30 வேத வினா-விடைகள்
1. அகோலாள், அகோலிபாள் என்பதின் பொருள் என்ன?
பதில்: அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள்என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.
-எசேக்கியேல் 23 : 4
2. அவன் எரிந்து பிராகாசிக்கிற விளக்காய் இருக்கிறான் என்று இயேசு யாரைக் குறித்து கூறினார்?
பதில்: அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூரமனதாயிருந்தீர்கள்.
-யோவான் 5 : 35
3. பெரேஸ் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்: பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும்அர்த்தமாம் என்றான்.
-தானியேல் 5 : 28
4. யாருடைய இரத்தத்தை பிலாத்து பலிகளோடு கலந்திருந்தான்?
பதில்: பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலேஅங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
-லூக்கா 13 : 1
5. நான் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலம் என்று கூறியது யார்?
பதில்: இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான்உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
-யோனா 4 : 3
6. பவுல் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என எங்கு, ஏன் கூறுகிறார்?
பதில்: இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையாபிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின்ஊழியக்காரனல்லவே.
-கலாத்தியர் 1 : 10
7. சாலொமோனுடைய நாட்கள் நீடித்திருக்க தேவன் கொடுத்த கட்டளை என்ன?
பதில்: உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.
-1 இராஜாக்கள் 3 : 14
8. ———————————— பாவத்துக்கானாலும், ———————— கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக்கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே ——————— அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
பதில்: மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
-ரோமர் 6 : 16
9. “தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ” என எந்த தீர்க்கத்தரிசியை கொண்டு கர்த்தர் கூறுகிறார்?
பதில்: நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமானபெண்ணொட்டகம் நீ.
-எரேமியா 2 : 23
10.எவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று இயேசு கூறுகிறார்?
பதில்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்துஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
-யோவான் 7 : 38
11. கர்த்தர் யாரை அடங்காத கிடாரி என்று குறிப்பிடுகிறார்?
பதில்: இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமானவெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார்.
-ஓசியா 4 : 16
12. யோசுவாவின் மறுபெயர் என்ன?
பதில்: தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகியஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
-எண்ணாகமம் 13 : 16
13. எந்த மிருகம் தும்முகையில் ஒளி வீசும்?
பதில்: லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
-யோபு 41 : 1
அது தும்முகையில் ஒளி, வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
-யோபு 41 : 18
14. “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” என்று பவுலிடம்கூறியது யார்?
பதில்: அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச்சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
-அப்போஸ்தலர் 26 : 28
15. யாக்கோபு ஓடிப்போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்?
பதில்: யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.
-ஆதியாகமம் 31 : 22
16. வெள்ளிக்குக் ——————, பொன்னுக்குப் ————— சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும்——————— சோதனை.
பதில்: வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியேசோதனை.
-நீதிமொழிகள் 27 : 21
17. தாய்,தகப்பன் இல்லாமல் அனாதையாய் இருந்த போதும், நாட்டை ஆளும்போதும் தன்னை வளர்த்தவரின்சொற்கேட்டு நடந்தது யார்?
பதில்: எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும்தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.
-எஸ்தர் 2 : 20
18. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பேதுரு குணமாக்கிய திமிர்வாதக்காரரின் பெயர் என்ன?
பதில்: பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன்படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
-அப்போஸ்தலர் 9 : 34
19. “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா” என்று யார் யாரைப் பார்த்து கூறியது?
பதில்: ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவாஎன்றான்.
-1 இராஜாக்கள் 18 : 17
20. அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி யார்?
பதில்: நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில்வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்குஅதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
-அப்போஸ்தலர் 27 : 1
21. கர்த்தருடைய தேவாலயத்தை கட்ட தேவையான கேதுரு மரத்திற்கு சாலொமோன் எந்த ராஜாவிடம் வேண்டுதல்செய்தார்?
பதில்: அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:
-1 இராஜாக்கள் 5 : 2
22. பவுலை பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல் காத்தது யார்?
