The Significance Of This Generation இந்த தலைமுறையின் முக்கியத்துவம்

The Significance Of This Generation
இந்த தலைமுறையின் முக்கியத்துவம்

நீங்கள் தேவனுக்கு தேவையான ஒன்றைச் செய்யும்போது, ​​தேவனின் அபிஷேகம் மற்றும் ஞானத்துடன் நீங்கள் பல விஷயங்களைச் செய்யலாம்.

Rhema- The Hebrew Word:
  • Rhema will be our general term to refer to all of these means of God communicating His specific will to an individual. (தேவன் தனது குறிப்பிட்ட விருப்பத்தை ஒரு தனிநபருக்கு தெரிவிக்கும் வழிமுறையை குறிப்பது)
மரியாள் - உதாரணம்:
  • இந்தப் பகுதியை வாசிப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு அற்புதம் வெளிப்படக் காத்திருக்கிறது. 
  • அவர்கள் ஒரு “ரீமா” வார்த்தையைப் பெறுவார்கள்.
  • அது அவர்களின் பார்வை மற்றும் எண்ணத்தை மாற்றும்.
  • எப்படி மரியாள் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்கவும், அவரிடமிருந்து நல்ல பங்கை பெறவும் அமர்ந்திருந்தாளோ (லூக்கா 10:38-42), 
  • அதே போல நாமும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவர் பிரசங்கித்த வார்த்தையைக் கேட்கும்போது, ​​தேவன் கொடுக்க விரும்பும் “ரீமா” வார்த்தையைப் பெறுவோம்.
கர்த்தர் பேசுவதை கேட்க அவர் பாதத்தில் அமர்ந்திருங்கள்:
  • வழக்கமாக, நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, ​​​​அவர்களை கவனித்து கொள்ள எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைப்போம். 
  • ஆனால் லூக்கா 10:38-42 இல், இயேசு தன் வீட்டிற்கு வந்திருந்த போதும், ​​மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து, அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 
  • அன்றைய கலாச்சாரத்தில், இது வித்தியாசமாக இருந்திருக்கும்.
  • ஆனால் தேவனின் கலாச்சாரத்தின் படி, தேவன் அதை விரும்பினார்!
மார்த்தாள்-மன அழுத்தம்:
  • மறுபுறம், மார்த்தாள் மன அழுத்தத்திற்கு ஆளானார்.
  • ஏனென்றால் முதலில் தேவனிடமிருந்து பெறுவதற்குப் பதிலாக தேவனுக்கு என்ன சேவை செய்யலாம் என்று அவள் பார்த்தாள். 
  • பெரும்பாலும், நாம் மனபாரமாகவும் மனஅழுத்தமாகவும் இருக்கும்போது
  • முதலில் அவருடைய வார்த்தையைப் பெறாமல்
  •  ​​நாம் மனதில் பொறுமையிழந்து, நம் பெற்றோரையும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் விமர்சிக்க தொடங்குகிறோம்.
  • “தேவன் எனக்கு அனைத்தையும் கொடுக்கிறார்” என்பதற்குப் பதிலாக நான் எல்லா நேரத்திலும் தேவனுக்காக சேவை செய்கிறேன்" என்ற மனநிலையை நாம் கொண்டிருக்கும்போது இது நிகழ்கிறது.
  • இது நமக்கு மன அழுத்தத்தையும் பாரத்தையும் ஏற்படுத்துகிறது.
கவலையின் ஆவி:
  • மரியாள் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று பைபிள் சொல்கிறது.
  • அவள் அவருடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டாள். 
  • கர்த்தர் விரும்பிய “தேவையான ஒன்றை” அவள் செய்து கொண்டிருந்தாள்! 
  • வீட்டு வேலையில் மரியாள் தனக்கு உதவவில்லை என்று மார்த்தாள் இயேசுவிடம் புகார் செய்தபோது
  • கர்த்தர் மார்த்தாளின் வேலைப்பளுவைக் குறை கூறவில்லை. 
  • மாறாக, அவர் கவலையின் ஆவியைக் கொண்டிருந்தார்.
  • இயேசு சொன்ன ஒரு காரியத்தை (தேவையான ஒன்றை) செய்யாததால் மார்த்தாள் பல விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டாள்.
அவசியமான ஒரு விஷயத்திற்கு நாம் கவனம் செலுத்தினால், தேவனின் அபிஷேகம், ஞானம், மற்றும் சரியான ஆவியில் பல விஷயங்களைக் கவனிக்க முடியும்.

சரியான மனபான்மை:
  • நீங்கள் உங்கள் ஊழியத்தில் கர்த்தருக்குச் சேவை செய்ய விரும்பினால் பல நல்ல, ஆவிக்குரிய காரியங்களைச் செய்யலாம். 
  • ஆனால் அவற்றை தவறான மனப்பான்மையில் (சண்டை, பொறாமை மற்றும் கிருபை இல்லாத ஆவி) செய்யக் கூடாது.
  • மரியாள் இயேசுவை தேவனாக (மரியாள் அவரை வெறும் மனிதனாக நினைக்கவில்லை) நினைத்து
  • அவர் காலடியில் அமர்ந்து கொண்டு அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவள். 
இயேசு-உதவி:
  • இன்றும், இயேசு நமக்கு உதவி செய்ய விரும்புகிறார்.
  • இன்று, அவரிடமிருந்து எப்படி அதிகமாகப் பெற்றுக் கொள்வது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • பிரியமானவர்களே, ஒவ்வொரு நாளும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிப்பீர்களா?”
  • நீங்கள் தேவனிடமிருந்து தாராளமாக பெறும்போது,
  • நீங்கள் உங்களை அறியாமலேயே அவருக்குச் சேவை செய்யத் தொடங்குவீர்கள்!
இயேசு நேசித்த சீஷன்:
  • இதை யோவான் விளக்குகிறார், அவர் தனது நற்செய்தியில் தன்னை "இயேசு நேசித்த சீஷன்" என்று பலமுறை சொன்னார். 
  • கர்த்தர் தன்மீது வைத்திருக்கும் அன்பை யோவான் மிகவும் உணர்ந்திருந்ததால்,
  • சிலுவையில் இருந்த இயேசுவுடன் அவர் கூடவே இருந்தார் (மற்ற சீஷர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு மறைந்துபோன போது கூட).
கிருபையால் தொடப்படும்போது:
  • மக்கள் முதன்முதலில் தேவனின் அன்பைப் பெறும்போது, ​​​​அவர்கள் மனப்பூர்வமாக சேவை செய்ய நினைக்க மாட்டார்கள். 
  • ஆனால் இவர்கள் தான் பின்பு தேவனுக்கு அதிக சேவை செய்கிறவர்களாக மாறுகிறார்கள். 
  • நீங்கள் கர்த்தரிடமிருந்து பெற்று, கிருபையால் தொடப்படும்போது, ​​உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எப்போதும் இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புவீர்கள்.
இயேசுவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வது என்பது, 
தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது.
  • மனச்சோர்ந்து மற்றும் மனந்தளர்ந்து உள்ளவர்களால் இயேசுவை சீக்கிரமாக தெரிந்துகொள்ள முடியவில்லை.
  • ஏனென்றால் அவர்கள் அறியாமை (புத்தி இல்லாதவர்கள்அல்லது விசுவாசமின்மை அவர்களை மந்தமாக்கியது
  • அவர்கள் நம்புவதில் மெதுவாக இருப்பதால் (slow of heart to believe) உண்மையைக் கேட்டிருந்தாலும் அவர்களால் நம்ப முடியவில்லை.
  • இயேசு எம்மாவுக்கு செல்லும் வழியில் இரண்டு சீஷர்களுக்கு விவரித்ததை போலவே, இந்த மனச்சோர்வாக,மனந்தளர்ந்து இருப்பவர்களுக்கும் விவரிக்கிறார் (லூக்கா 24:25-27).
இயேசுவை அறிவது முக்கியம்:
  • நீங்கள் வேத வார்த்தையை படிக்கும் போது நீங்கள் முதலில் இயேசுவை அறியத் தொடங்குவீர்கள்.
  • பின்னர் நாம் அவரில் வைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணருவீர்கள் (1 கொரி. 1:30). 
  • நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய அறிவைப் பெறுவதே முதன்மையானது.
  • உங்களை அல்லது உங்கள் எதிரியை அறிவதை விட மிக முக்கியமானது என்பதை உணருவீர்கள். 
நீங்கள் இயேசுவை அறிந்தால் மட்டுமே, உண்மையில் நீங்கள் அவரில் யார் என்பதை காணத் தொடங்குவீர்கள்.

