யோவான்ஸ்நானன் ; John, The Baptist
யோவான்ஸ்நானன் ; John The Baptist
-ஏசாயா 40 : 3
பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
-ஏசாயா 40 : 4
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
-ஏசாயா 40 : 5
தீர்க்கத்தரிசனம் புதிய ஏற்பாட்டில் உறுதியாக்கப்படுதல்:
- நான்கு சுவிசேஷங்களிலும் இந்த தீர்க்கத்தரிசனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
- மல்கியா 4ம் அதிகாரத்தை வாசித்தால் தெரியும்.
- இயேசு யோவான்ஸ்நானனை எலியாவின் ஆவி என்று குறிப்பிடுகிறார்.
- தந்தை- சகரியா
- தாய்- எலிசபெத்து
- கோத்திரம்- லேவி
- மூதாதையர்- ஆரோன், சாதோக்
- வம்சம்- ஆசாரிய வம்சம்
- யோவான்ஸ்நானன் தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியால் நிறைந்தருந்தார் என்று வாசிக்கிறோம்.
- எலிசபெத்தும் தான் கர்ப்பமடைந்த பின்பு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்று லூக்கா முதலாம் அதிகாரத்தை வாசித்தால் நமக்கு தெளிவாக விளங்கும்.
- பரிசுத்த ஆவி முதன்முதலில் ஊற்றப்பட்டது அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் தான்.
- ஆனால் அதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் எலிசபெத்திடமும், அவள் கருவிலும் அசைவாடினார் என்று வாசிக்கிறோம்.
- யோவான் என்ற ஒரே பிள்ளையை மட்டும் தான் அவள் தன் கர்ப்பத்தில் சுமக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு பிள்ளைகளையே ஆண்டவர் அவர்களுக்கு கொடுக்கவில்லை.
- யூத கலாச்சாரத்தின்படி 30 வயதில் தான் ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்க முடியும்.
- எனவே யோவான்ஸ்நானன் தன் 30 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
- வெளியேறிய ஐந்தாம் மாத தொடக்கத்தில் தான் பிரசிங்கிக்கவே ஆரம்பிக்கிறார்.
- அப்படியானால், முதல் 4 மாதங்கள் எங்கு இருந்தார். என்ன செய்தார்?
- Essenes களோடு வாழ்ந்தார்.
- Essenes என்றால் யார்?
- வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் நடக்க 150 வருடங்களுக்கு முன்பு, சில ஆசாரியர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறினார்கள்.
- ஏனென்றால், அந்த நேரத்தில் ஆசாரியர்கள் அரசாங்கங்களுக்கு பயந்து, மந்திரிகளை, ராஜாக்களை காக்கா பிடிக்க ஆரம்பித்தார்கள்.
- ஆசாரியர்கள் ராணுவ தலைவர்களை வரவழைத்து அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
- மந்திரிகள் தேவாலயத்திற்கு வந்தால் ஆசாரியர்கள் போக கூடிய அந்த இடத்திற்கு மந்திரிகளை வரவழைத்து அவர்களைஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
- அதாவது தேவாலயம் அசுசிப் பட ஆரம்பித்தது.
- அதைப் பார்த்த கொஞ்சம் ஆசாரியர்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
- இப்படி தேவாலயத்தை அசுசிப்படுத்துகிறார்களே என்று மனவேதனைப்பட்டார்கள்.
- சில பேர் மாத்திரம் அதிலிருந்து வெளியேறி சவக்கடல் பக்கத்துக்கு போய் அங்கு இயற்கையாய் அமைந்திருந்த சில குகைகள் இருந்த இடத்திலே வாழ ஆரம்பித்தார்கள்.
- அந்த 150 அல்லது 200 வருட காலங்களில் எந்தெந்த ஆசாரியர்கள் அங்கு நடப்பவற்றை வெறுத்தார்களோ அவர்களெல்லாம் விலகிப் போய் அந்த வெளியேறிய ஆசாரியர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
- இந்த குழுவுக்கு அவர்களே Essenes என்று பெயர் கொடுத்துக் கொண்டார்கள்.