பதில்: தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்றுதமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்;
-2 கொரி 11 : 32
23. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட எத்தனையாவது வருஷத்தில்,சாலொமோன் தேவஆலயத்தை கட்டத்தொடங்கினான்?
பதில்: இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன்இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின்ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
-1 இராஜாக்கள் 6 : 1
24. மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரை உடையவன் யார்?
பதில்: மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியைவிசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.
-அப்போஸ்தலர் 13 : 8
25. சங்காரப்பள்ளத்தாக்கென்று அழைக்கப்படும் இடம் எது?
பதில்: ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
-எரேமியா 7 : 32
26. மல்கியா புத்தகத்தில் கர்த்தர், “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னேஒருவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” என்று கூறினார்? அது யார்?
பதில்: இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியாதீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
-மல்கியா 4 : 5
27. பஸ்கூர் என்பவர் யார்? அவரின் மறுபெயர் என்ன?
பதில்: எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய குமாரனும், கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
-எரேமியா 20 : 1
மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியாஅவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.
-எரேமியா 20 : 3
28. பேதுரு யார் யாரிடம் “இயேசுவை தெரியாது” என மறுதலித்தார்? அந்த 3 பேர் யார்?
பதில்: அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரிஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.
-மத்தேயு 26 : 69
அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
-மத்தேயு 26 : 70
-அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகியஇயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான்.
-மத்தேயு 26 : 71
-சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில்ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
-மத்தேயு 26 : 73
29. யார் தன் மகனுக்கு “இக்கபோத்” என்று பெயர் சூட்டியது? ஏன்?
பதில்: பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டிபிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள்கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
-1 சாமுவேல் 4 : 19
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
-1 சாமுவேல் 4 : 21
30. ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன் யார் என்று இயேசு கூறுகிறார்?
பதில்: ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குமெய்யாகவே சொல்லுகிறேன்.
-மத்தேயு 11 : 11
31. எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, யார் அவனுக்குச் சகாயமாயிருந்தான்?
பதில்: ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகியஅகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.
-எரேமியா 26 : 24
32. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் ———————— இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ————————- இருக்கும்.
பதில்: நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோஜீவவிருட்சம்போல் இருக்கும்.
-நீதிமொழிகள் 13 : 12
33. கர்த்தர் ஒத்னியேல் கையில் ஒப்புகொடுத்த, மெசொப்பொத்தாமியாவின் ராஜா யார்?
பதில்: அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப்புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலேஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.
-நியாயாதிபதிகள் 3 : 10
34. அப்போஸ்தலர் புத்தகத்தின் படி, அத்தேனே பட்டணத்தில், பவுல் எதைக் குறித்து பிரசிங்கித்தார்?
பதில்: அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளைஅறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்தெழுதலையும் அவர்களுக்குப்பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
-அப்போஸ்தலர் 17 : 18
35. ‘நோவா’ என்ற பெயரின் அர்த்தம் என்ன?
பதில்: கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன்நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
-ஆதியாகமம் 5 : 29
36. சாலொமோனின் நீதிமொழிகள் புத்தகத்தின் மூலம் நாம் எவைகளை பற்றிய உபதேசத்தை அடையலாம்?
பதில்: விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
-நீதிமொழிகள் 1 : 3
37. கர்த்தர், கானானில் எத்தனை ஜனம் பெருத்த ஜாதிகளை அழித்து அந்த தேசத்தை இஸ்ரவேலிற்கு சுதந்தரமாகபங்கிட்டு கொடுத்தார்? அவைகள் யாவை?
பதில்: நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
-உபாகமம் 7 : 1
38. சாலொமோன் ராஜா தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்திய இரண்டு தூண்களின் பெயர் என்ன?
பதில்: அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்குயாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.
-1 இராஜாக்கள் 7 : 21
39. பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயர் வைத்து, ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாக கொடுத்தான்?