யோசேப்பு- இயேசு கிறிஸ்து:
  • கர்த்தராகிய இயேசுவை, பழைய ஏற்பாட்டு யோசேப்பை விட தெளிவாக சித்தரிக்கும் வேறு எந்த கதாபாத்திரமும் இல்லை. 
  • இந்த தலைமுறையில் இயேசு என்னவாக இருக்கிறாரோ, அதை தான் அந்த யோசேப்பு கதாபாத்திரம் விளக்குகிறது. 
  • யோசேப்பு யாக்கோபின் அன்பு மகன் (ஆதி. 37:3); நம்முடைய கர்த்தர், பிதாவின் பிரியமான மகன் (மத். 3:17). 
  • யோசேப்பின் சகோதரர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் தன்னுடைய  கனவுகள் மற்றும் தரிசனங்கள் போன்ற விஷயங்களை வெளிப்படுத்தியபோது, ​​அவருடைய சகோதரர்கள் யோசேப்பை அங்கீகரிக்கவில்லை மற்றும் அவர் மீது பொறாமை கொண்டனர் (ஆதி. 37:8); இயேசுவின் மாம்சமும் இரத்தமும் கொண்ட யூத மக்கள் அவரை தங்கள் மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை (யோவான் 19:15).
  •  யோசேப்பு தன் சகோதரர்களால் 20 வெள்ளிக்காசுகளுக்கு அடிமையாக விற்கப்பட்டார் (ஆதி. 37:28); கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, யூதாஸ் ஸ்காரியோத்து என்ற சீஷன் மூலமாய் 30 வெள்ளிக்காசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டார் (மத். 26:15).
  • யோசேப்பின் ஞானத்தால் காப்பாற்றப்பட்டு, பயனடைந்த மக்கள் எகிப்தியர்கள் மற்றும் உலக மக்கள் (ஆதி. 41:54); பெரும்பான்மையான புறஜாதியார் வாழும் இந்த உலகிற்கு இயேசு ஜீவ அப்பமாக ஆனார் (அப்போஸ்தலர் 28:28).
மனமாற்றம் உள்ளதா:
  • கடும் பஞ்சத்தின் போது, ​​யாக்கோபு அப்பம் மற்றும் உணவுகளை வாங்குவதற்காக தனது மகன்களை எகிப்துக்கு அனுப்பினார் (ஆதி. 42:1-2). 
  • யோசேப்பு அவர்களைப் பார்த்தார். 
  • ஆனால் யோசேப்பு அவர்களைக் காப்பாற்றத் தயாராக இருப்பதற்கு முன்பு, அவரை விற்ற காலத்திலிருந்து அவரது சகோதரர்களுக்கு மனமாற்றம் உள்ளதா என்பதை முதலில் கண்டுபிடிக்க விரும்பினார். 
  • அவர் சிமியோனை சிறையில் அடைத்தார்.
  • மேலும் சகோதரர்கள் தங்களுடைய இளைய சகோதரன் பென்யமீனை அவரிடம் கொண்டுவந்தால்,
  • சகோதரர்களுக்கு அப்பத்தை வழங்குவதுடன், அவரை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டார் (ஆதி. 42:6-24).
சிமியோன்- பெயர்க்காரணம்:
  • "சிமியோன்" என்ற பெயர் எபிரேய வார்த்தையான "ஷாமா" என்பதிலிருந்து வந்தது. 
  • அதாவது “Hearing- கேட்பது" என்று பொருள்.
  • இஸ்ரவேலர்கள் நற்செய்தியை கேட்பதும் புரிந்துகொள்வதும் தடுக்கப்பட்டது. 
  • அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் 28:25-28).
பென்யமீன் தலைமுறையாக, நீங்கள் நியாயப்பிரமாணத்தால் அல்ல, கிருபையினால் பிறந்து வாழ்கிறீர்கள். 

பென்யமீன் தலைமுறை:
  • யாக்கோபின் இளைய மகன் பென்யமீன்.
  • இவர் கடைசி  நாட்களில் விசுவாசிகளான நம்மை பிரநிதித்துவப்படுத்துகிறார். 
  • இந்த தலைமுறையின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். 
  • இந்த காலத்தில் தேவனின் திட்டத்தில் நம்முடைய இடம் என்ன? என்பதனை பார்க்க வேண்டும். 
  • இந்த கிருபையின் தலைமுறையை (பென்யமீன் தலைமுறையை) உலகம் முழுவதும் தேவன் ஏன் வளர்த்து கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
யோசேப்பு-பென்யமீன்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- கிருபையின் சந்ததி:
  • யோசேப்பு மற்றும் பென்யமீன் பற்றிய விஷயங்கள் பைபிளில் கர்த்தராகிய இயேசு மற்றும் விசுவாசிகள் பற்றிய நிழலாட்டம். 
  • மேலும் அப்போஸ்தலன் பவுலும் இன்று நமக்கு உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் Typology(வேத விளக்கம்) பயன்படுத்தியுள்ளார். 
Typology:
Typology (or typological symbolism) is a Christian form of biblical interpretation that proceeds on the assumption that God placed anticipations of Christ in the laws, events, and people of the Old Testament. 