- Essenes என்ற வார்த்தை தூய்மை (purity) என்ற எபிரேய பதத்திலிருந்து வந்தது.
- அவர்கள் வாழ்ந்த அந்த பிரதேசத்திற்கு பெயர் கும்ரான்(Qumran).
- அந்த Essenes எல்லாவற்றையும் பொதுவாக அனுபவித்தார்கள்.
- உனக்கு, எனக்கு என்று எதுவும் இருக்கவில்லை.
- அவர்கள் ஆடுகள், மாடுகளை வளர்த்தார்கள்.
- அது எரிகோவுக்கு பக்கத்தில் இருப்பதால் நிறைய பேரீச்சப் பனைகள் வளரும்.
- அதை வளர்த்தார்கள்.
- அவர்கள் ஒவ்வொரு நாளும் காலையிலே எழும்பி ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருக்கிற இடத்திற்கு வருவார்கள்.
- அந்த தண்ணீர்தொட்டியை அவர்களே செய்து வைத்திருப்பார்கள்.
- அந்த தண்ணீர் தொட்டியிலே இறங்கி நடந்து மறு பக்கத்தில் எழும்பி தன்னை துடைத்து கொள்வார்கள்.
- தண்ணீரின் நடுவிலே 3 முறை தண்ணீருக்குள் முங்கி எழுந்திருப்பார்கள்.
- இதே காரியத்தை இரவு தூங்கப் போவதற்கு முன்பும் செய்வார்கள்.
- இதை ஒரு சுத்திகரிப்பு காரியமாக எண்ணி கடைபிடித்து கொண்டு வந்தார்கள்.
- அதில் ஒரு சில பேருக்கு சாப்பாடு ஆயத்தம் செய்கிற வேலை.
- அதில் ஒரு சில பேருக்கு ஆடு மாடுகளை பார்த்து கொள்கிற வேலை.
- அதில் ஒரு சில பேருக்கு பனை மரங்களை பராமரிக்கும் வேலை.
- மற்ற எல்லோருடைய வேலை என்னவென்றால் வேதத்தை (Tanak-old testament) எழுதுவது.
- சுருள் சுருள்களாக எழுதி எழுதி அதைப் பானைகளுக்குள்ளேப் போடுவார்கள்.
- அந்தப் பானைகளை கொண்டுப் போய் அந்தக் குகைகளிலே ஒளித்து வைப்பார்கள்.
- இதற்கு தான் Dead Sea Scrolls என்று பெயர்.
- 1948 லே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஒரு மேய்ப்பன் பையன் அந்த பிரதேசத்திலே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான்.
- அப்போது கல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
- டங் என்று சத்தம் வந்தது.
- கீழே போய் பார்த்தால் குகைக்குள்ளே பானை.
- அதற்கு பிறகு தான் ஆய்வாளர்கள் போய் அதைக் கண்டுபிடித்தார்கள்.
- இந்த எசீன்ஸ் (Essenes) தங்களோடே பேசிக் கொள்ளக் கூட மாட்டார்கள்.
- அவர்கள் சைகையின் மூலம் தான் பேசிக் கொள்வார்கள்.
- மிகவும் அமைதியாக, மௌளனமாக இருப்பார்கள்.
- ஏனென்றால் தேவாலயத்தை அசுசிப்படுத்தியதால் தேவன் மறுபடியும் அவர்களை நியாயத்தீர்ப்பிலே அடிப்பார் என்று நம்பினார்கள்.
- இப்போது தேவாலயத்தை சில பேர் அசுசிப்படுத்திக் கொண்டிருப்பதால் தேவன் எருசலேமை நியாயம் தீர்ப்பார் என்று நம்பினார்கள்.
- அப்போது மிச்சம் மீதியானவர்கள் தூய்மைவாதிகள் இருக்கும் பொழுது அவர்களுக்கு வாசிக்க வேதம் வேண்டுமே!
- அதற்காக தான் அதை எழுதிப் பானைகளுக்குள்ளே ஒளித்து வைத்தார்கள்.
- யோவான் லேவி கோத்திரத்தை சேர்ந்தவர்.
