ரோமர் புத்தகம்- பிண்ணனி
ரோமர் புத்தகம்- பிண்ணனி
நிரூபங்கள்:
- பவுலடியார் 7 சபைகளுக்கு 9 நிரூபங்கள் எழுதுகிறார்.
- கொரிந்து, தெசலோனிக்கே 2 நிரூபங்கள் கொண்டுள்ளதால் 9 நிரூபங்கள்.
- அந்த காலத்தில் ஒரு நகரம் அல்லது பட்டணம் என்று எடுத்துக் கொண்டால், அந்த பட்டணத்திற்கு ஒரே ஒரு சபை தான் இருக்கும்.
- வேத காலத்தில் ரோமாபுரியில் ஒரு சபை தான் இருந்தது.
- இன்றைக்கு ஏகப்பட்ட சபைகள் உள்ளன.
- அந்த காலத்தில் மோமாபுரி, கொரிந்து, பிலிப்பு எல்லா பட்டணங்களிலும் கிரேக்க மொழியில் தான் ஆராதனை நடக்கும்.
- புதிய ஏற்பாட்டு காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை.
- பவுலுடைய 14 நிரூபங்கள், பெற்றுக் கொள்கிறவர்களுடைய பெயரில் உள்ளது. (Eg: தீத்து, பிலெமோன்)
- பொதுவான நிரூபங்கள் எழுதுகிறவர்களுடைய பெயரில் இருக்கும். (Eg: யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா)
- 14 நிரூபத்தில் ரோமர் புத்தகம் முதலில் இடம் பெற்றுள்ளது.
- ஏனென்றால் ரோமாபுரி தான் உலக தலைநகரம்.
- ரோமாபுரிக்கு எழுதப்பட்ட நிரூபம் கண்டிப்பாக முழு உலகத்துக்கும் போய் சேரப் போகிறது.
- மற்ற 13 நிரூபங்களை காட்டிலும் ரோமாபுரிக்கு எழுதப்பட்ட நிரூபம் உலகமெங்கும் போகப் போகிறது. எப்படி?
- உலகெங்கும் இருக்கிற ஜனங்கள் வியாபார நோக்கத்திற்காகவோ, அரசியல் நோக்கத்திற்காகவோ ரோமாபுரிக்கு போக்கும் வரத்துமாக இருப்பார்கள்.
- All Roads lead to Rome.
- ரோமாபுரி சபையில் எது நடந்தாலும் அது உலகமெங்கும் போய் சேரும்.
- அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் முடியும் போது சுவிசேஷம் ரோமாபுரிக்கு போய் சேர்ந்து விட்டது என்று முடிகிறது.
- அதற்கு என்ன அர்த்தம் என்றால், கண்டிப்பாக இது முழு உலகத்திற்கும் சென்றடைந்து விடும்.
- பவுல் ரோமர் நிரூபம் எழுதும் போது, ஆவியானவர் அவரை 2 முக்கிய விஷயங்களை எழுத வைக்கிறார்.
- ஒரு சபை என்றால், அந்த சபைக்கு மூல உபதேசம் (Doctrines) இருக்க வேண்டும்.
- ஒரு Constitution (யாப்பு) என்றால் அவர்களின் நம்பிக்கையும், சட்டத்திட்டங்களும் அதில் இருக்கும். (சபை அல்லது அரசியல்).
- அது போல இப்போது சபை தொடங்கி விட்டது.
- சபை எருசலேம், அந்தியோகியாவிற்கெல்லாம் வந்தாயிற்று.
- இப்போது ஆண்டவர் யாரையாவது வைத்து சபைக்கு மூல உபதேசங்களை கொடுக்க வேண்டும்.
- இல்லையென்றால் எல்லாரும் நினைக்கிறதெல்லாம் உபதேசமாக மாறி விடும்.
- ஏனென்றால் இது ஒரு ஜனக்கூட்டாத்தாரை வைத்துக் கொண்டு உருவான நம்பிக்கை அல்ல.
- பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது.
- எல்லோருமே ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேசத்தில் வாழ்கிற ஜனங்கள்.
- எனவே, அங்கு பெரிதாக நம்பிக்கை வித்தியாசம் வராது.
- ஆனால் இப்போது ஆண்டவர் அவருடைய குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான் என்று சொல்லி விட்டார்.
- அந்த ‘எவனோ’ உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம்.
- எனவே, சபைக்கென்று ஒரு மூல உபதேசம் இருக்க வேண்டும்.
- அந்த மூல உபதேசத்தை எழுதக் கூடியவன் யார்?
- பவுல்.
- தர்சீஸ்(சிரியா) என்ற இடத்தில் பிறந்தவர்.
- Alexandria தான் அவர் குடும்பத்தின் சொந்த ஊர்.
- Alexandria Library ல உள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து தேர்ந்தவர்.
- பரிசேயர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
- அவர் யூத மதத்தைப் படித்தவர்.
- கமாலியேல் கிட்ட மொத்தமே 5 பேர் தான் படித்திருக்கிறார்கள்.
- அதில் ஒரு ஆள் பவுல்.
- சிரியா மொழி பேசினார் (பிறந்த ஊர்).
- எகிப்திய மொழி பேசினார் (வளர்ந்த ஊர்).
- லத்தீன் மொழி பேசினார்(ரோம பிரஜை).
- எபிரேய மொழி பேசினார் (பரிசேயர்).
- அராமிய மொழி பேசினார் (எருசலேமில் அராமிய பேசுகிற இடத்தில் கொஞ்ச காலம் வாழ்ந்தார்.)
- கிரேக்க மொழி பேசினார் (சர்வதேச மொழி).
- பண்மொழி பண்டிதர்.
- ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்தபடியினால் அவருக்கு சங்கங்கள், சட்டங்கள், யாப்புக்கள் எல்லாம் தெரியும்.
- எனவே, அவரை வைத்து ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கான, சபைகளுக்கான மூல உபதேசத்தை எழுதினார்.
- கிறிஸ்தவ மூல உபதேசங்கள் (நம்பிக்கை) கொடுக்கப்பட்டுள்ளது.
- எல்லோருக்கும் எளிதில் புரியாது.
- பிரயோக ரீதியான சட்டத்திட்டங்கள்.
- அதாவது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இருக்கும்.
- அனைவருக்கும் எளிதில் விளங்கும்.
Comments
Post a Comment