ஊரீம் மற்றும் தும்மீம்
ஊரீம் மற்றும் தும்மீம்
12 கற்கள்:
- ஊரீம், தும்மீம் என்பவர்கள் ஒரு ஆசாரியனின் ஏபோத்தின், மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்ட கற்கள்.
- ஆசாரியன் அணியக்கூடிய ஏபோத்தில் 12 கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும்.
- அதில் ஊரீம் என்பது வெள்ளை நிறத்திலும் , தும்மீம் என்பது கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
ஆசாரியன் மார்ப்பதக்கத்தில்:
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.
-யாத்திராகமம் 28 : 30
அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
-லேவியராகமம் 8 : 8
(உபாகமம் 33:8, எஸ்றா 2:63, நெகேமியா 7:65)
Meaning:
ஊரீம் என்றால் Light என்று பொருள்.
தும்மீம் என்றால் Darkness என்று பொருள்.
தேவ சித்தத்தை அறிந்து கொள்ள:
- ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொல்வதற்காக உபயோகிக்கப்பட்ட புனித கற்களாகும்.
- மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும்.
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
-எண்ணாகமம் 27 : 21
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
-1 சாமுவேல் 28 : 6
- இது, தேவனுக்கும், இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சாதனம் என்று கூறலாம்.
- பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தம்முடைய மக்களிடம் பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டார் என்பதை நாம் அறிவோம்.
- அதிர்ஷ்டவசமாக, இன்று நமக்கு ஊரிம் மற்றும் தும்மீம் தேவையில்லை.
- ஏனென்றால் நாம் இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நேரடியாக தேவனிடம் பேசலாம்.
- கர்த்தருக்கு நன்றி.
Comments
Post a Comment