பதில்: மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகியபோத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்புஎகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
-ஆதியாகமம் 41 : 45
40. வாலிபரின் அலங்காரம் எது?
பதில்: வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
-நீதிமொழிகள் 20 : 29
41. பென்யமீனுக்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்?
பதில்: மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன்தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
-ஆதியாகமம் 35 : 18
42. சாமுவேல் மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி என்ன பெயரிட்டார்?
பதில்: அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர்எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
-1 சாமுவேல் 7 : 12
43. சவுலை கொன்ற அமலேக்கிய இளைஞனுக்கு தாவீது கொடுத்த தண்டனை என்ன?
பதில்: தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப்பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,
-2 சாமுவேல் 1 : 14
வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன்அவனை வெட்டினான்; அவன் செத்தான்.
-2 சாமுவேல் 1 : 15
44. ரோமர் புத்தகத்தின்படி, எப்பொழுது பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது என்று பவுல் கூறுகிறார்?
பதில்: நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களைமேற்கொள்ளமாட்டாது.
-ரோமர் 6 : 14
45. “கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியிட நான் இலவசமாய் வாங்க மாட்டேன்” யார் யாரிடம் கூறியது?
பதில்: ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குசர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
-2 சாமுவேல் 24 : 24
46. ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கத்தரிசியின் ஆகமத்தைவாசித்து கொண்டிருந்தவர் யார்?
பதில்: அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகேஎன்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகியஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
-அப்போஸ்தலர் 8 : 27
ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தைவாசித்துக் கொண்டிருந்தான்.
-அப்போஸ்தலர் 8 : 28
47. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் யார்?
பதில்: யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரியபணிவிடையைச் செய்தவன் இவன்தான்.
-1 நாளாகமம் 6 : 10
48. —————— தூங்கிவிழப்பண்ணும்; ———————- பட்டினியாயிருப்பான்.
பதில்: சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
-நீதிமொழிகள் 19 : 15
49. மீதியானியரை எதிர்த்த நியாயாதிபதி யார்?
பதில்:அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
-நியாயாதிபதிகள் 7 : 7
50. புலம்பல் புத்தகத்தின்படி, நாம் எதற்காக
நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது?
பதில்: கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
-புலம்பல் 3 : 26
51. “நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே” யார் யாரிடம் கூறியது?
பதில்: இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
-அப்போஸ்தலர் 18 : 9
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
-அப்போஸ்தலர் 18 : 10
52. செத்த ஈக்கள் ————— ————————— நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும்பேர்பெற்றவனைச் —————-அப்படியே செய்யும்.
பதில்: செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும்கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
-பிரசங்கி 10 : 1
53. “உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசை எடுத்தவன் நான் தான்” யார் யாரிடத்தில் சொன்னது?
பதில்: அவன் (மீகா) தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக்குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதைஎடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
-நியாயாதிபதிகள் 17 : 2
54. அப்போஸ்தலர் புத்தகத்தின்படி, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன்சொல்லக்கேட்டது யார்?
பதில்: சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலைஅழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
-அப்போஸ்தலர் 24 : 24
55. எஸ்ராவின் காலத்தில் பாபிலோனை அரசாண்ட ராஜாவின் பெயர் என்ன?
பதில்: அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள்வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:
-எஸ்றா 8 : 1
56. நீதிமானுடைய பலன் ———————-; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ———————-.
பதில்: நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
-நீதிமொழிகள் 11 : 30
57. “தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்” சொன்னதுயார்?
பதில்: அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
-யோபு 4 : 1
தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
-யோபு 5 : 26
58. எது கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது?
பதில்: நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப்பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
-யாக்கோபு 4 : 14
59. பழைய ஏற்பாட்டில், யாருக்கு ஐந்து குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள். குமாரர்கள் இல்லை?
பதில்: யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனானகிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
-எண்ணாகமம் 27 : 1
60. ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் ——————— பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத்தன்னைத் ———————— பாராட்டுகிறவனும் உண்டு.
