பட்டார் (1 கொரிந்தியர் 15:1-8).
- கிறிஸ்து சிலுவையில் அறையப்படுதல்,
- அடக்கம் செய்யப்படுதல் மற்றும்
- உயிர்த்தெழுதல்
- ஆகிய மூன்றின் மூலம் மட்டுமே மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பை மற்றும் நித்திய ஜீவனைப் பெற முடியும்
- வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவின் உபதேசத்தின் உண்மையை பிதா உறுதிப்படுத்தினார் என்பதை உயிர்த்தெழுதல் நமக்குக் காட்டுகிறது,
- அதாவது “இயேசு என்பவர் மனித மாம்சத்தில் வந்த பிதாவின் நித்திய குமாரன் மற்றும் உலக இரட்சகர்”.
- அவர் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும், பிதாவிற்கான ஒரே வழி (யோவான் 14:6).
- அவரை நிராகரிக்கும் அனைவரும், தேவனையும் அவருடைய மன்னிப்பையும் இகழ்ந்ததற்காக நித்திய வேதனைக்கு ஆளாகிறார்கள்.
அவருடைய வார்த்தையைப் படிக்கவும், ஜெபத்தில் நேரத்தைச் செலவிடவும், அவருடைய மக்களுடன் Fellowship கொள்ளவும், மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நீங்கள் முன்பை விட அதிகமாக செயல்படுவீர்களா?
Comments
Post a Comment