- அவர் வீட்டை விட்டு போய் முதல் 4 மாதங்களும் எசீன்ஸ் (Essenes) ஓடு வாழ்ந்தார்.
- யோவான் தன் 30 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
- பின்பு 4 மாதங்கள் எசீன்ஸ் (Essenes) ஓடு வாழ்ந்தார்.
- எப்படி தெரியும்?
- கும்ரானில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஏட்டிலே இந்த சம்பவம் எழுதப்பட்டு இருக்கிறது.
- இவர் வந்து அங்கே இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.
- அதை விட மிகப் பெரிய ஆதாரம் அவர் சாப்பிட்ட உணவும், அவர் உடுத்தியருந்த உடையும் தான்
- பொதுமக்கள் எசீன்ஸ் (Essenes) களை காண்பதே அரிது.
- அவர்களும் வெளியே போக மாட்டார்கள்.
- வெளியே இருந்து ஆட்கள் வந்து தங்களை பார்க்கவும் இடங்கொடுக்க மாட்டார்கள்.
- ஆனால் ஒரு வாலிப எசீன்ஸ் (Essenes) தனது வீட்டிற்கு போய் திரும்பி வர விரும்பினால் அவர்கள் அந்த எசீன் தலைவரிடம் அனுமதி கேட்க வேண்டும்.
- அவர் கைகளை காட்டி அனுமதித்து, அவர் சொல்லும் நாளில் போய்விட்டு 3 நாளில் திரும்ப வர வேண்டும் என்று சொல்லுவார்.
- அதே போல செய்ய வேண்டும்.
- போகும் போது அந்த நபர் ஒட்டக மயிரினால் ஆன உடையை தான் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.
- அவருக்கு எல்லாவற்றையும் சாப்பிட அனுமதியில்லை.
- அவர் தன்னோடு பனை தேன் கொண்டு செல்ல வேண்டும்.
- இல்லையென்றால் காட்டுத்தேன் கொண்டு செல்ல வேண்டும்.
- சாப்பிடுவதற்கு வறுத்த வெட்டுகிளிகள் கொண்டு போக வேண்டும்.
- இவை தான் அவர்களுக்கு அந்த சமயத்தில் உணவு.
- யோவான் வெளியே வந்தது வீட்டைப் பார்க்க அல்ல, இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ண.
- யாராவது எசீன்ஸ் (Essenes) ஐ கண்டால் பரப்பரப்பாக பார்ப்பார்கள்.
- ஆனால் அவர்கள் கிட்ட போய் பேச மாட்டார்கள்.
- ஏனென்றால் எசீன்ஸ் (Essenes) யாரோடும் பேச மாட்டார்கள்.
- மக்கள் எசீன்ஸ் (Essenes) ஐ பரிசுத்தராக, தேவனுடைய பிள்ளைகளாக கருதினார்கள்.
- அவர்கள் யாரும் எசீன்ஸ் (Essenes) குரலை கேட்டது கூட இல்லை.
- இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலே திடீரென ஒரு எசீன்ஸ் (Essenes) வந்து , நின்று பேசுகிறார் என்றால் ஜனங்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பார்களா? இல்லையா?
- Talking Essene ஐ பார்க்க ஓடிவந்திருப்பார்கள்.
- ஆச்சர்யமாக வாயை பிளந்து கொண்டு கேட்டிருப்பார்கள்.
- அவர் விரியன் பாம்புக்குட்டிகளே என்று திட்டியது கூட அவர்களுக்கு வலிக்க வில்லை.
- மாறாக பயத்தை உண்டுபண்ணியது.
- அதனால் தான் யோவான் விரியன் பாம்புக்குட்டிகளே என்று சொல்லும் போது கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை.
- அவர் கும்ரானிலே தண்ணீரிலே முங்கினது போல மக்களை தண்ணீரிலே முங்கி எழ செய்தார்.
- யோவான் அவருக்கு தெரிந்த முறையில் மக்களுக்கு சுத்திகரிப்பு கொடுத்தார்.
- நீதி-பிதா; கிருபை-இயேசு; பரிசுத்தம்-பரிசுத்த ஆவியானவர்.
