இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார்

இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார்

உயிர்-இரத்தம்:
  • இயேசுவின் இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன? 
  • மருத்துவ துறை சொல்கிறது, மனிதன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தம் இல்லையென்றால் அவன் செத்து விடுவான் என்று. 
  • மனிதன் உயிரோடு இருப்பதற்கு இரத்தம் அவனுக்குள்ளே இருந்தே ஆக வேண்டும். 
  • மனிதன் உடம்பில், உயிர் இரத்தத்தில் இருக்கிறது. 
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
 -
லேவியராகமம் 17 : 11
  • ஆண்டவர் சொல்லிவிட்டால் அது தான் உண்மை.
  • ஏனென்றால் அவர் தான் மனிதனை உண்டாக்கினவர்.
  • உண்டாக்கினவரே சொல்கிறார் தான் உயிரை இரத்தத்தில் வைத்தேன் என்று. 
ஆதாம்- நாசி:
  • ஆண்டவர் ஆதாமை மண்ணினால் உண்டாக்குகிறார்.
  • ஆண்டவர் ஆதாமின் நாசியில் சுவாசத்தை ஊதின போது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது. 
  • வேதம் சொல்லுகிறது, தேவன் அவன் நாசியிலே ஊதினார், அவன் ஜீவாத்துமா ஆனான் என்று. 
பிசாசு ஆபேலை இரத்தம் சிந்த செய்தான்:
  • பிசாசுக்கு தெரிந்தது. 
  • காயீன் ஆபேலை கொலை செய்த போது ஆண்டவர் காயீனிடம் கேட்கிறார். 
  • உன் சகோதரன் எங்கே? 
  • அவனுடைய இரத்தம் என்னை நோக்கி கூக்குரல் இடுகிறது என்றார். 
  • பிசாசு ஆபேலின் இரத்தத்தை சிந்த காயீனைப் பயன்படுத்தினான். 
  • இந்த உலகத்தில் முதன்முதல் வந்த மனித மரணம் இரத்தம் சிந்துதலினால் வந்த மரணம். 
மனிதன் -தாயின் கருவில்:
  • ஆதாமுக்கு இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது. 
  • அதற்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் பிறந்து வந்தார்கள். 
  • எப்படி உருவாகிறார்கள். 
குழந்தை- தாயின் கருவின் வேலை:
  • ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவிலே உருவாகிறான். 
  • ஆணினுடைய விந்து அணுவும், பெண்ணினுடைய முட்டையும் இணைந்து கரு உருவாகிறது.
  •  9 1/2 மாதங்கள் தாயினுடைய வயிற்றிலே, கருவிலே அந்த குழந்தை வளர்கிறது. 
  • அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு தேவையான ஆகாரம், காற்று(Oxygen) , தண்ணீர் அத்தனையும் தாய் மூலமாக மட்டுமே கிடைக்கும். 
  • தொப்புள்கொடி மூலமாக போஷிக்கப்படுகிறது.
  • தாயின் இரத்தம் மூலமாக தான் அந்த கருவிலிருக்கிற குழந்தை போஷிக்கப்படுகிறது. 
  • ஆனால் அந்த தாயினுடைய இரத்தம் அந்த பிள்ளைக்கு உள்ளே போவதில்லை. 
பிள்ளைக்கு இரத்தம் எப்படி வருகிறது? 
  • அந்த பிள்ளைக்கு இரத்தம் எப்படி வருகிறது?
  • ஆணினுடைய அணு, பெண்ணின் முட்டையோடு மோதும் போது அந்த ஆணின் அணு மூலமாக தான் இரத்தம் உருவாகிறது. 
  • அந்த ஆணின் அணு, மின்விளக்கு அந்த Switch ஐ போடுவது போன்ற வேலையை தான் செய்கிறது.
  • மற்றபடி மின்சாரம் அந்த நேரத்தில் உருவாக்கப்படுகிறது. 
  • அதாவது, அந்த நேரத்திலே இரத்தம் உருவாக்கப்படுகிறது. 
ஒவ்வொருவருக்கும் தனித்தனி இரத்தம்:
  • ஒவ்வொரு குழந்தையினுடைய இரத்தமும் தனித்தனியாக கர்த்தரால் சிருஷ்டிக்கப்படுகிறது.
  • உதரணமாக அப்பாவின் இரத்தம் B negative என்று வைத்துக் கொள்வோம், அம்மாவின் இரத்தம் O Positive என வைத்துக்கொள்வோம். 
  • பிள்ளைக்கு A ரக இரத்தம் வரலாம். 
  • அது விஞ்ஞான ரீதியாக, வைத்திய ரீதியாக உண்மை.
ஆணின் அணு மூலம்- பாவ இரத்தம்:
  • அந்த தகப்பன் மூலம் வருவதால், தகப்பன் பாவியாக இருந்தால், பிள்ளையும் பாவியாக பிறக்கிறது. 
  • ஆதாம் முதல் மனிதன். 
  • அவன் பாவம் செய்தபடியினால், அவன் மூலம் வந்த அத்தனை மனிதர்களுக்கும், பாவ இரத்தம் வந்து விட்டது.
  • ஆதாம் முதல் நம் அப்பா வரை அனைவருக்கும் பாவ இரத்தம் வந்து விட்டது. 
  • மனிதனுடைய பாவம் இரத்தத்தில் இருக்கிறது.
  • இருதயத்தில் அல்ல, மூளையில் அல்ல. 
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.  
 -
ரோமர் 6 : 23

