எதுவும், எதுவும் உங்களை தேவனின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது

Nothing means Nothing
எதுவும், எதுவும் உங்களை தேவனின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது. 

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
 -ரோமர் 8 : 38
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.  
 -ரோமர் 8 : 39
  • "தேவனின் அன்பு நிபந்தனையற்றது(unconditional)!" என்று மக்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன். 
  • ஆனால் அவர்கள் தோல்வியடையும் தருணத்தில் அதே அன்பு ஓர் இருப்பாக மட்டும் “just existence” மாறி விடுகிறது. 
  • அவர்கள் நம்பிக்கை என்னவென்றால், நாம் சரியானதைச் செய்யும்போது தேவன் நம்மை நேசிக்கிறார். 
  • ஆனால் ஏதாவது தவறு செய்யும் தருணத்தில் தேவன் நம்மை நேசிப்பதை நிறுத்திவிடுகிறார் என்று நம்புகிறார்கள். 
  • நாம் வேத வசனத்தை வாசித்தோமானால், அந்த நம்பிக்கை தவறு என்று நமக்கே புரியும். 
  • தேவன் மீதான நம் அன்பு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு எப்போதும் மாறாமல் இருக்கும். 
  • அவர் நம்மீது அன்பு செலுத்துவது ‘அவர் யார்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. 
  • நாம் என்ன செய்கிறோம் என்பதன் அடிப்படையில் அல்ல. 
  • அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியோடும் இருக்கிறார் என்பதை நாம் ரோமர். 8:38-39 ல் பார்க்கிறோம். 
  • புதிய சர்வதேச பதிப்பில், "நான் உறுதியாக இருக்கிறேன்..." என்று கூறுகிறது.(In the New International Version, it says, "For I am convinced...”)
  • தேவனின் பிள்ளையாக நீங்கள் இருக்கும் பொழுது எதுவும், 
  1. உங்கள் பாவங்கள், 
  2. தோல்விகள், 
  3. தவறுகள் கூட, 
  • தேவனின் அன்பிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது என்பதை அப்போஸ்தலன் பவுல் இங்கு குறிப்பிடுகிறார். 
  • அதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? நீங்கள் 
  1. உணர்வதை(feel)
  2. நினைப்பதை(think) அல்லது
  3. கற்பிக்கப்பட்டதை(taught) எல்லாம். 
  • கடைப்பிடிக்காதீர்கள். Bible ல மட்டும் நம்புங்கள். 
  • அவருடைய அன்பிலிருந்து எதுவும் உங்களை பிரிக்க முடியாது என்று வேத வார்த்தை நமக்கு தெளிவாக அறிவிக்கிறது. 
  • Nothing means Nothing. 
  • உங்கள் மீதான அவரது அன்பு, உங்கள் மாசற்ற(பரிசுத்தமான) செயல்பாட்டின் மீது சார்ந்தது அல்ல. 
  • உங்கள் தோல்விகளிலும் அவர் உங்களை நேசிக்கிறார். 
  • அதனால் தான் அது ‘கிருபை’ என்று அழைக்கப்படுகிறது! 
  • இது நீங்கள் தேவனின் கிருபைக்கு தகுதியில்லாதவர்களாக இருக்கும் பொழுது கொடுக்கப்பட்ட கிருபை. 
  • நீங்கள் தேவனின் கிருபைக்கு தகுதியுடையவராக இருந்தால், அது கிருபையே அல்ல.
  • எனவே அடுத்த முறை நீங்கள் ஏதாவது தவறு செய்தால், அவருடைய நிபந்தனையற்ற அன்பை (unconditional Love) பிடித்துக் கொள்ளுங்கள்.
  • அவருடைய அன்பை Fresh ஆக பெற்றுக் கொள்ளுங்கள். 
  • ஒவ்வொரு முறையும் அந்தத் தோல்வியையும், ஒவ்வொரு போராட்டத்தையும் சமாளிக்கும் திறன் (God’s Love) உங்களுக்கு இருக்கும்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4