- மனிதனின் பாவம் பெருகி போனதால் நீதிக்கும், கிருபைக்கும் இடையே பெரிய வாக்குவாதமே வந்தது.
- நீதி சொன்னது- மனிதன் தன்னுடைய பாவங்களுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று.
- கிருபை சொன்னது- நான் படைத்த மனிதனை எப்படி நான் அந்த சூழ்நிலையில் விடுவேன் என்று.
- கடைசியாக, கிருபை நம்முடைய பாவங்களுக்காக தண்டனை பெற மனிதனாக அவதரித்து பூமிக்கு வந்தது.
தேவ நீதிக்கும், தேவ கிருபைக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். அதை பரிசுத்தம் நிறைவேற்றியது.
- Thanatos (கிரேக்க வார்த்தை) மரணம் - கொடூரமான மரணம்
- Nekros (கிரேக்க வார்த்தை) மரணம் - இயற்கை மரணம்
- பாவத்தின் சம்பளம் என்னவென்றால் Thanatos மரணம்; Nekros மரணம் அல்ல.
- தேவனுடைய நீதிக்கு தேவை Thanatos மரணம்.
- தேவனுடைய கிருபை, தேவனுடைய நீதிக்கு தேவையான Thanatos மரணம் அடைவதற்காக வந்தது.
- ஏனென்றால் அந்த மரணத்தை மனிதனால் மரிக்க முடியாது.
- யோவான்ஸ்நானன் யோர்தான் நதிக்கரையிலே மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்தார்.
- அப்போது இயேசு அங்கே வந்தார்.
- யோவான் எதிர்ப்பார்க்கவே இல்லை, இயேசு திரும்பி தன் பக்கம் வருவார் என்று.
- திடீரென்று இயேசு திரும்பி வந்து தண்ணீருக்குள் இறங்குகிறார்.
- யோவான் அதிர்ச்சி அடைந்திருப்பார்.
- யோவான் தனக்கு தெரிந்த எசீன்ஸ் முறையில் மக்களுக்கு ஞானஸ்நானம் ( தண்ணீரில் மூழ்குதல்) கொடுக்கிறார்.
- யோவான், மனந்திரும்பி வருகிற பொது ஜனங்களுக்கு எசீன் முறை படி சுத்திகரிப்பு செய்து அனுப்பினார்.
- ஆனால் இப்போதோ இயேசுவே இவரிடம் ஞானஸ்நானம் பெற வந்து நிற்கிறார்.
- யோவானோ குழம்பி போயிருப்பார்.
- இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,
- இயேசு எசீன்கள் உருவாக்கின சுத்திகரிப்பு முறையை அங்கீகரிக்கிறார்.
- எந்தளவுக்கு அங்கீகரிக்கிறார் என்றால்?
- தான் ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு.
- ஒரு ஆள் செய்த குற்றத்துக்கு இன்னொரு ஆள் தண்டனை அனுபவித்தால் அது நீதியா?
- உலக நீதியிலும் சரி, தேவ நீதியிலும் சரி தப்பு செய்த நபர் தான் தண்டிக்கப்பட வேண்டும்.
- ஆனால் நம்மால் சிலுவையில் அவர் கூட மரிக்கவும் முடியாது.
- எனவே, இயேசு ஞானஸ்நானத்தை எடுத்து அதையே ஒரு அடையாளமாக ஆக்கி, இயேசுவின் மரணம், அடக்கம்செய்யப்படுதல், உயிர்த்தெழுதல் இந்த மூன்றையும் ஞானஸ்நானத்துக்குள்ளே கொண்டு வந்தார்.
- நாம் ஞானஸ்நானம் எடுக்கும் போது இயேசுவோடு சிலுவையில் அறையப்படுகிறோம்.
- தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிவதன் மூலமாக நாம் நம்முடைய பாவங்களுக்கு தண்டனை அனுபவித்து மரிக்கிறோம்.
- இந்த உலகத்தில் இனிமையான தண்டனை என்று ஒன்று கிடையவே கிடையாது.
