7 Signs of an undesirable Friend; 7 விரும்பத்தகாத நண்பனின் அடையாளங்கள்
1) விரும்பத்தகாத நண்பன் தேவபக்தியற்றவன், மற்றவர்கள் மனதை கஷ்டப்படுத்தினாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டான்.
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
-1 கொரி 5 : 11
2) ஒரு விரும்பத்தகாத நண்பன் நிலையற்றவனாக மாறிக்கொண்டே இருப்பான். அவன் எப்படி என்று உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் நடிப்பான்.
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.
-நீதிமொழிகள் 24 : 21
சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
-நீதிமொழிகள் 24 : 22
3) ஒரு விரும்பத்தகாத நண்பன் அடிக்கடி ஏதோவொன்றைப் பற்றி கோபப்படுவான்.
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
-நீதிமொழிகள் 22 : 24
அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
-நீதிமொழிகள் 22 : 25
4) ஒரு விரும்பத்தகாத நண்பன் உங்களுக்கு மோசமான மற்றும் தேவபயமற்ற அறிவுரைகளை(ungodly) வழங்குவான்.
துன்மார்க்கருடைய (ungodly) ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
-சங்கீதம் 1 : 1
5) விரும்பத்தகாத நண்பன் முட்டாள்தனமான செயல்களைச் செய்வான்; ஒரு முட்டாள் விளைவுகள் எதையும் சிந்தித்து பார்க்காமல் செயல்படுவான்.
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
-நீதிமொழிகள் 13 : 20
6) விரும்பத்தகாத நண்பன் சுயநல நோக்கங்கள் கொண்டவனாய் இருப்பான்.
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
-நீதிமொழிகள் 18 : 2
"A fool takes no pleasure in understanding, but only in expressing his opinion." (ESV)
7) ஒரு விரும்பத்தகாத நண்பன் தேவன் மீதும், அவரது கட்டளைகள் மீதும் பயபக்தியோடு இருக்கமாட்டான்.
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
-சங்கீதம் 119 : 63
மேலே பட்டியலிடப்பட்டுள்ள விரும்பத்தகாத குணங்களில் ஏதேனும் உங்களின் நண்பர்களிடம் இருந்தால், அவர்களுக்காக ஜெபியுங்கள். அந்த
நபர்களிடம் நான் நேரத்தை செலவிடலாமா வேண்டாமா என ஆண்டவரிடம் கேளுங்கள். அப்படியில்லையென்றால்
உங்கள்வாழ்க்கையில் அவருக்குப் பிடித்தமான உறவுகளை கொண்டு வரச் சொல்லி ஜெபியுங்கள்.
Comments
Post a Comment