பாவத்தின் சம்பளம் எப்படி மரணம்:
  • ஒரு மனிதனின் இரத்தத்திற்குள் பாவம் இருக்கிறது.
  • அப்படியென்றால் அந்த இரத்தத்தை முழுவதும் அவனிடம் இருந்து எடுத்து விட்டால் அவனுக்குள் இருக்கிற பாவம் வெளியே போய்விடும். 
  • ஒரு மனிதனுக்குள் இருக்கிற இரத்தத்தை முழுவதும் நீக்கிவிட்டால் அவன் செத்து விடுவான். 
  • பாவத்தின் சம்பளம் எப்படி மரணம்? 
  • இரத்தம் முழுக்க வெளியேறிவிட்டால் மரணம். 
மரணம் - கிரேக்க வார்த்தைகள்:

1)Nekros - சாதாரண இயற்கை மரணம்.
2)Thanatos  - சிதைந்து, உருக்குழைந்து, நசுங்கி, உடம்பில் இருக்கிற இரத்தம் முழுக்க வெளியே போய் மரணமடைவது. 

இயேசு மனிதனாக பூமிக்கு வந்தது எதற்காக?  
  • இயேசு மனிதனாக பூமிக்கு வந்தது எதற்காக?
  • நமக்காக அவருடைய இரத்தம் முழுவதையும் சிந்தி, Thanatos மரணம் அடைவதற்காக. 
  • அப்படி அவர் வரும் பொழுது அவருக்கு இரத்தம் வேண்டும். 
பாவ இரத்தமாக இருந்தால்:
  • அந்த இரத்தமும் பாவ இரத்தமாக இருந்தால் அவர் பாவி. 
  • அப்பொழுது அவர் அந்த இரத்தத்தை சிந்தினால் அவருக்கு மாத்திரம் தான், 
  • அந்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் வருகிற பாவ விமோசனம் கிடைக்கும். 
  • அப்போது அவர் அதை மற்றவர்களுக்காக செலுத்த முடியாது. 
ஏன் கன்னியின் வயிற்றில்:
  • அதனால் அவர் பிறக்கும் பொழுது அப்பா இல்லாமல் பிறந்தார். 
  • ஆணின் அணு சம்பந்தமில்லாமல் அவர் கருவுற்றபடியினால் அவருடைய இரத்தத்தில் பாவம் இல்லை. 
  • அந்த ஒரு காரணத்திற்காக தான் இயேசு கன்னியின் வயிற்றில் கர்ப்பம் தரித்தார். 
இரண்டாம் ஆதாம்:
  • ஆதாமுக்கு எப்படி, நாசியிலே ஊதும் போது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டதோ, 
  • அதே போல இயேசுவுக்கும் மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியானவர் ஊதும் பொழுது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது. 
  • அதை தான் வேதம் சொல்லுகிறது, பரிசுத்த ஆவியின் மூலம் கர்ப்பமானாள் என்று. 
  • அதனால் தான் இயேசுவுக்கு இரண்டாம் ஆதாம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 
  • இயேசுவுக்கு மாத்திரம், ஆணின் அணு சம்பந்தமில்லாமல் இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டு  கொடுக்கப்பட்டது.
————————————————————————-

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4