எறும்பு - வேத ஆராய்ச்சி
Ant - எறும்பு
எறும்பை பற்றிய வேத வசனங்கள்:
-நீதிமொழிகள் 6 : 6
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
-நீதிமொழிகள் 6 : 7
-நீதிமொழிகள் 6 : 7
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
-நீதிமொழிகள் 6 : 8
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
-நீதிமொழிகள் 30 : 25
நீதிமொழிகள் 6:6 ல் உள்ள மர்மம்:
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
-நீதிமொழிகள் 6 : 6
Proverbs 6:6 Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:
In Hebrew:
- எறும்பு - Ne’ Maala.
- Ne’maala என்பது எபிரேய மொழியில் ‘ஆண்பால் பெயர்ச்சொல்’.
- எறும்பு என்பது தமிழில் அஃறிணை சொல்.
- ஆனால் எபிரேய மொழியில் ஆண்பால் உயர்திணை சொல்.
- Ne’ Maala என்றால் மனிதன் (ஆண் எறும்பு).
- ஆனால் அவளினுடைய வழி (Her ways) என்று கொடுக்கப்பட்டுள்ளது.
- அந்த ‘ஆண்பால் பெயர்ச்சொல்லின்’ வழிகள் பெண்பால் என கொடுக்கப்பட்டுள்ளது.
- ‘ஆண் பாலினத்தில்’ பெயர்ச்சொல் இருக்கும்போது, ‘பெண் பாலினத்தில்’ வினைச்சொல்லைப் பயன்படுத்துவது இலக்கணப் பிழை.
- ஆனால் இது ஒரு தவறு அல்ல, இது ஒரு மர்மம்.
- நாம் பார்க்கும் அனைத்து எறும்புகளும் பெண் இனம் தான்.
- 150 வருடங்களுக்கு முன்பு தான் அனைத்து எறும்புகளும் பெண் இனம் என கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆனால் சாலொமோன் இதை 3000 வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துவிட்டார்.
- பைபிள் அறிவியல் பூர்வமானது.
- பைபிள் எறும்பை ‘ஆண்‘ என்று அழைக்கிறது.
- ஆனால் அதனுடைய வழிகள் “அவளுடைய வழிகள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
- இவை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஆனால் பைபிளில் ரொம்ப காலத்துக்கு முன்பே “எறும்பு -மனிதன்” என எழுதப்பட்டுள்ளது.
வெவ்வேறு விதமான இனங்கள் - எறும்பு:
- எறும்புகளில் 12,000 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- ஆயிரக்கணக்கான இனங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் மட்டும் தான் எறும்புகள் இல்லை.
- மற்ற எல்லா இடங்களிலும் எறும்புகள் இருக்கின்றன.
ராணி எறும்பு:
- ஒவ்வொரு எறும்புக்கும் ஒரு ராணி எறும்பு உண்டு.
- அது தான் எல்லா எறும்புகளுக்கும் தாய்.
- நாம் ராணியை வெளியே பார்க்கவே முடியாது.
- அது 2 இறக்கைகளை கொண்டிருக்கும்.
ஆண் எறும்பு:
- உண்மையில் ஆண் எறும்பு, ராணி எறும்பை விட சிறியது.
- ராணி எறும்பு வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே உடலுறவு கொள்கிறது.
- மேலும் அது தன் வாழ்நாள் முடியும் வரை தொடர்ந்து கர்ப்பமாகி கொண்டே இருக்கிறது.
- இரண்டு கருமுட்டைகளும் உயிரினங்களை உருவாக்குகின்றது.
- கருவுற்ற முட்டை(Fertilized Eggs) பெண்ணாகவும், கருவுறாத முட்டை (Unfertilized Eggs) ஆணாகவும் மாறும்.
- ஆண் எறும்பு என்பது தான் ஈசல்
- ராணி எறும்பு 30 ஆண்டுகள் உயிர் வாழும்.
- பெண் எறும்பு 3 ஆண்டுகள் உயிர் வாழும்.
- ஆண் எறும்பு 10 நாட்கள் மட்டுமே உயிர் வாழும்.
எறும்புகளின் மூலைக்களங்கள்:
- அந்த அனைத்து எறும்புகளின் மூளை செல்களை எடுத்துக் கொண்டால், அது ஒரு மனிதனின் மூளை செல்களின் எண்ணிக்கைக்கு சமம் என விஞ்ஞானம் கூறுகிறது.
- எறும்புகள் அற்புதமான சுமைதாங்கி.
- மேலும் அதனால் தங்கள் உடல் எடையை 20 மடங்கு எடையை தூக்க முடியும்.
- எறும்பினால் தன் உடல் எடையை விட 5000 மடங்கு எடையை தள்ள முடியும்.
இறந்த எறும்பை மற்ற எறும்பு அடக்கம் செய்யும்:
- எறும்புக்கூட்டத்தில் நாள்தோறும் மரணம் ஏற்படும்.
- எனவே மற்ற எறும்பு (Ant Undertakers) அவற்றை எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யும்.
- இப்போது நமக்கு தெளிவாக விளங்கும், பைபிள் ஏன் எறும்புகளை “மனிதன்” என்று அழைக்கிறது என்று.
- எறும்பு ஒன்றுக்கு ஒன்று மாற்றி சுத்திகரித்து கொள்ளும்.
- எறும்பு ஒன்றுக்கு ஒன்று தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
- எறும்பு ஒன்றுக்கு ஒன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்.
Comments
Post a Comment