முதல் கட்டளை விளக்கம்- Ten Commandments of Bible


  • தேவனுடன் போட்டியிடுபவர்கள் யாரும் இல்லை.
போட்டியாளர்கள்:
  • தங்களால் முடிந்தவரை போராடுவார்கள்.
  • மற்றொருவருக்கு உரிமையான ஒன்றை பறிக்க முயலுவார்கள். 
  • மற்ற அனைவரையும் அழிக்க முயற்சிப்பார்கள். 
நிகரற்றவர்
  • அனைவரையும் மற்றும் எல்லாவற்றையும் விட சிறந்தவர்.
  • மிக உயர்ந்த மகத்துவத்தைக் கொண்டவர்.
  • யாருடனும் ஒப்பிடக்கூடாதவர். 


“தேவனுடன் போட்டியிட நிறைய விக்கிரகங்கள் முயற்சிக்கிறது. ஆனால் எதனுடனும் ஒப்பிட கூட முடியாது”

(1) நான் ஒருவரே, நான் ஒருவரே தேவன். ( I am the one and only God).

தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
 -யாத்திராகமம் 20 : 1

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
 -யாத்திராகமம் 20 : 2

தொடர்புடைய வசனங்கள்:

உபாகமம் 4:35
உபாகமம் 4:39
1 இராஜாக்கள் 8:60
ஏசாயா 44:6
ஏசாயா 45:5
ஏசாயா 45:18
ஏசாயா 45:22
ஏசாயா 46:9
  • இந்த அலைந்து திரிபவர்கள் (இஸ்ரவேலர்கள்), எகிப்தில் அசையும் எதையும் வணங்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்தார்கள். 
“ஒரு மனிதன் ஒரே உண்மையான தேவனை கண்டுபிடிக்கும் வரை, அவன் எந்த தொடக்கமும் இல்லாமல் தொடங்கி, எந்த முடிவும் இல்லாமல் வேலை செய்கிறான்”
-H.G வெல்ஸ்.

Monotheist: recognizes and worships only one God! (ஒரே கடவுளை அடையாளம் கண்டுவணங்குகிறவர்கள்!)

Polytheist: believes in and worships many gods but only as needed their allegiance changes with their needs. (பல கடவுள்களை நம்பி வழிபடுகிறவர்கள்ஆனால் தேவைக்கேற்ப அவர்களின் விசுவாசம் மாறுகிறது).

Henotheist: accepts one god as its god and worships no other. BUT they believe other gods are as real as theirs. (ஒரு கடவுளை தன் கடவுளாக ஏற்றுக்கொண்டு மற்ற கடவுளை வணங்காதவர்கள்ஆனால் மற்றகடவுள்களும் தங்களைப் போலவே உண்மையானவர்கள் என்று நம்புகிறவர்கள்).


தேவன் சொல்லுகிறார்,  
  • “வேறு யாரும் தேவன் இல்லை”.
  • “என்னைத் தவிர வேறு யாரும் தேவன் இல்லை”.
  • “எனக்கு அருகில் யாரும் தேவன் இல்லை”. 
அவர் எந்த போட்டியாளரையும் அனுமதிக்கவில்லை. 

(2) உங்களுக்கு வேறு தேவன் கிடையாது

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
 -யாத்திராகமம் 20 : 3
  • முதல் கட்டளை- மிகவும் மீறப்பட்டக் கட்டளை! 
  • நீங்கள் தேவனை(God) மறுவரையறை செய்து, அந்த கடவுளை(god) அவருடைய இடத்தில் வைக்க முடியாது. 
“மனிதனின் இயற்கை மனம் என்பது விக்கிரகங்கள் மற்றும் பிற தெய்வங்களின் நிரந்தர தொழிற்சாலை”
-ஜான் காள்வின்.

சோதித்து பாருங்கள் உங்கள் விக்கிரகம்(Idols) எது என்று?!
(1) உங்கள் நேரம்
(2) உங்கள் பணம்
(3) உங்கள் உறவுகள்
(4) உங்கள் பழக்க வழக்கங்கள்


“மக்களில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளனர். …. உண்மையான தெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும் உருவ வழிபாடு செய்பவர்கள், மொத்தத்தில் அனைவருக்கும் தேவன் என்ற ஒன்று உண்டு. (அது ஒரு கல்லாக இருந்தாலும் கூட)”
-R. கெண்ட் ஹியூஸ்.

ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
 -யோசுவா 24 : 14

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
 -யோசுவா 24 : 15
  • உங்கள் வாழ்க்கையில் கடவுள் இருப்பாரா, இல்லையா என்பது கேள்வியல்ல. அந்த கடவுள் (God/god) யார் என்பது தான் கேள்வி. 
“தேவன் தடைசெய்ததை, எந்த நேரத்திலும் செய்யக்கூடாது; அவர் கட்டளையிடுவதை செய்வது தான் எப்பொழுதும் நமது கடமை”
-வெஸ்ட்மின்ஸ்டர் கேடிசிசம்.
  • எதுவும், மற்ற எந்த கடவுளும் உங்கள் இதயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4