- ஆனால் இயேசு நமக்கு தண்டனையை கூட இனிமையான ஒன்றாக கொடுத்திருக்கிறார்.
- ரோமர் 6 ஐ வாசித்தால் இவை அனைத்தும் விளங்கும்.
- இயேசுவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகிய இந்த மூன்றோடும் நம்மை இணைத்து நாமும் அவரோடு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழ கூடிய அடையாளமாகிய ஞானஸ்நானத்தை யோவான்ஸ்நானன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
- ஞானஸ்நானம் இல்லையென்றால் அவருடைய மரணம் நமக்கு நேரடியாக பிரயோஜனமாக இருக்காது.
- தண்ணீர் ஞானஸ்நானம் என்ற ஒன்று இல்லையென்றால், நமக்கு பாவங்களுக்கு மரித்து, உயிர்த்தெழுகிற அந்த பாக்கியமே இல்லாமல் போயிருக்கும்.
- செசரியாவிலே ஒரு அரண்மனை உண்டு.
- எருசலேமிலே ஒரு அரண்மனை உண்டு.
- மக்சாதாவிலே(சவக்கடல் பக்கத்திலே) ஒரு அரண்மனை உண்டு.
- தெக்கப்போலியிலும் ஒரு அரண்மனை உண்டு.
- தெக்கப்போலியில் உள்ள அரண்மனையில் தான் இந்த சம்பவம் நடந்தது. (Maquar palace of Herod)
- ஏரோது ராஜா(அந்திப்பா) அவனுடைய தம்பி பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்திருக்கிறான்.
- ராஜா என்பதனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.
- ஆனால் யோவான் நீங்கள் செய்வது தவறு என்று எதிர்த்து பேசி விட்டார்.
- அவர் பேசினது மரண தண்டனைக்கான ஒரு குற்றம் அல்ல.
- எனவே, அவரை காவலில் வைத்திருந்தார்கள்.
- பொது ஜனங்களுக்கு யோவான்ஸ்நானன் இடையூறாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
- அவரை கைது செய்து இப்பொழுது யோர்தான் நாட்டில் இருக்கின்ற Maquar என்ற ஒரு அரண்மனைக்கு கொண்டு போய்,
- அங்கு இருக்கிற நிலத்தடி சிறைச்சாலையில் அவரை கைது செய்து வைத்திருக்கிறார்கள்.
- அங்கு ஒரு பெரிய விருந்து நடைபெறுகிறது.
- ராஜசமூகத்தார் எல்லாம் விருந்துக்கு வந்திருக்கிறார்கள்.
- அப்போது ஏரோது வைத்து கொண்டிருக்கிற பிலிப்புவின் மனைவி ஏரோதியாள் அவளுக்கு 10-11 வயதில் ஒரு மகள்.
- அவள் அழகாக நடனமாடினாள்.
அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
-மத்தேயு 14 : 7
10-12 வயது உள்ள மகளின் வேண்டுகோள்:
அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
-மத்தேயு 14 : 8
ஆணையினிமத்தம் சிரச்சேதம்:
ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,
-மத்தேயு 14 : 9
ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
-மத்தேயு 14 : 10
தாலத்தில் தலை:
அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
-மத்தேயு 14 : 11
- யோவானை காவலில் வைத்திருப்பதால், வெளியே இருக்கிற யோவானுடைய சீஷர்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் போய் அவரை பார்க்கலாம்.
- அன்று காலை கூட அவர்கள் யோவானை பார்த்து விட்டு வந்தார்கள்.
- அதற்குள்ளாக அவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி.
- உடனே அவர்கள் அனுமதி வாங்கி கொண்டு யோவானுடைய தலையில்லாத முண்டத்தை வாங்கி அடக்கம் பண்ணிவிட்டு கலிலேயாவை நோக்கி ஓடினார்கள்.
- இப்போது இயேசு கலிலேயாவில் இருக்கிறார்.
- இயேசுவிடம் விஷயத்தை சொல்ல 3 நாட்கள் ஓடுகிறார்கள்.
- அந்த Maquar palace of Herod தெக்கப்போலியிலே தான் இருக்கிறது.