  • இது பைபிள் விளக்கத்தின் ஒரு கிறிஸ்தவ வடிவமாகும்
  • இது பழைய ஏற்பாட்டின் நியாயப்பிராமணம் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய ஒன்று
  • மக்கள் மீது தேவன் என்ன எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார் என்ற அடிப்படையில் தொடர்கிறது.

ஆகார்- சாராள்:
  • அப்போஸ்தலனாகிய பவுல் பழைய ஏற்பாட்டிலிருந்து ஆபிரகாம், சாராள் மற்றும் ஆகாரின் கதையிலிருந்து பகிர்ந்து கொள்ளும்போது (கலா. 4:24-26), 
  • ஆகார் என்பது சினாய் மலையின் ஒரு வகை.
  • அங்கு நியாயப்பிரமாணம் முதலில் கொடுக்கப்பட்டது (யாத். 34:2).
  • இது அடிமைத்தனத்தை உருவாக்குகிறது. 
  • மறுபுறம், சாராள், சீயோன் மலை அல்லது பரலோக எருசலேமை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 
  • அங்கு இயேசுவின் முடிக்கப்பட்ட வேலையின் புதிய உடன்படிக்கை வழங்கப்படுகிறது (எபி. 12:22-24).
  • வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆகார் நியாயப்பிரமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்,
  • சாராள் கிருபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
நியாயப்பிரமாணத்தின் மகன்- கிருபையின் மகன்:
  • கலாத்தியர் 4:29 இல் பவுல் கூறுகிறார்.
  • ஆகார் பெற்ற மகன் (இஸ்மவேல்) சாராள் பெற்ற மகனை (ஈசாக்கு) துன்புறுத்தினார். 
  • இருப்பினும் இரு மகன்களுக்கும் ஒரே பிதா இருந்தார். 
  • நியாயப்பிரமாணத்தின் மகனைத் துன்புறுத்துவது ஒருபோதும் கிருபையின் மகன் அல்ல. 
  • கிருபையின் மகனைத் துன்புறுத்துவது எப்போதும் நியாயப்பிரமாணத்தின் மகன்.
  • கிருபையைப் பிரசங்கிப்பவர்களுக்கும், அவர்களை துன்புறுத்துபவர்களுக்கும் ஒரே பரலோகத் தகப்பன் இருக்கிறார். 
  • ஆனால் ஒரே தாய் இல்லை.
  • இஸ்மவேலின் தாய் - ஆகார் (நியாயப்பிரமாணம்)
  • ஈசாக்கின் தாய் - சாராள் (கிருபை)
ஆகார் (நியாயப்பிரமாணம்) - சாராள் (கிருபை) :
  • தேவாலயத்தில் உள்ள போதனைகளுக்கு சமநிலையை கொண்டு வர ஆகார் (நியாயப்பிரமாணத்தை) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நம்பும் தேவாலயங்கள் உள்ளன.
  • இருப்பினும், சாராள் (கிருபை) ஈசாக்கைக் கவனித்துக்கொள்ள ஆகாரைத் திரும்ப அழைக்க வேண்டிய அவசியமில்லை. 
  • ஏனெனில் அவளால் அவனை நன்றாக பார்த்து கொள்ள முடியும் (கலா. 4:30). 
  • ஈசாக்கை எழுப்ப கிருபைக்கு நியாயப்பிரமாணம் தேவையில்லை என்பதே இதன் பொருள்.
  • நாம் கிருபையின் கீழ், புதிய உடன்படிக்கையின் கீழ் இருப்பதால் இன்று விசுவாசிகளாகிய நமக்கு நியாயப்பிரமாணம் அவசியமில்லை (ரோ. 7:4).
லேயாள்- ராகேல்:
  • நியாயப்பிரமாணம் மற்றும் கிருபையை விளக்குவதற்கு இதேபோன்ற ஒப்புமையில் லேயாள் மற்றும் ராகேல் -யாக்கோபை மணந்த இரண்டு சகோதரிகள் பெரிதும் இடம் வகிக்கிறார்கள் (ஆதியாகமம் 29:15-30).
  • மொத்தம் 10 மகன்கள் நியாயப்பிரமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் (யோசேப்பு மற்றும் பென்யமீன் தவிர)
  • இந்த 10 மகன்கள் அடிமைத்தனத்தின் படத்தை வரைந்து நியாயப்பிரமாணத்தை (பத்து கட்டளைகள்) பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
ராகேல்- Church:
  • ராகேலை தேவாலயமாகவோ அல்லது கிருபையின் சித்திரமாகவோ இங்கு காணலாம். 
  • இங்கே, (ராகேல் அவளுடைய பெயரின் அர்த்தம் "ஆட்டுக்குட்டி", தேவனின் ஆட்டுக்குட்டியைக் குறிக்கிறது)
  • இறுதியில், ராகேல் யோசேப்பு மற்றும் பென்யமீனைப் பெற்றெடுத்தாள்.
1)யோசேப்பு (நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உருவகம்) 
2)பென்யமீன் (இன்று நம்முடைய உருவகம், தேவனின் கிருபையின் கீழ் இருக்கும் விசுவாசிகள்) 

லேயாளுடைய கண்கள்-குறுகிய பார்வை:

லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.
 -ஆதியாகமம் 29 : 17

“லேயாளின் கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது(delicate)” 
  • கிங் ஜேம்ஸ் பதிப்பில் "மென்மையான(delicate)" என்ற வார்த்தை ‘பலவீனமான கண்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
  • லேயாள் குறுகிய பார்வை’ கொண்டவள் என்று அர்த்தம்.
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.(Short Sighted)
 -2 பேதுரு 1 : 9
  • குறுகிய பார்வை” - லேயாளின் குறுகிய பார்வையின் முக்கியத்துவம் 2 பேதுரு 1:9 இல் விளக்கப்பட்டுள்ளது. 
  • ஒவ்வொரு முறையும் நீங்கள் மன்னிக்கப்பட்ட மற்றும் பரிசுத்தப்படுத்தப்பட்ட நபர் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.
  • அது உங்களை ஆவிக்குரிய ரீதியில் குருடனாக அல்லது குறுகிய பார்வையுள்ளவனாக மாற்றி விடுகிறது. 
சிம்சோன்- சிதேக்கியா:
  • கடைசி நியாயாதிபதி சிம்சோன் மற்றும் 
  • இஸ்ரவேலின் கடைசி ராஜா சிதேக்கியாவின் கதைகள் ஒத்தவை. 
  • அவர்களின் வாழ்க்கையின் முடிவில் அவர்கள் பார்வையற்றவர்களாக மாறினார்கள்.
  • அவர்கள் எவ்வாறு ஆவிக்குரிய பார்வையை இழந்து தேவனை விட்டு விலகினார்கள் என்பதை விளக்குகிறது (நியாயா.16:21, 2 இராஜாக்கள் 25:7).
லவோதிக்கேயா தேவாலயம்:
  • புதிய ஏற்பாட்டின் கடைசி தேவாலயம்(Church) லவோதிக்கேயா தேவாலயம் (வெளி. 3:14-22).
  • அதன் பெயர் "மக்கள் ஆட்சி (The people rule)” என்று பொருள்படும். 
  • மக்கள் ஆட்சி செய்யும் போது தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
  • மக்களின் விருப்பங்களுக்கு அடிபணிய வேண்டும்.
  • இது கடைசி நாட்களில் நடக்கும்.
  • அப்போது தேவாலயம் மிகவும் செல்வம் உள்ளதாக இருக்கும். 
  • ஆனால் அது தேவனிடமிருந்து வரும் செல்வம் அல்ல.
  • "கர்த்தர் என் மேய்ப்பன், நான் தாழ்ச்சியடையேன்" என்று அறிக்கையிடுவதற்குப் பதிலாக, "நான் ஐசுவரியமுள்ளவன், ஒன்றும் தேவையற்றவன்" என்று அவர்களின் விசுவாச அறிக்கை ஒளிக்கும். 
  • அவர்களின் பேச்சில் தேவன் இல்லை (வெளி. 3:17).
  • இதன் விளைவாக, அவர்கள் ‘ஆவிக்குரிய ரீதியில் குருடர்கள்’ என்று லவோதிக்கேயா தேவாலயத்தில் கர்த்தர் கூறினார்.
  • ஆனால் அந்த மக்கள் அவரைப் பார்க்கவில்லை.
பிலதெல்பியா தேவாலயம்:
  • "பிலதெல்பியா" என்ற பெயர் "சகோதரர்களின் அன்பு" (The Love of the Brothers) என்று பொருள்படும்.
  • இது இயேசுவின் பெயரை நேசிக்கும் ஒரு தேவாலயம் என்று கர்த்தரால் விவரிக்கப்படுகிறது (வெளி. 3:8).
  • கர்த்தராகிய இயேசுவைப் பற்றிப் பேசவும், அவரைப் பற்றி பாடவும் இந்தச் சபை விரும்புகிறது.
லவோதிக்கேயா தேவாலயம் மற்றும் பிலதெல்பியா தேவாலயம்:
  • லவோதிக்கேயா தேவாலயம் மற்றும் பிலதெல்பியா தேவாலயம் (வெளி. 3:7-12) இரண்டும் கடைசி நாட்களில் இருக்கும்.
  • நாம் எதைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது.
  • பிரியமானவர்களே, நம்முடைய தேவாலயங்கள் லவோதிக்கேயா தேவாலயத்தைப் போல இருக்காமல்,
  • பிலதெல்பியா தேவாலயத்தைப் போல, இயேசு கிறிஸ்துவின் பெயரைத் தவிர ஓயாமல் உச்சரிக்கும் தேவாலயமாக அமையட்டும். 
பென்யமீன் தலைமுறை என்பது நீதி மற்றும் பரலோகத் தந்தையின் தயவு (favor) என்ற இரண்டையும் கொண்டது.

தீர்க்கத்தரிசனம்:
  • ராகேல் தன் மகன் யோசேப்பைப் பெற்றெடுத்தபோது,
  • ​​“தேவன் எனக்கு இன்னொரு மகனைக் கொடுப்பார்” என்று சொல்லி யோசேப்பு என பெயரிட்டார். (ஆதி. 30:24). 
  • அவள் ‘மற்றொரு மகன் பிறப்பான்’ என நம்பிக்கை கொண்டிருந்தாள்.
  • அவளுடைய அடுத்த மகன் ‘பென்யமீன்’ வருவதை ஏற்கனவே தீர்க்கதரிசனம் சொல்லி இருந்தாள். 
  • அதேபோல, இயேசுவானவர்  (நம்முடைய பரலோக யோசேப்பு) இந்த உலகத்திற்கு வந்தபோது, ​​தேவன்(பிதா) பென்யமீன் தலைமுறையை (நம்மை) எதிர்ப்பார்த்து கொண்டிருந்தார். 
அனைத்து சகோதரர்களிலும் இளையவர் பென்யமீன் - மேலும் விசுவாசிகள் அனைவரும் பென்யமீன் தலைமுறையின் ஒரு பகுதி.

தேவன் எழுப்பும் தலைமுறை:
  • இந்த பென்யமீன் தலைமுறையில் பல இளைஞர்கள் இருந்தாலும், நம் வயதைப் பொருட்படுத்தாமல், விசுவாசிகளாக நாம் அனைவரும் இந்தத் தலைமுறையின் ஒரு பகுதியாக இருக்கிறோம். 
  • இந்த கடைசி நாட்களில் தேவன் எழுப்பும் தலைமுறை இது! 
  • இருப்பினும், பென்யமீன் தலைமுறையைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு தாங்கள் அதில் ஒரு அங்கம் என்று கூடத் தெரியாது என்பதுதான் வேதனையான உண்மை. 
  • இன்றைக்கு எத்தனையோ இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். 
  • தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் விளையாட்டுகள்(games) மூலம் தங்களை இன்பமாக்கி கொள்கிறார்கள். 
  • ஆனாலும் இத்தனை இன்பங்களும், பொழுதுபோக்கும் விரல் நுனியில் இருந்தாலும், அவர்களில் பலர், “வாழ்க்கையில் இவ்வளவுதானா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வார்கள். 
பென்யமீன் தலைமுறை பெரிய விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் இந்த ஆவிக்குரிய தேவையை (spiritual need)இயற்கையான வழிமுறைகளால்(natural means) பூர்த்தி செய்ய முடியாது.

