இரண்டாவது கட்டளை விளக்கம் - Ten Commandments of the Bible

  • இந்த நவீன உலகில், மக்கள் வாழும் ஏமாற்றமான வாழ்க்கையை கண்டு அதிர்ச்சியடைகிறோம். 

உருவான மதங்கள்/நம்பிக்கைகள்: 
  • பௌத்த மதம் (Buddhism)
  • இந்து மதம் (Hinduism)
  • தாவோயிசம் (Taoism) -மனிதர்களும் விலங்குகளும் தாவோ அல்லது பிரபஞ்சத்துடன் சமநிலையில் வாழ வேண்டும் என்று கூறுகிறது. ஒரு மனிதன் இறந்த பிறகு, அந்த உடலின் ஆத்துமா பிரபஞ்சத்துடன் இணைகிறது என்று நம்புகிறார்கள். 
  • ஷிண்டோ(Shinto) - ஒரு ஜப்பானிய மதம். மூதாதையர்கள் மற்றும் இயற்கை ஆவிகளை நம்புகிறவர்கள். 
  • மார்மன்ஸ் (Mormons) - திரித்துவம் (கடவுள் மூன்று நபர்களில் இருக்கிறார்) என்ற கிறிஸ்தவ கருத்தை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று மூன்று தனித்தனி கடவுள்கள் உள்ளனர் என்று நம்புகிறார்கள். 
  • New Age Movement - மறுபிறவி, ஜோதிடம், மனோவியலை நம்புகிறவர்கள்.
  • Calvinism- உங்களால் எதுவுமே முடியாது. நன்மை மட்டுமல்ல தீமையையும் உருவாக்குபவர் தேவன், தேவன் அனைவரையும் நேசிக்கவில்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள். 
  • Jehovah Witness- இயேசுவை தேவன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள். 
“உங்கள் வீடு எது என பரிசோதித்து பார்க்கவும்”-
 டேவிட் வில்கர்சன். 

யாத் 20:4-6 உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்ளாதீர்கள்... இது முடிந்து போன விஷயம் அல்ல! அதிலிருந்து நம்மை நாமே "அவிழ்த்துக்கொள்ள" முடியாது!

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
 -யாத்திராகமம் 20 : 4

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
 -யாத்திராகமம் 20 : 5

என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
 -யாத்திராகமம் 20 : 6

1 யோவான் புத்தகத்தின் கடைசி வார்த்தைகள்:

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.    
 -1 யோவான் 5 : 21



“சிலைகள் என்று வரும்போது மனிதர்களாகிய நாம் முடிவில்லாத படைப்பாளிகளாக இருக்கிறோம். வாய்ப்புக் கிடைத்தால், கடவுளுக்குப் பதிலாக எந்தவொரு பொருளையும், நபரையும், இலட்சியத்தையும் அல்லது கனவுகளையும் கடவுளாக உருவாக்கி அதை கடவுள் என்போம்” (போலிக் கடவுள்கள்) - டிமோதி கெல்லர் 

பிரச்சனை? 
(1) நாம் அவைகளை(விக்கிரகங்களை) பிரதிபலிக்கிறோம்:

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
 -சங்கீதம் 115 : 4
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
 -சங்கீதம் 115 : 5
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
 -சங்கீதம் 115 : 6
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
 -சங்கீதம் 115 : 7
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
 -சங்கீதம் 115 : 8
  • நாம் கடவுளைப் போல் இருக்க வேண்டும். . . கடவுளை நம்மை போல் ஆக்க கூடாது! 
"விழுந்த மனித இதயத்தின் நிழலில் பிறந்த ஒரே உண்மையான கடவுளுக்கு இயற்கையாகவே உண்மையான சாயல்/உருவம் கிடையாது!" - ஏ.டபிள்யூ. டோசர் 


  • நாம் அனைவரும் கிருபையிலிருந்து வீழ்ந்தவர்கள். 
  • நாம் யாரை/எதை வணங்குகிறோமோ அதே போல நாமும் அதிகமாக ஆவோம்! 
கடவுளின் உண்மையான உருவத்தை உருவாக்குவது சாத்தியமற்றது ... 
  • எனவே நாம் அவரை நமக்கு வசதியான ஒரு உருவமாக மாற்றுகிறோம்.
  • பின்னர் அந்த உருவத்தை இந்த உலகிற்கு பிரதிபலித்து காட்டுகிறோம். 
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
 -எபேசியர் 5 : 1

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
 -ஆதியாகமம் 5 : 1

2 ஆபத்துகள்:
1...... மனிதர்கள் ஒரு அடையாளத்தை(சிலைகளை) எடுத்து அதை கடவுளின் நிலைக்கு உயர்த்துகிறார்கள். 
2......மனிதர்கள் தாங்கள் உருவாக்கின விக்கிரகத்திற்கு இணங்க உண்மையான தேவனை தரை மட்டும் கொண்டு வந்து அவமதிக்கிறார்கள். 

(2) நாம் அவைகள்(விக்கிரகங்கள்) மீது  நம்பிக்கை வைக்கிறோம்:

அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
 -ஏசாயா 44 : 17

அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
 -எரேமியா 10 : 5

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
 -யாத்திராகமம் 32 : 4


  • மோசே இன்னும் சீனாய் மலையில் தான் இருக்கிறார் ... அவர்கள் இப்போதுதான் கட்டளைகளை பெற்றார்கள்!!!! அதற்குள்ளாக விக்கிரகத்தை உண்டாக்கி விட்டார்கள். 
அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.
 -எண்ணாகமம் 25 : 2
இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
 -எண்ணாகமம் 25 : 3

இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
 -நியாயாதிபதிகள் 3 : 7

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
 -1 இராஜாக்கள் 16 : 31

நீங்கள் முன்னேற்றத்தை காண முடியுமா ??? !!! 
இப்போது இருக்கிற நவீன விக்கிரகங்கள் மிகவும் ஆபத்தானதானது. ஏனென்றால், அவைகள் அடிப்படையில் நல்ல விஷயங்களாக தான் இருக்கும். ஜாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள். தேவனுக்கு கொடுக்க முடியாத எந்த வீணான வேலையும் விக்கிரகமே! 

சில நவீன விக்கிரகங்கள்:
1) பிரபலமானவர்கள் 
2) வேலை 
3) பொழுதுபோக்கு 
4) பணம்
5) தொலைக்காட்சி 
6) குப்பையான சீரியல்கள்
7) திரைப்பட பாடல்கள்

(3) நாம் அவற்றை(விக்கிரகத்தை) இனப்பெருக்கம் செய்கிறோம் (அடுத்த சந்ததிக்கு விதைக்கிறோம்):
யாத் 20:5-6

பொறாமை: ஒருவரின் உரிமைகள் அல்லது உடைமைகளையே கவனித்து பார்த்து இச்சித்தல். 
  • நம் குழந்தைகளும், அவர்களின் குழந்தைகளும் நம்மில் ஒரு பகுதி. 
  • நாம் எதை பின்பற்றுகிறோமோ, அதைத் தான் அவர்களும் பின்பற்றுவார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். 
2 நாளாகமம் 26-28
அமத்சியா ~> உசியா-> யோதாம் -> ஆகாஸ்! 
சரியானதைச் செய்தேன் ஆனால்.…….ஆலயத்துக்குள் நுழையவில்லை
 ->சரியானதைச் செய்யவில்லை! 

கட்டளை #1... நாம் யாரை வணங்குகிறோம்! 
கட்டளை #2... நாம் எப்படி வணங்குகிறோம்!

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4