- 3 நாட்கள் நடந்து போக கூடிய தூரம்.
- கப்பர்நகூமிலே இயேசு தன் சீஷர்களுடன் இருக்கிறார்.
- இயேசு இந்த உலகத்தில் இருக்கும்பொழுது தன்னுடைய தேவத்துவத்தை தன்னில் வைத்திருக்கவில்லை.
- பிலிப்பியர் 2 ஐ வாசித்தால் அது புரியும்.
- அவர் தேவத்துவத்தை பரலோகத்திலேயே வைத்து விட்டார்.
- எனவே அவருக்கு தெரியாது என்ன நடந்தது என்று.
- அதிர்ச்சி ஆகி இருப்பார்.
- அவரது மனது எவ்வளவு கலங்கி துடித்திருக்கும்.
- எனவே தனிமையாக கப்பலில் செல்கிறார்.
அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
-மத்தேயு 14 : 12
இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
-மத்தேயு 14 : 13
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
-பிலிப்பியர் 2 : 8
இயேசு சுகம் கொடுத்தார்:
- ஆனால் மக்கள் அவரை தனியாகவிடவில்லை.
- அந்த மக்களுக்கு எல்லாம் ஒரு அநுதாபத்திலே சுகம் கொடுக்கிறார்.
- அவரால் பேச முடியவில்லை.
- எனவே பிரசிங்கவில்லை.
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
-மத்தேயு 14 : 14
போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி போகட்டும்:
- பின்பு பிலிப்பு இந்த மக்களெல்லாம் சாப்பிட போகட்டும் என்று சொல்கிறான்.
சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
-மத்தேயு 14 : 15
யூத முறைமை-விருந்து:
- யூத வழக்கத்தின் படி நெருங்கின உறவின்மார் இறந்து விட்டால், மக்களுக்கு விருந்துவைப்பார்கள்.
- துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு தன் கையாலேயே சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார்கள்.
- அதே போல விருந்து வைக்கலாம் என இயேசுவுக்கு தோன்றியது.
இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
-மத்தேயு 14 : 16
5 அப்பம் 2 மீன் அற்புதம்:
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
-மத்தேயு 14 : 17
அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
-மத்தேயு 14 : 18
யூத முறைமை- உட்கார வைத்து சாப்பாடு:
- யூத மரண வீடுகளுக்கு விசாரிக்க வருபவர்களை உட்கார வைத்து தான் சாப்பாடு கொடுப்பார்கள்.
- அதே போல இயேசு ஜனங்களை அமர செய்து போஜனம் கொடுத்தார்.
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
-மத்தேயு 14 : 19
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
-மத்தேயு 14 : 20
ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
-மத்தேயு 14 : 21
யூத முறைமை- மரண வீடு- வழியனுப்புதல்:
- யூத முறைமைப்படி மரண வீடுகளுக்கு விசாரிக்க வருபவர்களை வீட்டு உரிமையாளர் தான் வழியனுப்பி வைக்க வேண்டும்.
- அதே போல, இயேசு ஜனங்களை தானே வழியனுப்பி வைத்தார்.
- இயேசு தன்னுடைய சீஷர்களை பலவந்தப்படுத்தி அனுப்பி விட்டார்.
- பிறகு அனைவரையும் அவரே வழியனுப்பி விட்டு ஜெபிக்க சென்றார்.
இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
-மத்தேயு 14 : 22
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
-மத்தேயு 14 : 23
முடிவுரை:
- இயேசுவுக்கு யோவானோடு 3 உறவுகள் இருந்தது.
- தூரத்து உறவினர், நண்பர், வழியை ஆயத்தம் பண்ண வந்தவர்.
- எனவே மிகவும் துக்கித்தார்.
- இயேசு செய்த அற்புதங்களில் தனக்காக செய்து கொண்ட ஒரே அற்புதம் இது தான்.
- எனவே நமது வேதனைகள், வலிகள், மன அழுத்தங்கள் அனைத்தும் அவருக்கு புரியும்.
- நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை புரிந்து கொண்டு மன ஆறுதல் தருவார்.
———————————————————————-
Comments
Post a Comment