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
 -ஆதியாகமம் 35 : 18

ராகேல்- தேவாலயம்:
  • "அவள் அவனை பென்-ஓனி என்று அழைத்தாள்" - 
  • சர்ச் வரலாறு முழுவதும் நிறைய அமைப்புகளுக்கு "யோசுவா தலைமுறை" அல்லது "தீர்க்கதரிசன தலைமுறை" என்று தான் பெயர். 
  • பைபிளில், ராகேல் - இப்போது தேவாலயமாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறாள். 
  • அவள் இறக்கும் நிலையில் இருந்ததால் அவள் மகனுக்கு "பென்-ஓனி" என்று பெயரிட்டாள்.
  • அதாவது "என் சோகத்தின் மகன் (Son of my sorrow)”
யாக்கோபு- பிதாவாகிய தேவன்:
  • அவரது தந்தை அவரை ‘பென்யமீன்’ என்று அழைத்தார்.
  • அதாவது "என் வலது கையின் மகன் (Son of my Right Hand)” 
  • முதன்முறையாக, தந்தை யாக்கோபு - பிதாவாகிய தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 
பென்யமீன் தலைமுறை:
  • தேவனால் இந்த தலைமுறைக்கு “பென்யமீன் தலைமுறை” என்று பெயரிடப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது, 
  • ஏனென்றால் அவர் "நீ என் துக்கத்தின் மகன் அல்ல. 
  • நீ என் வலது கையின் மகன் - அதாவது என் செழிப்பு, என் வல்லமை, என் கிருபை மற்றும் என் நீதியின் மகன் என்று கூறுகிறார்.
  • ஏனென்றால் நான் உன்னை என் நீதியின் வலது கரத்தால் பிடித்தேன் என்கிறார். 
நீங்கள் தேவனின் குழந்தை, நீங்கள் இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று உங்கள் பரலோக பிதா சொல்கிறார்! 

சிமியோன் - நியாயப்பிரமாணம்:
  • இயேசு பிறந்தபோது, ​​சிமியோன் என்ற முதியவர் அவரைப் பார்க்கவும் அவரை ஆசீர்வதிக்கவும் வந்தார் (லூக்கா 2:25-33). 
  • இயேசுவைப் பார்த்தவுடன், சிமியோன், "என் கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன (yeshua), இப்பொழுது உமது அடியேன் சமாதானத்துடன் புறப்படட்டும்" என்றார். 
  • சிமியோன்- கேட்டல்(Hearing), நியாயப்பிரமாணத்தை -பிரதான கற்பனையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது .
  • பிரதான கற்பனை - The Great Commandment- Shema (in Hebrew): நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (மாற்கு 12:29, உபா 6:4-5). 
  • நியாயப்பிரமாணம் இயேசுவைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது. 
  • நியாயப்பிரமாணம் இயேசுவைப் பார்த்தவுடன், அது இப்போது சமாதானமாகப் போய்விடும். 
அன்னாள்-கிருபை:
  • சிமியோன், குழந்தை இயேசுவை ஆசீர்வதித்தவுடன், அன்னாள் என்னும் தீர்க்கத்தரிசி, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள். (லூக்கா 2 : 38)
  • அன்னாள் என்றால் "கிருபை (grace)" என்று பொருள்.
  • நியாயப்பிரமாணம் விலகியவுடன், கிருபை வந்து, எல்லாரையும் நோக்கி, “வாருங்கள், வாருங்கள், இந்தக் குழந்தையைப் பாருங்கள்! 
  • மீட்பை எதிர்பார்க்கும் அனைவருக்கும், இந்த குழந்தை ஒன்றுதான் ஆதாயம். அவர் தான் இயேசு!” 
பென்யமீன் மற்றும் அவரது சகோதரர்களின் கதை: 

அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
 -ஆதியாகமம் 43 : 15
  • இறுதியில், யோசேப்பின் வேண்டுகோளின் பேரில், அவருடைய சகோதரர்கள் யோசேப்பை பார்க்க பென்யமீனை அழைத்து வந்தனர்.
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.
 -ஆதியாகமம் 43 : 16

பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு:
  • யோசேப்பு - நமது கர்த்தராகிய இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 
  • இவ்வளவு காலமாகதேவாலயத்தில் ஒரே பரலோக தந்தை இருந்தார்
  • ஆனால் அதே தாய் இல்லை
  • இயேசு தம்மைப் போன்ற அதே தாயைக் கொண்ட ஒரு தலைமுறையைக் காண இவ்வளவு காலமாக காத்திருக்கிறார்.
  • அதாவது சாராள்(கிருபை) என்ற தாயின் தலைமுறை. 
 விசாரணைக்காரன்-  பரிசுத்த ஆவியானவர்:
  • விசாரணைக்காரன்-  பரிசுத்த ஆவியானவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
  • பரிசுத்த ஆவியானவர் தம்மிடம் கவனத்தை ஈர்க்க வரவில்லை.
  • மாறாக இயேசுவை அறிவிக்கவும், இயேசுவை மகிமைப்படுத்தவும், இயேசுவை நமக்குக் காட்டவும் வந்தார் (யோவான் 16:14).
பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு ஊழியத்தின் சம்பவம், அது உங்களை இயேசுவைக் காண வைக்கும். 
  • இது எம்மாவுக்கு செல்லும் வழியில் இருந்த இரண்டு சீஷர்களைப் போல ஒரு சம்பவம்.
  • இயேசு தம்மை வேதத்தில் வெளிப்படுத்தியபோது தங்கள் இருதயம் தமக்குள் கொழுந்துவிட்டு எரிவதை போல உணர்ந்தனர் (லூக்கா 24:27, 32). 
  • ஒவ்வொரு வாரமும் தேவாலயத்தில் நாம் அனுபவிக்கும் அனுபவமாக இது இருக்கும் என்று நம்புவோம்! 
பரிசுத்த ஆவியானவர்-இயேசுவின் மகிமை:
  • பரிசுத்த ஆவியானவர் இயேசுவை நேசிக்கிறார்.
  • இயேசுவை நமக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். 
  • நீங்கள் பரிசுத்த ஆவியுடன் ஒத்துழைக்க விரும்பினால், அவர் கவனம் செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
  • மேலும் அவர் ஒப்புக்கொண்டதை ஒப்புக்கொள்ளுங்கள்.
  • பிறகு நீங்கள் அவருடன் நடக்கலாம் (ஆமோஸ் 3:3).
  • பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மகிமைப்படுத்த வந்தார்! 
  • நீங்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்காக ஜெபிக்கும்போது, ​​
  • அவர்களை எப்போதும் இயேசுவிடம் சுட்டிக்காட்டி, "நான் அல்ல, கர்த்தர் உங்களைக் குணப்படுத்தினார்" என்று சொல்லுங்கள்.
  • நாம் நம் பங்கைச் செய்தவுடன், விலக கற்றுக் கொள்வோம்.
  • மேலும் மக்கள் இயேசுவின் மகிமையைக் கண்டு அவர்மீது அன்பு கொள்ளட்டும்.
பென்யமீன் தலைமுறையினர் தேவனுடன் நெருக்கமான, அன்பான உறவை அனுபவித்து வருகின்றனர்.
  • யோசேப்பின் சகோதரர்கள், பென்யமீனை கூட்டிக்கொண்டு, அப்பம் வாங்குவதற்கான பணத்துடன் யோசேப்பிடம் திரும்பியபோது
  • யோசேப்பு அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பு பணத்தை மீண்டும் அவர்களது சாக்குகளில் வைத்தார்.
  • ஜீவ அப்பத்தை நாம் எப்படி வாங்க முடியாது என்பதை இது காட்டுகிறது (யோவான் 6:35, ஏசாயா 55:1). 
மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.
 -ஆதியாகமம் 43 : 22

பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம்
  • சகோதரர்கள் வீட்டை அடையும் வரை தங்களுடைய பணம் அவர்களிடம் திரும்பியதை அறிந்திருக்கவில்லை.
  • அதற்கு யார் காரணம் என்றும் தெரியவில்லை.
  • யோசேப்பால் உருவகப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசுவே பணத்தைத் தங்கள் சாக்குகளில் வைத்தவர் (ஆதி. 43:23). 
  • மேலும் நம்மில் பலர் இந்த ஆசீர்வாதத்தை தங்களுக்கு வழங்கியது யார் என்பதை அறியாமல் இருக்கிறோம். 
தசமபாகம்- லேவி (கிறிஸ்து):
  • இன்றைய தலைமுறை யூத மக்கள் தேவனை சார்ந்தவர்களாக இல்லாமல் இருக்கலாம்.
  • ஆனால் அவர்கள் தங்கள் முந்தைய தலைமுறைகளின் செய்கையின்(தசமபாகம்) காரணமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். 
  • நீங்கள் தசமபாகம் கொடுக்கும்போது, உங்கள் ​​தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. 
  • லேவி, ஆபிரகாமின் பிரதான ஆசாரியரான மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தார்.
  • இவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் உருவகமாக இருக்கிறார் (எபி. 7:9-10).
தசமபாகம்- கற்பியுங்கள்:
  • தசமபாகம் என்பது நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக கொடுக்கிறோம் என்று சிலர் வாதாடுகின்றனர். 
  • ஆனால் இயேசு மட்டுமே நம்முடைய நீதிக்கும் ஆசீர்வாதங்களுக்கும் காரணம் என்பதால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • மாறாக, தசமபாகம் என்பது போற்றுதல் மற்றும் நன்றியின் வெளிப்பாடாகக் கருதப்பட வேண்டும்.
  • நன்றியை செயல்களில் வெளிப்படுத்துவது என்பது தேவனின் தயவையும், உலகப்பொருளையும் பெற முயற்சிப்பது அல்ல. 
  • பிள்ளைகளுக்குப் போற்றுதலைக்(Appreciation) கற்றுத்தருவது போலவே,
  • தசமபாகம் என்பது கர்த்தர் செய்த காரியங்களுக்காக நாம் அவரைப் பாராட்டும், போற்றும் ஒரு வழி எனக் கற்றுத் தர வேண்டும்.
  • மேலும் இது நம் தேவாலயங்களிலும் நாம் கற்பித்து ஊக்குவிக்கக்கூடிய ஒன்று! 
  • நாம் தசமபாகம் செலுத்தும் போது, ​​நாம் தேவனுக்கு நன்றி செலுத்தி, “ஆண்டவரே, இந்தச் சம்பளத்தையோ அல்லது இந்தச் செல்வத்தையோ நீங்கள் இல்லையென்றால் நான் பெற்றிருக்க முடியாது. எனவே, நன்றி” என்று கூற வேண்டும். 
திருவிருந்து- நன்றி செலுத்துதல்:
  • “திருவிருந்து” என்பது தேவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு அடையாளம்! 
  • The Lord’s Supper- தேவனின் கடைசி உணவு "Eucharist-Giving Thanks" என்று அழைக்கப்படுகிறது.
  • அதாவது "நன்றி செலுத்துதல்". 
  • திருவிருந்தை ஒரு சடங்காகப் பார்ப்பதற்குப் பதிலாக, 
  • இயேசு நம்மிடம் ஒற்றுமையைக்(communion) கொண்டு வருகிறார் என்று பார்க்க வேண்டும். 
மெல்கிசேதேக்-கிறிஸ்து:
  • இயேசுவின் உருவகமான மெல்கிசேதேக், அப்பத்தையும் திராட்சரசத்தையும் கொண்டு வந்து ஆபிரகாமிடம் கொடுத்தார் (ஆதி. 14:18).
  • அப்பமும் திராட்சரசமும் மெல்கிசேதேக்கின் கைகளில் இருந்தன.
  • ஆபிரகாமின் கைகளில் இல்லை! 
  • அதேபோல் இன்றும், அப்பத்தையும் திராட்சரசத்தையும் கொண்டு வருபவர் என்று உங்களைப் பார்க்காதீர்கள்.
  • அது இயேசுவின் கைகளில் இருப்பதைப் பாருங்கள்.
  • அவர் உங்களிடம் ஒற்றுமையைக் கொண்டுவருவதைப் பாருங்கள்.
  • இயேசு தம் கைகளில் அப்பம் மற்றும் திராட்சை ரசத்துடன் நமக்காக காத்திருக்கிறார்.
திருவிருந்தில் பங்கேற்பது என்பது தேவனுடனான உங்கள் உறவின் ஒரு பகுதியாகும், செய்ய வேண்டிய கடமை அல்ல. 

அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
 -ஆதியாகமம் 43 : 23

சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்
  • சகோதரர்கள் கர்த்தரைப் பற்றிய அறிவையும், அவர் அவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதையும் அறிந்த தருணத்தில், சிமியோன் விடுவிக்கப்பட்டார்.
  • கர்த்தராகிய இயேசுவைப் பற்றி அவர்கள் மேலும் அறிந்துகொள்ளும்போது, ​​இயேசு இஸ்ரவேலுக்குத் திரும்பிவருவார்!
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
 -ஆதியாகமம் 43 : 29

மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்
  • பல வருடங்களாக பார்த்திராத தன் சகோதரன் பென்யமீனிடம் யோசேப்பு பேசிய முதல் விஷயம் பென்யமீன் தலைமுறையைக் குறிக்கும் வார்த்தை: Grace (கிருபை).
இன்று, கர்த்தர் நம்மிடம், "என் மகனே, என் தகப்பன் உமக்கு கிருபைசெய்யக்கடவர்" என்று கூறுகிறார்.

யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
 -ஆதியாகமம் 43 : 30

துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்
  • தேவன் உங்கள் குரலைக் கேட்க விரும்புகிறார்.
  • உங்கள் கவலைகளை தனிமையில் அழுது அவரிடம் தெரிவியுங்கள்.
  • அவர் வெளியரங்கமாக உங்களுக்கு பதிலளிப்பார். 
தாவீது:
  • பழைய ஏற்பாட்டில் தாவீது ராஜா தேவனுடன் அன்பான உறவில் இருப்பதையும், தேவன் அவருடைய குரலைக் கேட்க விரும்புவதையும் பார்க்கிறோம் (சங். 5:3). 
  • சாலொமோன் பாடல் 4 இல், மணவாளன் (இயேசு) மணவாட்டியிடம் (சபை) சொல்கிறார்.
  • “உன்னிடமிருந்து ஒரு பார்வை போதும்என் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டாய்உன்னில் பழுதொன்றும்இல்லைநான் உன் முகத்தைப் பார்க்க வேண்டும்உன் குரலைக் கேட்க வேண்டும்” என்று சொல்கிறார். 
  • “அன்பானவர்களே, இப்படி தான் நம்முடைய ஜெபம் அமைய வேண்டும்.
  • அவருடன் நீங்கள் ஒரு நெருக்கமான மற்றும் அன்பான உறவில் இருக்க வேண்டும். 
பென்யமீன் தலைமுறையினராகிய உங்களுக்கு ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களும் அபிஷேகமும் கர்த்தர் கொடுக்கிறார்.

பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.
 -ஆதியாகமம் 43 : 31

போஜனம் வையுங்கள்
  • யோசேப்பு கேட்டபடி பென்யமீன் எகிப்துக்கு வந்தபோது, ​​அவருடைய சகோதரர்களுக்கு அப்பம் கொடுக்கப்பட்டது! 
  • இன்று பூமி முழுவதும், அப்பம் கொடுக்கப்படுகிறது.
  • கர்த்தர் இப்போது நம்மிடம் இது போல சொல்வதாக உணருங்கள், “பென்யமீன் தலைமுறை இங்கே இருக்கிறது. அப்பத்தை பரிமாறவும்! ”
அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.  
 -ஆதியாகமம் 43 : 34

பென்யமீனின் சேவை அவர்களின் எந்த உணவையும் விட ஐந்து மடங்கு அதிகம்
  • பென்யமீன் தனது சகோதரர்களை விட ஐந்து மடங்கு அதிகமான உணவைப் பெற்றார். 
  • எபிரேய எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து "Hei" ஆகும்.
  • ஐந்து அல்லது Hei என்பது number of Grace.
  • Ancient Hebrew Image: Man with arms raised

அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.
 -ஆதியாகமம் 45 : 22

ஐந்து ஆடை மாற்றுதல்கள்
  • எதை உண்போம் அல்லது எதை உடுத்துவோம் (மத். 6:25) என்று மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு கூறியதை இது நமக்கு நினைவூட்டுகிறது. 
  • பென்யமீன் தலைமுறைக்கு அனைத்தும் வழங்கப்படுகிறது!
  • ஆவிக்குரிய ரீதியில் ஐந்து மாற்று உடைகள், ஐந்து அபிஷேகத்தைக் குறிக்கிறது.  
  • 5 அபிஷேகங்களாவன
  1. அப்போஸ்தலர்
  2. தீர்க்கதரிசிகள்
  3. சுவிசேஷகர்
  4. மேய்ப்பர்
  5. போதகர்
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
 -எபேசியர் 4 : 13
  • தேவனின் பன்மடங்கு கிருபை உங்கள் மீது உள்ளது!
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;
 -ஆதியாகமம் 45 : 13

நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து
  • யோசேப்பு தன் சகோதரர்கள் வீட்டிற்குத் திரும்பியதும் தனது தந்தையிடம் தனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
  • ஆராதனை என்பது இயேசுவின் பிதாவிற்கு - நமது பரலோகத் தகப்பனுக்கு - இயேசுவைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் கூறுவது. 
  • நீங்கள் இயேசுவைப் பற்றி பேசுவதைக் கேட்பது பிதாவுக்கு மிகவும் பிடிக்கும். 
  • நீங்கள் செய்யும் அனைத்தும் இயேசுவைப் பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். 
யோசேப்பு மன்னித்தார்:
  • இப்போது யோசேப்பு யார் என்று சகோதரர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் யோசேப்புடன் சமரசம் செய்தனர்.
  • தங்களுக்கு இப்படியெல்லாம் நேர்ந்தது ஏன் என்று அறிந்து மனந்திரும்பினார்கள் (ஆதி. 42:21).
  • யோசேப்பு வைத்திருந்த எல்லா வல்லமையுடனும், அவர்களைத் தம்மிடம் இழுத்து, அவர்களை மன்னித்தார் (ஆதி. 45:4-5). 
  • பலர் மனந்திரும்பி கர்த்தரால் மன்னிக்கப்படும் காலம் வரும் என்பதை இது காட்டுகிறது. 
சமாரிய நாட்டு ஸ்திரீ -நிக்கொதேமு:
  • பென்யமீன் தலைமுறை என்பது சமாரிய நாட்டு ஸ்திரீயை (கிணற்றுப் பெண்ணை) போல தோற்றமளிக்கும் தலைமுறையாக இருக்கலாம். 
  • யோவான் 4 இல் கற்றறிந்த போதகனாயிருந்த நிக்கொதேமுக்கு பதிலாக, பாவத்தில் வாழ்ந்த பெண்ணுக்கு வழிபாட்டைக் கற்பிக்க இயேசு முடிவு செய்தார் (யோவான் 3 இல்). 
  • இயேசு நிக்கோதேமிடம்: நீ அனைத்து அறிவாற்றலுடனும் இருந்தாலும், மீண்டும் பிறக்க வேண்டும் என்று கூறினார் (யோவான் 3:5-10). 
  • ஆயினும், கிணற்றடியில் இருந்த பெண்ணிடம் அவர் இரக்கம் காட்டினார்.
  • மேலும் வழிபாட்டின் உண்மையை அவளுக்கு எடுத்துரைத்தார்.
  • வழிபாட்டின் உண்மை - பிதாவை வணங்குபவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை வணங்குவார்கள் என்பதே (யோவான் 4:21-24). 
நிக்கோதேமு மற்றும் கிணற்றடியில் இருந்த சமாரியப்பெண்:
  • இறுதியில், நிக்கோதேமு மற்றும் கிணற்றடியில் இருந்த பெண் இருவரும் தேவனுக்குச் சேவை செய்தனர்.
  • ஆனால் நிக்கோதேமு இயேசுவை மேசியாவாக நம்புவதற்கான பயணம் மிகவும் மெதுவாக இருந்தது. 
  • இயேசுவின் மரணத்திற்குப் பிறகு அவர் அடக்கம் செய்யப்பட்டபோது தான் நிக்கோதேமு அவருக்கு சேவை செய்யத் தொடங்கினார் (யோவான் 19:39).
  • இருப்பினும், சமாரியப் பெண் இயேசுவை சந்தித்த சிறிது நேரத்திலேயே, தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் சுவிசேஷம் அறிவித்து, மேசியாவைப் பார்க்க வரச் சொன்னாள். (யோவான் 4:39).
  • முன் எப்பொழுதும் இல்லாத வகையில், கிருபையானது அதிவேகமாக செயல்பட்டு மக்களை கர்த்தருக்குள் வளரச் செய்கிறது!
  • இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை உலகமும் இஸ்ரவேலும் அறியும்படி 
  • தேவன் உங்கள் வாழ்வில் அவருடைய ஆசீர்வாதங்களை கொடுக்க விரும்புகிறார்.
மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
 -ஆதியாகமம் 45 : 24

நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள்
  • தனது சகோதரர்களை அவர்களின் தந்தையிடம் திருப்பி அனுப்புவதற்கு முன், வழியில் சண்டையிட வேண்டாம் என்று யோசேப்பு அவர்களுக்கு நினைவூட்டினார். 
  • இது கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டலாகும்.
  • இயேசு நமக்காக திரும்பி வரும் வேளையில், நாம் ஒருவரையொருவர் நேசித்து, சண்டையிடாமல் இருக்க வேண்டும்.
யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
 -ஆதியாகமம் 45 : 26

யாக்கோபின் அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை
  • பெரும்பாலும், இயேசுவைப் பற்றி உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​​​
  • அவரது வல்லமையை அவர்கள் பார்க்கும் வரை நம்ப மாட்டார்கள். 
  • தேவன் தனது ஆசீர்வாதங்களை உங்கள் வாழ்க்கையில் கொடுக்க விரும்புகிறார். 
  • அதனை மக்கள் காண்பார்கள். 
  • பின்பு தேவனை தெரிந்து கொள்வார்கள். 
அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
 -ஆதியாகமம் 45 : 27

அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.  
 -ஆதியாகமம் 45 : 28

யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது..... என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்
  • நீங்கள் தசமபாகம் கொடுக்கும்போது, ​​உங்கள் பரலோக யோசேப்பு உயிருடன் இருப்பதாக நீங்கள் அறிவிக்கிறீர்கள். (எபி. 7:8). 
  • இன்று, நீங்கள் தசமபாகம் கொடுக்கும்போது, ​​​​உங்கள் வாழ்க்கையில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றி சாட்சியளிக்கிறீர்கள். 
  • அதன் மூலம் ஆசீர்வாதங்களின் சான்றுகள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். 
  • அதனால் ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என்பதை உலக மக்களும் அறிவார்கள். 
என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்
  • ஆதியாகமம் 45:28-ல், வண்டிகளைப் பார்த்தபின் யாக்கோபு நடந்த சம்பவங்களை நம்பும்போது, ​​பைபிள் அவருக்கு புதிய பெயர் “இஸ்ரவேல்” கொடுக்கிறது. 
  • இஸ்ரவேலர்களும் நம் (புறஜாதியார்) மீது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் ஆசீர்வதிக்கும் கரத்தைக் காணும்போது 
  • அவர்களும் இயேசு மீது நம்பிக்கை வைப்பார்கள் என்பதற்கான தீர்க்கதரிசனப் படம் இதுவாகும்.
நற்செய்தி:
  • நற்செய்தி என்பது “கிருபை மற்றும் சமாதானத்தின்” நற்செய்தியாகும்.
  • ஆண்டவர் இயேசு எதிர்பார்த்த பென்யமீன் தலைமுறை நாங்கள் என்றும், இந்த கடைசி நாட்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை நாம் எதிர்நோக்கலாம் என்றும் மக்களுக்கு ஊக்கமளிக்கிறோம். 
வார்த்தையை சொந்தமாக்கி கொள்ளுங்கள் (வாழ்க்கை பயன்பாடு)

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
 -ஆதியாகமம் 35 : 18
  • இன்று நீங்கள் நம்பிக்கையின்மை, கனவு நிறைவேறாமை மற்றும் ஆறுதல் இல்லாமை, எதற்கு தான் வாழ்கிறோமோ போன்ற உணர்வுடன் போராடுகிறீர்களா? 
  • ஒருவேளை நீங்கள் வாழும் இந்த கடினமான காலங்களில் பயம், பதட்டம், மனச்சோர்வு, மனஅழுத்தம் போன்ற உணர்வுகளால் அதிகமாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கலாம். 
  • ஒரு கணம் நிதானித்து இந்த உண்மையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
  • பென்யமீன் ஆரம்பத்தில் "பென்-ஓனி (என் துக்கத்தின் மகன்) என்று பெயரிடப்பட்டிருந்தாலும்  பின்பு தன் தகப்பனால் "பென்யமீன் (என் வலது கையின் மகன்) என்று அழைக்கப்பட்டார். 
  • நாம் நம்மை தற்போது ‘துக்கத்தின் மகனாக’ பார்த்தாலும், நம்முடைய பரலோக தகப்பன் நம்மை ‘என் வலது கையின் மகன்’ என்கிறார். 
  • பிரியமானவர்களே, இன்று உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 
  • துக்கத்தில் மூழ்கிய ஒரு நபராக நீங்கள் உங்களைப் பார்க்கிறீர்களா?
  • அல்லது உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை அவருடைய வலது கையின் மகனாக அல்லது மகளாகப் பார்க்கும் விதத்தில் உங்களைப் பார்க்கிறீர்களா? 
  • பைபிளில் உள்ள வலது கை: நீதி, வல்லமை மற்றும் வலிமையின் இடத்தைப் பற்றி பேசுகிறது. 
  • இன்று, நீங்கள் கிறிஸ்துவில் உங்களை ‘தேவனுடைய நீதியாக’ காண வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (2 கொரி. 5:21). 
  • மேலும் நீதியின் அனைத்து ஆசீர்வாதங்களாகிய மனதிற்கு அமைதி, மகிழ்ச்சி, சுகமடைதல், முழுமை உட்பட அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் (மத்தேயு 6:33). 
  • இந்த உண்மையை தியானிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். 
  • நீங்கள் இனி உலகத்தின் துக்கத்தால் வரையறுக்கப்படவில்லை (you are not defined by the sorrow of the world )
  • ஆனால் உங்கள் பரலோக தந்தை எப்படி உங்களை அழைத்தாரோ அதன் மூலம் நீங்கள் வரையறுக்கப்படுகிறீர்கள்(you are defined by what your heavenly Father has called you).
  • நீங்கள் அவருடைய வலது கையின் மகன். 
  • பிரியமானவர்களே, இந்த உண்மையை நீங்கள் அறிந்துகொண்டால், பென்யமீன் தலைமுறையின் ஒரு பகுதியாக, உங்கள் அழைப்பிற்குள் உங்களால் நுழையாமல் இருக்க முடியாது. 
  • மேலும் உங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்குங்கள்!

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4