பதில்: ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத்தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
-நீதிமொழிகள் 13 : 7
61. தாவீது ராஜா யாருடைய ஆலோசனையை பைத்தியமாக்கி விடுவீராக என்று தேவனிடம் விண்ணப்பம்பண்ணினார்?
பதில்: அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்குஅறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராகஎன்றான்.
-2 சாமுவேல் 15 : 31
62. எப்பொழுது உன் சரீரம் வெளிச்சமாயிருக்கும் என மத்தேயு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும்வெளிச்சமாயிருக்கும்.
-மத்தேயு 6 : 22
63. நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் என யார் யாரிடம் கூறியது?
பதில்: போவாஸ்-ரூத் ; இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என்ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
-ரூத் 3 : 11
64. எந்த நாட்டு கிராமத்தில் உள்ள பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார்?
பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாகநடந்துபோனார்.
-லூக்கா 17 : 11
65. எந்த யூதாவின் ராஜா தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும், பாபிலோன் ராஜாவின் மனுஷருக்குகாண்பித்தான்?
பதில்: எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலைஅனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன்ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.
-2 இராஜாக்கள் 20 : 13
66. மதியீனனுடைய வழி ———————————;ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ —————————.
பதில்: மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோஞானமுள்ளவன்.
-நீதிமொழிகள் 12 : 15
67. எந்த தீர்க்கத்தரிசியை கர்த்தர் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்?
பதில்: கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள்நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,
-எசேக்கியேல் 37 : 1
68. 1 யோவான் புத்தகத்தின்படி, எவன் பாவஞ்செய்யான்? ஏன் பாவஞ்செய்யமாட்டான்?
பதில்: தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன்தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
-1 யோவான் 3 : 9
69. “உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் உன் சிநேகம் அதிகமாயிருந்தது.” இது யார் யாரிடம் கூறியது?
பதில்: தாவீது to யோனத்தான்
என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகுஇன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும்அதிகமாயிருந்தது.
-2 சாமுவேல் 1 : 26
70. தேவன் எதன்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் என்று பவுல்பிலிப்பியர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்?
பதில்: ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில்உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
-பிலிப்பியர் 2 : 13
71. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் என்ன செய்யக் கூடாது என பிரசங்கி சொல்கிறார்?
பதில்: அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரியகுற்றங்களையும் அமர்த்திப்போடும்.
-பிரசங்கி 10 : 4
72. எதற்கு உடன்படாமல் கடிந்துகொள்ள வேண்டும் என பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்?
பதில்: கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
-எபேசியர் 5 : 11
73. தாவீது எப்ரோனிலும், எருசலேமிலும் அரசாண்ட வருடங்கள் எத்தனை?
பதில்: தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில்முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
-1 இராஜாக்கள் 2 : 11
74. வேதத்தில் உள்ள மிக நீளமான பெயர் என்ன?
பதில்: பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலேமகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
-ஏசாயா 8 : 1
ரோமர் புத்தகம்
1. ரோமாபுரியாருக்கு ஆவிக்குரிய வரங்கள் ஏன் தேவைப்பட்டது?
பதில்: நீங்கள் ஸ்திரப்படுவதற்காக (strengthen)ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,
-ரோமர் 1 : 10
2. வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது எது?
பதில்: சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
-ரோமர் 1 : 18
3. தேவனை அறிந்தும் மகிமைப்படுத்தாதவர்களை, அறிவை பற்றிக் கொண்டிருக்க மனதில்லாதவர்களையும் தேவன் எதற்கெல்லாம் ஒப்புக்கொடுத்தார்?
பதில்: அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
-ரோமர் 1 : 21
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
-ரோமர் 1 : 28
4. தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறது? சரியா? தவறா?
பதில்: சரி
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
-ரோமர் 2 : 2
5. ——————-குணப்படும்படி ஏவுகிறது. கோபாக்கினை நாளிலே——————-குவித்து கொள்கிறாயே.
பதில்: அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
-ரோமர் 2 : 4
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
-ரோமர் 2 : 5
6. கேட்கிறவர்களல்ல, செய்கிறவர்களே நீதிமான்கள்- எதை?
பதில்: நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
-ரோமர் 2 : 13
7. ஒரு யூதனுடைய விசேஷித்த மேன்மை எது?
பதில்: அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
-ரோமர் 3 : 2
8. பாவத்தை குறித்த அறிவு, நீதியினால் வருகிறது. சரியா? தவறா?
பதில்: தவறு
இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
-ரோமர் 3 : 20
9.விருத்தசேதனமில்லாதவர்களை எதன் மூலம் நீதிமான்களாக்குகிறார் தேவன்?
பதில்: விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
-ரோமர் 3 : 30
10. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்று என்னப்படும். சரியா? தவறா?
பதில்: தவறு
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
-ரோமர் 4 : 4
11. கிரியை செய்யாமல் விசுவாசம் வைக்கிறவனுக்கு நீதியாக என்னப்படுவது எது?
பதில்: ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
-ரோமர் 4 : 5
12. விசுவாசம் வீணாய் போகும் வாக்குதத்தமும் அவமாகும். எப்போது?
பதில்: நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்.
-ரோமர் 4 : 14
13. இயேசு ஒப்புக்கொடுக்கப்பட்டும், எழுப்பப்பட்டும் இருக்கிறார். எதற்காக?
பதில்: அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
-ரோமர் 4 : 25
14. எந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது?
பதில்: மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
-ரோமர் 5 : 5
15. தேவனுக்கு சத்துருக்களாயிருந்த நாம் எதனாலே அவருடன் ஒப்புரவாக்கப்பட்டோம்?
பதில்: நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
-ரோமர் 5 : 10
16. மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. சரியா? தவறா?
பதில்: சரி
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
-ரோமர் 5 : 15
17. ————————அநேக குற்றங்களை நீக்கி நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
பதில்: மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
-ரோமர் 5 : 16
18. அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் —————-னாலே கிறிஸ்துவுடனே அடக்கம் பண்ணப்பட்டோம்.
பதில்: மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
-ரோமர் 6 : 4
19. நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியவை எவை?
பதில்: நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
-ரோமர் 6 : 13
20. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமையாகும் போது கிடைக்கும் பலன்?
பதில்: இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
-ரோமர் 6 : 22
21. ——————-இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் அறிந்தேனேயன்றி மற்றபடி அறியவில்லை.
பதில்: ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
-ரோமர் 7 : 7
22. ஆவியின் சிந்தையோ —————, ——————.
பதில்: மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
-ரோமர் 8 : 6
23. தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் ——————.
பதில்: மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
-ரோமர் 8 : 14
24. தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு மிகுந்த ஆவலோடு காத்திருப்பது எது?
பதில்: மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
-ரோமர் 8 : 19
25. வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்வது யார்?
பதில்: அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
-ரோமர் 8 : 26
26. தேவன் நம் பட்சத்திலிருக்கிறார். தேவனிடத்தில் இல்லை. எது?
பதில்: இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
-ரோமர் 8 : 31
தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
-ரோமர் 2 : 11
27. வேண்டுதல் செய்கிற இருவர் யார், யார்?
பதில்: ஆவியானவர்,கிறிஸ்து
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
-ரோமர் 8 : 26
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
-ரோமர் 8 : 27
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
-ரோமர் 8 : 34
28. பரிசுத்தமாயும், நீதியாயும், நன்மையாயும் இருக்கிறது எது?
பதில்: ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
-ரோமர் 7 : 12
29. மகிமையும், கணமும், சமாதானமும் உண்டாகும். யாருக்கு?
பதில்: முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
-ரோமர் 2 : 10
30. உலகத்தை சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் யாருக்கு உண்டானது?
பதில்: அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
-ரோமர் 4 : 13
Comments
Post a Comment